அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, April 10, 2008

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 1)

............................................................................... - அபு இப்ராஹீம், சென்னை

உலகில் 100 கோடிக்கும் மேல் வாழும் கிறிஸ்தவர்களால் புனிதவேதமாக கருதப்படும் பைபிள், ஏக இறைவனால் - கர்த்தரால் - பரிசுத்த ஆவியின் மூலமாக - பரிசுத்த எழுத்தர்களுக்கு ஊந்தப்பட்டு எழுதப்பட்டது என்றும் - எனவே, இது இறைவனால் உலகமக்களுக்கென்று கொடுக்கப்பட்ட இறைவேதம் என்றும் நம்புகின்றனர். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். அதை பைபிளில் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது' - 2 திமோத்தேயு 3 : 16

புனித வேதம் என்று சொல்லப்படக்கூடியது, அதுவும் அனைத்தையும் படைத்த - இந்த உலகம் மற்றும் அதில் வசிக்கக்கூடிய உயிரினம், இந்த அன்டசராசரங்கள், இவ்வனைத்தையும் படைத்த - இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய இறைவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ அளவு கோல்கள் இருந்தாலும், பொதுவான - அதுவும் மிக மிக முக்கியமான ஒரு அளவுகோல் 'முரண்பாடற்ற - குழப்பமில்லாத வேதமாக இருக்கவேண்டும்' என்பது.

ஓரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அப்படி முரண்பாடானதாக இருந்தால் அது ஏக இறைவனால் - காத்தரால் - வழங்கப்பட்ட இறைவேதமாக ஒருபோதும் இருக்க முடியாது. கர்த்தரால் அருளப்பட்ட ஒரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்க முடியாது என்ற தகுதியை பைபிலும் ஒத்துக்கொள்கின்றது. கடவுள் குழப்பமாகவோ - முரண்பாடாகவோ எதையும் சொல்லமாட்டார் என்கிறது பைபிள் :

...God is not the author of confusion... (1 corinthians 14:33) (Revised Standard Verison)

...கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல... (1 கொரிந்தியர் 14:33) (ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்சன் மொழிப்பெயர்ப்பு)

இந்த பொதுவான அளவுகோளின் படி கிறிஸ்தவார்களின் புனித வேதமான பைபிலை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நமக்கு அதிர்ச்சியும் - ஆச்சரியமுமாக இருக்கின்றது. ஏனெனில், கர்த்தரால் அருளப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உன்மையிலேயே இது கர்த்தரால் அருளப்பெற்ற ஒரு வேதமாக இருந்தால் - அவனுடைய பரிசுத்தர்களுக்கு பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட வேதமாக இருந்தால் எப்படி ஒவ்வொரு ஆகாமங்ளும், ஒவ்வொரு வசனங்களும் முரன்பாடாக இருக்கும்? இறைவேதம் என்ற தகுதியை முழவதுமாக இழந்து விட்ட பைபிளின் அனைத்து முரண்பாடுகளையும் 'முரண்பாடுகள் நிறைந்த பைபிள்' என்றத் தலைப்பில் தொடராக கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்... அதன் முதல் பாகம் இதோ:




இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இரண்டு பாகங்கள் உள்ளது. ஓன்று பழைய ஏற்பாடு. மற்றொன்று புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது உலகம் படைக்கப்பட்டது முதல் இயேசுவின் பிறப்பிற்கும் முந்தியது வரை சொல்லுகிறது. புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் பிறப்பு முதல் துவங்கி அவரின் இறப்பு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்று விவரிக்கப்படுகின்றது. இதில் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டிற்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுளால் அருளப்பட்டதாக - கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் ஆகமத்தின் முதல் வசனம் முதல் 17ம் வசனம் வரையுள்ள வசனங்களில் ஏராளமான குளறுபடிகளும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதை சற்று அலசுவோம்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய 1ம் ஆதிகாரம் வசனம் 1 முதல் 17ம் வசனம் வரை இயேசுவுடைய வம்சாவழியினர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயை பெற்றான் 6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான 8. ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான 9. உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான 10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான 11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான 13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான 14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான். 15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான 16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

இப்படி மத்தேயு தனது பங்குக்கு இயேசுவின் வம்சவரலாறை பற்றி தனது புத்தகத்தின் துவக்கதிலேயே எழுதியுள்ளார். இதே போன்று இயேசுவின் வம்சவரலாறை புதிய ஏற்பாட்டின் மற்றொரு எழுத்தாளரான லூக்காவும் தனது 3வது அதிகாரம் 23வது வசனத்திலிருந்து 38வது வசனம் வரை பின்வருமாறு கூறுகின்றார் :

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். 24. ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன் லேவி மெல்கியின் குமாரன் மெல்கி யன்னாவின் குமாரன் யன்னா யோசேப்பின் குமாரன். 25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா ஆமோசின் குமாரன் ஆமோஸ் நாகூமின் குமாரன் நாகூம் எஸ்லியின் குமாரன எஸ்லி நங்காயின் குமாரன். 26. நங்காய் மாகாத்தின் குமாரன் மாகாத் மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா சேமேயின் குமாரன் சேமேய் யோசேப்பின் குமாரன் யோசேப்பு யூதாவின் குமாரன் யூதா யோவன்னாவின் குமாரன். 27. யோவன்னா ரேசாவின் குமாரன் ரேசா சொரொபாபேலின் குமாரன் சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன் சலாத்தியேல் நேரியின் குமாரன். 28. நேரி மெல்கியின் குமாரன்ளூ மெல்கி அத்தியின் குமாரன அத்தி கோசாமின் குமாரன் கோசாம் எல்மோதாமின் குமாரன் எல்மோதாம் ஏரின் குமாரன் ஏர் யோசேயின் குமாரன். 29. யோசே எலியேசரின் குமாரன் எலியேசர் யோரீமின் குமாரன் யோரீம் மாத்தாத்தின் குமாரன் மாத்தாத் லேவியின் குமாரன். 30. லேவி சிமியோனின் குமாரன் சிமியோன் யூதாவின் குமாரன் யூதா யோசேப்பின் குமாரன் யோசேப்பு யோனானின் குமாரன் யோனான் எலியாக்கீமின் குமாரன். 31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன் மெலெயா மயினானின் குமாரன் மயினான் மாத்தாத்தாவின் குமாரன் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் நாத்தான் தாவீதின் குமாரன். 32. தாவீது ஈசாயின் குமாரன் ஈசாய் ஓபேதின் குமாரன் ஓபேத் போவாசின் குமாரன் போவாஸ் சல்மோனின் குமாரன் சல்மோன் நகசோனின் குமாரன். 33. நகசோன் அம்மினதாபின் குமாரன் அம்மினதாப் ஆராமின் குமாரன் ஆராம் எஸ்ரோமின் குமாரன் எஸ்ரோம் பாரேசின் குமாரன் பாரேஸ் யூதாவின் குமாரன் யூதா யாக்கோபின் குமாரன். 34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் ஆபிரகாம் தேராவின் குமாரன தேரா நாகோரின் குமாரன். 35. நாகோர் சேரூக்கின் குமாரன் சேரூக் ரெகூவின் குமாரன் ரெகூ பேலேக்கின் குமாரன் பேலேக் ஏபேரின் குமாரன் ஏபேர் சாலாவின் குமாரன். 36. சாலா காயினானின் குமாரன் காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன் அர்ப்பகசாத் சேமின் குமாரன் சேம் நோவாவின் குமாரன் நோவா லாமேக்கின் குமாரன். 37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன் மெத்தூசலா ஏனோக்கின் குமாரன் ஏனோக்கு யாரேதின் குமாரன் யாரேத் மகலாலெயேலின் குமாரன் மகலாலெயேல் கேனானின் குமாரன் கேனான் ஏனோசின் குமாரன். 38. ஏனோஸ் சேத்தின குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன்.

