அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, March 21, 2008

இரண்டாம் கற்காலம் !

இரண்டாம் கற்காலம் !
...................................................-- ஆரூர் புதியவன்

கல்லும், உளியும்
கலந்த பொழுது
கர்ப்பமான கல்
சிற்பமானது

மலையை செதுக்கத் தெரிந்த
மனிதன் தன்
மனத்தை செதுக்கத்தான்
மறந்தே போனான்

கல்லுக்குத்தான்
எத்தனை பரிணாமங்கள்
கல் கடவுளாக்கப்பட்டது
பகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...
காலம் புரண்டது...
கடவுளை கல்லால் அடித்தவர்களும்
கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.

கடவுள் பக்திக்கு மட்டுமின்றி
கலவரத்திற்கும்...
கல்லே மூலமாய்...

மனிதனுக்கு
கல்லையும் கடவுளாய்ப்
பார்க்க முடிந்தது ...
மற்றவனைத்தான்
தன்போல் பாவிக்க முடியவில்லை.

உடைப்பட்ட சிலைகளுக்காய்
உருள்கின்றன தலைகள்...

ஒரு தலைவர் ஆற்றிய
சேவைகளை விட
அவருக்கு வைக்கப்படும்
சிலைகளே ...
அவர் தகுதி உரைக்கிறது...

ஒன்று மட்டும் உண்மை
மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது.

நகரவீதிகள் தோறும்
நகரா சிலைகள்
ஓ ... இது இரண்டாம் கற்காலம் !

இங்கே
அடிமைத்தளை நீக்க
யுத்தம் செய்பவர்களை விட
தலைவர் சிலை வைக்க
ரத்தம் சிந்துவோர் அதிகம்

சட்ட சபைகள்
நலத்திட்டங்களை விட
சிலைத்திட்டங்களே
அதிகம் அறிவிக்கின்றன

இருபத்தோராம் நூற்றாண்டின்
இனிய தமிழா ...
கணிப்பொறி யுகத்தில்
உலகம்...
நீ இன்னும்
கற்காலத்தை
கடக்காமலா?

ஒவ்வொரு சிலையும்
மலையின் தவணைமுறை சமாதி
என்பதை மறவாதே !

சிலைகளை மற
மனிதனை நினை
ஜாதிகளும், சிலைகளும்
அறிவுக்கு அமைக்கப்பட்ட
வேகத்தடைகள்
நாம் விரைந்து முன்னேற
இரண்டையும் தகர்ப்போம்...!
.
.

Wednesday, March 19, 2008

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...
- அபு இப்ராஹீம், சென்னை.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல் இருப்பதற்காகவும், இஸ்லாம் அல்லாத மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது - அல்லது அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இஸ்லாத்தை - அதன் அறிவுப்பூர்வமான கருத்துக்களை - மக்களிடம் எடுத்துச்சொல்வதோடு இவர்கள் பின்பற்றக்கூடிய மௌடீகக் கொள்கைகளை குறிப்பாக கிறிஸ்தவத்தின் உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வேண்டி - பல தலைப்புகளில் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து எழுதிவருகின்றோம்.

இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி நமது 'ஏகத்துவம்' என்ற வலைத்தளத்தில் வெளிவந்த எமது இரண்டாவது கட்டுரையான 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபில்' என்றத் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள், எதையாவது சொல்லி மறுத்தாகவேண்டும் என்பதற்காக 'ஈசா குர்ஆன்' என்றப்பெயரில் ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தனர் :

'1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், 'இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்' என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்' என்று எழுதியிருந்தனர்.

அதாவது நாம் எழுதின கட்டுரைகளுக்கு இவர்கள் பதில் அளித்து இருந்தார்களாம். நாம் அதற்கு பதில் எழுதவில்லையாம். உடனே அடுத்த கட்டுரைக்கு நாம் தாவி ஓடிவிட்டோமாம்.

எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்பானாம். அது போல் 'இருக்கின்றவன் - இயைத்தளங்களைப் படிக்கின்றவன் - அனைவரும் கேனையன், இவர்கள் மட்டும் அறிவாளிகள்' என்ற எண்ணத்தில் இப்படி எழுதியுள்ளார்கள்.

இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக இவர்களைப்பற்றிய சில தகவல்களை உங்களுக்கு நினைவுட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

பகிரங்க விவாதத்திற்கு பயந்து ஓடிய கூட்டம்:

சமீபத்தில் இவர்கள் நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி தரக்குறைவாகவும் வெறித்தனமாகவும் - சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் இந்த வெளித்தனமான எழுத்துக்களுக்கு பதிலடியாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ மூலமாக நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவர்கள் சொல்வது உன்மையாக இருந்தால், இவர்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்வதை எங்கள் முன் நிரூபிக்கட்டும். அது உன்மையாக இருந்தால் எங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவத்தைத் தழுவுகிறோம்' என்று பகிரங்க விவாத அழைப்பு விடுத்தனர். இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு - இந்தச் சவாலை ஏற்க பயந்துக்கொண்டு - நாங்கள் இனையத்தளம் மூலம் மட்டும் தான் எழுதுவோம். நீங்களும் அது போல் எழுதுங்கள் - நமக்கு நேரடிவிவாதமெல்லாம் சரிவராது என்று நெண்டிக்காரணங்களைக் கூறியவர்கள், இனையத்தளம் மூலம் நாம் எழுத்து விவாதம் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எழுதி ஒழிந்துக்கொண்டனர். அதாவது அவர்கள் ஒழிந்துக்கொண்டு எழுதுவார்களாம். நாமும் ஒழிந்துக்கொண்டு எழுதவேண்டுமாம். இவர்களில் ஒரு சிலரை மட்டும் நமது சகோதரார்கள் அழைத்தார்களாம். அவர்களுக்கு பேசத்தெரியாதாம். இவை எல்லாம் இவர்கள் நமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து எழுதிய வெத்துக் காரணங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நீங்களல்ல. நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ, அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும் - நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும், அவர்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு எமது சகோதரர்கள் தயார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கின்றோம்.

இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம், நமது இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் Peace - Vision of Islam என்ற இஸ்லாமியக் கண்காட்சில் - இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக வருவதாக இருந்த சில நாட்களுக்கு முன்னால் 'வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன்; விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்' என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்கள். அதில், 'அவரது சொற்பொழிவை எந்தக் கிறிஸ்தவர்களும் கேட்டுவிடக்கூடாது - மாற்று மதத்தவர்களுக்காக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் எந்தக் கிறிஸ்தவனும் கேள்விக்கேட்டுவிடக்கூடாது - என்பதற்காக நாமெல்லாம் பிரார்த்திப்போம்' என்று பயந்து அதில் எழுதியிருந்தனர்.

மற்ற கிறிஸ்தவர்கள் சென்று சகோதரர் ஜாகிர் நாயக்குடைய சொற்பொழிவைக் கேட்கக்கூடாதாம். பாவம், அவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாம்;. சரி இருக்கட்டும். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே - அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு (?) எழுதும் அளவுக்கு திறமை (?) உள்ளவர்கள் தானே? இவர்கள் சென்று அவரிடம் விவாதமல்ல - கேள்வியாவது கேட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு மேடையில் ஏறி பேசத்தெரியாது என்று கூறி எமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பு எழுதியிருந்தார்கள். சரி, நீங்கள் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்பு என்று உங்கள் தளத்தில் பதித்த அந்தக் கேள்விகளையாவது அவரிடம் நேரடியாக கேட்டு மடக்கி இருக்கவேண்டியதுதானே? அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.

அதே போல் சகோதரர். பீஜேவிற்கும் பதிலாம். ஜாகிர் நாயக்காவது பலநாடுகளுக்கும் சென்றுவரக்கூடிய வடஇந்தியாவைச் சார்ந்தவர். இந்த பீஜே இங்கேயே ஊருக்கு ஊரு 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அங்கே போய் அவருக்கு மறுப்பு கொடுத்து அவரை தினரடிக்க வேண்டியது தானே? முடியாது. காரணம் இவர்களின் எழுத்தில் சத்தியமில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இஸ்லாத்தை வசைப்பாட வேண்டும். அதன் மூலம் தங்கள் மார்க்கம் வளர்கிறதோ இல்லையே - இஸ்லாம் வளரக்கூடாது என்று குறுகிய நோக்கம் மட்டுமே.

