அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, December 20, 2012

அநாகரிகம்....! தினமணி தலையங்கம் - 20-12-2012

புதுதில்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் கொடுமை குற்றங்களுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் தேவை என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நகரங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வல்லுறவுக்கு இலக்காகிறார் என்று தில்லியின் ஒரு பத்திரிகை புள்ளிவிவரம் தருகிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்.

இதே தில்லி நகரில், ஒரு ஜெர்மனிப் பெண் கடந்த மாதம் 4 பேரால் வல்லுறவுக்கு இலக்கானார். ஆனால், அது பெரிதாகப் பேசப்படவே இல்லை. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஒரு மாணவி தன் தந்தையாலும் சகோதரராலும் தன் வீட்டுக்குள்ளேயே தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்கூட கடந்த வாரம் செய்தியாக வந்தது. இதுவும் மறுநாளே மறக்கப்பட்டது.

ஆனால், தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.

துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?.

காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் 'அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.

ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.

உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

'எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். 'நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

'புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?

'முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான்! கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்!' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.

சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நன்றி: தினமணி - 20-12-2012

**************

இறைவன் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

"இன்னும் இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் இறைவனின் பக்கம் திரும்புங்கள்.  அல்குர்ஆன் -  24 : 31.

Monday, December 17, 2012

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5 படிக்க இங்கே அழுத்தவும்
 முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6 படிக்க இங்கே அழுத்தவும் 


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
   புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
   
   புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்   


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7

முரண்பாடு : 29

தாவீது சீரியரில் எத்தனைப்பேரைக் கொன்று போட்டான்?

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். – 1 நாளாகமம் 19:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 7000 இரதங்களின் மனுஷரையும் 40000 காலாட்களையும் கொன்று போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத் தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்
- 2 சாமுவேல் 10:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 700 இரதவீரரையும் 40000 குதிரைவீரரையும் கொண்றதாகவும் கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? தாவீது கொன்று போட்டது 700 இரதவீரர்களையா அல்லது 7000 இரதவீரர்களையா? 40000 குதிரை வீரரையா அல்லது 40000 காலாட்களையா? பைபிள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட முரண்வருமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


முரண்பாடு : 30

பாஷா அரசாண்டது எத்தனை வருடங்கள்?

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, - 1 இராஜாக்கள் 15:33

பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். – 1 இராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய 3ம் வருடத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலருக்கு ராஜாவானதாகவும் 24 ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் மேலே உள்ள 15:33ம் வசனம் குறிப்பிடுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்த உடன் அவன் மகன் ராஜாவானதாக 16:6ம் வசனம் குறிப்பிடுகின்றது.

யூதாவுக்கு ஆசா ராஜாவான 3ம் வருடம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சிசெய்து மரணித்திருக்கின்றான். அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கின்றான். இதை கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் படியுங்கள்.

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலன் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். – 2 நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27 ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட 36ம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவனும் உயிர்ததெழுந்தான் என்று கிறிஸ்தவ உலகம் சொல்லப்போகின்றதா?

முரண்பாடு : 31

மலடி பிள்ளை பெற்றாளா?

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தான் மரணமடையும் நாள் வரை பிள்iயே பெறாமல் மரணித்ததாக பைபிளின் 2 சாமுவேல் கூறுகின்றது:

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. – 2 சாமுவேல் 6:23

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக சவுலின் குமாரத்திக்கு அவள் மரணமடையும் நாள் வரை பிள்ளையே இல்லாமல் மரணித்தாள் என்று கூறப்பட்டிருக்க இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு 5 குமாரர்கள் இருந்ததாக பைபிளின் 2 சாமுவேல் 21:8 கூறுகின்றது:

...சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து, - 2 சாமுவேல் 21:8

சவுலின் குமாரத்திக்கு பிள்ளைகள் இருந்ததா? அல்லது பிள்ளையே இல்லாமல் மரணித்தாளா?
முரண்பாடுகள் தொடரும்...இறைவன் நாடினால்

Wednesday, December 12, 2012

ஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா? 50000 ஆண்டுகளுக்கு சமமா?

 திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 3
- எம்.எம். அக்பர்

இறைவனிடம் ஒரு நாளின் அளவு பூமியிலே 1000 ஆண்டுகளுக்கு சமம் என்று குர்ஆனில் 22:47, 32:5 என்ற வசனங்கள் கூறியிருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று 70:4 வசனம் கூறுகிறது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

முரண்பாடுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆய்வோம்.

(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.  – அல்குர்ஆன் 22:47.   

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். – அல்குர்ஆன் - 32:5

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். - அல்குர்ஆன் 70:4

இம்மூன்று வசனங்களில் 'நாள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது, 'யவ்ம்' என்னும் அரபிப்பதமேயாகும். சாதாரணமாக இருபத்தி நான்கு மணிநேரமுள்ள ஒரு நாளையே அரபியில் 'யவ்ம்' என்று கூறுவர். இன்னும் 'யவ்ம்' என்னும் பதத்திற்கு 'கால அளவு', 'காலகட்டம்' என்னும் பொருளும் கொள்வதுண்டு. குர்ஆனில், இத்தகைய பொருளில் 'யவ்ம்' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதுண்டு.

'ஸலாமுடன் - சாந்தியுடன் இ(ச்சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள். இது தான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்' (என்று கூறப்படும்) (அல்குர்ஆன – 50:34) நித்தியமாக தங்கியிருக்கும் நாள் என்றால் சூரியன் உதித்து அஸ்தமிக்கும் இடையிலான கால அளவு இல்லையல்லவா? ஏனென்றால் இது எல்லைக்குள்ளான கால அளவு ஆகும். எந்நிலையிலும்  முடிவுறாத நித்தியமான அழிவில்லாத மறுமையினையே இங்கே (50:34) 'நாள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதன் உபயோகத்திலிருந்து விளங்குகிறது.

கியாம நாளில் நிகழும் காரியங்களைக் குறித்தும் கூறும் போதும் குர்ஆன் 'நாள்' (யவ்ம்) என்னும் பதத்தையே உபயோகப்படுத்தியுள்ளது.

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.  - அல்குர்ஆன் - 101:4-5

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள். - அல்குர்ஆன் - 14:48

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். - அல்குர்ஆன் - 99:6   

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். - அல்குர்ஆன் - 89:25   


அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். - அல்குர்ஆன் - 88:2-3   

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். - அல்குர்ஆன் - 86:9   

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். - அல்குர்ஆன் - 83:6   

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. - அல்குர்ஆன் - 82:19   

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;, தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். - அல்குர்ஆன் - 80:34-37   

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். - அல்குர்ஆன் - 79:35

'பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;' - அல்குர்ஆன் - 79:6

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். - அல்குர்ஆன் - 78:38   

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். - அல்குர்ஆன் - 78:40   

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. - அல்குர்ஆன் - 78:39   

மேற்காணும் இவ்வசனங்களில் உள்ள ஒவ்வொரு சம்பவங்களுடனுமுள்ள 'நாள்' என்பது அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவே என்பது தெளிவாக விளங்கும். ஓவ்வொரு சம்பவங்களின் அடிப்படையில் கால அளவும் மாறுபாடாக இருக்கும். மனிதர்கள் தம் கர்மங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாள், மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் போலாகும் நாள் போல இருப்பதில்லை.  ஓவ்வொரு நாளின் கால அளவும் வேறுபட்டிருக்கும். அவைகளின் அளவு குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களாகிய நாம் அதைக் குறித்து அறிய நம்முடைய கையில் எந்த வழியும் இல்லை.

கியாமநாளுடன் தொடர்புடைய இரு சம்பவங்களின் கால அளவை மட்டுமே குர்ஆன் மூலமாக அல்லாஹ் அறிவித்துத் தருகிறான். காரியங்கள் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் ஒரு நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்று 32:5ம் வசனம் மூலமாக அறிவிக்கின்றான். மலக்குகளும் ஆன்மாக்களும் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள 5000 ஆண்டுகளுக்குச் சமம் என்று 70:4ம் வசனம் மூலமாக அறிவிக்கிறான்.

