அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Friday, April 18, 2008

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்?

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்! படிக்க இங்கே அழுத்தவும்

நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:

மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.

இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.

நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.

இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.

மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.

மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.

தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.

ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.

இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.

அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

தொடரும் இறைவன் நாடினால்...
.
.
.

Sunday, March 23, 2008

பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..

அவதூறுகளும்... விளக்கங்களும்...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.
.
இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது குறித்து முழுவிபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
.
'உக்காழ்' எனும் அரேபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஜைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா(ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இந்த சிறுவரை அடிமையாகவே வைத்துக்கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
.
அதன் பின்னர் அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில், தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த 'ஹாரிஸா'வும் அவரது சகோதரர் 'கஃபு' என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களுடன் வருவதற்கு 'ஜைத்' ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச்செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது' என்று கூறிவிட்டனர்.
.
இதன் பிறகு ஜைது (ரலி) அவர்களிடம், வந்தவர்கள் பேசிப்பார்த்தனர். 'முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது' என்று ஜைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் 'ஜைத் இனிமேல் என் மகனாவார். அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஜைதுக்கும் உறவை புரிந்துக்கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சொன்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்வில்லை (ஆதாரம் : அல் இஸாபா)
.
அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட பின் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை 'ஜைது இப்னு முஹம்மது' (முஹம்மதுவின் மகன் ஜைத்) என்றே ஜைத் குறிப்பிடப்பட்டார்.
.
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்' (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை 'முஹம்மதின் மகன் 'ஜைத்' என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
.
சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்து இருந்தார்கள் என்பதை தெளிவு படுத்தவே இந்த விபரங்கள்.
.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உமைமா' என்பாரின் மகள் 'ஜைனப்' அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
.
ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
.
'அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் - எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் 'உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)
.
ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தலாக் கூற வேண்டாம்!' என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
.
இதே வசனத்தின் இறுதியில் 'அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
.
ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் 'தலாக் கூற வேண்டாம்' என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் 'அவர் தலாக் கூற வேண்டும்' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.
.
ஜைது (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஜைனப் (ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
.
அது வருமாறு :
ஜைத் (ரலி) அவர்களும், ஜைனப் (ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்ற விபரம் கிடைக்கிறது. (பார்க்க இப்னு கஸீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபைத் திருமனம் செய்த போது ஜைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க : அல் இஸாபா) ஜைனப் (ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஜைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஜைதுடன் திருமனம் நடந்த போது ஜைனபின் வயது 34 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் ஜைது தலாக் கூறியவுடம் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
.
ஜைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்கு சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஜைதை மணப்பதற்கு முன் அவர்களுக்கு வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமிலருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஜைதைத் திருமணம் செய்யும் போது ஜைனப்பின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 என்பது அதைவிடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஜைனப் (ரலி) அவர்கள் சிறு வயது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஜைனப் (ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபிகள் நாயம் அவர்கள் ஜைனபுடைய 35 வயதில் அவரை திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வயது 56.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 37வது வயதில் (56 வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஜைனப் (ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும் அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக்கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஜைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.
.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போது அந்த கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஜைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபிகள் நாயகம் அவாகள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால், அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியா விட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
.
இந்தச் செய்தியை ஜைத் அவர்களும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஆலோசனைக் கேட்கிறார்கள். அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில், எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்த கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. 'உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்!' மனிதர்களுக்கு அஞ்சினீர்!' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டும்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உன்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.
.
கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதை தீர்மானிப்பதைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது வென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.
.
ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)
.
இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட, தான் காரணமாகிவிட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இது தான் உன்மையில் நடத்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.
.
'உன் மனைவியைத் தலாக் கூறாது தடுத்து கொள்! ஏன்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் ஆஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன். (அல் குர்ஆன் 33:37)
.
ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதை கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்த துணிவதில்லை. அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.
.
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப்படக்கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச செய்திளை முற்றாக நிராகரித்து விடுகின்றது.
.
இனி விஷயத்துக்கு வருவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸஜனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதன் காரணத்தையும் அவனே கூறுகின்றான்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.
.
வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.
.
இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.
.
போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையில் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்க்தெறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஜைது'டைய மனைவியை 'ஜைது' விவாகரத்து செய்தபின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்கும் முன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்படவேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.
.
முதல் காரணம் :
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையானவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்கு தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும் எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக்கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக்கூடியதாகும்)
இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை - இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.
.
இரண்டாவது காரணம் :
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்துவிட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? ஏன்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடமே மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.
.
மூன்றாவது காரணம்:
எவ்வளவு தான் பாசத்தை பொழிந்த ஒருவனை 'தத்து' எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடிhயது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?
வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாக போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன், அவர் சீக்கிரமாக சாகமாட்டாரோ? என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாகமாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூக்கு அனுப்பவும் தயங்கமாட்டான். இரத்த சம்மந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமான நேசம் இல்லாததாலும். சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்க்கைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடம் எதிர்ப்பார்க்க முடியும்.
.
நான்காவது காரணம்:
ஒருவனுக்கு அண்ணன, தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும், அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கொல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்துவிட்டதே என்று எண்ணமாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் 'மகன்' என்ற உறவு மற்ற உறவுகளைவிட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்பந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?
.
ஐந்தாவது காரணம்:
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்பொழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகை;கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்து கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகிவிடுகின்றது. ஒரு போலித் தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.
.
ஆறாவது காரணம் :
தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை, என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை 'இப்ராஹீமுக்குப் பிறந்தவன்' என்று செல்லிப் பாருங்கள்! அதன் பின் அவனது எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவதுதான் மனிதனின் இயல்பு.
எவனோ ஒருவனைத் தந்தை என்று – அதுவும் உண்மையான தந்தை போன்று - கருதுவதைவிட மானங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.
.
இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித் தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லி காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.
.
'ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்' (அல்குர்ஆன் 33:37)
.
'எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் உண்டாக்க வில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப்புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகின்றான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்' (அல்குர்ஆன் 33:4)
.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளை யென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் (அல்குர்ஆன் 33:5)
.
உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 58:2)
.
உங்களுக்கு பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது (அல்குர்ஆன் 4:23)
.
இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப்பை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
.
இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும் சிலருக்கு இன்னமும் இருக்கலாம். அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால் அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே! என்பதே அந்தச் சந்தேகம்.
.
மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோண்றினாலும் சிந்திக்கும் போதே இது தவறு என்பது தெளிவாகும்.
.
திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை.
.
காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.
.
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாக சொல்கிறான்.
.
'இறைத்தூதர்கள் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது (அல் குர்ஆன் 33:39)
.
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
.
இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த திருமணத்திற்கு சிலர் சொல்வது போல் அவற்றிற்கு காமவெறி காரணம் அல்லவென்பதை அறிவுடையோர் விளங்களாம். இறைவனே நன்கறிந்தவன்.
.
(நபிகள் நாயகம் - பல திருமணங்கள் செய்தது ஏன்? - என்றப் புத்தகத்திலிருந்து...)
.