ஓழிந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவதை எங்கும் நிரூபிக்கும் தைரியம் வேண்டும். அது சத்தியமான - உன்மையான எழுத்தாக - கருத்தாக இருந்தால் மட்டுமே முடியும். அது இஸ்லாமியர்களாகிய - எங்களால் முடியும் - ஏனெனில் நாங்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்கின்றோம் - அதனால் அதை எங்கும் நிரூபிப்போம் என்பதை இங்கே ஆணித்தரமாக குறிப்பிடக்கடமைப் பட்டிருக்கின்றேன்.

இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமான பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?

அதில் வரக்கூடிய வரிகள் என்ன?

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள.

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?

அடுத்து, அந்த ஆபாசக்கதையில வரும் விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்த அந்த ஆண்களுடைய மர்ம உறுப்பு பற்றியது. அந்த ஆண்களின் 'ஆண்உறுப்பு' கழுதைக்கு இருக்குமே அந்த அளவுக்கு பெரியதாக இருந்ததாம். அவர்களுக்கு வந்த 'விந்து' குதிரைக்கு வருமே அந்த அளவுக்கு கொட்டியதாம்'

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...' (கத்தோளிக்க மொழிப்பெயர்ப்பு) என்று கடவுள் இந்த அசிங்கமான வர்ணனையைச் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர். இதில் எங்கே உவமை உள்ளது. வெட்கமாக இல்லை இதெல்லாம் உவமை என்பதற்கு.

இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.

அடுத்து நாம் 'ஏகத்துவம்' வலைதளத்தில் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையான (இவர்களுக்கு மறுத்து நாம் எழுதிய) 'இயேசு தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோரையும் அவமதித்தார்' என்ற கட்டுரைக்கு இவர்கள் அளித்த பதில் என்ன?

இயேசு தனது தாயை மதித்ததாக பைபிளில் கிடையாது. அவரை தரக்குறைவாக நடத்தியதாகத்தான் பைபிள் காட்டுகிறது. குர்ஆன் மட்டுமே இயேசு தாயை மதிப்பதாக கூறுகிறது என்று நாம் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? திரும்பத் திரும்ப இயேசு தாயை மதித்தார் என்று நீங்களாகத்தான் எழுதி இருந்தீர்களே யொழிய பைபிள் வசனங்களை உங்களால் ஆதாரம் காட்ட இயலவில்லை. 'இல்லை' என்று இப்பொழுதும் நீங்கள் மறுத்தீர்களேயானால் நாம் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். நாம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அறிஞர்களிடம் உங்கள் பைபிளில் வரக்கூடிய - 'இயேசு தாயை மதிக்கும் லட்சனங்களின் வசனங்களை எடுத்துச்சொல்வோம்' அந்த வசனத்தின் சரியான விளக்கத்தை (அதில் சொல்லப்பட்டுள்ள விதம் பற்றி) அவர்களிடம் கேட்போம். அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு நீங்கள் தயாரா? அந்த அத்தனை வசனங்களிலும் மிகத் தெளிவாகவே தெரிகின்றது இயேசு தனது தாயை மதிக்க வில்லை என்பது. அதற்கு மேலும் நீங்களாகத்தான் சுயமாக விளக்கம் அளிக்கின்றீர்களே யொழிய, பைபிளில் ஒரு இடத்திலும் உங்களின் சுயக்கருத்துக்களுக்கு ஆதரவான வசனங்கள் கிடையாது.

அடுத்து நாம் அதே கட்டுரையில் இயேசு யூதர்களைச்சேர்ந்த பரிசேயர்களைப் பார்த்து தேவ்டியா மக்களா... - வேசி மக்களா - விபச்சார சந்ததிகளா என்று அவர்களையல்ல அவர்களின் பெற்றோரையும் - மூதாதையரையும் இன்றைய ரௌடிகள் உபயோகப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினார் என்று கூறி பைபிள் இயேசுவைக் கேவலப்படுத்துகிறது, குர்ஆன்தான் அவரை கண்ணியப்படுத்துகிறது என்று நாம் எழுதி இருந்தோம். அதற்கு நீங்கள் எழுதின பதில் என்ன? இது வரை பதில் எழுதவில்லையே ஏன்?

இயேசுவிடம் அவரது சீடன் ஒருவன் தனது தகப்பனின் மரனச்செய்தியை சொல்லிவிட்டு - அவரை அடக்கம் பண்ணிவிட்டு வருகின்றேன் என்று அனுமதிக்கேட்டதற்கு, அதை மறுத்த மறுத்த இயேசு 'அதல்லாம் மற்றவன் பார்த்துக்கொள்வான் - நீ என்னோடு வா' என்று கூறி ஒரு மனித உரிமை மீறலை செய்த இரக்கமற்றவர் என்று பைபிள் கூறுகிறது என்று ஆதாரத்துடன் நாம் எழுதிய பகுதிக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? ஒன்றும் கிடையாது.

இஸ்லாம் கல்வி தளத்தில் சகோதரர் எம். எம். அக்பர் அவர்கள் எழுதி தமிழில் வெளிவந்த 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி-1)'க்கு இது வரை நீங்கள் பதில் எழுதவில்லையே, ஏன்?

இது மட்டுமல்ல இனி நாம் எழுதப்போகிற எந்தக் கட்டுரைக்கும் உங்களால் பதில் எழுத முடியாது. பைபிளில் பெரும்பாலும் இருப்பது கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வதைத் தவிர. அப்படியே மறுப்பு என்று நீங்கள் எழுதுவதாக இருந்தால் வழக்கம் போல் நீங்கள் எழுதும் 'மறுப்பு' என்று எழுதிவிட்டு இதுதான் மறுப்பு. 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.

நான் கேட்கின்றேன், உங்களிடம் கேட்பதற்கு கேள்வியே இல்லையா? பைபிளில் ஒன்று இரண்டு பலவீனமா இருக்கின்றது? ஆயிரக்கணக்கான முரண்பாடுகள். அவ்வளவு அசிங்கங்களும் - அபாசங்களும் நிறைந்த வசனங்கள், அறிவுக்கு பொருந்தாத கருத்துக்கள், வர்னாசிரமத்தை போதிக்கும் வசனங்கள், நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர்முரனான கருத்துக்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனை பலவீனங்களும் உங்கள் பைபிளில் இருக்கின்றது, அது சம்பந்தமாக ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் எங்களுடன் விவாதம் வேண்டாம். பாவம் உங்களுக்கு முடியாது. குறைந்தபட்சம் கேள்விபதில் நிகழ்சியாவது நடத்த திரானிஇருக்கிறதா? முடியாது! முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.

ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?

இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)

இங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களால் நடக்கும் அடையாளங்களாம்.

1. இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்துவார்களாம். (இதைத்தான் இவர்கள் வக்கலத்து வாங்கும் பால் தினகரன் போன்றோர் செய்வதாக சொல்லி ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர்)

2. சர்பங்களை - பாம்புகளைப் பிடிப்பார்களாம். இவர்களை ஒன்றும் செய்யாதாம். (ஹி... ஹி... நினைப்பு பிழைப்ப கெடுக்குமாம்)

3. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் - அதாவது சாகடிக்கக்கூடிய எந்தவிதமான விஷத்தைக் குடித்தாலும் அந்த விஷம் இவர்களை ஒன்றும் செய்யாதாம்.

4. வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களாம். அப்படி கையை வைத்ததும் குணமாவார்களாம்.

உலகத்தில் எந்த கிறிஸ்தவானாவது உன்மையான கிறிஸ்தவனாக இருந்தால் - உங்கள் மதம் சத்தியமான மதமாக இருந்தால் இவற்றில் உள்ள அத்தனையையும் நிரூபியுங்கள். எங்களுடைய கேள்விகளுக் பதில் அளிக்க வேண்டாம். பாவம் உங்களுக்கு பேசத்தெரியாது. விவாதத்திற்கும் வரவேண்டாம். ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது. மேற்கூறப்பட்ட கிறிஸ்துவத்தை நம்பக்கூடிய இவர்களால் நடத்த முடியும் என்று சொல்லப்பட்ட அதிசயங்களை மட்டும் இவர்கள் செய்து காட்டட்டும். அல்லது அதில மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ளதே -- இவர்கள் எந்த விஷத்தைக் குடித்தாலும் அது இவர்களை ஒன்றும் செய்யாது என்று - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதை குடித்துவிட்டு உயிரோடு இருந்து காட்டட்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் வக்கிர எழுத்துக்களைத் தொடரட்டும். முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஏராளமான தலைப்புகளில் இவர்களின் மார்க்கம் பற்றியும் - இவர்களின் நம்பிக்கையின் மடத்தனங்கள் பற்றியும் - பைபிளின் உன்மைநிலைப் பற்றியும் பல கட்டுரைகள் மூலம் விளக்க இருக்கின்றோம். அதன் பிறகு நமது சகோதரர்கள் பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக (?) அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தக்க ஆதாரங்களுடன் - அறிவுப்பூர்வமான வாதங்களுடன் மறுப்புக்களை கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அந்த மறுப்பும் கூட இவர்களுக்காக அல்ல. இவர்களுக்கு பதில் கொடுப்பதும் ஒன்றே, கொடுக்காததும் ஒன்றே. மாறாக நமது விளக்கங்கள் அனைத்தும் மற்ற பொது மக்களின் தெளிவிற்காக...