இப்படி, பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி இரண்டு ஆகாமங்களில் இரண்டு பரிசுத்தர்கள் (?) எழுதியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் இதே போன்ற வேறு பலருடைய வம்சாவழிப்பட்டியல்கள் பைபிளின் அனேக இடங்களில் குறிப்பாக, பழையஏற்பாட்டில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றது.

இப்படி பலருடைய வம்சாவளியைப் பற்றி இறைவனால் அருளப்பெற்ற ஒருவேதத்தில் சொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதனால் இந்த உலகமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் இந்த உலகமக்களுக்கு கடவுள் எதைச் சொல்லவருகின்றார்? எந்த ஒரு பயனும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக, எந்தப்பயனும் இல்லாத ஒன்றை ஏதோ கர்த்தர் (?) சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொல்லப்படும் ஒன்றை தெளிவாகவும் - குழப்பமில்லாத வகையிலாவது சொல்லியிருக்க வேண்டாமா? இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுள்தான், இந்த வசனங்களை எல்லாம் அருளினார் என்றால், தனது குமாரனுடைய (?) வம்சாவழி பட்டியல் பற்றி எப்படித்தெரியாமல் போகும்?

ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்தம் எத்தனை பேர்?

மத்தேயு 1: 17ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசுவரை மொத்தமுள்ள வம்சாவளியினர் பற்றிய மத்தேயு சொல்லும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

'இவ்விதமாய் உன்டான தலைமுறைகளெல்லாம்...

Image and video hosting by TinyPic
(அதாவது ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் உள்ள மொத்த வம்சாவழியினர் 14 + 14 + 14 = மொத்தம் 42 பேர் என்கிறார்)

ஆனால் அவரே தனது முதல் அதிகாரத்தின் 2ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் கொடுத்துள்ள பட்டியலில் 41 பேரின் பட்டியல் தான் கொடுத்துள்ளார்.

Image and video hosting by TinyPic
மத்தேயு தனது ஆகாமத்தில் இயேசுவின் வம்சாவழிபற்றி கொடுத்துவிட்டு 1 : 17 ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்த வம்சாவளியினர் 42 என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றமாக, வேறுயாருமல்ல அவரே அவரது சொந்த ஆகாமத்தில் கொடுத்திருப்பதோ மொத்தம் 41 நபர்களின் பட்டியல்தான். மீதம் ஒருவர் எங்கே??? ஓரு கடவுளுக்கு அல்லது கடவுளின் எழுத்தாளருக்கு தான் வரிசைப்படுத்தியுள்ள நபர்களின் எண்ணிக்கை எப்படித் தெரியாமல் போகும்? இது எப்படி கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்க முடியும்?

இதை சாதாரன தவறு தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது மத்தேயு என்னும் தனி மனிதன் சுயாமாக எழுதியதாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துகொள்ள போவதில்லை. ஆனால் இவையெல்லாம் கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாம். அப்படி கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட ஒன்று எப்படி முரணாக இருக்கும்? எப்படி கணக்கில் குளருபடி வரும்? அடுத்து பாருங்கள்..

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், மத்தேயு, தாவீது முதல் இயேசு வரையில் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மொத்தமே 42 இரண்டு பேர்தான். அதற்கு மேல் இல்லை என்று மிகத்தெளிவாகவே கூறுகிறார். நன்றாக மத்தேயு எழுதியதை கவனித்தால் உன்மைப் புரியும் :

'இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்'

'So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations'.

மொத்தமே இவ்வளவு தலைமுறையினர்தான், அதற்கு மேல் இல்லை என்பதை தெளிவாக குறிக்கும் விதமாக - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் - 'all the Generations' என்று மத்தேயு கடவுளின் ஊந்துதலோடு (?) எழுதியுள்ளார். ஆனால் பழைய ஏற்பாடோ இதற்கு மாற்றமாக 'மத்தேயு சும்மா சிறுபிள்ளதானமா எழுதிட்டாரு. நாங்க சொல்றது தான் சரி, அவருக்கு கணக்கே சரியா தெரியலப்பா' என்ற தோரனையில் பின்வருமாறு விளக்குகிறது.

தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன காலம் வரை எத்தனைப் பேர்?
Image and video hosting by TinyPic
தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டு போகும் காலம் வரை மொத்தம் 14 தலைமுறையினர் தான் என்கிறார் மத்தேயு. ஆனால் பழையஏற்பாடு 1 நாளாகம் 3 : 10-16ல் மொத்தம் 14 நபர்கள் என்பது தவறு. மொத்தம் 18 பேர் என்கிறது. இதில் விடுபட்ட 4 நபர்கள் எங்கே? இது கடவுளுக்கு (?) தெரியாமல் போன மர்மம் என்ன?

1 நாளாகமம் 3:10-16 கணக்குப்படி பார்த்தால் மத்தேயுவின் (1:17) 42 நபர்கள் என்ற மத்தேயுவின் கணக்கு இன்னும் உதைக்கும்.

இப்பொழுதாவது புரிகிறதா பைபில் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று? மத்தேயு அவருக்கு தெரிந்த அளவுக்கு இயேசுவின் வரலாற்றை எழுதிவிட்டார் என்றால் கூட நாம் இதை பெரிது படுத்தப் போவதில்லை. அதை விடுத்து இவை அனைத்தும் கடவுளிடம் வந்தது - அதாவது 'வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவஆவியால் அருளப்பட்டது' என்று சொல்லி மக்களை நம்ப வைக்கவும், இப்படிப்பட்டவர்கள் எதை எதையோ தங்கள் மனம் போனப்பபோக்கில் எழுதியதை வைத்துக்கொண்டு உன்மைகளை மறைப்பதற்கும், வரலாறே இவர்கள் எழுதியது மட்டும் தான் என்றும், இவர்களுக்கு மாற்றமாக யார் சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம். ஏனெனில் இவர்கள் சுயமாக எழுதியதல்ல, இவை அனைத்தும் கடவுளின் பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டது' என்று சொல்வதால் தான் நாம் இந்தக் கேள்விகளை வைக்கின்றோம் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.

எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

இயேசுவின் வம்சத்தில் வரும் ஒருவரான யோசியாவின் மகன் தான் எகொனியா என்கிறார் மத்தேயு (மத்தேயு 1:11) ஆனால் பழையஏற்பாட்டில் வரும் 1 நாளாகமம் 3:15-16 ல் யோசியாவின் மகன் யோயாகீமாம். அந்த யோயாகீமின் மகன் தான் எகொனியாவாம். இதில் எது சரி? எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

சொருபாபேலின் மகன் யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் மகன் அபியூத் வழியில் தான் இயேசு ஜனனமானார் என்று மத்தேயுவும் (மத்தேயு 1:13) சொருபாபேலின் மகன் ரேசா வழியில் தான் இயேசு வந்தார் என்று லூக்காவும் (லூக்கா 3:27) கூறுகின்றனர். உன்மையில் இயேசு சொருபாபேலின் மகன்கள் என்று சொல்லப்படக்கூடிய அபியூத் வழியில் வந்தாரா? அல்லது ரேசா வழியில் வந்தாரா?

அடுத்து இதில் மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் இதே வம்சாவலியைச் சொல்லி வரும் பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3 : 19 ல் இந்த சொருபாபேலுக்கு பிறந்தவர்கள் யார் யார் என்பது பற்றி கூறப்படுகிறது. அதில் மத்தேயு சொல்லக்கூடிய சொருபாபேலின் மகன் அபியூத்தோ அல்லது லூக்கா சொல்லக்கூடிய ரேசாவே அங்கே வரவில்லை. மாறாக, அங்கே வேறு ஒரு வம்சப்பட்டியலை எழுதிவைத்துள்ளனர். இதிலிருந்து லூக்காவோ அல்லது மத்தேயுவோ கண்மூடித்தனமாக எதையோ எழுதிவைத்துள்ளனர் என்பதும், இவற்றைத்தான் கிறிஸ்தவர்கள் கடவுளின் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறதல்லவா?

கிறிஸ்தவர்கள், மத்தேயு சொல்வதுதான் சரி என்றால் லூக்காவும், பழைய ஏற்பாட்டின் 1 நாளாகமும் சொல்வது பொய் என்று ஆகிவிடும். இல்லை லூக்கா சொல்வது தான் சரி என்றால் 1 நாளாகமும் மத்தேயுவும் சொல்வது தவறென்றாகிவிடும். அல்லது 1 நாளாகமம் சொல்வது தான் சரி என்றால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் ஏதோ கடவுளின் பெயரால் உளறித்தள்ளிவிட்டனர் என்றாகிவிடும். எது உன்மை? எப்படியோ பைபிளின் ஆகாமங்கள் கடவுளின்பெயரால் மக்களை குழப்புகின்றது என்பது மட்டும் நிச்சயம்.

சொருபாபேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் தந்தை சாலத்தியேல் என்று மத்தேயு 1 : 12 லும், லுக்கா 3 : 27லும் ஒருமனதாக சொல்லுகின்றனர். ஆனால் இந்த இருவரும் எதை ஒத்தகருத்துடன் சொல்லுகிறார்களோ அது தவறு என்று பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3:19ல் சொல்லப்படுகின்றது. அதாவது சொலுபாபேலின் தந்தை பெதாயா என்கிறது. எது சரி?

சாலத்தியேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சாவளியில் வரும் ஒருவர் சாலத்தியேல். இவரின் தந்தை 'எகொனியா' என்பவர் தான் என்று மத்தேயு 1:12 லும், இல்லை 'நேரி' என்பவர் தான் என்று லூக்கா 3:27 லும் தெரிவிக்கின்றனர். உன்மையில் எகொனியாவின் தந்தை யார்?

மரியாளின் புருசன் யோசேப்பின் தந்தை யார்?

இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மத்தேயு லூக்கா - இரண்டு சுவிசேஷக்காரர்களுமே கூறுகின்றனர். அந்த யோசேப்பின் தந்தை யாக்கோபு என்று மத்தேயுவும் (மத்தேயு 1:16) ஏலி என்று லூக்காவும் (லுக்கா 3:23) கூறுகின்றனர். இங்கே மரியாலுடைய புருஷன் யோசேப்பின் தந்தை யார்? இப்படி தந்தை விஷயத்தில் குழப்பம் வரலாமா? அதுவும் இNசுவுடைய தாய் மரியாலுடைய புருஷனின் தந்தைக்கூட தெரியதா அளவில் தான் கடவுள் இருப்பாரா? அல்லது கடவுளின் பெயரால் பைபில் வேதம் என்று புனையப்பட்டுள்ளதா?

இயேசு ஜனனமானது சாலமோன் வழியிலா? நாத்தானின் வழியிலா?

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு 1 : 16ல் இயேசு பிறந்தது தாவீதின் மகன் சாலமோன் வம்சத்தில் என்கிறார். ஆனால் லூக்காவோ 3 : 31ல் இயேசு தாவீதின் மகன் நாத்தானின் வம்சத்தில் பிறந்தார் என்கிறார். இது எப்படி சாத்தியமாகும். தாவீதுக்கு நாத்தான் சாலமோன் என்று இரண்டு மகன்கள் இருந்ததாக பழைய ஏற்பாடு 2 சாமுவேல் 5: 14ல் சொல்லப்படுகின்றது. அப்படியானால் எப்படி இரண்டு பேரின் வழியிலும் இயேசு வந்திருக்க முடியும்? தாவீதின் இரு மகன்களில் எந்த மகன் வழியே இயேசுவின் வம்ச வரலாறு வருகின்றது என்பதைக்கூடவா கடவுளுக்கு அறியாமல் இருக்கின்றார்? இப்படி முரண்பாடாக இருக்கும் ஒன்றை எப்படி கடவுளுடைய வேதம் என்று ஏற்க முடியும்? அல்லது கடவுள் ஒன்றும் அறியாதவர் என்று சொல்ல வருகின்றீர்களா?

இதில் சில கிறிஸ்தவர்கள் இந்த முரண்பாட்டை சமாளிப்பதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதற்காக - பொருந்தாத வாதமொன்றை வைக்கின்றனர். மத்தேயு, தாவீதின் மகன் சாலமோனுடைய வழியாக மரியாலுடைய புருசன் யோசேப்பின் வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் லூக்கா, தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசுவின் தாய் மரியாலுடைய வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் இரண்டுமே வேறுவேறான வம்சாவளி என்கின்றனர்.

பொதுவாகவே கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள இந்த முரண்பாடுகளை ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வாதத்தை வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. இது பைபில் உள்ள மிகத்தெளிவான முரண்பாடு என்பதை நன்றாகத் தெரிந்தும் இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கான காரணங்கள் இதோ :

லூக்காவும் சரி மத்தேயுவும் சரி - இருவருமே மரியாலுடைய புருஷன் சோசேப்பின் வம்சாவலியையே கூறுகின்றனர் என்பது தான் உன்மை. காரணம், மத்தேயு 1 : 16ல் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இங்கே இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதேபோல் லூக்கா 3: 23ல் 'அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். இங்கேயும் இயேசுவின் தந்தை யோசேப்பு என்றே சொல்லப்படுகின்றது. எந்த ஒரு இடத்திலும் மரியலுடைய வம்சத்தைப் பற்றி சொல்லப்படவில்லை என்பதை நன்றாக கவனிக்க வேண்டும்.