இரண்டு வசனங்களிலும் விவரிக்கப்பட்டது கியாம நாளின் போதான இருவேறு சம்பவங்கள் ஆகும். இந்த இரு வேறு சம்பவங்களும் நடைபெற எடுத்துக்கொள்ளும் கால அளவும் வேறு வேறாகும் என்பதை இக்குர்ஆன் வசனங்கள் மூலமாகவே விளங்க முடிகிறது. மற்றபடி இவ்விரண்டுக்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. இரண்டும் இரு சம்பவங்கள். இரு வேறு சம்பவங்களும் எடுத்துக்கொள்ளும் கால அளவும் இரு வேறு கால அளவாகும் என்றிருக்க இவை எப்படி முரண்பாடாகும்?

அது போல், திருக்குர்ஆனின் 22:47ம் வசனத்தில் '(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்' என்று இறைவன் கூறுகின்றான்.   நிராகரிப்போருக்கு தண்டனை உண்டு என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த போது அதை பரிகாசம் செய்து, நாங்கள் நிராகரித்து ஆண்டுகள் பல ஆகியும் தன்டனை வந்து சேராது ஏனோ? என்னும் கேள்விக்கு இறைவனில் பதிலாகும் இந்த வசனம். இறைவனின் தண்டனை சில காலத்திலேயே வந்தடைய வேண்டும் என்றில்லை. வரலாற்றில் இறைவனின் தண்டனை இறங்குவது மனிதர்களின் கணக்கை அனுசரித்தோ அவன் இஷ்டத்தை அனுசரித்தோ அல்ல. (மாறாக அது) அல்லாஹ்வின் தீர்மானப்படியாகும். அவன் இஷ்டப்படியாகும் என்பதையே இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது. அல்லாஹ்வின் கணக்குப்படி ஒரு நாள் என்பது மனிதர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம். ஆதலால் தண்டனையிறங்கவில்லையே என்று பரிகாசம் செய்யவேண்டாம் என்று இவ்வசனம் தெளிவாக்குகிறது. மனித வரலாற்றில் தெய்வீக தலையீடுகளை மனித கணக்குப்படி கணிப்பது கூடாது என்பதே இவ்வசனத்தின் பாடம். இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்ற இரு வசனங்களோடு தொடர்பு இல்லாதது ஆகும். மூன்று வசனங்களும் கூறுவது மூன்று விதமான விஷயங்களாகும். அவைகளின் சம்பவங்களும் வேறுபாடாகும். அதனால் அவைகளுக்கு இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.

தொடரும் ... இன்ஷா அல்லாஹ்...

Friday, December 07, 2012

பைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி?

பைபிளின் அறிவற்ற கூற்றுக்கள்

 
கிறிஸ்தவர்கள் வேதமாக நம்பக்கூடிய பைபிளின் பழைய ஏற்பாடு ஆதியாகமம் 9:11-16ம் வசனங்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
11.இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை பைபிள் குறிப்பிடுகிறது. இதில் 11 வது வசனத்தில் "இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும் உடன்படிக்கை எற்படுத்துகிறேன்" என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் இன்றளவும் சுனாமி, பெருவெள்ளம் போன்ற ஜலப்பிரளயங்கள் வந்து மாமிசமான விலங்குகளை சங்கரிக்கின்றன. கர்த்தர் சொன்னதை மறந்துவிட்டாரோ ? ஆனால் நாம் அந்த விஷயத்தை இங்கே முக்கியமாக கூறவில்லை.