அடுத்து பொதுவான ஒரு சந்தேகம் உங்களுக்கு எழழாம். அதாவது, நாம் ஏன் அவர்கள் மறுப்பாக எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானாரை இழிவு படுத்தி எழுதும் வக்கிர எழுத்துக்களுக்கும் பதில் அளிக்கவே இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.
இவர்கள் எழுதும் அத்தனை அவதூறுக் கட்டுரைகளும் வேண்டும் என்றே நமது கவனத்தைத்திசைதிருப்புவதற்காகவும, நமது நேரத்தை சம்பந்தம் இல்லாத கேள்விகள் மூலம் வீனடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அவை ஒவ்வென்றுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டிருந்தால் - நாம் நமது பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். நமது கருத்துக்களை நம்மால் மக்களிடம் சென்று சேர்க்கமுடியாது. இவர்களின் எண்ணமும் இது தான். காரணம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் கேள்விகளுக்கு பதில் அல்ல. நமது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதே. அப்படி பதில் தேவைப்படுபவர்களாக இருந்தால், ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதியவர்கள் அவர் சென்னை வந்ததும் அவரின் பேச்சை யாரும் கேட்டுவிடாமல் இருப்பதற்காக பிரார்த்தனை செய்வோம் என்று எழுதி இருக்க மாட்டார்கள். நேரடியாக சென்று கேள்விக்கேட்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு பதில் வேண்டும் என்றால் எங்கள் சகோதரார்கள் www.iiponline.org மூலம் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொது மேடையில் சந்திக்க வரட்டும். அங்கே நாம் அவர்களின் பதில்களுக்கு தக்க பதில் கொடுக்க தயாராக இருக்கின்றோம். அது வரை இவர்களின் இந்த அவதூறுப்பிரச்சாரங்களுக்கு பதில் எழுதுவது என்பது நமது நேரம், உழைப்பு அத்தனையையுமே - நாமே வீனடிப்பதற்கு சமமானதே என்றுக்கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
.
.
.
.

Thursday, March 13, 2008

ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்

ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்!

- அபு இப்ராஹீம்

(ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் - யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட. ஆனால் கிறிஸ்தவர்களின் புனித வேதமான பைபிள் அப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கின்றதா? என்று பார்த்தோமேயானால், அதில் ஆபாசமான கருத்துக்களும் - அசிங்கமான வர்ணனைகளும் நிறையவே காணப்படுகின்றன. எங்கும், எல்லோராலும் - குடும்பத்துடன் படிக்கமுடியாத - ஒன்றுக்கும் உதவாத - எப்பயனுமற்ற பல வசனங்கள் நிறையவே காணப்படுகின்றன. அவற்றை விவரிக்கும் ஒரு முயற்சியாகத்தான் 'ஆபாசம் நிறைந்த பைபிள்' என்றத்தலைப்பில் நாம் தொடர்ந்து எழுத இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்...)

பைபிளின் எசேக்கியேல் ஆகாமமும் - விபச்சார சகோதரிகளும்...!

ஒரு இறைவேதம் என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சரியான உதாரணம் 'பைபிள்' என்றால் மிகையாகாது. காரணம், ஒரு இறைவேதத்தில் இருக்கக்கூடாத - இருக்கமுடியாத அத்தனை பலவீனங்களும் ஒரு சேர இருக்கக்கூடிய வேதமாகத்தான் இன்றைய 'பைபிள்' இருக்கின்றது என்பது தான் நிதர்சனமான உன்மை. (இதன் முழுவிளக்கமும் பல தலைப்புகளில் எமதுதளத்தில் வரும் இன்ஷாஅல்லாஹ்)

அக்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதத்தை பொருப்புடன் பாதுகாத்து - அதை பின்பற்றி வாழவேண்டியவர்கள் - அதற்கு மாற்றமாக எவர்கள் மூலமாக அவ்வேதங்கள் வழங்கப்பட்டதோ, அந்த தீர்க்கதரிசிகள் மீதே அபாண்டமான பழிகளை சுமத்தி அவர்களை பற்றி தரக்குறைவாகவும் ஆபாசமாகவும், அருவறுப்பாகவும் அந்த வேதங்களிலேயே திரித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், அவற்றில் கடவுளின் பெயராலேயே தங்களது சொந்த சரக்குகளை உள்நுழைத்ததால் தான் - இன்றைய பைபிள் பல தவறுகளை தண்னுல் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாகவேண்டும். அதன் தொடர்ச்சிதான் அதனுள்ளே பதிந்துள்ள ஆபாசமான கருத்துக்களும் அசிங்கமான வர்னணைகளும்...

பைபிளில், அதன் எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப்போக்கில் இறைவசனங்களுடன் தங்கள் சொந்தச்சரக்குகளைச் சேர்த்தது மட்டுமல்லாமல், அதைகடவுளே சொன்னார் என்று கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட வசனங்கள் ஏராளம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இரண்டு விபச்சார சகோதரிகளின் செயல்பாடுகள் பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகின்றது.

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள. அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள். இவைகளே அவர்களுடைய பெயர்கள். அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம். அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை. அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள். அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள். அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள். தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள். சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள். அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள். அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள். கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தானங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம் பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள். அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள். அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன். நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும். ...நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
- எசேக்கியேல் 23 : 1 - 49

பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு - குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கடவுள் இவ்வுலகமக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்? எதுவும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக கடவுள் விபச்சாரிக்கு கொடுத்த தண்டனையை விளக்க வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம்.

இவ்வாறு இரு சகோதரிகள் விபச்சாரம் புரிந்தனர். அதனால் இப்படிப்பட்ட தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று சொன்னால் நியாயம். ஆனால் இந்த பைபிளின் இறை (?) வசனங்களில் வருவது என்ன?

ஒருவன் ஒருத்தியிடம் விபச்சாரத்திற்கு சென்றால் என்ன செய்வான்? எதை அமுக்க வேண்டுமோ, அதை அமுக்குவான். எதை தொட வேண்டுமோ அதை தொடுவான். இதை கூட நான் சொல்வதற்கு சற்று கூச்சப்படுகின்றேன். ஆனால் கடவுள் இந்த அசிங்கமான - ஆபாசமான வர்ணனைகளை தான் இந்த பைபிள் எழுத்தாளருக்கு சொன்னாராம்.. '

'அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது'

உடலுறவு என்றதும் வேறு என்ன செய்வார்கள்? அது என்ன ஸ்தானங்கள்??? அப்படிஎன்றால் என்ன? அவளுடைய 'கன்னிமையின் கொங்கைகள்' என்றால் என்ன?

6.4.1980ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பைபிளிலும், ஆங்கில பைபிளிலும் எல்லோருக்கும் புரியும்படியாகவே மொழிப்பெயர்த்துள்ளனர்.

'அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன. கன்னிக் கொங்கைளைப் பிறர் தொட்டு விளையாடினர்'

...their breasts pressed, and there they bruised the teats of their virginity. (k j v)

இங்கே எப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர் என்பதை கவனியுங்கள். பெண்ணின் அந்த மர்ம உருப்பை 'தொட்டு விளையாடினராம்' எந்த அளவுக்கு இந்த ஆபாசக்கதையை 'தூக்கலாக' சொல்ல வருகின்றனர் பார்த்தீர்களா?

பெண்களின் அந்தரங்கமான 'அந்த குறிகள்' குறித்து சொல்லுவதன் மூலம் கடவுள் சொல்லவரும் உபதேசம் என்ன? புனித வேதத்தில் வரும் இந்த ஆபாச வர்னனைகளை எந்தச் சர்சியிலாவது அல்லது பொது மேடையிலாவது விளக்கமுடியுமா? அடுத்து பாருங்கள்...

...தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்...

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

...சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள்...

இப்படிப்பட்ட ஆபாச வர்ணனைகள் மூலமாகத்தான் இந்தச் சம்பவத்தை கடவுள் விளக்கியிருப்பார் என்று கிறிஸ்தவர்களே நம்புகிறீர்களா?