.

.

Wednesday, March 19, 2008

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...
- அபு இப்ராஹீம், சென்னை.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல் இருப்பதற்காகவும், இஸ்லாம் அல்லாத மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது - அல்லது அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இஸ்லாத்தை - அதன் அறிவுப்பூர்வமான கருத்துக்களை - மக்களிடம் எடுத்துச்சொல்வதோடு இவர்கள் பின்பற்றக்கூடிய மௌடீகக் கொள்கைகளை குறிப்பாக கிறிஸ்தவத்தின் உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வேண்டி - பல தலைப்புகளில் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து எழுதிவருகின்றோம்.

இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி நமது 'ஏகத்துவம்' என்ற வலைத்தளத்தில் வெளிவந்த எமது இரண்டாவது கட்டுரையான 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபில்' என்றத் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள், எதையாவது சொல்லி மறுத்தாகவேண்டும் என்பதற்காக 'ஈசா குர்ஆன்' என்றப்பெயரில் ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தனர் :

'1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், 'இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்' என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்' என்று எழுதியிருந்தனர்.

அதாவது நாம் எழுதின கட்டுரைகளுக்கு இவர்கள் பதில் அளித்து இருந்தார்களாம். நாம் அதற்கு பதில் எழுதவில்லையாம். உடனே அடுத்த கட்டுரைக்கு நாம் தாவி ஓடிவிட்டோமாம்.

எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்பானாம். அது போல் 'இருக்கின்றவன் - இயைத்தளங்களைப் படிக்கின்றவன் - அனைவரும் கேனையன், இவர்கள் மட்டும் அறிவாளிகள்' என்ற எண்ணத்தில் இப்படி எழுதியுள்ளார்கள்.

இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக இவர்களைப்பற்றிய சில தகவல்களை உங்களுக்கு நினைவுட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

பகிரங்க விவாதத்திற்கு பயந்து ஓடிய கூட்டம்:

சமீபத்தில் இவர்கள் நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி தரக்குறைவாகவும் வெறித்தனமாகவும் - சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் இந்த வெளித்தனமான எழுத்துக்களுக்கு பதிலடியாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ மூலமாக நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவர்கள் சொல்வது உன்மையாக இருந்தால், இவர்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்வதை எங்கள் முன் நிரூபிக்கட்டும். அது உன்மையாக இருந்தால் எங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவத்தைத் தழுவுகிறோம்' என்று பகிரங்க விவாத அழைப்பு விடுத்தனர். இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு - இந்தச் சவாலை ஏற்க பயந்துக்கொண்டு - நாங்கள் இனையத்தளம் மூலம் மட்டும் தான் எழுதுவோம். நீங்களும் அது போல் எழுதுங்கள் - நமக்கு நேரடிவிவாதமெல்லாம் சரிவராது என்று நெண்டிக்காரணங்களைக் கூறியவர்கள், இனையத்தளம் மூலம் நாம் எழுத்து விவாதம் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எழுதி ஒழிந்துக்கொண்டனர். அதாவது அவர்கள் ஒழிந்துக்கொண்டு எழுதுவார்களாம். நாமும் ஒழிந்துக்கொண்டு எழுதவேண்டுமாம். இவர்களில் ஒரு சிலரை மட்டும் நமது சகோதரார்கள் அழைத்தார்களாம். அவர்களுக்கு பேசத்தெரியாதாம். இவை எல்லாம் இவர்கள் நமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து எழுதிய வெத்துக் காரணங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நீங்களல்ல. நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ, அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும் - நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும், அவர்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு எமது சகோதரர்கள் தயார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கின்றோம்.

இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம், நமது இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் Peace - Vision of Islam என்ற இஸ்லாமியக் கண்காட்சில் - இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக வருவதாக இருந்த சில நாட்களுக்கு முன்னால் 'வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன்; விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்' என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்கள். அதில், 'அவரது சொற்பொழிவை எந்தக் கிறிஸ்தவர்களும் கேட்டுவிடக்கூடாது - மாற்று மதத்தவர்களுக்காக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் எந்தக் கிறிஸ்தவனும் கேள்விக்கேட்டுவிடக்கூடாது - என்பதற்காக நாமெல்லாம் பிரார்த்திப்போம்' என்று பயந்து அதில் எழுதியிருந்தனர்.

மற்ற கிறிஸ்தவர்கள் சென்று சகோதரர் ஜாகிர் நாயக்குடைய சொற்பொழிவைக் கேட்கக்கூடாதாம். பாவம், அவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாம்;. சரி இருக்கட்டும். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே - அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு (?) எழுதும் அளவுக்கு திறமை (?) உள்ளவர்கள் தானே? இவர்கள் சென்று அவரிடம் விவாதமல்ல - கேள்வியாவது கேட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு மேடையில் ஏறி பேசத்தெரியாது என்று கூறி எமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பு எழுதியிருந்தார்கள். சரி, நீங்கள் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்பு என்று உங்கள் தளத்தில் பதித்த அந்தக் கேள்விகளையாவது அவரிடம் நேரடியாக கேட்டு மடக்கி இருக்கவேண்டியதுதானே? அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.