12 , 13 ஆகிய வசனங்களில் தேவன் எதற்காக வானவில்லை உண்டாக்கினார் என்ற ஒரு மாபெரும் அறிவியல் தத்துவத்தை பைபிள் சொல்கிறது. வானவில்லை நான் எதற்கு வைத்தேன் தெரியுமா ? இனி உங்களை ஜலப்பிரளயத்தில் கொல்ல மாட்டேன் என்று நான் உங்களிடம் உடன்படிக்கை செய்துள்ளேனே ? அதற்கு அடையாளமாக வானவில் இருக்கும். இந்த உடன்படிக்கை எனக்கு மறந்து போக கூடாதுன்னு இந்த வானவில்லை வைத்து நான் நினைவு கூர்ந்து கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்.வானவில்லை வைத்துதான் கர்த்தர் நினைவு கூற வேண்டுமா ? கர்த்தருக்கு நினைவாற்றல் அவ்வளவு மந்தமா ? வானவில் இல்லை என்றால் கர்த்தர் ஜலப்பிரளயத்தை மறந்து விடுவாரா? என்பன போன்ற கேள்விகளை கூட ஒதுக்கி வைத்து விடலாம்.இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலபிரளயதிர்க்கு பின்புதான் வானவில்லை கர்த்தர் வானத்தில் வைத்தாராம் !!!!வானவில் எதனால் உண்டாகிறது ? "Principle Of Dispersion Of Light " என்று பள்ளிகளில் நாம் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புக்களில் படித்திருப்போம். அந்த அளவிற்கு கூட கர்த்தரின் அறிவு வளரவில்லை என்பதற்கு [ஆதியாகமம் 9 :13] சாட்சி.

இந்த  "Principle Of Dispersion Of Light " என்றால் என்ன ? http://en.wikipedia.org/wiki/Dispersion_(optics) . வெள்ளை ஒளி ஒரு முப்பட்டகம் (Prism ) வழியாகவோ  அல்லது ஒரு அலைவளைவுக் கீற்றணி (Differential Grating) வழியாகவோ சென்றால் தன்னுள் ஐக்கியமாகி இருக்கும் பல நிறங்களாக (அலைநீளங்களாக Wavelenghths)  பிரியும். வானவில் எதனால் வானத்தில் உண்டாகிறது என்றால் மழை துளிகளோ, அல்லது மிக சிறிய பனி துளிகளோ பூமியில் விழும் போது சூரியனின் வெள்ளை ஒளி அதில் படும். அப்போது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு முப்பட்டகம் போல் செயல்படும். எல்லா முப்பட்டகங்களிலும் உள்ளுக்குள் ஏற்படுகின்ற Refraction - Reflection -Refraction இந்த நீர்துளிகளிலும் ஏற்படும். அதனால் பல அலைநீலங்களாக வெள்ளை ஒளி பிரிந்து வானவில்லாக நமக்கு காட்சியளிக்கும். வானவில்லின் உள்ளுள்ள பகுதியில் Scattering Of Light (ஒளி சிதைவு) அதிக அளவில் இருக்கும்.

இது நோவாவின் காலத்தில்தான் முதன்முதலில் நடந்ததா ? நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது. அப்போவெல்லாம் வெள்ளை ஒளி பிரியவில்லையா ? அப்படி பிரியவில்லை என்றால் நோவாவின் காலத்தில் கடல் ஊதா நிறத்தில் இருந்திருக்காது,  வானம் ஊதா நிறத்தில் நோவாவிற்கு தெரிந்திருக்காது, இலைகள் பச்சை நிறத்தில் தெரிந்திருக்காது, நோவாவும் மனிதன் இருக்கும் நிறத்தில் இருந்திருக்க மாட்டார். பூமியில் எல்லாமுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருந்திருக்கும் !!!!!ஆக  [ஆதியாகமம் 9 :13] த்தில் பைபிள் சொல்வது அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் என்று தெளிவாகிறது. கர்த்தர் கொடுத்த வார்த்தையாக இருந்திருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது.

பின் குறிப்பு : Dispersion Of Light எனும் நியதியை கண்டுபிடிக்க பெரும் துணையாக இருந்தது 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லீம் விஞ்ஞானி "இப்ன் அல் ஹய்தம்". இவரது "கிதாப் அல் மனாசீர் (Book Of Optics ) இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. http://en.wikipedia.org/wiki/Alhazen


நன்றி: ஜீசஸ் இன்வைட்ஸ்

Wednesday, December 05, 2012

மர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா? மலக்குகளா?

திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 2
 - எம்.எம். அக்பர்


ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம்.

அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்' 


அல்குர்ஆன் - 19:17-21: அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார். ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார். ''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' எனக் கூறினார்.

மர்யம் (அலை) அவர்களின் வாழ்கையில் நடந்த இரண்டு சம்பவங்களையே குர்ஆன் வசனங்கள் கூறுகிறது என்பதை மிகத் தெளிவாக விளங்களாம்.

மர்யம் (அலை) அவர்களின் வாழ்வில், ஒரேயொரு முறை மட்டுமே மலக்குகளுடன் உடையாடல் நடந்தது என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. குர்ஆன் அப்படிக் கூறியிருந்தால் அவ்விரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்னும் வாதம் சரியானது எனலாம்.

உன்மையில் சூரத்துல் ஆல இம்ரானின் வசனம் (3:42-45) கூறும் மலக்குகளுடைய உரையாடல் ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்தல் - அதாவது நன்மாராயங்கூறல் மட்டுமேயாகும். அதைச் செய்தது மலக்குகளுடைய ஒரு கூட்டமாகும். அந்த கூட்டத்தில் எந்தெந்த மலக்குகள் உட்பட்டிருந்தார்கள் என்பதை அவ்வசனம் கூறவுமில்லை.

இந்த சந்தோஷ செய்தி அறிவிக்கப்பட்ட பின் அதை நிவைறவேற்றவே பரிசுத்த ஆத்மா என்றழைக்கப்படும், ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் மர்யத்தின் பக்கம் அனுப்பி வைத்தான். அவர் ஜனங்களிடமிருந்து தனித்திருந்து, இறைபணி செய்து வரும் மர்யம் (அலை) அவர்களை நோக்கி இறைவனின் கட்டளையை பூர்த்திசெய்ய வந்த போது நடந்த உரையாடலே அல்குர்ஆனின் 19:17-21 விரை உள்ள வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரீலின் வரவு மலக்குகள் செய்தது போல சந்தோஷ வார்த்தையை அறிவிக்க அல்ல, நிறைவேற்றுவதற்கேயாகும். பரிசுத்தமான ஒரு ஆண் குழந்தையை தானம் செய்வதற்கே யாகும். இறைவனின் முன்னறிவிப்பை நிறைவேறுவதற்கான வகையில் மர்யம் (அலை) அவர்களின் உடலில் உண்டாகக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கமே ஜிப்ரீலின் வரவின் நோக்கம் என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது.

எவ்வாறாயினும் இவ்விரு வசனங்களும் விவரிப்பது இரு வேறு நிகழ்வுகளையாகும்.

1.    மலக்குகளுடைய சந்தோஷ வார்த்தை குறித்த அறிவிப்பாகும்.
2.    சந்தோஷ வார்த்தையை நிறைவேற்றுவதற்கான ஜிப்ரீலின் வரவும் அது பற்றிய உரையாடலுமாகும்.

இரண்டும் இரண்டு நிகழ்வுகள், இரண்டு நிகழ்விலும் இரண்டு விதமான உரையாடல்கள், இரண்டு நிகழ்விலும் உரையாடுபவர்கள் வித்தியாசமானவர்கள். அப்படியிருக்க இரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்று எப்படி கூற முடியும்?

இறைவன் நாடினால் விளக்கங்கள் தொடரும்...

Monday, December 03, 2012

திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம்-1

 - எம்.எம். அக்பர்


திருக்குர்ஆன் முரண்பாடுகள் எதுவும் இல்லாதது அதன் அற்புதத்தன்மைக்குரிய ஆதாரம் என்று கூறுவது எப்படி?

குர்ஆனில் உள்ளவை, ஏதோ ஒரு விஷயங்களைக் குறித்த உரையாடல்களோ, சில சம்பவங்களின் விவரங்களோ அல்ல. மாறாக, அது கூறும் விஷயங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறைவனின் ஏகத்துவத்தைக் குறித்த விஷயங்கள், படைப்புகளை வணங்குவது பற்றிய அர்த்தமற்ற கதைகளின் விவரங்கள், மரணத்திற்கு பிந்தைய வாழ்வு குறித்த திட்டவட்டமான முன்னறிவிப்புகள், பிரபஞ்ச வஸ்துக்களை பற்றிய விவரங்கள், தூதர்களின் வரலாறுகள், வரலாற்று படிப்பினைகள், தார்மீக உபதேசங்கள், தனி மனித – குடும்ப, சமூகக்கடமைகள், பொருளாதார - அரசியல் சட்டங்கள் போன்றவைகள் உட்கொள்ளும் கண்ணியத்திற்குறிய நூலாகும் இந்த திருக்குர்ஆன்.

இருபத்தி மூன்று வருடங்களாக மாறுபட்டச் சூழ்நிலையில் மாறுபட்ட விஷயங்களைக் கொண்டு இறங்கியதாகும் இந்த குர்ஆன். இறக்கியருளப்பட்ட உடனுடனே அவ்வசனங்கள் நம்பிக்கைக்கைகுரிய எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டது. இன்னும் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்கள், அவ்வப்போது இறங்கிய ஒவ்வொரு வசனங்களையும் முன்பு இறங்கிய வசனங்களோடு ஒத்துநோக்கி அவைகளோடு பொருத்திப் போகிறதா? இல்லையா என்று பார்த்து பதிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நிகழ்வுகளுக்கும் தொடர்புடைய, ஏற்புடைய, தேவையுடைய வசனங்களே இறக்கியருளப்பட்டது. இறக்கியருளப்பட்ட அதேவகையில் அப்படியே பதிக்கப்படவும் செய்யப்பட்டது. ஒரே காலகட்டதிலும், சூழ்நிலையிலும் எழுதப்பட்ட நூல்களில் கூட முரண்பாடுகள் காணப்படுவதுண்டு. ஆனால் குர்ஆன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். குர்ஆனில் எந்தவொரு வசனமும் மற்றோரு வசனத்தோடு முரண்படுவதில்லை. மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு மனிதர் கற்பித்த கற்பனை விவரங்களே குர்ஆனில் உள்ளதென்றால் அதில் பல முரண்பாடுகள் ஏற்பட வழியுண்டு. ஆனால், இதில் யாதொரு முரண்பாடும் இல்லாததே இது யாவற்றிலும் மிகைத்தவனான படைத்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது. இதனை திட்டவட்டமாக குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்'அல்குர்ஆன் 4:32


வித்தியாசங்களும், வேறுபாடுகளும்

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் குர்ஆனில் சில முரண்பாடுகள் உண்டு என்று எடுத்துக்காட்டுகின்றார்களே? இதன் உண்மை நிலை என்ன?

குர்ஆன் இறைவனின் வாக்கு ஆகும். அதில் எந்தவொறு முரண்பாடும் இல்லை. மனித கற்பனையில் உருவான ஒரு வசனமாவது குர்ஆனில் நுழைக்கப்பட்டிருக்குமானால் அது நிச்சயமாக மற்ற வசனங்களோடு முரண்பட்டிருக்கும். மனித கையூடல் எதுவும் ஏற்படாத வண்ணம் இறைவன் தன் இறுதி வேதத்தை காத்து அருள்கின்றான். இது இறுதி நாள் வரைக்கும் பாதுகாக்கப்படவே செய்யும். இது இறைவனின் வாக்குறுதியாகும். அதை இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம். நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். – அல்குர்ஆன் 15:7

மனிதர்களுடைய கையூடல் ஏற்பட்டதாலே முந்தைய வேதங்கள் பரிசுத்த தன்மையை இழந்தது. இயலாமையிலிருந்து ஒழிந்தோட முடியாதவைகளே முரண்பாடுகள். இருவேறு நபர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து விளக்குவதில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பாகும். பைபிளிலும் மற்ற வேதக்கிரந்தங்களிலும் காணப்படும் முரண்பாடுகள், இவ்வகையிலுள்ள முரண்பாடுகளாகும். முரண்பாடற்ற பரிசுத்த வேத கிரந்தங்களின் சொந்தக்காரர்கள், நாங்கள் என்று உரிமை கொண்டாடுபவர்கள் கூட தங்கள் மதகிரந்தத்தின் முரண்பாடுகளை மறைத்து வைக்கவும் அதிலிருந்து கவனத்தைத் திருப்பவும் வேண்டி, குர்ஆனிலே முரண்பாடு உள்ளது என்று கூறி வீதிக்கு வந்துள்ளனர்.