அவர்களுடைய (ஆண்களுடைய) 'நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுபடுதல்' என்றால் என்ன? அதற்கு அடுத்த இடத்தில் சொல்லப்படும் 'அவள் அண்டையில் சிநேக சம்போகம்' என்றால் என்ன?

அவர்களுடைய வாலிபத்திலேயே சயனித்து (உடலுறவு கொண்டு) என்றும் கடவுள் விளக்குகிறார். இந்த விளக்கம் எதற்கு? வாலிபத்தில் சயனிக்காமல் 100 வயது கிழவியியானப்பிரகா சயனிக்க முடியும்?

'அவளை நிர்வானமாக்கினார்கள்...' என்று கடவுள் சொல்கிறார். நிர்வானமாக்காமல் ஒரு பெண்னுடன் உடலுறவா? என்னே விளக்கம், என்னே விளக்கம்...! பைபிளில் எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது என்பதன் அர்த்தம் ஒருவேளை இது தானோ!

அதற்கு அடுத்து கடவுள் சொல்கிறார், 'ஜாதி லிங்கம்'மாம். அது என்ன கிறிஸ்தவ சகோதரார்களே 'ஜாதி லிங்கம்?' லிங்கம் என்றால் ஆணின் 'அந்த' உருப்பு என்று கேள்விப்படடிருக்கிறோம். அது என்ன - ஜாதி லிங்கம்? அடுத்து மற்றொரு இடத்தில் சொல்லப்படுகிற 'புருச சரூபம்?' என்றால் என்ன?

இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளைத்தான் கடவுள் தனது தீர்க்கதரிசிகளுக்குச் சொன்னதாக பைபிளில் - அதுவும் புனிதத்துவம் நிறைந்த (?) பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்கள் இல்லையா? இதில் உச்சகட்ட வர்ணனை என்னத்தெரியுமா?

இப்பெண்களோடு விபச்சாரம் செய்தார்களே - அந்த ஆண்களின் 'அந்த' உறுப்பின் அளவு குறித்த கடவுளின் வர்ணனைத்தான் உள்ளதிலேயே ஹைலைட் வர்ணனை:

'கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்'

இதை 6.4.1980ல் வெளியிடப்பட்ட நம்ம ரோமன் கத்தோளிக்க பைபிள் மொழிப்பெயர்ப்பாளர்கள் கொஞ்சம் தெரிவாகவே மொழிபெயர்த்துள்ளனர். (படிப்பபவர்களுக்கு 'அந்த' அளவு பற்றித் தெளிவாகப் புரியவேண்டும் என்பதற்காக) :

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...'

இந்த பைபிள் எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு மற்ற மிருகங்களின் உருப்புக்களைக்குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? எந்த மிருகத்தின் 'அந்தக்குறி' ஆண்களின் மர்ம உருப்புக்கு ஒத்திருக்குமோ அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள் இந்த பைபிளல் எழுத்தாளர்கள். சகோதரர்களே! இந்த அளவுக்கு மிக மோசமாக, ஒரு விபச்சாரர்களின் ஆண்குறியின் அளவும், அதன் பிறகு அவர்களுக்கு வந்த விந்துக்களின் அளவும் சொல்லவேண்டியதன் அவசியம் என்ன? இந்த ஆண்குறி 'அளவு' குறிப்பு மூலம் கடவுள், மக்களுக்கு சொல்ல வரும் உபதேமென்ன? இந்த வசனங்களை உலகில் எந்த சர்ச்சிலாவது படிக்க இயலுமா? யாராவது தங்கள் குடும்பத்தோடு படிக்க முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவ சகோதரார்களே!

அடுத்து இந்தப் கதையில் குறிப்பிடப்படும் விபச்சாரப் பெண்கள் யார்? அதையும் கடவுளே சொல்கிறார்:

'அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்'

'அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்'

6.4.1980ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பைபிளில் இப்படி குறிப்பிடப்படுகிறது :

'அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர், புதல்வியரைப் பெற்றார்கள்'

இந்த விபச்சாரிகளெல்லாம் கடவுளின் மனைவிகளாம்? அவர்கள் கடவுளுக்கு புதல்வரையும் புதல்வியரையும் பெற்றார்களாம். இதை வேறுயாரும் அல்ல. கடவுளே சொன்னாராம். இந்த பைபிள் எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட ஆபாசவர்னணைகளை கடவுள் சொன்னதாக இட்டுக்கட்டி வந்தவர்கள் கடைசியில் கடவுளின் பெயரிலேயே இப்படிப்பட்ட அபாண்டங்களை எழுத மணம் வந்தது எப்படி? கடவுளின் பெயரால் அசிங்கங்களையும் அபாண்டங்கiயும் எழுதப்பட்ட பைபிளை எப்படி இறைவேதம் என்று நம்ப முடியும்? பைபளில் உள்ள சம்பவங்கள் எப்படி உன்மையாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்த விபச்சாரிக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்ன?

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன் :

இப்படி எல்லேரையும் வரவழைக்கும் கடவுள் அவர்கள் மூலம் இந்த விபச்சாரிகளுக்கு என்ன தண்டனைவழங்குவார்? அதையும் பைபிளே சொல்கிறது :

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

இது தான் கடவுள் அந்த விபச்சார பெண்களுக்கு வழங்கிய தண்டனையாம். ஓரு விபச்சாரியை தண்டிக்க பல விபச்சாரகர்களை உருவாக்கினார் கடவுள் என்கிறது பைபிள். இவையெல்லாம் கடவுளின் பெயரால் கட்டவிழ்துவிடப்பட்ட பொய்கள் இல்லையா? கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள். இந்த விபச்சாரிக்கு இந்த தண்டனை என்றால் - இந்த விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்தார்களே அந்த 'நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும்' என்று வருகிறதே அந்த விபச்சாரர்களுக்கு என்ன தண்டனை?

இவர்கள் மீண்டும் அவளை 'அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்.' என்கிறது பைபிளின் புனித சட்டம். அதன் பிறகு என்ன நடக்கும்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஹ! ஹ! ஹ! என்ன அற்புதம்! என்னே அற்புதம்? இது தான் பைபிளின் கடவுள் வழங்கும் குற்றவியல் தண்டனையோ?

இப்படிப்பட்ட ஆபாசமான அசிங்கமான விபச்சாரக்கதைகள் மூலம் கடவுள் என்ன சொல்லவருகின்றார்? இதை எப்படி கடவுளின் வேதம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? கடவுளின் பெயரால் பச்சைப் பொய்களை எப்படி இட்டிக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

இந்த ஆபாச வர்னணைகள் அசிங்கமாக இல்லையா? இப்படியா கடவுள் சொல்லியிருப்பார்? அந்த விபச்சாரகர்களுக்கு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படிப்பட்ட அசிங்கமான தண்டனையால் - கடவுள் நம்பிக்கைக்கே பாதகம் ஏற்பட்டுவிடாதா? கிறிஸ்தவ சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்.

நாம் மேற்கூறியுள்ள பைபிள் வசனங்கள் உன்மையில் கடவுளால் அருளப்பட்டிருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது.

காரணம் ஆபாசமான - அருவருக்கத்தக்க வகையிலான இப்படிப்பட்ட வர்ணைகளை மனிதனே உபயோகப்படுத்தக்கூடது என்று சொல்லும் கர்த்தர் மனிதர்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டிய தனது வேதத்தில் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார். அதுவும் ஆண் உருப்புக்களின் அளவுகள் குறித்து சொல்லும் அளவுக்கௌ;ளாம் கடவுள் வரம்பு மீறி இந்த புனித (?) வசனங்களை அருளியிருக்கமாட்டார் என்பது தான் எதார்த்தமான உன்மை.

அடுத்த காரணம்: யூதர்களுக்கு கடவுளால் சொல்லப்பட்ட குற்றவியல் சட்டத்தின்படி ஒரு பெண் விபச்சாரம் புரிந்தால் அவள் ஊரார் முன்னிலையில் கல்லெறிந்துக் கொள்ளப்படிவேண்டும் என்பது சட்டம். (பார்க்க : உபாகமம் 22:21-24) ஆனால் இந்த விபச்சாரிக்கு - எந்தக் கடவுள் அந்தச் சட்டத்தை சொன்னாரோ - அதே கடவுள் வேறு ஒரு தீர்ப்பை - அதுவும் மிக அசிங்கமான - ஆபாசமான - அருவருக்கத்தக்க தீர்ப்பை அளித்ததாக சொல்லப்படுகின்றது. எனவே இந்த வசனங்கள் கண்டிப்பாக கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பது நிதர்சனம்.