அதே போல் சகோதரர். பீஜேவிற்கும் பதிலாம். ஜாகிர் நாயக்காவது பலநாடுகளுக்கும் சென்றுவரக்கூடிய வடஇந்தியாவைச் சார்ந்தவர். இந்த பீஜே இங்கேயே ஊருக்கு ஊரு 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அங்கே போய் அவருக்கு மறுப்பு கொடுத்து அவரை தினரடிக்க வேண்டியது தானே? முடியாது. காரணம் இவர்களின் எழுத்தில் சத்தியமில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இஸ்லாத்தை வசைப்பாட வேண்டும். அதன் மூலம் தங்கள் மார்க்கம் வளர்கிறதோ இல்லையே - இஸ்லாம் வளரக்கூடாது என்று குறுகிய நோக்கம் மட்டுமே.

ஓழிந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவதை எங்கும் நிரூபிக்கும் தைரியம் வேண்டும். அது சத்தியமான - உன்மையான எழுத்தாக - கருத்தாக இருந்தால் மட்டுமே முடியும். அது இஸ்லாமியர்களாகிய - எங்களால் முடியும் - ஏனெனில் நாங்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்கின்றோம் - அதனால் அதை எங்கும் நிரூபிப்போம் என்பதை இங்கே ஆணித்தரமாக குறிப்பிடக்கடமைப் பட்டிருக்கின்றேன்.

இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமான பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?

அதில் வரக்கூடிய வரிகள் என்ன?

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள.

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?

அடுத்து, அந்த ஆபாசக்கதையில வரும் விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்த அந்த ஆண்களுடைய மர்ம உறுப்பு பற்றியது. அந்த ஆண்களின் 'ஆண்உறுப்பு' கழுதைக்கு இருக்குமே அந்த அளவுக்கு பெரியதாக இருந்ததாம். அவர்களுக்கு வந்த 'விந்து' குதிரைக்கு வருமே அந்த அளவுக்கு கொட்டியதாம்'

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...' (கத்தோளிக்க மொழிப்பெயர்ப்பு) என்று கடவுள் இந்த அசிங்கமான வர்ணனையைச் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர். இதில் எங்கே உவமை உள்ளது. வெட்கமாக இல்லை இதெல்லாம் உவமை என்பதற்கு.

இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.

அடுத்து நாம் 'ஏகத்துவம்' வலைதளத்தில் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையான (இவர்களுக்கு மறுத்து நாம் எழுதிய) 'இயேசு தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோரையும் அவமதித்தார்' என்ற கட்டுரைக்கு இவர்கள் அளித்த பதில் என்ன?

இயேசு தனது தாயை மதித்ததாக பைபிளில் கிடையாது. அவரை தரக்குறைவாக நடத்தியதாகத்தான் பைபிள் காட்டுகிறது. குர்ஆன் மட்டுமே இயேசு தாயை மதிப்பதாக கூறுகிறது என்று நாம் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? திரும்பத் திரும்ப இயேசு தாயை மதித்தார் என்று நீங்களாகத்தான் எழுதி இருந்தீர்களே யொழிய பைபிள் வசனங்களை உங்களால் ஆதாரம் காட்ட இயலவில்லை. 'இல்லை' என்று இப்பொழுதும் நீங்கள் மறுத்தீர்களேயானால் நாம் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். நாம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அறிஞர்களிடம் உங்கள் பைபிளில் வரக்கூடிய - 'இயேசு தாயை மதிக்கும் லட்சனங்களின் வசனங்களை எடுத்துச்சொல்வோம்' அந்த வசனத்தின் சரியான விளக்கத்தை (அதில் சொல்லப்பட்டுள்ள விதம் பற்றி) அவர்களிடம் கேட்போம். அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு நீங்கள் தயாரா? அந்த அத்தனை வசனங்களிலும் மிகத் தெளிவாகவே தெரிகின்றது இயேசு தனது தாயை மதிக்க வில்லை என்பது. அதற்கு மேலும் நீங்களாகத்தான் சுயமாக விளக்கம் அளிக்கின்றீர்களே யொழிய, பைபிளில் ஒரு இடத்திலும் உங்களின் சுயக்கருத்துக்களுக்கு ஆதரவான வசனங்கள் கிடையாது.

அடுத்து நாம் அதே கட்டுரையில் இயேசு யூதர்களைச்சேர்ந்த பரிசேயர்களைப் பார்த்து தேவ்டியா மக்களா... - வேசி மக்களா - விபச்சார சந்ததிகளா என்று அவர்களையல்ல அவர்களின் பெற்றோரையும் - மூதாதையரையும் இன்றைய ரௌடிகள் உபயோகப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினார் என்று கூறி பைபிள் இயேசுவைக் கேவலப்படுத்துகிறது, குர்ஆன்தான் அவரை கண்ணியப்படுத்துகிறது என்று நாம் எழுதி இருந்தோம். அதற்கு நீங்கள் எழுதின பதில் என்ன? இது வரை பதில் எழுதவில்லையே ஏன்?

இயேசுவிடம் அவரது சீடன் ஒருவன் தனது தகப்பனின் மரனச்செய்தியை சொல்லிவிட்டு - அவரை அடக்கம் பண்ணிவிட்டு வருகின்றேன் என்று அனுமதிக்கேட்டதற்கு, அதை மறுத்த மறுத்த இயேசு 'அதல்லாம் மற்றவன் பார்த்துக்கொள்வான் - நீ என்னோடு வா' என்று கூறி ஒரு மனித உரிமை மீறலை செய்த இரக்கமற்றவர் என்று பைபிள் கூறுகிறது என்று ஆதாரத்துடன் நாம் எழுதிய பகுதிக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? ஒன்றும் கிடையாது.

இஸ்லாம் கல்வி தளத்தில் சகோதரர் எம். எம். அக்பர் அவர்கள் எழுதி தமிழில் வெளிவந்த 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி-1)'க்கு இது வரை நீங்கள் பதில் எழுதவில்லையே, ஏன்?