குர்ஆனிலே 'முரண்பாடுகள்' ஒன்றுமில்லை என்று கூறுவதால் 'வித்தியாசம்' ஒன்றுமில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. வித்தியாசமும் முரண்பாடும் ஒன்றல்ல, வேறுவேறு ஆகும். வித்தியாசங்களை முரண்பாடாக எடுத்துக்கொண்டே குர்ஆனில் முரண்பாடுகள் உண்டென்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதை புரிந்துக்கொள்ள ஒரு எடுத்துக்காட்டு: பைபிள் புதிய ஏற்பட்டிலுள்ள முக்கியமான ஒரு முரண்பாடு இயேசுவின் வம்சவரலாறு பற்றிய முரண்பாடு. மத்தேயுவும் (1:6-16) லூக்காவும் (3:23-31) கூறும் இயேசுவின் வம்சாவழி பற்றிய விவரங்களில் பெரும் முரண்பாடுகள் உண்டு. அதன் காரணம் மத்தேயு – தாவீதின் குமாரனாகிய சாலமோனின் புத்திர பரம்பரையிலும், லூக்கா – தாவீதின் குமாரனாகிய நாத்தானின் புத்திர பரம்பரையிலும், இயேசுவை கொண்டு வர முயற்சித்ததாகும். (இது குறித்து விரிவாக காண இங்கே அழுத்தவும்)

மத்தேயு கூறும் பரம்பரை பட்டியலில் தாவீது முதல் இயேசு வரை 28 நபர்கள் வருகின்றனர். லூக்கா கூறும் பரம்பரை பட்டியலிலோ தாவீது முதல் இயேசு வரை 42 நபர்கள் வருகின்றனர். இயேசுவின் தந்தையாக கூறப்படும் யோசேப்பின் தந்தை யார் என்று கூறும்பிரச்சனைகள் துவங்கி முரண்பாடுகளும் துவங்குகிறது. யோசேப்பின் தந்தை பற்றி மத்தேயு கூறும்போது 'யாக்கோபு' என்றும் லூக்கா 'ஏலி' என்றும் கூறுகின்றனர். ஒருவருக்கு ஒரு தந்தையே இருக்க முடியும். ஆனால் இங்கேயோ ஒருவருக்கு தந்தையாக இரண்டு நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அப்படியானால் இதுவொரு தெளிவான முரண்பாடு அல்லவா? ஆனால், மத்தேயுவும் லூக்காவும் யோசேப்பின் சகோதரனின் பெயரை கூறியிருந்தாலோ - மத்தேயு 'யோசேப்பின் சகோதரன் 'யாக்கோபு' என்றும், லூக்கா யோசேப்பின் சகோதரன் 'ஏலி' என்றும் கூறியதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விவரங்கள் மத்தியில் முரண்பாடு இருக்கின்றதா? என்றால் இல்லை. ஏனெனில், ஒருவருக்கு இரண்டு சகோதரன் இருப்பது இயல்பான ஒன்றாகும். மத்தேயு யோசேப்பின் சகோதரன் யாக்கோபைக் குறித்தும், லூக்கா யோசேப்பின் மற்றொரு சகோதரன் 'ஏலி'யைக் குறித்தும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம். இது இரண்டு பேர்கள் கூறிய விவரங்களில் ஏற்பட்ட வித்தியாசத்தின் உதாரணம். இந்த வகையான வித்தியாசம் முரண்பாடு அல்ல என்பதை நாம் விளங்க வேண்டும்.