அடுத்து பைபின் வசனங்களின் படி கடவுள் என்பவர் ஒருவரே. அவருக்கு இணையாக யாரும் கிடையாது என்கிறது. (பார்க்க உபாகமம் 6: 4) ஆனால் இந்த விபச்சாரிகள் கடவுளுக்கு மனைவியாக இருந்து பிள்ளைகளையும் பெற்றதாக கூறுகிறது. இதை கடவுளே சொன்னார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் பெயரால் சொல்லப்படும் பச்சைப்பொய் என்பதற்கு இதுவே ஒரு சான்று.

கடவுள் கொள்கைக்கும் - கடவுளின் வசனங்களுக்கும் நேர்முரனானது என்ற இந்தச் சாண்றுகளே - கடவுளால் இந்த பைபிள் வசனங்கள் அருளப்பட்டிருக்காது என்பதற்கும் - இடையிலே யாரே சில தீயவர்கள் உள்நுழைத்துள்ளார்கள் என்பதற்கும் போதுமானது.

இதைக்குறித்துத்தான் இறைவன் தனது இறுதித் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான் :

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (அல்குர்ஆன் 2:75)

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே! திருக்குர்ஆனை எடுத்துக்கொள்ளுங்கள். உலகம் முழவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் முழுகுர்ஆணையும் மணனம் செய்தவர்கள் (ஹாஃபில்கள்) இருப்பார்கள். லட்சக்கனக்கான மக்கள் கூடக்கூடிய மக்கா நகரிலும், இன்னும் உலகம் முழவதும் உள்ள பள்ளிவாசல்களில் நாள் தோறும் திருக்குர்ஆன் தொழுகையில் ஓதப்படுகின்றது. புனித ரமலான் மாதங்களில் உலகம் முழவதும் உள்ளப் பள்ளிவாசல்களில் முழக்குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்தப்படுகிறது. உலகம் முழவதும் உள்ள அனைவரும் நாள்தோறும் பொருளறிந்துப் படிக்க வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இறைவசனங்களும் அதன் கட்டளைகளும் எங்கே! உங்கள் புனிதவேதமான பைபிளின் புனித (?) வசனங்கள் எங்கே!

இப்படிப்பட்ட ஆபாச வசனங்களை கடவுள் சொல்லியிருப்பாரா அல்லது சாத்தானின் தூண்டுதலால் எழுதப்பட்டாக இருக்குமா? சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்.

இது போன்ற இன்னும் பல அபத்தமான - ஆபாசமான பைபிள் வசனங்களை தொடர்ந்து விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

.
.

Tuesday, March 11, 2008

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

உடை கழற்றும் ஆண் வக்கிரம்
......................................................................... - ஜி.என்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக' பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும்இ ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை'அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
.

Monday, March 10, 2008

இராமர் பாலமும்... இந்துத்வாவினரும்...

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெயரால் ஹிந்துத்வாவினர் பரப்பிய பச்பைப் பொய்:

- சின்னக்குத்தூசி

'சேது சமுத்திரத் திட்டமும் இராமர் பாலமும்' எனும் ஆய்வு நூலில், திராவிட கழகத்தலைவவர் கி. வீரமணி,

இராமர் பாலம் என்பது எவ்வளவு பெரிய புரட்டு என்பதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அவரது நூலின் முக்கியப் பகுதிகளில் இது ஒரு பகுதி: -

'இது இராமன் கட்டிய பாலம் என்றும், 17 இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் கட்டினான்' என்றும் கதைக்கிறார்கள்.

17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் 'நம்பிக்கை' என்று சொல்லி சொதப்புகிறார்கள்.

நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்க முடியுமா? பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா?

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது வெறும் மனல் திட்டுக்களே - அவற்றின் மீது பாசிப்படிமங்கள் தோன்றி பாலம் போண்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். இதனை வெகு காலமகாக ஆதாம் பாலம் என்றே வழங்கி வருகின்றனர். ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகைய பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெலல்லாம் கட்டியவர்கள் இராமன் போன்ற இன்னொரு அவதாரமா? என்று பேராசிரியர் தமயந்தி ராஜதுரை எழுப்பிய வினாவுக்கு விடை என்ன?

17.3.2007 நாளிட்ட இந்து ஏட்டில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத்துறைத் தலைவர் என் ராமானுஜம் அவர்கள் 'இது மனிதன் உருவாகிய அமைப்பு அல்ல' இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டதே' என்று எழுதியுள்ளார்.

பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர். ஏன். சர்மா (ராம் சரண் சர்மா) கூறியுள்ளார்:

'இராமாயண கால பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சி சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக்கொண்டாலும் அந்தக் காலத்தில் மனிதர்களேயில்லை. கிடைத்துள்ள சான்றுகளின்படி இராமாயணம் எழுதப்பட்ட மிகப்பழங்காலம் கி.மு. 400 ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளாரே - என்று சுட்டிக்காட்டியுள்ளார் வீரமணி.

'இராமர் பாலம் இருக்கிறது என்று அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்வெளியிலிருந்து பாலத்தைப் புகைப்படம் எடுததே வெளியிட்டிருக்கிறதே' என்று பா.ஜ.கவினர் ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டார்கள்.

'இன்டோ லிங்க் காம் - வைஷ்ணவ நிறுவன நெட்வொர்க்' என்கிற இணையத்தளம் வெளியிட்ட செய்தியை இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

'உன்மைகள் உறங்கும் நேரத்தில் - பொய்கள் உலகையே ஒரு முறை சுற்றி வலம் வந்துவிடும்' என்று குறிப்பிடுவதுன்டு. அது போலத்தான் இந்த இணையதளம் வெளியிட்ட செய்தியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு 'இராமர்தான் பாலம் கட்டினார் என்பதற்கு இதுவே ஆதாரம், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவே கூறிவிட்டது' என்று பாஜகவினர் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்தார்கள்.

கெட்டிக்காரன் புளுகே எட்டுநாளில் குட்டு உடைக்கப்பட்டு - அம்பலமாகிவிடும் என்றால் எத்துவாளிகள் புளுகுகள் எத்தனை நாளைக்கு நீடித்திருக்கமுடியும்?

பாஜகவினர் பரப்பிவிடும் இந்தத் தகவல் உண்மையா? என்று பலரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரிடமே கேட்டார்கள்.

நாசா விண்வெளி மையத்தின் அதிகாரியான மைக்கேல் பிரவ்கசு அளித்த விளக்கத்தின் மூலம் பாஜகவினர் பரப்பிய இந்தப் பொய் தகர்க்கப்பட்டு பொடிப்பொடியானது.

'விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி பார்த்தால், இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதைப்போல மனிதர்களால் கட்டப்பட்ட எந்தவொரு பாலமும் அந்த இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது' என்று திட்டவட்டமாக அறிவித்த அவர்...

'ஒரு பொருளில் இருந்து அதன் துகள்களைச் சேகரித்து கார்பன் ஆய்வு நடத்தினால் அது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு 17 லட்சம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த எந்த ஒரு கட்டுமான அமைப்பும் அந்த இடத்தில் இருந்ததாக மெய்ப்பிக்கும் வகையிலான எந்தவித கார்பன் ஆய்வு முடிவுகளும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இது பற்றி மேலும் கூறிய அவர் :

'எங்கள் அறிவியல் வல்லுநர்கள் எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலர் நாசா வெளியிட்ட படங்கள், இராமர் கட்டிய பாலம் என்பதையே நிரூபிப்பதாக் கூறி வருகிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கும் பொருளின் வயது, அதன் தன்மை போன்ற விவரங்களை, வெறும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கணக்கிட முடியாது. எனவே அவர்கள் கூறுவதில் எந்த அடிப்படையும் கிடையாது' என்பது நாசா அதிகாரி மைக்கேல் பிரவ்கசுவின் விளக்கம்.

அதே அமைப்பைச்சேர்ந்த இன்னொரு அதிகாரியான மார்க்ஹெஸ், 'விண்வெளிச் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், பூமிக்கு மேலே சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்படும் படங்கள் ஆகியவை மூலம் தீவுகள் மற்றும் பிற பொருட்களின் வயது, தன்மை ஆகியவற்றைக் கணக்கிட முடியாது.

அப்படியே ஒரு கட்டுமானம் போன்ற அமைப்பு அதில் தோன்றினாலும் அதை மனிதர்கள்தான் உருவாக்கினார்களா என்பதை அந்தப் படத்தின் மூலம் உறுதி செய்ய முடியாது.

இந்தப் பாலம் என்று கூறப்படுவது 30 கி.மீ. நீளம் உள்ளதாக இருக்கிறது.
இது சாதாரணமாகத் தோன்றும் மணல் திட்டுகள்தான். இதைத்தான் ஆதாம் பாலம் என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக - குறிப்பிட்ட அந்த இணைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நாங்கள் வெளியிட்டதாக இருக்கலாம்.