இது மட்டுமல்ல இனி நாம் எழுதப்போகிற எந்தக் கட்டுரைக்கும் உங்களால் பதில் எழுத முடியாது. பைபிளில் பெரும்பாலும் இருப்பது கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வதைத் தவிர. அப்படியே மறுப்பு என்று நீங்கள் எழுதுவதாக இருந்தால் வழக்கம் போல் நீங்கள் எழுதும் 'மறுப்பு' என்று எழுதிவிட்டு இதுதான் மறுப்பு. 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.

நான் கேட்கின்றேன், உங்களிடம் கேட்பதற்கு கேள்வியே இல்லையா? பைபிளில் ஒன்று இரண்டு பலவீனமா இருக்கின்றது? ஆயிரக்கணக்கான முரண்பாடுகள். அவ்வளவு அசிங்கங்களும் - அபாசங்களும் நிறைந்த வசனங்கள், அறிவுக்கு பொருந்தாத கருத்துக்கள், வர்னாசிரமத்தை போதிக்கும் வசனங்கள், நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர்முரனான கருத்துக்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனை பலவீனங்களும் உங்கள் பைபிளில் இருக்கின்றது, அது சம்பந்தமாக ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் எங்களுடன் விவாதம் வேண்டாம். பாவம் உங்களுக்கு முடியாது. குறைந்தபட்சம் கேள்விபதில் நிகழ்சியாவது நடத்த திரானிஇருக்கிறதா? முடியாது! முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.

ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?

இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)

இங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களால் நடக்கும் அடையாளங்களாம்.

1. இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்துவார்களாம். (இதைத்தான் இவர்கள் வக்கலத்து வாங்கும் பால் தினகரன் போன்றோர் செய்வதாக சொல்லி ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர்)

2. சர்பங்களை - பாம்புகளைப் பிடிப்பார்களாம். இவர்களை ஒன்றும் செய்யாதாம். (ஹி... ஹி... நினைப்பு பிழைப்ப கெடுக்குமாம்)

3. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் - அதாவது சாகடிக்கக்கூடிய எந்தவிதமான விஷத்தைக் குடித்தாலும் அந்த விஷம் இவர்களை ஒன்றும் செய்யாதாம்.

4. வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களாம். அப்படி கையை வைத்ததும் குணமாவார்களாம்.

உலகத்தில் எந்த கிறிஸ்தவானாவது உன்மையான கிறிஸ்தவனாக இருந்தால் - உங்கள் மதம் சத்தியமான மதமாக இருந்தால் இவற்றில் உள்ள அத்தனையையும் நிரூபியுங்கள். எங்களுடைய கேள்விகளுக் பதில் அளிக்க வேண்டாம். பாவம் உங்களுக்கு பேசத்தெரியாது. விவாதத்திற்கும் வரவேண்டாம். ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது. மேற்கூறப்பட்ட கிறிஸ்துவத்தை நம்பக்கூடிய இவர்களால் நடத்த முடியும் என்று சொல்லப்பட்ட அதிசயங்களை மட்டும் இவர்கள் செய்து காட்டட்டும். அல்லது அதில மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ளதே -- இவர்கள் எந்த விஷத்தைக் குடித்தாலும் அது இவர்களை ஒன்றும் செய்யாது என்று - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதை குடித்துவிட்டு உயிரோடு இருந்து காட்டட்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் வக்கிர எழுத்துக்களைத் தொடரட்டும். முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஏராளமான தலைப்புகளில் இவர்களின் மார்க்கம் பற்றியும் - இவர்களின் நம்பிக்கையின் மடத்தனங்கள் பற்றியும் - பைபிளின் உன்மைநிலைப் பற்றியும் பல கட்டுரைகள் மூலம் விளக்க இருக்கின்றோம். அதன் பிறகு நமது சகோதரர்கள் பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக (?) அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தக்க ஆதாரங்களுடன் - அறிவுப்பூர்வமான வாதங்களுடன் மறுப்புக்களை கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அந்த மறுப்பும் கூட இவர்களுக்காக அல்ல. இவர்களுக்கு பதில் கொடுப்பதும் ஒன்றே, கொடுக்காததும் ஒன்றே. மாறாக நமது விளக்கங்கள் அனைத்தும் மற்ற பொது மக்களின் தெளிவிற்காக...

அடுத்து பொதுவான ஒரு சந்தேகம் உங்களுக்கு எழழாம். அதாவது, நாம் ஏன் அவர்கள் மறுப்பாக எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானாரை இழிவு படுத்தி எழுதும் வக்கிர எழுத்துக்களுக்கும் பதில் அளிக்கவே இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.
இவர்கள் எழுதும் அத்தனை அவதூறுக் கட்டுரைகளும் வேண்டும் என்றே நமது கவனத்தைத்திசைதிருப்புவதற்காகவும, நமது நேரத்தை சம்பந்தம் இல்லாத கேள்விகள் மூலம் வீனடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அவை ஒவ்வென்றுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டிருந்தால் - நாம் நமது பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். நமது கருத்துக்களை நம்மால் மக்களிடம் சென்று சேர்க்கமுடியாது. இவர்களின் எண்ணமும் இது தான். காரணம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் கேள்விகளுக்கு பதில் அல்ல. நமது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதே. அப்படி பதில் தேவைப்படுபவர்களாக இருந்தால், ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதியவர்கள் அவர் சென்னை வந்ததும் அவரின் பேச்சை யாரும் கேட்டுவிடாமல் இருப்பதற்காக பிரார்த்தனை செய்வோம் என்று எழுதி இருக்க மாட்டார்கள். நேரடியாக சென்று கேள்விக்கேட்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு பதில் வேண்டும் என்றால் எங்கள் சகோதரார்கள் www.iiponline.org மூலம் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொது மேடையில் சந்திக்க வரட்டும். அங்கே நாம் அவர்களின் பதில்களுக்கு தக்க பதில் கொடுக்க தயாராக இருக்கின்றோம். அது வரை இவர்களின் இந்த அவதூறுப்பிரச்சாரங்களுக்கு பதில் எழுதுவது என்பது நமது நேரம், உழைப்பு அத்தனையையுமே - நாமே வீனடிப்பதற்கு சமமானதே என்றுக்கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
.
.
.
.