அடுத்து மத்தேயுவும் லூக்காவும் சொல்லக்கூடிய வம்சாவளிப்பட்டியல்களின் இடையே இயேசுவின் முன்னோர்களான சாலத்தியேல் அவரது மகன் சொருபாபேல் என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க மத்தேயு 1:12, லூக்கா 3:27) கிறிஸ்தவர்கள் மறுப்பது போல் இந்த இரண்டும் வேறு வேரான வம்சவராலாறு என்றால் இந்த பட்டியலில் இவ்விருவரும் வரவேண்டிய அவசியம் என்ன? லூக்காவும் மத்தேயும் சொல்வது போல் இவ்விருவரும் பெயர்களில் தான் ஒற்றுமையே யொழிய நபர்கள் தனித்தனி நபர்களே என்றும் மறுக்க இயலாது. ஏனெனில் இரு ஆகமங்களிலும் வரும் இவ்விறுவரும் ஒருவரே என்று அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் ரெஃபரன்ஸ் பைபிள்களில் கோடிட்டு காட்டியுள்ளனர். (உதாரனமாக : தானியேல் தமிழ் ரெஃப்ரன்ஸ் வேதாகமம், ஆங்கிலம் NIV Study bible, RSV. KJV (editod by : C.S. Scofield. இன்னும் பல...). லூக்கா சொல்வதும் மத்தேயு செல்வதும் வேறு வேரான வம்சாவளி என்றால் தந்தை மகன்களாகிய சாலத்தியேலும், சொருபாபேலும் எப்படி இரண்டு வம்சத்திலும் வருவார்கள்?

அடுத்து, இவர்கள் இந்த முரண்பாட்டை சரிகட்டி பைபிள் இறைவேதம் என்று நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் திரும்பவும் பைபில் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே அமைந்து விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த முரண்பாட்டை சரிகட்ட தானியே ரெஃபரன்ஸ் வேதாகமம் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் :

'[503] 3:24 மரியாளின் மூதாதயைர் பட்டியல் : ஏலி யோசேப்பின் மாமாவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்திகள் மரியாளிடமிருந்து லூக்காவுக்கு கிடைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் லூக்கா நூல் வழங்குகிறது. அதற்கு இந்த மரியாளின் பரம்பரைப் பட்டியல் ஒரு சிறந்த சான்று' (பார்க்க : தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் - பக்கம் 1098)

இதில் என்ன சொல்ல வருகின்றார். லுக்கா சொல்லும் யோசேப்பின் தந்தை ஏலி என்பவர் உன்மையில் அவரின் தந்தை இல்லையாம். அவரின் மாமாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இங்கே ஏன் 'அதிக வாய்ப்பு உள்ளது' என்று போட வேண்டும். அது தான் உன்மையாக இருந்தால் அதை பைபில் ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தானே. இப்படி சமாளிக்கும் வார்த்தைகளைப் போட்டால் தான், இந்த முரண்பாட்டைக் களைந்து இது கடவுளுடைய வேதம் என்று சொல்லாம் என்பதற்காக தங்களுக்குள்ளே செய்துக் கொள்ளும் சமாதானம்.

அடுத்து 'இந்த செய்திகள் லூக்காவுக்கு மரியாளிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்'. என்கிறார். இவர் சொல்வது உன்மையானால் இந்தச் செய்தி மரியாளிடமிருந்து கிடைத்தது என்று லூக்காவல்லவா சொல்லவேண்டும். அதைவிடுத்து 20ம் நூற்றான்டைச் சேர்ந்த தானியேல் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

அடுத்து இவர் 'லுக்காவுக்கு இந்தச் செய்தியை மரியால் தான் சொன்னாh'; என்று ஒத்துக்கொண்டதன் மூலம் இந்தச் செய்தி கடவுள் சொல்லவில்லை, லூக்கா, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுத்தான் தனது புத்தகங்களை எழுதினார் என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறார்களா இல்லையா? அப்படியானால் லூக்காவால் பலரிடம் கேட்டு எழுதப்பட்ட புத்தகத்தை, கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டு எழுதப்பட்ட வேதமாக எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு, இவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்காக எத்தனை மறுப்புக்கள் கூறினாலும், அந்த மறுப்பே வேறு ஒரு விதத்தில் முரண்பாட்டைக் கொண்டுவரும் என்பது தான் நிதர்சமான உன்மை.

அடுத்து வேறு சிலர் இன்னொரு வாதத்தையும் வைக்கின்றார்கள். அதாவது 'யூதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டும் இருந்தால், தன் மருமகனை தன் மகனாகக் கருதி, தன் வம்ச அட்டவனையில் சேர்த்துக் கொள்வார்கள்' என்கின்றனர். எனவே லூக்கா சொல்லும் 'ஏலி' என்பவர் யோசேப்பின் மாமனார் என்று கூற வருகின்றனர். யோசேப்பின் மாமனார் 'ஏலி' என்பதற்கும், மரியாளுக்கு சகோதரார்களே இல்லை என்பதற்கும் என்ன பைபிள் ஆதாரம்? ஓன்றும் கிடையாது. பவுளும் யோசேப்பும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் என்று இப்பொழுது 2008ல் நான் சொன்னால் அதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ, அதே போல் தான் இந்த கதைக்கும் ஆதாரம் கிடையாது.

அடுத்து, இப்படி வம்சாவலிப் பட்டியல்களை எழுதிவைப்பது யூதர்களுடைய வழக்கம் - அதனால் தான் வம்சாவலிப் பட்டியல்கள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். யூதர்களுடைய பழக்கத்திற்கும் கடவுளின் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? தந்தை இல்லாமல் அதியமான முறையில் பிறந்தவர் இயேசு என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, அப்படிபட்டவருக்கே தந்தை வழி வம்சத்தை யாராவது எழுதிவைப்பார்களா? இப்படி அதிசயமாக பிறந்த இயேசுவுக்கு தந்தைவழி வம்சத்தை சொல்லுவதால் கடவுள் செய்த அதிசயத்தை மறுப்பதாக ஆகாதா? இப்படி எழுதி வைப்பது யூதர்களுடைய பழக்கம் என்பதால் அதே யூதர்கள் இயேசுவையும் மற்ற பரிசுத்தவான்களையும் கொடுமைப்படுத்தியதும், சிலுவையில் அறைந்ததும் சரி என்று சொல்லி விடுவீர்களா? எனவே இது தேவையற்ற வாதம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.


இதன் பாகம் - 2 அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்...
...
.
.
.

Tuesday, April 08, 2008

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.
.
.
.

Thursday, March 27, 2008

ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!

ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை. இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன. ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பௌத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பௌத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும். MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல் இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன. இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர். அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக்கொண்டே பொய்க்கடவுளர்களின் கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா? ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை. இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான 'இன இழிவு இஸ்லாமே நன் மருந்து' ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார். பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான். இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள். எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே! அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே! ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை. அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள்.

அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள். இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது. மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை. அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள். சமீபத்தில் கூட விழுப்புரம் மாவட்டம் எறையூர் கிராமத்தில் உயர் ஜாதிக்கிறிஸ்தவர்களுக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஜாதிப் பிரச்சனையால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மதத்திலிருந்து வேறு மதம் மாற முடிவு செய்துள்ளனர் என்ற செய்திகளை பத்திரிக்கைகளில் நாம் பார்த்து வருகின்றோம். அம்பேத்கார் தழுவிய பௌத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது. அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்? இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை. அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க்கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள். இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர். தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.

அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும். இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல்

என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர். (25:30 அல்குர்ஆன்)

என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை. எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம். மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா? (நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

Wednesday, March 26, 2008

பைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை

மறுப்பும்.. விளக்கமும்... .........................................................- அபு இப்ராஹீம்

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மக்களுக்கு எந்த ஒரு படிப்பினைகளும் இல்லாத - எதற்கும் உதவாத - ஆபாசவர்ணனைகளுடன் கூடிய ஏராளமான ஆபாசக்கதைகள் - நிறைந்து காணப்படுகின்றன என்ற ஆய்வுக்கட்டுரைகளை 'பைபிளில் ஆபாசம்' என்றத் தலைப்பில் நாம் தொடராக கண்டு வருகின்றோம்.

இதற்கு முன் 'கிறிஸ்துவம்' பற்றி நாம் எழுதிய கட்டுரைகளை காண இங்கே சொடுக்கவும்.

கடவுளின் வேதம் என்பது எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறாக - அசிங்கமான கற்பனைக்கதைகள் - ஆபாசம் நிறைந்த கதைகள் - பைபிளில் நிறைந்துக் காணப்படுவதற்கு காரணம், அக்காலத்தில் வாழ்ந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப் போக்கில் - கடவுளுடைய பெயரால் - அவரது தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் - பலரின் பெயரால் இட்டுக்கட்டிய பொய்க்கதைகளை, கடவுளுடைய வேதத்திலேயே உட்சொருகி, அதை சீரழித்ததால் தான் இன்றைய பைபில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கதைகள் கடைசியில் கடவுள் கொள்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்து விட்டது என்பதுதான் அதைவிட வருத்தத்திற்குறிய ஒன்று. அதன் அடிப்படையில் அமைந்த ஒரு கதை - யாருக்கும் - எவருக்கும் - எந்த ஒரு பயனுமற்ற ஒரு கதை - பைபிளில் வருகின்றது. அதை சற்று அலசுவோம்.

இஸ்ரவேலர்களில் ஒருவரான 'யூதா' என்பவரின் சந்ததியினர் மூலமாகத்தான் இயேசு பிறந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்படுகின்றது. அதை மத்தேயு பின்வருமாறு கூறுகின்றார். 'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்' (மத்தேயு 1:3) அதவது 'யூதா' பரேசை தாமாரிடத்திலிருந்து பெற்றானாம். அந்த வம்சத்தில் தான் இயேசு பிறந்தாராம். இந்த தாமார் யூதாவுக்கு யார்? மனைவியா? இல்லை நிச்சயிக்கப்பட்டவாரா? அல்லது யூதா தாமாருக்கு திருமணம் முடிக்கும் அளவுக்கு உறவு முறைக்காரரா? கிடையாது. யூதாவுக்கும் தாமாருக்கும் உள்ள உறவு என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே அந்த ஆபாசக்கதையை விளக்கப்படுகின்றது. அதாவது இந்த கேடுகெட்ட விபச்சார சந்ததி மூலம் தான் இயேசு வந்தார் என்று இயேசுவைக் அசிங்கப்படுத்தக்கூடிய கதையை பாருங்கள்:

'அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான். அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். (ஆதியாகாமம் 38 : 2 - 5)

இது வரை யூதா என்பவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து வரும்கதையைப்பாருங்கள்.

யூதா தன் மூத்த மகனாகிய 'ஏர்' என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதியாகமம் - 38 : 6 - 10)

இங்கே யூதா ஒரு செயலைச் செய்தாக சொல்லப்படுகின்றது. அதாவது தனது மூத்த மகனும் தாமாரின் கனவனுமான ஏர் என்பவன் பொல்லாதவனாக இருந்தானாம். ஆதனால் அவனைக் கடவுள் அழித்துப் போட்டாராம். அந்த 'ஏர்' என்பவனுக்கு மகன் இல்லாததால் அவனது மனைவியை தனது இரண்டாவது மகனை திருமணம் செய்து அவளை வைத்து ஒரு பிள்ளைப்பெறு என்று சொன்னதாகவும், அவனும் அவளோடு உடலுறவு கொண்டுவிட்டு, இவனது 'விந்து' அவளுள்ளே சென்றுவிடாமல் வெளியே எடுத்து விட்டு - அதை 'வேஸ்ட் பண்னிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவன் செய்தது கடவுளுக்கு பொல்லாப்பாய் இருந்ததாம். இந்தக் கதையால் - இந்த விளக்கத்தால் - இந்தச் சமுதாயத்திற்கு என்னப் பயன்? அடுத்து வரும் கதையைப் பாருங்கள் :

'அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான். அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்' (ஆதியாகமம் - 38 : 11)

இப்படி வாக்கு கொடுத்த யூதா அடுத்து செய்த காரியம் என்ன?

'அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள்ளூ அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்ள. அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான். அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன். இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள். அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது. அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான். அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது. (ஆதியாகமம் 38 : 12-30)

இப்படி போகின்றது ஒரு குடும்பத்தின் விபச்சாரக்கதை. நாம் என்ன கேட்கின்றோம் என்றால் இந்தக் கதையால் இந்த சமுதாயத்திற்கு - இந்த மக்களுக்கு என்னப் பயன்? இதனால் இந்த சமுதாயத்திற்கு கடவுள் சொல்ல வரும் உபதேசம் என்ன? 'தாமார்' போல் தன் மாமனார் என்று தெரிந்தும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா? அல்லது யூதாபோல் விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லவருகின்றாரா? ஓரு குடும்பத்திற்குள் நடந்த இந்த அசிங்கமான கதையால் - மாமனாரும் மருமகளும் செய்த கல்ல உறவை சொல்லுவதன் மூலம் - மைத்துனனும் மைத்துனியும் செய்த உடலுறவை சொல்லுவதன் மூலம் - இந்த மக்களுக்கு என்ன பயன்? ஒன்றும் கிடையாது. ஒரே ஒரு உன்மையைத் தவிர. அதாவது, இந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம் போன போக்கில் கடவுளுடைய வேதங்களை சிதைத்ததோடு, வரலாறு என்றப் பெயரில் - வரலாற்றைப் புறட்டி - அவதூறான - ஆபாசமான கதைகளை எழுதிவைத்து கடவுளின் வேதத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டார்கள் என்பது மட்டும் தான்.

இந்த ஆபாசக் கதையை வேண்டும் என்றே மறுப்பதற்காகவும் - தாங்களிடம் இருக்கும் பைபிளை கடவுளின் வேதம் என்று நம்பிவிட்டோம் என்பதற்காகவும் - எதையாவது எழுதி இந்தக் கதையை நியாயப்படுத்த முனைகின்ற முயற்சியில் - முஸ்லீம் பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக அவதூறுபரப்பிக்கொண்டிருக்கும் சில கிறிஸ்தவ முகமூடிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சொல்வது பச்சைப் பொய் என்றாலும், அதைச் பொருந்தச் சொல்லியாவது தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திபடுத்தியிருக்கலாம். அவ்வாறல்லாமல் சம்பந்தமில்லாத காலத்துடன் அதைப் பொருத்தி நியாப்படுத்த முயல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
.

லேவிரட் திருமண முறையும் - யுதா, தாமார் ஆபாசக் கதையும் :

இந்தக் கதையை சில முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கூறக்கூடிய காரணம் ' லேவிரேட் திருமணம் - Levirate Marriage' என்ற முறையாம். அப்படி என்றால் என்ன? அதையும் அவர்களே விளக்குகின்றனர் :

// ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும்//

இதற்கு என்ன பைபிள் ஆதாரம் என்றால் மோசேக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின் படி இது நடந்தது என்று ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். பார்க்க உபாகமம் 25 : 5-10. அதாவது இந்த யூதா தாமார் வாழ்வில் நடந்த ஆபாசக் கதைக்கு இந்த வசனத்தில் வரும் சட்டம் தான் காரணமாம். அதையும் அந்த முகமூடிகளே விளக்குகின்றனர் :

//இந்த 'லேவிரேட் திருமணம்' முறைதான் இந்த தாமார் வாழ்விலும் நிகழ்ந்தது //

எப்படிப்பட்ட பச்சைப்பொய்யை இட்டுக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! இப்படி பொய்யை இட்டுக்கட்டி சமாளிப்பதென்பது இவர்கள் இரத்தத்தில் ஊரிய ஒன்று.

இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்காக எந்தக்காலத்திலேயோ நடந்த சம்பவத்தை எந்தக் காலத்திலேயோ கொடுக்கப்பட்ட சட்டத்துடன் முடிச்சு போடுகின்றனர் என்று பார்த்தீர்களா?

பைபிளின்படி மோசேக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த 'லேவிரேட் திருமணம்' என்ற முறையை மோசேப் பிறப்பதற்கும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த யூதா தாமாரின் இந்த ஆபாசக்கதையுடன் எப்படி ஒத்துப்போகும்? ஒரு பொய்யைச் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? பைபிளின்படி மோசே பிறந்ததோ கி.மு. 1576. யூதாவின் காலமோ கிட்டத்தட்ட கி.மு 1810 ஆக இருக்கலாம் (அல்லது ஒரு சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கலாம்) எப்படியாயினும் மோசே பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவுக்கு அவருக்கு பின் வாழ்ந்த மோசேயின் சட்டம் எப்படிப் பொருந்தும்? இந்த வாதம் இவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? இந்த அசிங்கமான - யூதா தாமரின் இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், லேவிரட் திருமணமுறைப்படி ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லாத நிலையில் அவளது கணவன் இறந்துவிட்டால் அவளின் கணவனின் கூடப்பிறந்தவர்கள் அவளோடு உடலுறவுக்கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்று தனது அண்ணணுக்கு சந்ததியை உருவாக்கலாமாம். அப்படித்தான் அந்த முகமூடி விளக்கமளித்துள்ளார்.

//ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும். //

இந்த சட்டத்தின் படி பார்த்தால் தாமாருடன் யூதாவின் மகனான 'ஓனான்' செய்த செலைத்தான் நியாயப்படுத்தலாம். யூதா தனது மருமகள் (தனது மகனின் மனைவி) தாமாருடன் செய்த இந்த விபச்சாரம் எப்படி இந்த சட்டத்துடன் பொருந்திப் போகும்? யூதா இந்தப் தாமாருக்கு மாமனாரே யொழிய மைத்துனன் அல்லவே? எப்படி இந்தக்கதைக்கு இந்த சட்டம் ஒத்துப் போகும் என்று வாதிட முன்வந்தீர்கள்?

அடுத்து இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்த கதைக்கு இந்த சட்டம் ஒத்துப்போகாது. அதாவது மோசேக்கு கொடுத்த இந்த 'லேவிரட் திருமணம்' என்ற சட்டத்தின்படித்தான் இந்த செயல் நடந்தது என்றால், அதே மோசேக்கு திருமணமானவளுடன் விபச்சாரம் செய்தால் மரணத்தண்டனை விதிக்க வேண்டும் - ஊர் மக்கள் முன் கல்லால் அடித்து கொள்ளப்படி வேண்டும் என்பது சட்டம் :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10 மற்றும் உபாகமம் 22:21-24)

எந்த மோசேயின் சட்டத்தின் படி இந்த தாமாரின் சம்பவத்தை நியாயப்படுத்துகின்றீர்களோ அதே மோசேயின் சட்டத்தின் படி யூதாவும் - தாமாரும் செய்த விபச்சாரத்தினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு - கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே? ஆனால் அப்படி செய்யப்படவில்லை. காரணம் யூதா வாழ்ந்த காலம் வேறு மோசே வாழ்ந்த காலம் வேறு. யூதாவுக்கு மோசேயின் சட்டப்படி 'லேவிரட் திருமணமுறை' ஒத்துப்போகும் என்றால் விபச்சாரத்திற்கான மரணத்தண்டனையும் ஒத்துப்போகும். எனவே இந்த ஆபாசக் கதைக்கு எத்தனைக் காரணங்களைக் கூறு நியப்படுத்த முயன்றாலும் அது தவறே. இந்த ஆபாசமான கதையால் பைபிளுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கே கேவலம்தான். காரணம் கேடுகெட்ட இந்த விபச்சாரத்தில் பிறந்த சந்ததி மூலம் தான் அவர் இயேசு வந்தாராம்.

லேவிரட் திருமண முறை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாதா?

இது ஒருபுறம் இருக்க இதில் இன்னொரு வேடிக்கையும் அடங்கியிருக்கின்றது.

அதாவது யாருக்கு - எந்தக் காலத்தவருக்கு - இந்த லேவிரட் திருமணமுறை பொருந்தாதோ அவருக்கு அதைப் பொருத்தி நியாயப்படுத்தியவர்கள், யாருக்கு இந்த முறைப் பொருந்துமோ அதை மறுத்து எழுதியிருக்கும் வேடிக்கையைப் பாருங்கள்.

மோசேவின் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த லேவிரட் திருமண முறை, மோசேவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவிற்கு பொருந்தாது என்று பார்த்தோம். ஆனால் அந்த இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? என்றால் கூடாது என்கிறார் அந்த கிறிஸ்தவ முகமூடி :

//பழைய ஏற்பாட்டுக்காலத்தில், இப்படி தன் சகோதரரின் குடும்பத்தை நிலைநாட்டாதவனுக்கு சமுதாயத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மனிதர்களாகிய எபிரேயர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. இப்போது இதை யாரும் (கிறிஸ்தவர்கள்) பின்பற்றுவதில்லை, பின்பற்றவேண்டிய அவசியமில்லை //

இப்படி பச்சைப் பொய்யை இவர் சொல்கின்றார். காரணம் இந்த சட்டம் இந்தக்காலத்தில் இவர்களால் பின்பற்றுவது கிடையாது என்பதால் இதைச் சொல்கின்றார். அதுமட்டுமல்ல, இந்தச் சட்டத்தை இப்பொழுதும் பின்பற்றலாம் என்று இவர் சொன்னால் இன்னும் ஏராளமான குழப்பங்கள் வரும் என்பதால் இப்படி ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கின்றார். இது போன்ற சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றத் தேவையில்லை என்று இவர் சொல்வதற்கு என்ன பைபிள் ஆதாரம்? இயேசு நாதர் இதைத் தடை செய்தாரா? கிடையாது. மாறாக (பைபிளின் படி) இந்தச் சட்டத்தை இயேசு நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் அவர் கருத்து. அதை அவரும் பின்பற்றுவாராம்.

இந்தச் சட்டத்தை பற்றி இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது :

'உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்னையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள். மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்' (மத்தேயு 22: 23-30)

அதாவது இந்தச் லேவிரட் திருமணச் சட்டத்தை பற்றி கேட்டவர்களிடம், இயேசு அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பதில் அளிக்கின்றார். இந்தச்சட்டத்தை அவர் தடை செய்திருந்தால் அங்கேயே இது இனி வரும் காலத்திற்கு பொருந்தாது என்றிருக்கலாம். அது மட்டுமல்ல இது போண்ற சட்டங்களை நான் அழிக்க வரவில்லை என்றும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றவே வந்துள்ளேன் என்றும் சாட்சியம் அளிக்கின்றார்.

'நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்' (மத்தேயு 5:17)

அதாவது முந்தைய சட்டங்களை இயேசு அழிக்க வரவில்லையாம். தொடர்ந்து நிறைவேற்றத்தான் வந்தாராம். எனவே இந்த லேவிரட் திருமணமுறை இயேசுவின் மேற்குறிப்பிட்ட கருத்தின்படி இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக இருந்தால் - இயேசுவின் கூற்றின் படி இந்த சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும். அதுதான் உன்மை. நீங்கள் வேண்டுமானால் இது தற்போது சட்டமில்லை என்று சொல்லி இயேசுவின் கூற்றை நிராகரிக்கலாம். அது உங்கள் கூற்று தானே யொழிய பைபிளின் கூற்று அல்ல. பைபிளின் படி - இயேசுவின் கூற்றின் படி - இயேசு அந்த சட்டத்தை நியாயப்படுத்தியதன் படி - இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். இந்தச் சட்டம் இன்றைக்கு பொருந்தாது என்பதற்கு பைபிளில் ஆதாரம் கிடையாது. நீங்கள் சொல்வது போல் யூதா தாமாருக்குத் தான் இந்த சட்டம் பொருந்தாது. அதுதான் உன்மை. (பைளின் படி பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரை விரைவில் எமது தளத்தில் இன்ஷா அல்லாஹ்)

அடுத்து இந்த சம்பவத்துடன் - திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்ட யூதா தாமாரின் ஆபாசக் கதையை நியாயப்படுத்த முயலும் சில கயவர்கள் பெருமானார் (ஸல்) ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் கொச்சைப் படுத்தி எழுதியிருந்தனர். அவர்களின் அந்த அவதூறுக்கு எமது தளத்தில் மற்றொரு பதிப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யூதாவும் தாமாரும் தவறான வழியில் - நியாயத்திற்கு புறம்பாக - செய்த விபச்சாரத்தை நியாயம் கற்பிக்க முயன்ற இந்த கயவர்கூட்டம், முறையாக - நியாயமான காரணங்களுடன் - நடந்த பெருமானாரின் திருமணத்தை கொச்சைப்படுத்த நினைக்கின்றார்கள் என்றால் அவர்களின் எண்ணத்தை புரிந்துக்கொண்டீர்களா? அவர்களைப் பொருத்தவரை பைபிளில் சொல்லப்பட்ட - முறையற்ற - தகாத உறவுக்கதைகளை செயல்வடிவில் காட்டி வரும் மேலை நாட்டினரின் கேடுகெட்ட கலாச்சாரத்தை, இந்த தமிழ் மக்களிடம் திணிப்பதற்கான முயற்சிதான் இது. அதற்காகத்தான் நியாயமான காரணத்துடன் நடந்த பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணத்தை கொச்சைப்படுத்திவிட்டு - முறையற்று - கேவலமாக நடந்த விபச்சார கதையை நியாயப்படுத்த நினைத்தது. காரணம் அவர்களின் அந்த அசிங்கமான கலாச்சாரத்தை இங்கே இறக்குமதி செய்வதற்கு ஒரே தடை இஸ்லாம் மட்டும் தான். அதனால் தான் இஸ்லாத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.

'கண்ட கண்ட அசிங்கமான கதைகளை எல்லாம் கடவுள் சொல்லியிருப்பார்' என்று ஒருவன் நம்பினானேயானால் இது போன்ற தவறான முடிவுக்குத் தான் வருவார்கள் என்பது தான் நிதர்சனமான உன்மை. அது தான் இவர்களது வாழ்விலும் நடைபெருகின்றது. இறைவனே நன்கறிந்தவன்.

.
.
.
.
.

Sunday, March 23, 2008

பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..

அவதூறுகளும்... விளக்கங்களும்...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.
.
இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது குறித்து முழுவிபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
.
'உக்காழ்' எனும் அரேபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஜைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா(ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இந்த சிறுவரை அடிமையாகவே வைத்துக்கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
.
அதன் பின்னர் அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில், தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த 'ஹாரிஸா'வும் அவரது சகோதரர் 'கஃபு' என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களுடன் வருவதற்கு 'ஜைத்' ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச்செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது' என்று கூறிவிட்டனர்.
.
இதன் பிறகு ஜைது (ரலி) அவர்களிடம், வந்தவர்கள் பேசிப்பார்த்தனர். 'முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது' என்று ஜைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் 'ஜைத் இனிமேல் என் மகனாவார். அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஜைதுக்கும் உறவை புரிந்துக்கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சொன்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்வில்லை (ஆதாரம் : அல் இஸாபா)
.
அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட பின் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை 'ஜைது இப்னு முஹம்மது' (முஹம்மதுவின் மகன் ஜைத்) என்றே ஜைத் குறிப்பிடப்பட்டார்.
.
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்' (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை 'முஹம்மதின் மகன் 'ஜைத்' என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
.
சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்து இருந்தார்கள் என்பதை தெளிவு படுத்தவே இந்த விபரங்கள்.
.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உமைமா' என்பாரின் மகள் 'ஜைனப்' அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
.
ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
.
'அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் - எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் 'உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)
.
ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தலாக் கூற வேண்டாம்!' என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
.
இதே வசனத்தின் இறுதியில் 'அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
.
ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் 'தலாக் கூற வேண்டாம்' என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் 'அவர் தலாக் கூற வேண்டும்' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.
.
ஜைது (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஜைனப் (ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
.
அது வருமாறு :
ஜைத் (ரலி) அவர்களும், ஜைனப் (ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்ற விபரம் கிடைக்கிறது. (பார்க்க இப்னு கஸீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபைத் திருமனம் செய்த போது ஜைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க : அல் இஸாபா) ஜைனப் (ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஜைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஜைதுடன் திருமனம் நடந்த போது ஜைனபின் வயது 34 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் ஜைது தலாக் கூறியவுடம் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
.
ஜைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்கு சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஜைதை மணப்பதற்கு முன் அவர்களுக்கு வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமிலருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஜைதைத் திருமணம் செய்யும் போது ஜைனப்பின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 என்பது அதைவிடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஜைனப் (ரலி) அவர்கள் சிறு வயது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஜைனப் (ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபிகள் நாயம் அவர்கள் ஜைனபுடைய 35 வயதில் அவரை திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வயது 56.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 37வது வயதில் (56 வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஜைனப் (ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும் அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக்கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஜைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.
.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போது அந்த கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஜைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபிகள் நாயகம் அவாகள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால், அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியா விட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
.
இந்தச் செய்தியை ஜைத் அவர்களும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஆலோசனைக் கேட்கிறார்கள். அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில், எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்த கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. 'உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்!' மனிதர்களுக்கு அஞ்சினீர்!' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டும்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உன்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.
.
கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதை தீர்மானிப்பதைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது வென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.
.
ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)
.
இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட, தான் காரணமாகிவிட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இது தான் உன்மையில் நடத்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.
.
'உன் மனைவியைத் தலாக் கூறாது தடுத்து கொள்! ஏன்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் ஆஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன். (அல் குர்ஆன் 33:37)
.
ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதை கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்த துணிவதில்லை. அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.
.
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப்படக்கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச செய்திளை முற்றாக நிராகரித்து விடுகின்றது.
.
இனி விஷயத்துக்கு வருவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸஜனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதன் காரணத்தையும் அவனே கூறுகின்றான்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.
.
வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.
.
இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.
.
போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையில் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்க்தெறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஜைது'டைய மனைவியை 'ஜைது' விவாகரத்து செய்தபின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்கும் முன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்படவேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.
.
முதல் காரணம் :
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையானவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்கு தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும் எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக்கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக்கூடியதாகும்)
இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை - இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.
.
இரண்டாவது காரணம் :
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்துவிட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? ஏன்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடமே மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.
.
மூன்றாவது காரணம்:
எவ்வளவு தான் பாசத்தை பொழிந்த ஒருவனை 'தத்து' எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடிhயது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?
வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாக போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன், அவர் சீக்கிரமாக சாகமாட்டாரோ? என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாகமாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூக்கு அனுப்பவும் தயங்கமாட்டான். இரத்த சம்மந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமான நேசம் இல்லாததாலும். சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்க்கைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடம் எதிர்ப்பார்க்க முடியும்.
.
நான்காவது காரணம்:
ஒருவனுக்கு அண்ணன, தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும், அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கொல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்துவிட்டதே என்று எண்ணமாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் 'மகன்' என்ற உறவு மற்ற உறவுகளைவிட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்பந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?
.
ஐந்தாவது காரணம்:
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்பொழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகை;கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்து கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகிவிடுகின்றது. ஒரு போலித் தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.
.
ஆறாவது காரணம் :
தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை, என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை 'இப்ராஹீமுக்குப் பிறந்தவன்' என்று செல்லிப் பாருங்கள்! அதன் பின் அவனது எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவதுதான் மனிதனின் இயல்பு.
எவனோ ஒருவனைத் தந்தை என்று – அதுவும் உண்மையான தந்தை போன்று - கருதுவதைவிட மானங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.
.
இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித் தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லி காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.
.
'ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்' (அல்குர்ஆன் 33:37)
.
'எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் உண்டாக்க வில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப்புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகின்றான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்' (அல்குர்ஆன் 33:4)
.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளை யென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் (அல்குர்ஆன் 33:5)
.
உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 58:2)
.
உங்களுக்கு பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது (அல்குர்ஆன் 4:23)
.
இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப்பை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
.
இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும் சிலருக்கு இன்னமும் இருக்கலாம். அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால் அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே! என்பதே அந்தச் சந்தேகம்.
.
மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோண்றினாலும் சிந்திக்கும் போதே இது தவறு என்பது தெளிவாகும்.
.
திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை.
.
காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.
.
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாக சொல்கிறான்.
.
'இறைத்தூதர்கள் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது (அல் குர்ஆன் 33:39)
.
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
.
இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த திருமணத்திற்கு சிலர் சொல்வது போல் அவற்றிற்கு காமவெறி காரணம் அல்லவென்பதை அறிவுடையோர் விளங்களாம். இறைவனே நன்கறிந்தவன்.
.
(நபிகள் நாயகம் - பல திருமணங்கள் செய்தது ஏன்? - என்றப் புத்தகத்திலிருந்து...)
.

.

.

Friday, March 21, 2008

கவிதைகள்

இரண்டாம் கற்காலம் !

இரண்டாம் கற்காலம் !
...................................................-- ஆரூர் புதியவன்

கல்லும், உளியும்
கலந்த பொழுது
கர்ப்பமான கல்
சிற்பமானது

மலையை செதுக்கத் தெரிந்த
மனிதன் தன்
மனத்தை செதுக்கத்தான்
மறந்தே போனான்

கல்லுக்குத்தான்
எத்தனை பரிணாமங்கள்
கல் கடவுளாக்கப்பட்டது
பகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...
காலம் புரண்டது...
கடவுளை கல்லால் அடித்தவர்களும்
கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.

கடவுள் பக்திக்கு மட்டுமின்றி
கலவரத்திற்கும்...
கல்லே மூலமாய்...

மனிதனுக்கு
கல்லையும் கடவுளாய்ப்
பார்க்க முடிந்தது ...
மற்றவனைத்தான்
தன்போல் பாவிக்க முடியவில்லை.

உடைப்பட்ட சிலைகளுக்காய்
உருள்கின்றன தலைகள்...

ஒரு தலைவர் ஆற்றிய
சேவைகளை விட
அவருக்கு வைக்கப்படும்
சிலைகளே ...
அவர் தகுதி உரைக்கிறது...

ஒன்று மட்டும் உண்மை
மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது.

நகரவீதிகள் தோறும்
நகரா சிலைகள்
ஓ ... இது இரண்டாம் கற்காலம் !

இங்கே
அடிமைத்தளை நீக்க
யுத்தம் செய்பவர்களை விட
தலைவர் சிலை வைக்க
ரத்தம் சிந்துவோர் அதிகம்

சட்ட சபைகள்
நலத்திட்டங்களை விட
சிலைத்திட்டங்களே
அதிகம் அறிவிக்கின்றன

இருபத்தோராம் நூற்றாண்டின்
இனிய தமிழா ...
கணிப்பொறி யுகத்தில்
உலகம்...
நீ இன்னும்
கற்காலத்தை
கடக்காமலா?

ஒவ்வொரு சிலையும்
மலையின் தவணைமுறை சமாதி
என்பதை மறவாதே !

சிலைகளை மற
மனிதனை நினை
ஜாதிகளும், சிலைகளும்
அறிவுக்கு அமைக்கப்பட்ட
வேகத்தடைகள்
நாம் விரைந்து முன்னேற
இரண்டையும் தகர்ப்போம்...!
.
.