ஆனால் அந்த புகைப்படங்களுக்கு (இது தான் ராமர் பாலம் - நாசாவே புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறது என்று) சிலர் கூறும் விளக்கம் - அவர்களது சொந்த விளக்கமே தவிர நிச்சயமாக நாங்கள் (நாசா) தந்த விளக்கமல்ல' என்று சந்தேகங்களுகே இடமற்ற வகையில் பளிச்சென்று பதிலளித்துவிட்டார் நாசாவின் அதிகாரி மார்க் ஹெஸ்.

நாசா விண்வெளி அதிகாரிகள் இருவர் அளித்த மறுப்பினால் - 'ராமர் கட்டிய பாலம்தான் - நாசாவே புகைப்பட ஆதாரத்தோடு உறுதி செய்திருக்கிறது' என்று ஓர் இணையத்தளச் செய்தி மூலம் பாஜகவினர் பரப்பி வந்த பொய் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகிவிட்டது.

ராமர் பாலம் கட்டினார் என்ற புளுகை மறுத் தந்தை பெரியார் அவர்கள்,
- கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடற்பெருவெள்ளம் நிகழ்ந்தது.
அந்த வெள்ளம் நிகழ்வதற்கு முன்புவரை இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. வெள்ளம் காரணமாகவே - தமிழ்நாட்டிலிருந்து இலங்கை பிரிவுபட்டது.
- என்று தமது 'இராமாயணக் குறிப்புகள்' என்ற நூலில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

அது வருமாறு: இது வரை இவ்வுலகில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெருவெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும், நாலாவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்ந்தாவது வெள்ளம் ஒன்பதாயிரத்து ஐநூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாம் மென்றும் அறியக்கிடக்கின்றன.

இப்பெரு வெள்ளங்களில் காரணமாகப் பல நிலப்பரப்புகள் நீர்ப் பரப்பாயும், நீர்ப்பரப்புகள் நிலப்பரப்பாயும் மாறினவென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. குமரிமுனைக்குத் தெற்கிலிருந்து பல நாடுகள் நீரினுள் மறைந்தனவென்றும் அறியக்கிடக்கின்றன.

இவை எக்கேல், அக்கிசிலி, டொயினார்டு, பேர்கவன், கவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக்கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப்பழைய காலத்தே நடந்ததாகத் தெரிவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வட மேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும் வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் ராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.

சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தம்ழிநாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.
- என்று குறிப்பிட்டிருக்கிறார் தந்தை பெரியார்.

இதன்படி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கை - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பது தெளிவாகிறது.

பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே ராமர் பாலம் கட்டினார் என்பது எவ்வளவு பெரிய பொய். ஓன்றாக இருந்த நிலப்பரப்பில் பாலம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?


இலங்கை செல்ல கடலில் பாலம் கட்டிய (?) இராமர் - அயோத்திக்கு புஷ்பக விமானம் ஏறி - வான்வழியே சென்றார் எனும் கற்பனை !

... அப்படித்தான் சேதுவில் இராமர் பாலம் கட்டினார். குரங்குகள் அந்தப் பாலத்தைக் கடலில் கட்டின என்று வால்மீகி இராமாயணத்திலேயே ஒரு கற்பனை கட்டவிழித்து விடப்பட்டிருக்கிறது.

அதே இராமாயணத்தில் 'யாருடைய துணையும் உதவியுமின்றி எனது அம்புகள் மூலமே – சமுத்திரத்தை ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் வற்றச் செய்து, சமதரையாக்கி எனது வானர சேனையுடன் இலங்கை செல்வேன் - என்று இராமர் கர்ஜிக்கிறார். தன்னாலே பாலம் எதுவும் கட்டாமலே அக்கரை சென்றடைய முடியும் என்பதை நிரூபிக்க சில பாணங்களை அவர் சமுத்திரத்தில் எய்ய - அந்த அம்புகளின் சக்தியால் - சமுத்திரமே வறண்டுவிடுமோ என்ற நிலை உருவாகிட - சமுத்திர ராஜன் கடலுக்கு அடியிலிருந்து எழுந்து வந்து 'பிரபே! என்னை மன்னியுங்கள்; கடலில் பாலம் கட்ட நான் உதவி செய்கிறேன். விசுவகர்மாவின் மகன் எனக் கூறப்படும் நளனை உங்களுக்குப் பாலம கட்ட உதவியாகத் தருகிறேன்' என்று செஞ்சுகிறார்.

அதன் பின் வானரங்கள் பிரம்மாண்டமான மரங்களையும் மலைகளையும் குன்றுகளையும் அடியோடு பெயர்த்துக்கொண்ட வந்து கடலில் போட - கடலில் ஒரு பாலம் உருவானது என்கிறார் வால்மீகி.... (தான் எய்யும் அம்பின் மூலம் கடலையே வற்றவைக்கும் அளவுக்கு சக்தி படைத்த இராமனுக்கு - சில கிலோமீட்டர் தூரமுள்ள இலங்கைக்கு தன் சக்தியால் நடந்தே சென்றிருக்கலாமே? மகா சக்தி பொருந்திய கடவுளுக்கு பாலம் எதற்கு? பதில் சொல்ல இயலுமா?)

... யுத்த காண்டத்தின் இறுதியில் - இராமர் - சீதை - லட்சுமனர் - வீபீஷணன் - அனுமன் மற்றும் வானரங்கள் எல்லாம் இலங்கையிலிருந்து அயோத்திக்கு எப்படிப் பயணம்செய்கிறார்கள்?

வால்மீகி கூறுகிறார் : புஷ்பக விமானத்தில் எல்லோரும் ஏறிக்கொண்டு - வானவீதி வழியாக அயோத்திக்குப் புறப்பட்டார்கள் - என்கிறார்.

யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பும்போது அனைவரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்ற இராமருக்கு - வானர சேனையுடன் இலங்கை செல்ல மட்டும் பாலம் தேவைப்பட்டது ஏன்? அத்வானிகளால் பதிலளிக்க முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

(தோழர் சின்னக்குத்தூசி எழுதிய 'ராமர் பாலம் இருந்ததா? ராமாயணம் நடந்ததா?' என்ற புத்தகதிலிருந்து சில...)
.
.


Wednesday, February 27, 2008

அண்டை வீட்டாரின் உரிமைகள்!

'இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ' என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?' என்று வினவப்பட்டது.

'எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!' என்று பதிலளித்தார்கள் அண்ணலார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்: 'தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை'

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே!'


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்

விளக்கம் : தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.

நான் அண்ணலாம் பெருமானார் கூறக்கேட்டேன்:

'எனக்கும் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் நான் அன்பளிப்பு அனுப்புவது?' அண்ணலார் பதிலளித்தார்கள். 'எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டைவீட்டுக்காரருக்கு!'

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி

விளக்கம் :அக்கம் பக்கத்திலுள்ள நாற்பது வீடுகள் வரை அண்டை வீடுகள் என்று கருதப்படும். அவர்களில் எவருடைய வீடு மிக அருகில் உள்ளதோ அவரே நம்மீது மற்ற அனைவரையும்விட அதிக உரிமையுள்ளவர் ஆவார்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

'எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! '

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி), நூல் : மிஷ்காத்

ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார்: 'இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், நஃபில் (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், ஸதகா (தர்மம்) கொடுக்கின்றாள், இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள். ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்.

'இதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் 'அவள் நரகம் புகுவாள்' என்று கூறினார்கள்.

அந்த மனிதர் மீண்டும கூறினார் : 'அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் (உபரியான ) நோன்புகள் நோற்கின்றாள், மிகக் குறைவாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின்றாள், ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.'

இதற்கு அண்ணலார், 'இவள் சுவனம் புகுவாள்' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), மிஷ்காத்

விளக்கம் : முதல் பெண் மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டாள் என்பதற்காக நரகம் புகுவாள். அண்டை வீட்டார் துன்புறுத்தப்படக்கூடாது. இது அவர்களின் உரிமையாகும். அவள் இந்த உரிமையை நிறைவேற்றவில்லை. உலகில் தன் அண்டை வீட்டாரிடம் அவள் மன்னிப்பும் கேட்கவில்லை, ஆகவே, அவள் நரகத்திற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'இறுதித் தீர்ப்புநாளில் அனைத்துக்கும் முதலாக (விசாரணைக்கு) வரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு இரு அண்டை வீட்டார் பற்றியதாகும்.'