குர்ஆன் ஒரு வரலாற்று நூல் அல்ல. எனினும், வரலாற்று சம்பவங்களைக் கூறும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உண்டு. ஆனால் பைபிளில் காணப்படும் வகையில் சம்பவங்கள் தெடராக வரிசைப்படியாக இருப்பதில்லை. அதற்கு காரணமுண்டு. இஸ்ரவேல் சமுதாயத்தின் வரலாறே பழைய ஏற்பட்டில் உள்ளது. பிரபஞ்ச உற்பத்தி துவங்கி மோசேயின் மரணம் வரையுள்ள சம்பவங்களே முதல் ஐந்து ஆகாமங்களில் உள்ளது. மற்ற நூல்களில் மற்ற தீர்க்கதரிசிகளின் கதைகளே உள்ளது. புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களிலேயும் இயேசுவின் கதையையே நமக்கு காணமுடியும். இவையெல்லாம் வரலாற்று நூல்களில் அமைக்கப்படும் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குர்ஆன் இந்த முறையில் வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கவேயில்லை. குர்ஆன் உபதேசிக்கும் தார்மீக கடமைகளுக்கும், படிப்பினைகளுக்கும், முன் காலச் சம்பவங்களை ஆதாரமாக உடன் எடுத்து வைக்க மட்டுமே செய்கிறது. அதனாலேயே உபதேசங்களுக்கு ஆதாரம் சேர்க்க அவசியமான சம்வங்களை மட்டும் எடுத்து கூறும் பாணியை குர்ஆன் கையாண்டுள்ளது. இப்படி கூறும் போது வரலாற்று காலத்தொடர்பைப் பற்றி அக்கரை எடுத்துக் கொள்வதேயில்லை. அதனுடைய அவசியமும் இல்லை.

வரலாற்றுக் குறிப்புகளை குர்ஆன் கூறும் முறையை மறைத்து காட்டிக்கொண்டு, இது முரண்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மோசேயுடைய வரலாற்றுச் சம்பவங்களை கூறிய பிறகே, சில இடங்களில் இப்ராஹீமின் வரலாற்று சம்பவங்களைக் கூறும். இதனால் இப்ராஹீமுக்கு  முன்போ மோசே வாழ்ந்தார் என்று குர்ஆன் கருதவில்லை. மோசேயுடைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்து வைக்கும் போது அது தொடர்பான படிப்பினைகள் இப்ராஹீமின் வரலாற்றில் இருக்கும்போது அதையும் உடன் எடுத்து வைக்கிறது. அதுபோல் இப்ராஹீமின் வரலற்றிலுள்ள படிப்பினைகளை எடுத்துவைக்கும் போது தொடர்புடைய மோசேவின் வரலாற்றிலுள்ள படிப்பினை சம்பவங்களை எடுத்து வைக்கிறது. இதனால் இதை வரிசைப்படியாக எடுக்கக்கூடாது. வரிசைப்படியாக எடுக்கும்படி குர்ஆனில் ஒரு இடத்திலும் கூறப்படவும் இல்லை. அதனால், அத்தகைய சம்பவ விவரங்கள் முரண்பாடுகளுக்கு உட்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி அவர்கள் குர்ஆனில் எதை எதையெல்லாம் முரண்பாடுகள் என்று கூறுகிறார்கள் - அவற்றுக்கான விளக்கம் என்ன? குர்ஆனில் முரண்பாடுகள் இருக்கின்றது என்று கூறி அவர்கள் எந்த வகையில் தவறு செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

Monday, November 26, 2012

Saturday, November 24, 2012

ஹதீஸ்கள் பலவீனப்படுமா? எப்படி?

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.


ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.


1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.


2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.


3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.


4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.


5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.


6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.


7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவ0ருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.


8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.


9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.


10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.


11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.


12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.


13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.


இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்


குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.


Thursday, September 10, 2009

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!


- அபூ ஃபாத்திமா

பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த "வல்லனவற்றின் வாழ்வு வளம்" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?


நன்றி: Readislam.net


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Friday, August 28, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?


பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! - அபூ பாத்திமா


தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here