Saturday, February 23, 2008

பெற்றோரைப் பேணுவோம்

இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் :

'அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
அல்குர்ஆன் 17 : 23

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : திர்மிதீ, இப்னு ஹிப்பான், ஹாம்மில்

''தாய்மார்களைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (அல்லாஹ்வீன் கட்டளையை) நிறைவேற்றாமல் இருப்பதையும் (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும், வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், சொத்துக்களை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது; மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரீ, முஸ்லிம்

''இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு, நூல்: திர்மிதீ

நபியவர்களின் சமூகத்திற்கு வந்த ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா? என வினவிய போது நபியவர்கள், ''உமக்கு தாய், தந்தையார் உண்டா? என (திருப்பி) கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்ற போது நபியவர்கள், ''அவ்விருவருக்கும் (பணிவிடை செய்வதன் மூலமாக) அறப்போர் செய்யும்'' என்றுரைத்தார்கள்.
.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு (நூல்: ஸஹீஹ் அபூதாவூத் -2529)


ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார் :'அல்லாவின் தூதரே! நான் நல்லவிதமாக நடந்துகொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார்?'
.
நாயகம் (ஸல்) அவர்கள் 'உம்முடைய அன்னையே மிகவும் உரிமை பெற்றவர்கள்' என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் 'அவருக்குப் பிறகு யார்?' என்று கேட்டார்.
.
நாயகம் அவர்கள் 'உம்முடைய அன்னைதான்!' என்று பதிலளித்தார்கள்.
.
அம்மனிதர் 'பிறகு யார்?' என்று மீண்டும் வினவினார். 'உம்முடைய தந்தை. அதற்கு அடுத்து படிப்படியாக உமது நெருங்கிய உறவினர்கள் உம் நன்னடத்தைக்கு உரியவர்கள்'என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்
.
நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)'இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?') 'முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்.'
.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'தாய் தந்தையருடன் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும், பேராசையையும், கஞ்சத்தனத்தையும் இறைவன் உங்கள் மீது ஹராமாக்கியுள்ளான். நீங்கள் வீண் பேச்சு பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கின்றான்.'
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நாங்கள் அண்ணலாரின் அவையில் அமர்ந்து கொண்டிருந்த போது, பனூஸலமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் தந்தையர் இறந்துபோன பின்னாலும் நான் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா?' எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் அவர்கள், 'ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமன்னிப்புக் கோருங்கள். அவர்கள் செய்துவிட்டுச் சென்ற ( அனுமதிக்கப்பட்ட) மரண சாஸனத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் தாய், தந்தையர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். தாய், தந்தையின் உறவினர்களுக்கு கண்ணியம் அளியுங்கள், அவர்களை உபசரியுங்கள்.'
அறிவிப்பாளர் : அபூ உஸைத்தினில் ஸாஇதி (ரலி), நூல் : அபூதாவூத்

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஜிஈரானா என்னுமிடத்தில் இறைச்சி பங்கிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அங்கே ஒரு பெண்மணி வந்தார். நபிகள் நாயகத்திற்கு அருகில் சென்றார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் தம் போர்வையைத் தரையில் விரித்தார்கள். அதில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொண்டார். 'இவர் யார்?' என்று நான் வினவினேன். 'இவர் அண்ணலாருக்கு அமுதூட்டிய செவிலித்தாய்!' என்று மக்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) நூல் : அபூதாவூத்

Monday, February 04, 2008

குர்ஆன் ஓர் அறிமுகம்

வேதங்கள் என கூறப்படுபவை

உலகிலுள்ள அனைத்து மதங்களும் தங்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜுர், சாம, அதர்வணம், பகவத்கீதை. மனுஸ்மிரிதி போன்றவைகளையும், கிறிஸ்தவமதம் பைபிளையும் சீக்கிய மதம் குரு கிரந்தத்தையும் தங்கள் வேதங்களாக கூறுகின்றன. குர்ஆன் உலகத்தில் வாழும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு அருளப்பட்டிருந்தாலும் அது முஸ்லீம்களுக்கு மாத்திரம் வேத நூல் என்று பிற மதத்தினர் கருதும் நிலையும் குர்ஆன் எங்களுடைய வேத நூல் அது முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சில முஸ்லீம்களும் கூறும் நிலையையும் இன்று நாம் காண்கிறோம்.

ஒப்பீடு

பிற மதங்களின் வேதங்களுடன் குர்ஆனை ஒப்பிட்டு நோக்கும் போது நாம் அறியும் சில விஷயங்கள்:

1. குர்ஆனை யாரும் படித்துப் பயன் பெறலாம்.

2. ஒரு சாரார் மட்டுமே வேதத்தைக் கற்றுப் பயன்பெற முடியும் என்ற தடை இஸ்லாத்தில் இல்லை.

3. எல்லாத்துறைகளிலும் எல்லா நேரங்களிலும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு குர்ஆனில் உண்டு, இது பிற வேதநூல்களில் இல்லாத தனிச்சிறப்பு.

4. குடும்பத்தாருடன் இருந்து குர்ஆனை ஓதி பயன் பெறலாம். நேர்வழி அடையலாம். பைபிளின் ஒரு ஆகமத்தை (இசக்கியேல்) நம் சகோதரிகளுடனோ குடும்பத்தாருடனோ படிக்கவியலாத ஆபாச நடை இறைவேதமா? இப்படி இருக்கிறது என வியப்பூட்டும் விரசமான நிலை.

5. 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட இக்குர்ஆனின் கூற்றுக்கள் இன்றளவும் அறிவுலக ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்து கூறும் விஞ்ஞான விந்தைகளுடன் முரண்படாதிருப்பது. இந்த விந்தை பிற வேதங்களில் இல்லை.

6. மனிதக் கரங்களால் கால சூழ்நிலைகளுக்கேற்ப சில கருத்துக்களைச் சேர்த்தும், நீக்கியும், மாற்றியும், உண்மை நிலையை இழந்து சீரழியும் பிற வேதங்களைப் போல் இல்லாமல் அதன் மூல மொழியில் அது எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே எந்த மாற்றமுமில்லாமல் இன்றளவும் திகழ்வது குர்ஆனின் தனிச் சிறப்பு.

7. குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துகிறது.(நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். ஆதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். (3:3)

8. இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். இச்சிறப்புகள் பிற வேதங்களுக்கு இல்லை.''நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(15:9)''

9. குர்ஆன் இறைவேதமே எனப்பிரகடனம் செய்கிறது.''இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.(2:23)''

''அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா! (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(4:82)''

இதுபோன்று தம்மை இறைவேதம்தான் என்று எந்த வேதங்களும் உறுதியாகப் பிரகடனம் செய்யவில்லை. குர்ஆனின் இந்த சவாலை இன்றையளவும் யாராலும் எதிர் கொள்ளவியலவில்லை. இதுபோன்று ஒப்பீடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது

''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:32)'' ''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது

1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (முஸ்லீம் - இப்னு மஸ்வூத்(ரலி))

2. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும் - அபூதாவூத் - அபூஹுரைரா(ரலி)

3. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். (புகாரி - உஸ்மான்(ரலி)

4. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைகளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (நூல்: தப்ரானி - அபூஹுரைரா(ரலி)

5. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்)வின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும். (நூல்: முஸ்லீம்)

6. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (நூல்: முஸ்லீம்- உமர்(ரலி))7. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. (திர்மிதி - இப்னு அப்பாஸ்(ரலி)

8. குர்ஆனில் யார் ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை அதனைப் போன்று பத்து நன்மையாகிறது. (திர்மிதி - இப்னு மஸ்வூத்(ரலி)

9. யார் குர்ஆனை மனனம் செய்து விட்டு மறந்து விடுவார்களோ அவர்கள் மறுமையில் முகத்தில் சதை இல்லாமல் வருவார்கள்.

10. யார் குர்ஆனை இராகமாக (தஜ்வீத்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல்: அபூதாவூத் - பசீர் பின் அப்துல் முன்திர் (ரலி)

11. குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் குர்ஆனை மரணித்தவர்களுக்கு அதனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.''(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.(36:70)''

குர்ஆன் பற்றிய சில குறிப்புகள்

குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய முதல் வசனம் 96வது அத்தியாயத்தில் 1 முதல் 5 வசனங்கள் வரை

குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய இறுதி வசனம் 2: 281

முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹா

இறுதி அத்தியாயம் சூரத்துன் நாஸ்

மக்கீ அத்தியாயங்கள் - ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை பற்றி விவரிக்க கூடியது

மதனீ அத்தியாயங்கள் - சட்டதிட்டங்கள், சமுதாயப் பிரச்சினைகள், வாரிசுரிமை, ஆட்சி முதலியனகுர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது

மக்கத்து மாந்தர்களின் மூடப்பழக்க வழக்கங்களால் வெறுப்புற்று அமைதியை நாடி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஹிரா மலைக் குகையில் இறைவனைத் தியானித்துக் கொண்டிருக்கும் போது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறைவனிடமிருந்து வஹீ (தூதுச்செய்தி) கொண்டு வந்து நபிகளிடம் நீர் ஓதுவீராக எனக் கூற நபிகளார் எனக்கு ஓதத் தெரியாது எனக் கூறினார்கள். மீண்டும் ஜிப்ரீல்(அலை) நபி(ஸல்) அவர்களிடம் உமதிரட்சகனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! என நபிகளை இறுகக் கட்டியணைத்துக் கூற நபிகளார் ஓதினார்கள். இவ்வாறு குர்ஆனின் 96: 1 முதல் 5 வசனங்கள் முதலில் இறங்கின. வஹீ அருளப் பெற்ற நபிகளார் மிகுந்த பயத்துடன் வீடு திரும்பினார்கள். அவர்களை மனைவி கதீஜா(ரலி) அவர்கள் நீங்கள் நாதியற்றவர்களை சுமக்கிறீர்கள், தேவையுள்ளோருக்கு உதவி புரிகிறீர்கள், பசித்தோருக்கு உணவளிக்கிறீர்கள், உற்றார் உறவினரை உபசரிக்கிறீர்கள். எனவே இறைவன் உங்களை கைவிட மாட்டான் என ஆறுதல் கூறி தேற்றிய பின் தம் உறவினர்களில் ஒருவரான வரகா என்ற முதியவரிடம் (முன் வேதங்களை கற்றரிந்தவர்) அழைத்துச் சென்று கூற வரகா நபிகளை நோக்கி, நீர் நபிதான். என உறுதிப்படுத்திக் கூறினார். மேலும் பின்னர் ஒரு காலம் வரும் அக்காலத்தில் நீர் உம் ஊரை விட்டு விரட்டப்படுவீர் என முன்னறிவிப்புச் செய்தார். இது குர்ஆன் அருளப்பட்ட விதம்.

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட விதம்

1. நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

2. நபித்தோழர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தனர்.

3. காத்திப் வஹி என்னும் எழுத்தாளர்கள் ஏடுகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தனர்.

குர்ஆன் திரட்டப்பட்ட விதம்

ஒன்றன் பின் ஒன்றாக நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கிக் கொண்டிருக்க அவற்றை அவ்வப்போது நபி(ஸல்) அவர்கள் காதிப் வஹி வாசிகளை அழைத்து எந்த வசனங்களை எத்துடன் இணைத்து எழுதவேண்டும் என்ற ஒழுங்கு முறைப்படி வரிசைக் கிரமமாக எழுதுமாறு பணித்தார்கள். மேலும், குர்ஆனைத் தவிர நான் கூறும் எதையும் எழுதிவிடாதீர்கள் என நபிகளார்(ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள். ஆக குர்ஆனைத் இப்பொழுதுள்ள நிலையில் ஒழங்கு படுத்தி திரட்டித் தந்தது நபி(ஸல்) அவர்களே. இன்று மக்கள் மத்தியில் சிலர் குர்ஆனை தொகுத்தவர் அபூபக்கர்(ரலி) ஈமானில் நிறைந்தவர் உஸ்மான்(ரலி) என்று புகழ் பாடும் கூற்று சரியல்ல. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் உமர்(ரலி) அவர்கள் ஆலோசனையின் பேரில் ஜைது இப்னுஸாபித்(ரலி) அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரு குழு காதிப் வஹி, குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தோர், ஆகியோரை அழைத்து அவர்களின் ஏடுகளில் உள்ள வசனங்களை முழுவதும் சரிபார்க்கப்பட்டு அதனை ஒரு பிரதியாக ஆக்கி அது உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. உமர்(ரலி) அதனை தன் மகள் ஹப்ஸா(ரலி) (நபிகளாரின் மனைவி) அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்கள். பின்னர் உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்தில் ஹப்ஸா(ரலி) விடமிருந்து குர்ஆனின் அப்பிரதியைப் பெற்று பல பிரதிகளாக அதனை எழுதி உலகின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அப்பிரதிகளில் ஒன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இன்னும் உள்ளது.

சில ஐயங்களும் தெளிவும்

1. குர்ஆனின் முதல் வசனம் 96:1 முதல் 5 வரை இறுதி வசனம் 2:281 என்று இருந்தும் லவ்ஹுல் மஃஹுபூலில் உள்ள ஒழுங்கு முறைப்படியுள்ள குர்ஆனின் முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாவும் இறுதி அத்தியாயம் சூரத்துன்னாஸும் இருப்பது ஏன்? என்ற ஐயம் நமக்கு வருவதுண்டு.

குர்ஆனின் வசனங்கள் கால சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குகேற்ப ஒன்றன்பின் ஒன்றாக இறங்கியவைகளாகும். இதனை நாம் விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.இந்திய அரசியல் சாசன சட்டம் 1, 2, 3 எனத்துவங்கி அநேக சட்டப் பிரிவுகள் உள்ளன. ஒரு கொலை நடந்து விட்டால் அதற்கு 302, 307 சட்டப்பிரிவுகள் கொலையாளி மீது சுமத்தப்படுகின்றது. அதன் படி அவன் தண்டனை பெறுகிறான். இதுபோல களவு, வழிப்பறி, கற்பழிப்பு, விபச்சாரம் என பல குற்றங்களுக்கு வௌ;வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. அரசியல் சட்டம் இயற்றிய பின் முதலில் கொலை நடந்தால் கொலைக்குறிய சட்டப்பிரிவே நடைமுறைக்கு வரும் 1வது சட்டப்பிரிவு நடைமுறைக்கு வராது. இதனைப் புரிந்து கொண்டால் மேற் கூறிய ஐயம் எழுவதில்லை.

2. குர்ஆனின் வசனங்கள் சிலர் 6666 என்றும் சிலர் 6236 என்றும் சிலர் வேறு எண்ணையும் கூறுவர். அப்படியானால் ஏன் இப்படி வேறுபாடு? என்ற ஐயம் நமக்கு வருவது உண்டு. சில இடங்களில் ஒரு வசனத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு வசனம் எனவும் சில இடங்களில் இரண்டு வசனத்தை ஒன்றாகச் சேர்த்து ஒரு வசனம் எனவும் எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான், தவிர குர்ஆனில் எந்த மாறுபாடும் இல்லை. 6666 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுதான் குர்ஆன், 6236 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுவே குர்ஆன்.

3. இஸ்தான்புல்லில் இன்று காணப்படும் குர்ஆனின் பிரதி உஸ்மான்(ரலி) ஆட்சி காலத்தில் விநியோகிக்கப்பட்டது. தற்பொழுது நம்மிடம் உள்ள குர்ஆனின் பிரதியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது அதனை நம்மால் படிக்க இயலாமல் குறியீடுகளின்றி காணப்படுகின்றது. அப்படியானால் எந்த மாற்றமும் இல்லாமல் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? என்ற ஐயம் நமக்கு எழும்.

இதனை நாம் விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அன்று ஓலைச்சுவடிகளில் எழுதியிருந்தார். திருக்குறளின் மூலப் பிரதி சரஸ்வதி மகாலில் உள்ளது. அதனை நாம் படிக்க முயன்றால் படிக்க வியலாது. காரணம் அந்நாளில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவம் மாறுதலடைந்து இன்று தமிழ் மொழியின் வரி வடிவம் வேறு நிலையில் உள்ளது. ஆனால் ஒலி வடிவம் ஒன்றே. தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் எழுத்துக்களின் னை, ணை, லை போன்ற எழத்துக்கள் சிறிது காலத்துக்கு முன்பு வேறு வடிவத்தில் இருந்ததை யாவரும் அறிவர். ஆக எழுத்துக்களின் வரி வடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருப்பதைப் போல் குர்ஆனின் அரபி மொழி வரிவடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருக்கின்றது. குர்ஆனின் அகர, உகர, இகர குறியீடுகள் இட்டவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்குப் பின்னும் வட்டமிட்டிருப்பது பிந்திய காலங்களில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், குர்ஆனை 30 தினங்களில் ஓதுவதற்கு ஏதுவாக சமமாக 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஜுஸ்உ (பாகம்) எனப் பெயரிடப்பட்டது. 7 நாட்களில் ஓதுவதற்கு வசதியாக மன்ஸில் என 7 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டது இவையெல்லாம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளே.

அல்குர்ஆனின் சிறப்புகள்

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் தான் விரும்புவது போல் வாழ்ந்து கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுக்கின்றான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு வேதமாக அல்குர்ஆனையும் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை நாம் நினைப்பது போன்றெல்லாம் அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லீமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் எதிர்பார்ப்புகளும் ஆகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது. இதனை சற்று விரிவாகக் காண்போம்.

1. அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பதுதிருமறையை

சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலக்கிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது. இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லீம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன் அல்குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான். எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக்கொள்ளவேண்டும். அதுவே அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை புரிந்து கொள்வதற்கு சாதாரண அறிவே போதுமானது. ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54:32, 47:24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?(54:32)''

''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''

2. அல்குர்ஆனை ஓதுதல்

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனைப் ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக்காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக்காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி)

அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.''(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக!'' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதனால்தான் குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே! நாளை மறுமை நாளில் ஒரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அலங்கோலப்பட்டு அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.

திருக்குர்ஆனை தினமும் படித்து பயனடைவோமாக!

Saturday, February 02, 2008

திருக்குர்ஆனை படிப்பதற்கு முன்...

திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?
  • அதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.
செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.
இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.
தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.
முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.
அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார். மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார்.
அதற்கும் மறு நாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.
இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப் படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவதில்லை. மகனுக்குத் தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.
இது போலவே திருக் குர்ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.
எனவே திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதையும், குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் அதன் செய்திகள் அமையாமல் இருப்பதையும் காணலாம். முன்னர் கூறப்பட்டது பிறகு மாற்றப்பட்டதையும் காணலாம்.
பொதுவாக எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இடையே பல வேறுபாடுகளைக் காணலாம்.
எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! ''இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி. ஊழல் மலிந்து விட்டது. உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை'' எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென ''உன்னை'' என்று முன்னிலைக்கு மாறுவார்.
'இவர்' என்பதும் 'உன்னை' என்பதும் ஒருவரைத் தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இத்தகைய முறை உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.
இது மேடைப் பேச்சுக்களில் மட்டும் இல்லை; வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.
''உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது'' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வருபவர் திடீரென்று ''இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி'' எனக் கூறுவார். முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சர்வ சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.
ஆனால் எழுத்தில் இவ்வாறு யாரும் எழுத மாட்டோம். திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காண முடிகின்றது.
'நீங்கள்' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து 'அவர்கள்' என்று படர்க்கைக்கு மாறும்.
திருக்குர்ஆன் பேச்சாக அருளப்பட்டு, எழுத்து வடிவமாக்கப்பட்டது என்பதே இதற்குக் காணரம்.
அதே போல் தந்தை மகனுக்குக் கூறும் அறிவுரையில் சூழ்நிலைக்கு ஏற்ப சில அறிவுரைகளை மாற்றிக் கூறுவதுண்டு.
நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போது ''வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது'' என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் ''வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன'' என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.
இது போலவே குர்ஆனும் பல்வேறு கால கட்டங்களில் கூறப்பட்ட அறிவுரை என்பதால் இரு வேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இரு வேறு அறிவுரைகள் முரண் போல தோற்றமளிக்கலாம். இது போன்ற இடங்களில் நாம் அதற்குரிய குறிப்புகளில் விளக்கம் அளித்துள்ளோம்.
குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே 'நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் 'நாம்' என்றே கூறுகிறான்.
தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல் வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.
'இது என் வீடு' என்று கூறும் இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.
சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது 'நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் 'நாம்', 'நம்மை', 'நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)

அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.

முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.

அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் எழுத்து வடிவமாக எழுதி வைத்துச் சென்றார்களே; இரண்டாவதாகத் தொகுப்பதற்கு என்ன அவசியம்? என்று சந்தேகம் எழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவத்தில் பதிவு செய்தார்கள் என்றாலும், அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார்கள் என்று புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

ஐந்து வசனங்கள் ஒரு நாள் அருளப்பட்டால் அந்த ஐந்து வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே எழுதச் சொல்வார்கள். அது தோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். அடுத்த நாள் மூன்று வசனங்கள் அருளப்பட்டால் அதை எழுதச் சொல்வார்கள்; அது தனியாக எழுதப்படும்.
எழுத்து வடிவத்தில் அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு அதனை நபித்தோழர்கள் மனனம் செய்து கொள்வார்கள். ஒவ்வொரு வசனத்திற்குப் பிறகும் அடுத்தது எது என்பதை மனனம் செய்தவர்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள்.

மனனம் செய்த தலைமுறையினர் மரணித்து விட்டால் அந்த ஏட்டிலிருந்து இந்த வரிசைப்படி தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து எழுத்து வடிவில் உள்ளதை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

எழுதப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்த ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தினார்கள்.

தாம், மனனம் செய்ததன் அடிப்படையிலும் மற்றவர்களின் மனனத்தை அடிப்படையாகக் கொண்டும் ''இது இந்த அத்தியாயத்தைச் சேர்ந்தது; இது இந்த வசனத்திற்கு அடுத்து வரவேண்டியது; இது இந்த வசனத்திற்கு முன்னால் வைக்க வேண்டியது'' என்று வரிசைப்படுத்தினார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் வசனங்களையும் வரிசைப்படுத்தி அத்தியாயங்களை தொகுத்தார்களே தவிர, இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது, இது மூன்றாவது அத்தியாயம் என்று வரிசைப்படுத்தவில்லை.
இந்த பாதுகாக்கப்பட்ட மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களுடைய மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில்...
.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய அந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.

இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் ''இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
.
குர்ஆனுடைய அத்தியாயங்களை ''இது முதல் அத்தியாயம்; இது இரண்டாவது அத்தியாயம்; இது மூன்றாவது அத்தியாயம்'' என்று வரிசைப்படுத்துகின்ற பணியை அவர்கள் தான் செய்தார்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டிருந்தாலும் எதை முதல் அத்தியாயமாக அமைப்பது, எதை இரண்டாவது அத்தியாயமாக அமைப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை. எது முதலில் இருந்தாலும், எது இடையில் இருந்தாலும், எது இறுதியில் இருந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதே இதற்குக் காரணம். (நூல்: புகாரி லி 4993)

உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். ''இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தி னார்கள்.

சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.

இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதி எடுத்தல்
.
மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படைலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப் படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் ''இஸ்தன்புல்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் ''தாஷ்கண்ட்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.
.
அத்தியாயங்களை உஸ்மான்(ரலி) தான் வரிசைப்படுத்தினார்
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களில் பைஹகீ என்ற அறிஞர் முக்கியமானவர். ஆனால் இவர் தனது கூற்றுக்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.

அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது இப்போதைய குர்ஆனில் இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்படி இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவர்களின் வரிசைக்கும் இடையே ஏராளமான மாற்றங்கள் இருந்தன.

உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆல இம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித் தோழர்கள் பல வரிசைப் படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப் படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை.

எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவது தான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.
.
சமுதாயத்தின் அங்கீகாரம்
.
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.

இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளிலேயே குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.