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி), மிஷ்காத்

விளக்கம் : மறுமைநாளில் மக்களின் உரிமைகள் தொடர்பாக அனைத்துக்கும் முதலாக இறைவனின் முன் இரு மனிதர்கள் வருவார்கள். உலகில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு அண்டை வீட்டாராய் இருந்திருப்பார்கள், ஒருவர், மற்றவருக்குத் தொல்லை கொடுத்து அநீதியிழைத்திருப்பார். இந்த இருவரின் வழக்கு அனைத்துக்கும் முதலாக விசாரணைக்குவரும்.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! அண்டை வீட்டினருக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரலாகாது என இந்நபிமொழிகள் வலியுறுத்துகின்றது. பக்கத்து வீட்டுக்காரர் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் இறைநம்பிக்கையாளர் அல்ல என்பதும் நபிமொழி! அவர்களுக்கு தீங்கு செய்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அக்கம் பக்கத்தவரின் நலன் பேணாது வாழ்பவர் சுயநலவாதி ஆவார். ஒருவர் இறந்து ஒருவாரகாலமாய்யும் அக்கம்பக்கத்தவருக்கு தெரியாததால் துர்நாற்றம் எடுத்த பின்னர் வீட்டுக்கதவை உடைத்து எடுத்தார்கள் என்கின்ற மேலை நாட்டு நடப்புகளை தின இதழ்களில் பார்க்கின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் சுயநலப்போக்குடனும், சுகபோக வாழ்வையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதாலேயே இந்த இழிநிலை! இது போண்ற அவல நிலை நீங்க நபிமொழியைப் பின்பற்றி நடப்போமா?
.
.
.

Monday, February 25, 2008

தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?

பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :
- அபுஇப்ராஹீம், சென்னை

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்' என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )

இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள். அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.

இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)

இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.

இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார். இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார். இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?

அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?

//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//
//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //

உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?

இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?

அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.

அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4

இங்கே யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளத்தை காட்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு இயேசு அந்த யூதர்களின் மேல் எரிச்சலடைந்து யூதர்களைத் திட்டாமல் யூதர்களின் தாய்மார்களைத் திட்டுகிறார். அதில் வரக்கூடிய வாசகம் 'விபச்சார சந்ததியர்' இதை நம்ம தமிழ் பைபிள் மொழிப்பெயர்பாளர்கள் கொஞ்சம் 'டீசன்டாக' மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக.

ஆனால் இயேசு திட்டியதாக சொல்லப்படும் அந்த வார்த்தையின் நேரடி மொழிப்பெயர்ப்பு என்ன?

பொல்லாத விபச்சார சந்ததியினர் = கெட்ட வேசிமக்கள் = கெட்ட வேசிபிள்ளைகள் = கெட்ட வேசி சந்ததியினர் = கெட்ட தேவ்டியா மக்கள் = கெட்ட தேவ்டியா பிள்ளைகள்

அதவாது 'இந்த கெட்ட வேசிமக்கள் - தேவ்டியாமக்கள்' அடையாளத்தை தேடுகிறார்கள் ...'

இப்படிப்பட்ட கேவலமான - இன்றைய ரௌடிகளும், பொருக்கிகளும் உபயோகப்படுத்தும் வாத்தைகளைத் தான் பரிசுத்த இயேசு பயன்படுத்தினார் என்று சொல்கிறது பைபிள்.

இப்படித் திட்டுவது தான் பெற்றோர்களையும் - தாய்மார்களையும் - அடுத்தவன் குடும்பத்தினரையும் மதிக்கும் லட்சனமா? அடுத்தவன் தாயை இப்படி விபச்சாரி என்றுத் திட்டலாமா? தன்னிடம் வம்புக்கு வரும் ஒருவனைப்பார்த்து 'நாயே' 'பேயே' என்றால் அவனை மட்டும் திட்டுவதாக அமையும். அதற்கு பதிலாக அவனது தாயை திட்டுவது எந்த வித்தில் நியாயம்? அவன் தாய் என்ன செய்தார்? இப்படித்திட்டினால் எவனுக்கு கோபம் வராது?

சமீபத்தில் இந்த உன்மைஅடியான் மற்றும் அவரது சகாக்கள் வேண்டுமென்றே பெருமானாரை இழிவு படுத்தும் விதமாக எழுதியதற்கு பதிலாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ (பாகம் 1, பாகம் 2), மூலம் 'இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் நேரடியாக பொது மேடையில் பதில் தருகின்றோம். எங்களிடம் நேரடி விவாதத்திற்கு தயாரா?' என்று சவால்விட்டிருந்தனர். அதற்கு பயந்த இந்த பயந்தாங்கொள்ளிகள் 'எங்களை தொடை நடுங்கி' என்றெல்லாம் திட்டுகின்றனர். இது தான் 'இவர்களின் விவாத லட்சனம்' என்று நமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பெழுதியிருந்தனர்.
விபச்சாரம் என்னும் அசிங்கமான கலாச்சராம் உலகம் முழவதும் தலைவிரித்தாடும் இந்த காலத்திலேயே பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவைப்போண்று உங்கள் தாயை அல்ல, உங்களை 'தொடை நடுங்கி' என்று கூறியதற்கே, திட்டுகின்றனர் - இது தான் இவர்களின் லட்சனம்' என்று கூச்சலிட்டீர்களே, இங்கே யூதர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் குறிக்கும் விதமாக 'கெட்ட வேசிமக்கள்' என்று தாய்மையையே அசிங்கப்படுத்துகிறாரே இதற்கு என்னப்பா பதில் சொல்லப் போகின்றீர்? எங்களைப் பொருத்தவரை ஒரு தீர்க்கதிரிசி, உங்களைப்பொருத்தவரை கடவுளின் குமாரன், இது தான் அவர் நமக்கு ஒழக்கத்தைக் கற்றுத்தரும் லட்சனமா?

உலகத்திலேயே ஒரு புனித வேதத்தில் 'பொள்ளாத விபச்சார சந்ததியினர்' - 'கெட்ட தேவ்டியா மக்கள்' என்று ஒரு பரிசுத்தர் கூறிய வார்த்தை வருகிதென்றால் அந்த சிறப்பு பைபிளை மட்டுமே சாரும்.

இப்படிப்பட்ட அநாகரீக செயல்களைக் குறித்து குர்ஆனின் படி இயேசுவின் வழியில் இறுதியாக வந்த நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உலகமக்களுக்கு கற்றுத்தரும் ஒழுக்கத்தைப் பாருங்கள் :

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது 'மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்;. அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இது போண்ற ஒழுக்கத்தை சொல்லக்கூடியவராகவும், அதை செயல்படுத்தக்கூடியவராகவும் தான் இயேசுவும் இருந்திருப்பார்கள் - இருந்திருக்க வேண்டும். அதை முஸ்லீம்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குர்ஆன் அவரை நல்லோர்களில் ஒருவர் என்று கூறுகிறது. ஆனால் பைபிளோ அவரையும் அவரைப்போண்ற தீர்க்கதிரிசிகளையும் மிக மிக மோசமானவர் என்பது போல் காட்டுகிறது.

தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)

Saturday, February 23, 2008

பெற்றோரைப் பேணுவோம்

இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் :

'அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
அல்குர்ஆன் 17 : 23

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : திர்மிதீ, இப்னு ஹிப்பான், ஹாம்மில்

''தாய்மார்களைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (அல்லாஹ்வீன் கட்டளையை) நிறைவேற்றாமல் இருப்பதையும் (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும், வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், சொத்துக்களை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது; மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரீ, முஸ்லிம்

''இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு, நூல்: திர்மிதீ

நபியவர்களின் சமூகத்திற்கு வந்த ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா? என வினவிய போது நபியவர்கள், ''உமக்கு தாய், தந்தையார் உண்டா? என (திருப்பி) கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்ற போது நபியவர்கள், ''அவ்விருவருக்கும் (பணிவிடை செய்வதன் மூலமாக) அறப்போர் செய்யும்'' என்றுரைத்தார்கள்.
.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு (நூல்: ஸஹீஹ் அபூதாவூத் -2529)


ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார் :'அல்லாவின் தூதரே! நான் நல்லவிதமாக நடந்துகொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார்?'
.
நாயகம் (ஸல்) அவர்கள் 'உம்முடைய அன்னையே மிகவும் உரிமை பெற்றவர்கள்' என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் 'அவருக்குப் பிறகு யார்?' என்று கேட்டார்.
.
நாயகம் அவர்கள் 'உம்முடைய அன்னைதான்!' என்று பதிலளித்தார்கள்.
.
அம்மனிதர் 'பிறகு யார்?' என்று மீண்டும் வினவினார். 'உம்முடைய தந்தை. அதற்கு அடுத்து படிப்படியாக உமது நெருங்கிய உறவினர்கள் உம் நன்னடத்தைக்கு உரியவர்கள்'என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்
.
நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)'இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?') 'முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்.'
.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'தாய் தந்தையருடன் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும், பேராசையையும், கஞ்சத்தனத்தையும் இறைவன் உங்கள் மீது ஹராமாக்கியுள்ளான். நீங்கள் வீண் பேச்சு பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கின்றான்.'
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நாங்கள் அண்ணலாரின் அவையில் அமர்ந்து கொண்டிருந்த போது, பனூஸலமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் தந்தையர் இறந்துபோன பின்னாலும் நான் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா?' எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் அவர்கள், 'ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமன்னிப்புக் கோருங்கள். அவர்கள் செய்துவிட்டுச் சென்ற ( அனுமதிக்கப்பட்ட) மரண சாஸனத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் தாய், தந்தையர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். தாய், தந்தையின் உறவினர்களுக்கு கண்ணியம் அளியுங்கள், அவர்களை உபசரியுங்கள்.'
அறிவிப்பாளர் : அபூ உஸைத்தினில் ஸாஇதி (ரலி), நூல் : அபூதாவூத்

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஜிஈரானா என்னுமிடத்தில் இறைச்சி பங்கிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அங்கே ஒரு பெண்மணி வந்தார். நபிகள் நாயகத்திற்கு அருகில் சென்றார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் தம் போர்வையைத் தரையில் விரித்தார்கள். அதில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொண்டார். 'இவர் யார்?' என்று நான் வினவினேன். 'இவர் அண்ணலாருக்கு அமுதூட்டிய செவிலித்தாய்!' என்று மக்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) நூல் : அபூதாவூத்

Wednesday, February 20, 2008

சாந்தியும் சமாதானமும்.....

அன்பு ஏற்படுவதற்கான வழி

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவனத்தினுள் நுழையமாட்டீர்கள்; ஒருவரையொருவர் அன்பு பாராட்டும் வரை இறைநம்பிக்கை கொள்ளமாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே ('உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்ற பொருள் படக்கூடிய 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனும்) 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள்'' என்று இறைத்தூதர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
விளக்கவுரை:


'ஸலாம்' கூறுவதன் மூலம் சகோதரத்துவம், அன்பு, பாசம், நேசம் ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.இறைபக்தி மற்றும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவோர் தீமைகளைத் தவிர்ப்பர். நன்மை செய்வோருக்கு சுவனம் கிடைப்பது உறுதி இறைநம்பிக்கை கொண்டோரே! ஸலாத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள்! சகோதரப் பிணைப்பிற்கு அது ஒன்றே வழி!
.
.
மக்களை இணைக்கும் பாலம்

''அல்லாஹ்விடம் மக்களிலேயே மிசச்சிறந்த நபர் முதலில் ஸலாம் கூறுபவராவார்''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.




அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அஹ்மத், திர்மிதீ, அபூதாவூது)
விளக்கவுரை:

ஸலாம் கூறுவதை மரியாதைக் குறைவாக கருதுவோரும் உண்டு; நமது அந்தஸ்திற்கு இவருக்குப் போய் ஸலாம் கூறுவதா? என்ற அகந்தை எண்ணத்துடன் தலை நிமிர்ந்து செல்வோரும் உண்டு; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அடுத்தவரது நல்வாழ்விற்காக செய்யும் பிரார்த்தனையே ஸலாம் ஆகும். அதைச் சொல்வதற்குக் கூட கஞ்சத்தனம் செய்வோர் மனித நலனை எவ்விதம் காப்பர்? அதனால் தான் நபியவர்கள் தாங்களாகவே முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். இந்த நபி மொழியை செயல்படுத்துவதற்காக அப்துல்லாஹிப்னு உமர் என்ற நபித்தோழர் கடைவீதிக்குச் சென்று, ஏழை, எளியோர், வியாபாரிகள் மற்றும் வருவோர், போவோர் அனைவருக்கும் ஸலாம் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். முதல் மனிதர் ஆதமின் முதல் வார்த்தையே ஸலாம் தான்! ஒருவரையொருவர் வெறுத்து பிரிந்து வாழ்வோர் ஸலாம் கூறுவதன் மூலமாக ஒன்று சேர்வதற்கான அருமையான வழிமுறையை அண்ணல் நபியவர்கள் காட்டியுள்ளார்கள்.
.
.
குரோதமும், விரோதமும் நீங்குவதற்கான வழி


''கைலாகு செய்து கொள்ளுங்கள்: அதனால் குரோத மனப்பான்மை நீங்கிவிடும்; ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள்; அதனால் உங்களிடையே அன்பு உண்டாகும்; விரோதம் அகன்று விடும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பாளர்: அதாவுல் குராஸானீ நூல்: மாலிக்

விளக்கவுரை



கைலாகு செய்வது, அன்பளிப்புச் செய்வதன் வாயிலாக கிடைக்கும் நற்பயன்களை இந்த நபிமொழி அறிவுறுத்துகிறது. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது ஸலாம் கூறிக் கொள்வதுடன் வலக்கரம் நீட்டி முஸாஃபஹா (கைலாகு) செய்து கொள்வது உள்ளத்தில் உண்டாகும் போட்டி, பொறாமை எண்ணங்களை அகற்றி சமாதானத்திற்கு பச்சைக்கொடி காட்டுகிறது. அதுபோன்றே உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புக்களை வழங்கி அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பதிலுக்குப் பதில் என்ற ரீதியில் அமையாமல் உள்ளன்போடு வழங்கும் பயன்பொருளாக இருத்தல் வேண்டும். ''இரு முஸ்லிம்கள் ஒருவரையொவருவர் சந்தித்து கைலாகு செய்தால், இருவரும் பிரிந்து செல்லும் முன்னரே அவ்விருவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுவிடுகிறது'' என்பது நபிமொழி! தங்களுக்கு வரும் அன்பளிப்புகளை வசதியற்ற திண்ணைத் தோழர்களுக்கு வழங்கி மகிழ்ந்தது நபிவழி!
.
.
மென்மையின் மேன்மை

''திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
விளக்கவுரை :



நபி(ஸல்) அவர்களிடம் வந்த யூத மத அன்பர்கள் சிலர், ஸ்லாமு அலைக்கும் (வார்த்தையை மாற்றி - 'உங்களின் மீது சாவு உண்டாகுக!') என கடின வார்த்தை கூறி ஸலாத்தைக் கிண்டல் செய்தனர். இதைச் செவியுற்றதும் நபியவர்களின் அருகிலிருந்த துணைவி ஆயிஷா, ''உங்களின் மீதே சாவும், சாபமும் உண்டாகுக!'' என பதிலுரைத்தார்கள். அப்போது தான் நபியவர்கள் மேற்கூறிய மணிவாசகத்தை மொழிந்தார்கள். அவர்கள் மட்டும் சாபமிடுகிறார்களே! என ஆயிஷா கோபித்துக் கொண்ட போது நபியவர்கள், 'உங்களின் மீது உண்டாகட்டும் என்று கூறி அவர்களுக்கு பதிலளித்து விட்டேனே'' என மொழிந்தார்கள். விரோதிகளிடமும் மென்மைப் போக்கைக் கடைப்பிடித்து அவர்களைத் திருந்தச் செய்வதே நபியவர்களின் அழகிய வழிமுறை!

இறையில்லத்தில் (பள்ளிவாசலில்) சிறுநீர் கழித்த காட்டரபீ ஒருவரை நபித்தோழர்கள் தாக்க முனைந்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தி, தம் திருக்கரங்களால் தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தது மென்மையின் உச்சகட்டம்! ஹீதைபிய்யா உடன்பாட்டின் போது கடுமையாக நடந்துகொண்ட காஃபிர்களை மென்மைப் போக்கினால் வென்று காட்டியது, ''மென்மையினால் கிடைக்கும் நன்மை''க்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.


''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்


விளக்கவுரை:

உணவளிப்பதையும், ஸலாம் கூறுவதையும் இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயலாக இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது. இல்லாதோர், இயலாதோர் மற்றும் ஏழைகளுக்கு உணவளிப்பது அவர்களது மனதை மகிழ்விக்கச் செய்கிறது. மனித நலம் பேணுகிறது. உற்றார், உறவினரிலுள்ள ஏழைகளுக்கு உணவளிப்பது உறவு முறைகளை காத்து வலுப்படுத்துகிறது. மனைவி, மக்கள், பெற்றோருக்கு உணவு வழங்குவது மனிதனுடைய கடமையுணர்வை நிலைநாட்டுகிறது.

ஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது.