இன்ஷா அல்லாஹ்! விரைவில் கிறிஸ்தவம் பற்றிய பல புதிய கட்டுரைகள் வெளிவர இருக்கின்றது. தொடர்ந்து படியுங்கள்! உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் | ஏகத்துவம் இனையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, July 17, 2009

முரண்பாடுகள் நிறைந்த புதிய ஏற்பாடு (NT-P1)


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1


பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களை நாம் தெடராக கண்டுவருகின்றறோம். இன்ஷா அல்லாஹ் அவை மேலும் தொடர்ந்து வெளியிடப்படும்.

அதற்கு முன்பாக, புதிய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களையும் இங்கே நாம் பார்த்துவிட்டால் பைபிள் எந்த அளவுக்கு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அதில் எவ்வளவு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அது எந்த அளவுக்கு மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவிடும்.

அடுத்து இங்கே இன்னொன்றையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். அதாவது ரோமன் கத்தேலிக்கர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளின் உள்ள பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 புத்தகங்களும், புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளில் அதிலிருந்து 7 புத்தகங்கள் நீக்கப்பட்டு 39 புத்தகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. காரணம் அவை அப்போகிரிஃபா (Appocrypha) என்ற தள்ளுபடி ஆகாமங்கள் என்று சொல்லப்பட்டு அந்த 7 புத்தகங்களை நீக்கியுள்ளனர் புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். (இன்ஷா அல்லாஹ் இது தொடர்பான விரிவான கட்டுரை விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும்)

ஆனால் இதே போன்று இன்னும் பல புத்தகங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாத உன்மைகள். புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித்தள்ளியுள்ளனர் கிறிஸ்தவ திருச்சபையினர்.

இப்படி ஒதுக்கித்தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் சொல்லப்படுகின்றது தெரியுமா? அவற்றில் உள்ள வசனங்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது என்று சந்தேகம் எழுந்ததால் அவை ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது என்று காரணம் கற்பிக்கின்றது கிறிஸ்தவ திருச்சபை.

ஒரு புத்தகம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தனர் என்பதற்கு சொல்லப்படும் மிக முக்கியமான காரணம், அவற்றில் உள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகவும், குழப்பங்களாகவும் இருந்ததாலும், தெளிவில்லாத சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்ததாலும், அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பலவீனங்களை உடைய ஒரு புத்தகம் கண்டிப்பாக தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது, மாறாக கள்ள அப்போஸ்தலர்களாலும் கள்ள தீர்க்கதரிசிகளாலும், சாத்தானின் தூண்டுதலாலும் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும், எனவே அவற்றை தள்ளுபடி செய்துவிட்டனர் என்று விளக்கமளிக்கின்றனர். அதை 'இந்திய வேதாகம இலக்கியம்' என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'மேய்ப்பனின் கோல்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

ஒரு புத்தகத்தின் நம்பகத் தன்மை: தேவ ஏவுதலால் எழுதப்பட்டதின் மற்றொரு முத்திரை அதன் நம்பத்தகுந்த ஆதாரமாகும். சத்தியத்துக்கு புறம்பான அல்லது (முந்தைய வெளிப்படுத்தலின்படி தீர்க்கப்பட்ட) கோட்பாட்டில் தவறுடைய எந்தப் புத்தகமும் தேவனால் ஏவப்பட்டிருக்க முடியாது. அவரது வார்த்தைகள் சத்தியமானதாயும் முரண்பாடானதாயும் இருக்க வேண்டும். - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4

மற்றொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

முந்தைய வெளிப்படுத்தலோடு எளிதாக ஒத்துப்போவதால் மட்டும் ஒரு போதனை ஏவப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால், முந்தைய வெளிப்படுத்தலோடு முரண்பாடு காணப்பட்டால் நிச்சயமாக அந்தப் போதனை ஏவப்பட்டதல்ல என்று அது காட்டிவிடும். பொரும்பான்மையான பகுதிகள் நம்பத்தக்கவையல்ல என்ற அடிப்படைக் கொள்கையினால் புறக்கணிக்கப்பட்டன. அவைகளின் வரலாற்று ஒழுங்கின்மை, மதக் கோட்பாட்டைப் பற்றிய முரண்பாடான கொள்கைகள், அவை அதிகாரமுடைய அமைப்பிலிருந்தாலும் கூட தேவனிடத்திலிருந்து வந்தது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்கின்றன. அவை தேவனிடமிருந்து வந்தால் அதே வேளையில் தவறுடையதாகவும் இருக்க முடியாது. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4

இப்படி முரண்பாடுகளும் குழப்பங்களும், தெளிவற்ற வசனங்களும் இருந்தால், அவை கண்டிப்பாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியிருக்க முடியாது என்று முடிவு செய்து, அவற்றை தள்ளுபடி செய்துவிட்டதாக கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்துகின்றனர்.

இதை சற்று தெளிவாக மற்றோர் இடத்தில் இதே புத்தகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:

ஒரு தீர்க்கதரிசனப் புத்தகத்தை முற்றிலும் போலியானது என்று நம்பிக்கையற்ற ஆதாரத்தினால் முடிவெடுக்க முடியுமா? தேவன் அருளிய ஒரு புத்தகமும் போலியானதாயிருக்க முடியாது. தீர்க்கதரிசன புத்தகம் என்று உரிமை கொண்டாடும் ஒரு புத்தகத்தில் மறுக்கமுடியாத பொய்மை காணப்படுமானால், தீர்க்கதரிசன சாட்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவன் பொய் சொல்லுபவரல்ல. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 7

இப்படி தெளிவாக, ஒரு புத்தகம் முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் காணப்படுமானால், அவை கண்டிப்பாக தேவனால் அருளப்பட்டிருக்காது, ஏனெனில் தேவன் பொய் சொல்லுபவர் அல்ல, என்று கண்டறிந்து அந்த புத்தகங்களை பைபிளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ மிஷினரிகள் வாதிடுகின்றன.

ஆனால் இதே போன்று எண்ணற்ற முரண்பாடான, குழப்பம் நிறைந்த, தெளிவற்ற போதனைகளை உடைய, பொய்கள் நிரம்பிய புத்தகங்களும் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றதே! அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை? அவற்றை ஏன் போலி அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது என்று முடிவெடுக்கவில்லை?

கிறிஸ்தவ திருச்சபையினர் தங்களுக்கு சாதமாக பைபிளில் பல புத்தகங்களை சேர்த்தும் நீக்கியும் இருப்பதற்கு முரண்பாட்டை ஒரு காரணமாக சொல்லும் போது, அதே காரணத்தை கொண்ட இன்றைய பைபிளையும் ஏன் ஒதுக்க முன்வரவில்லை என்பது தான் எமது கேள்வி என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எப்படிப்பட்ட பெரும் பெரும் முரண்பாடுகள் புதிய ஏற்பாட்டில் மலிந்து கிடக்கின்றது என்பதை இனி தொடராக நாம் காண்போம்.


முரண்பாடு 1:

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவிலும், மூன்றாவது புத்தகமான லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாற்றைப் பற்றி கூறப்படுகின்றது. இவற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளை ஆய்வுப்பூர்வமாக 'இயேசுவின் வச்சாவளியும் பைபிளின் குளறுபடிகளும்' என்றத் தலைப்பில் இரண்டு பாகங்களாக ஏற்கனவே எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்தவும்:


இயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 1)

இயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)


இறைவன் நாடினால் தொடரும்...


இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

Labels: , , , , , ,

Saturday, July 11, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5 படிக்க இங்கே அழுத்தவும்





முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6



முரண்பாடு 25:

யாத்திராகமம் 6:2-3ல் கர்த்தர் பின்வருமாறு கூறியதாக சொல்லப்படுகின்றது:

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. - யாத்திராகமம் 6:2-3

இந்த வசனத்தில் கர்த்தர் மோசேயிடம், தான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானதாகவும் ஆனால் அவர்களுக்கு அவரது நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரியாது என்றும் கூறியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது. இதை சற்று தெளிவாக wbtc தமிழ் மொழிப்பெயர்ப்பில் கீழ் கண்டவாறு கூறப்படுகின்றது:

பின் தேவன், மோசேயை நோக்கி, நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. - யாத்திராகமம் 6:2-3

ஆனால், இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக, ஆபிரகாமுக்கு கர்த்தரின் பெயரான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்ததாகவும் அதன் பெயரிலேயே அவர்கள் கர்த்தரை தொழுதுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே (Jehovahjireh) என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. - ஆதியாகமம் 22:14

இந்த வசனத்தில் ஆபிரகாமுக்கு கர்த்தருடைய நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்துள்ளது என்பதும், அதனாலேயே அவர் பெயரை உள்ளடக்கிய - யேகோவாயீரே - கர்த்தர் பார்க்கிறார் - என்ற பொருள் படக்கூடிய ஒரு பெயரை வைத்தான் என்கிறது. யேகோவா என்ற பெயரே ஆபிரகாமுக்குத் தெரியாது என்றால் எப்படி யேகோவா - யீரே (கர்த்தர் பார்க்கிறார்) என்று ஆபிரகாம் பெயர் வைத்தார்?

அதேபோன்று இன்னும் பல இடங்களில் ஆபிரகாம் கர்த்தரை யேகோவா என்றப் பெயரிலேயெ தொழுது கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். - ஆதியாகமம் 21:33

இந்த இடத்தில் தமிழ் பைபிளில் பெயர்செபாவில் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை ஆபிரகாம் தொழுதுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே கர்த்தருடைய நாமத்தை என்ற இடத்தில் 'யேகோவா' என்ற வார்த்தையே மூல மெழியிலும் பல ஆங்கில மொழிப்பெயர்ப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அந்த பெயரிலேயே ஆபிரகாம் தொழுதுகொண்டதாக கூறப்படுகின்றது.

And Abraham planted a tamarisk in Beer-sheba, and called there on the name of Jehovah, the Eternal ùGod. - Darby bible Translation

And Abraham planted a tamarisk tree in Beer-sheba, and called there on the name of Jehovah, the Everlasting God. - American Standard Bible

இங்கே ஆபிரகாமுக்கு தேவனாகிய கர்த்தரின் பெயராகிய 'யேகோவா' என்ற பெயர் தெரியும் என்று கூறப்படுகின்றது. ஆனால் யாத்திராகமம் 6:2-3ம் வசனங்களோ தெரியாது என்கிறது. இதில் எது சரி?

(இதே போன்று இன்னும் பல இடங்களில் யோகோவா என்ற பெயரையே உபயோகித்ததாக சில ஆங்கில பைபிள்களிலும் எபிரேயு பைபிள்களிலும் கூறப்படுகின்றது. பார்க்க ஆதியாகமம் 26:23-25 மற்றும் ஆதியாமம் 28:21 (ஈசாக்கு யோகோவா என்று அழைத்ததாக கூறப்படுகின்றது)


முரண்பாடு 26:

மனிதன் மொத்தம் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதை அறியாதவரா கர்த்தர்?

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3

இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள்; மொத்தமே 150 வருடம் தான் கர்த்தர் கூறியதாக என்று பைபிள் குறிப்பிடுகின்றது.

ஆனால் இந்த வசனத்திற்கு மாற்றமாக நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. அதேபோல் இன்னும் பல பேர் பல நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்ததாக இதே பைபிளின் இதே ஆதியாகமத்திலேயே சொல்லப்படுகின்றது. பார்க்க ஆதயாகமம் 11:11-17.

இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 150 வருடங்கள் தான் என்றிருந்தால் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? அதே போன்று இன்னும் பல பேர் எப்படி பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலாமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? அல்லது எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?


முரண்பாடு 27:

கர்த்தர் மணஸ்தாபப்படுவாரா? மாட்டாரா?

பைபிளின் பழைய ஏற்பாட்டு புத்தகமான 1 சாமுவேல் 15:10-11ம் வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார். அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

அதாவது முற்றும் அறிந்த கர்த்தர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் போன்று மணம் வருந்தியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் முரணாக இதே 1 சாமுவேல் 15:29ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தர் மனஸ்தாபப்படுவரா? மாட்டாரா? கர்த்தர் மனஸ்தாபப்பட்டாரா? இல்லையா? ஒரே புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்திலேயே இப்படி தெளிவான முரண்பாடு வரலாமா? இதில் உள்ள இன்னொரு கொடுமையையும் பாருங்கள். அதாவது, மேலே 1 சாமுவேல் 15:10-11ம் வசனத்தில் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக சொல்லிவிட்டு, அதே புத்தகத்தின் அதே அதிகாரத்தின் 15:29ம் வசனத்தில் கர்த்தர் மணஸ்தாபப்படமாட்டார், அப்படி மணஸ்தாபப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று எழுதிவிட்டு பின்னர் அதே புத்தகத்தின் அதே 15ம் அதிகாரத்தின் 35ம் வசனத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

'சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:35

என்ன கொடுமை பார்த்தீர்களா? ஒரே புத்தகத்தின் ஒரே அதிகாரத்தில் உள்ள குளறுபடிகள் இவை? முதலில் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களில் (15:10-11) தான் செய்த ஒரு செயலுக்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக கூறிவிட்டு அடுத்து சொல்லப்பட்ட வசனத்தில் (15:29) இப்படி எல்லாம் கர்த்தார் மனஸ்தாபப்படும் அளவுக்கு அவர் ஒன்றும் மனுபுத்திரன் அல்ல கூறி முரண்படுகின்றது. அதன் பிறகு மீண்டும் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம் சாமுவேல் துக்கித்துக்கெண்டதாக கூறப்படுகின்றது. இந்த வசனங்களை கர்த்தர் தான் அருளினார் என்று நம்பினால் அதனால் கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் இழிவு ஏற்படுத்தியது போல் ஆகாதா? ஒரு புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்தில் இப்படிப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றதே இதை எப்படி கர்த்தரின் புனித வேதமாக ஏற்றுக்கொள்ள முடியும்?

இதே போன்று இன்னொறு இடத்திலும் முற்றும் அறிந்த கர்த்தர் மனிதனைப்படைத்ததற்காக மணஸ்தாபப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது பார்க்க ஆதியாகமம் 6: 6-7

இது குறித்து கூடுதல் தகவல்களை பார்க்க இங்கே அழுத்தவும்

முரண்பாடு : 28

பாவ நிவாரனப்பலியிலும் முரண்பாடு:

இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப்பற்றியும் அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசேக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகாமங்கள் கூறுகின்றன. வழக்கம் போலவே இந்த இரண்டு ஆகாமங்களிலும் அனேக முரண்பாடுகள்:

இந்த இரண்டு ஆகாமங்களிலும் பாவ நிவாரணப்பலி பற்றி சொல்லப்படுகின்றது :

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். - எசேக்கியேல் 45:21

இதே கருத்தை எண்ணாகமும் கூறுகின்றது:

முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. - எண்ணாகமம் 28:16

ஆனால் இந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பதை இரண்டு ஆகாமங்களும் முரண்பாட்டுக் கூறுகின்றது:

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக. ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன். - எசேக்கியேல் 45:21-25

ஆனால் இதற்கு மாற்றமாக எண்ணாகமம் வேறுவிதமாக கூறுகின்றது:

அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள். ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும். அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள். நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்த வேண்டும். ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும் அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. - எண்ணாகமம் 28:17-25

எசேக்கியேல் ஆகாமத்தில் பழுதில்லாத ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாகச் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் எண்ணாகமத்திலோ, இதற்கு மாற்றமாக இரண்டு காளைகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இரண்டில் எது சரி? எந்த முறையின் படி பலி செலுத்த வேண்டும்?

அதேபோல் எசேக்கியேல் ஆகாமத்தில் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளை மாட்டைப் படைக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு நேர் மாற்றமாக எண்ணாகமத்திலோ, பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அதே போல் போஜனப்பலிக்காக சொல்லப்படும் முறையிலும் இரண்டு ஆகாமங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றது. இதே போன்று இன்னும் அனேக முரண்பாடுகள் இந்த இரண்டு ஆகாமங்களிலும் உள்ளது. இவை எல்லாம் கர்த்தரால் தான் கூறப்பட்டது என்றால் எப்படி இத்தனை முரண்பாடுகள் வரும்?


இறைவன் நாடினால் தொடரும்...



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Labels: , , , , ,

Saturday, July 04, 2009

படைப்பிலும் முரண்படும் பைபிள்


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2
படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3
படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4
படிக்க இங்கே அழுத்தவும்



முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5



பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கப்பட்டது பற்றி கூறப்படுகின்றது. அவற்றிலும் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும், எதார்த்தத்திற்கு மாற்றமான செய்திகளும், விஞ்ஞானத்திற்கு முரனான செய்திகளும் மலிந்து காணப்படுகின்றது. அவற்றில் சில முரண்பாடுகள் இதோ:


முரண்பாடு 20:

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது தாவரங்களா?

ஆதியாகமம் 1 ம் அதிகாரத்தில் மனிதர்களையும் தாவரங்களையும் படைத்தது பற்றி கூறும்பொழுது முதலில் தாவரங்களே படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும் கூறுகின்றது.

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.- ஆதியாகமம் 1:11-13

இந்த வசனங்களில் மூன்றாம் நாளிலேயே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்து மனிதன் எப்பொழுது படைக்கப்பட்டான் என்பதை பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:27-31

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக அறாம் நாளில் தான் மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2 ம் அதிகாரத்தில் இந்த வசனங்களுக்கு நேர் முரணான செய்தி காணப்படுவதை பாருங்கள்:

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். - ஆதியாகமம் 2:4-7

இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் படைத்தது பற்றி கூறப்படுகின்றது. ஆனால் அச்சமயம் வரை புற்பூண்டுகளோ தவாரங்களோ பூமியில் முளைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் 3ம் நாளிலே கர்த்தர் பூமியில் புற்பூண்டுகளை முளைபிக்கச் செய்ததாகவும் அதன் பின் ஆறாம் நாளில் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முதலில் படைக்கப்பட்டது எது? ஒரே ஆகாமத்தில் அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரலாமா?

முரண்பாடு 21:

ஏவாள் படைக்கப்பட்டது எப்போது?

ஆதியாகமத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:27

இந்த வசனத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததாகவும், அப்போதே ஆணையும் பெண்னையும் - இருவரையும் - படைத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் அதே ஆதியாகமத்தின் 2:20ல் பின்வருமாறு கூறப்படுகின்றது.

அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. - ஆதியாகமம் 2:20

இந்த வசனத்தில் ஆதாம் படைக்கப்படும் வரை ஆதாமுக்கு துணையாக யாரும் படைக்கப்படவில்லை என்றும், அதன் பிறகே ஏவாள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது (மேலும் பார்க்க ஆதியாகமம் 2:21-25)

உன்மையில் ஏவாள் எப்போது படைக்கப்பட்டார்? ஒரே புத்தகத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு? உன்மையில் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தான் எழுதப்பட்டது என்றால் இப்படி முரண்பாடு வருமா?

முரண்பாடு 22:

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா?

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27

இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்:

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19

இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?

முரண்பாடு 23:

ஆகாயத்து பறவைகள் எதன் மூலம் படைக்கப்பட்டது ?

ஆகாயத்து பறவைகள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 1ம் அதிகாரம் கூறுகின்றது:

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:20-21

ஆனால் இந்த வசனங்களுக்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2ம் அதிகாரத்தில் ஆகாயத்து பறவைகளும் இன்னும் சில உயிரினங்களையும மண்ணிலிருந்து படைத்ததாக கூறப்படுகின்றது:

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:19

ஆகாயத்து பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டதா? அல்லது மண்ணிலிருந்து படைக்கப்பட்டதா?

முரண்பாடு 24:

நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது எப்போது? பூமி படைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதன் பிறகா?

முதலில் பூமி படைக்கப்பட்டது என்றும் அதன் பிறகே நட்சத்திரங்கள் படைக்கப்பட்து என்றும் ஆதியாகமம் கூறுகின்றது :


ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாமம் 1:1

இதே ஆதியாகமத்தின் மற்றொரு இடத்தில் :

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:16-19

இந்த வசனங்களில் முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் - அதாவது பூமி படைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து நான்காம் நாளில் தான் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் இங்கே சொல்லப்படுகின்றது. ஆனால் யோபு என்ற புத்தகத்திலோ இதற்கு நேர் முரணான செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது:

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:4-7

இந்த வசனத்தில் நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரே பூமி படைக்கப்பட்டதாகவும் அச்சமயம் விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாயப்ப பாடியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆதியாகமத்தின் வசனங்களிலோ முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நான்காம் தினத்தன்றே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது? இதில் எந்த புத்தகம் சொல்வது சரியானது? முதலில் படைக்கப்பட்டது பூமியா அல்லது நட்சத்திரங்களா?


இறைவன் நாடினால் தொடரும்...



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Labels: , , , , ,

Monday, June 22, 2009

கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டாரா?


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 3


பைபிளில் கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டதாகவும், அவரது இருதயத்திற்கு அது விசனமாக இருந்ததாகவும் - மனிதனை ஏன்டா படைத்தோம் என்று நொந்து நூலானதாகவும் கூறி - சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரை பலவீனப்படுத்தி - இழிவுபடுத்துகின்றது:

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:5-6

இதை WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர் பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும் மிருகங்களையும் ஊர்வனவற்றையும் வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப்போகிறேன். ஏன் என்றால் இவற்றை எல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகின்றறேன் என்றார். - ஆதியாகமம் 5:6-7

கர்த்தர் தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் படைத்தார். மனிதன் என்னென்ன செய்வான் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வான் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கர்த்தர் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மனஸ்தாபப்படுவாரா? - வருத்தப்படுவாரா? கர்த்தர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா?

ஆனால் அப்படி பலவீனரைப்போன்று 'தெரியாமல் படைத்துவிட்டோமே' என்று வருத்தப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இதே போன்று மற்றோர் இடத்தில் சவுலை ராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார் அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:10-11

ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதை முன்கூட்டியே அறியாத பலவீனராகத்தான் கர்த்தர் இருந்தார் - தான் செய்த செயல்களை நினைத்து வருத்தப்படும் அளவுக்கு மனிதனைப்போன்ற பலவீனராகத்தான் கர்த்தர் இருக்கின்றார் என்று இந்த பைபிள் வசனங்கள் நமக்கு உணர்த்துக்கின்றது. ஆரம்பத்தில் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்ட கர்த்தர் அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தும் இது போன்று மற்றொரு முறை தனது செயலுக்காக வருத்தப்பட்டதாக 1 சாமுவேல் 15:10-11 குறிப்பிடுகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் என்ற ஒரு தவறான கருத்து இந்த பைபிள் வசனங்களின் மூலம் தினிக்கப்படுகின்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் - அனைத்தையும் அறிந்த கர்த்தருக்கு, தன்னால் படைக்கப்பட்ட மனிதன் என்ன செய்வான் - எப்படி நடந்துக்கொள்வான் - என்பது எப்படித் தெரியாமல் போகும்? சவுல் இராஜாவானதும் என்னென்ன செய்வான் என்று எப்படி தெரியாமல் போகும்? இப்படி குறிப்பிடுவது கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் வல்லமைக்கும், இழுக்கு ஏற்படுத்தும் செயல் இல்லையா? பைபிள் சொல்வது போல் நம்புவது கர்த்தருடைய சக்தியை குறைத்து மதிப்பிடும் செயலாகாதா?

இப்படிப்பட்ட கர்த்தரின் பெயராலேயே அவருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பைபிளில் எழுதப்பட்ட இது போன்ற பொய்யான வசனங்களை இனம் காடடும் முகமாகத்தான் - கர்த்தர் என்ன நடக்கும் என்பதை அறியாத பலவீனராக இருந்தார் என்றக் கூற்றை முற்றாக மறுத்து, திருக்குர்ஆன் அவரின் வல்லமையை பின்வருமாறு பறைசாற்றுகின்றது:

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

அவனே மறைவனாதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன் (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன் அன்புடையோன். - அல்குர்ஆன் 32 : 6.

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன். - அல்குர்ஆன் 67 : 13.

மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் மிக்க பொறுமையாளன். - அல்குர்ஆன் 33 : 51

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான். மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன் விவேகம் மிக்கோன். - அல்குர்ஆன் 24 : 18.

இந்த வசனத்தில் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், வானங்களிலும் பூமியிலும் இந்த அகில உலகனைத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்தவன், அவன் அறியாதது ஒன்றும் இல்லை - அவனுக்குத் தெரியாதது எதுவும் இருக்கமுடியாது - அவன் இறந்தகாலத்தையும் அறிந்தவன் - அவன் நிகழ்காலத்தையும் அறிந்தவன் - அவன் எதிர்காலத்தையும் அறிந்தவன் - அவன் யாவற்றையும் நன்கறிந்த மாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவன் - அவன் மனிதருடைய இருதயத்தில் என்ன இருக்கின்றது என்பதையும் நன்கறிந்தவன் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக சொல்லியிருக்க - இந்த வசனங்களுக்கு மாற்றமாக பைபிளில் கர்த்தரை எப்படி குறிப்பிட்டு அவரை சிறுமைப்படுத்துகின்றது என்பதை நாம் உணரவேண்டும்

அடுத்து இன்னொன்றையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது, முற்றும் அறிந்த - ஞானமிக்கவராகத்தான் நம்மை எல்லாம் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் இருப்பார் என்பது கடவுள் கோட்பாட்டின் அடிப்படையான ஒரு தத்துவம். இந்த உன்மையை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது - குறிப்பாக கிறிஸ்தவர்களும் இதை மறுக்க மாட்டார்கள். அப்படி மறுப்பவன் கடவுளைப் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

நாம் இந்த பொதுவான அளவுகேலின் படி பர்த்தாலும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்கள் கர்த்தரின் பெயரால் - சாத்தானின் தூண்டுதலால் - அவரது கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால்தான் எழுதப்பட்டிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.

இந்த பொதுவான விதி என்பது ஒரு புறமிருக்க, மேலே சொல்லப்பட்ட பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரின் வசனங்களாக இருக்க முடியாது என்பதை பைபிளின் வேறு சில வசனங்களும் உறுதிபடுத்துகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

இப்படி கர்த்தர் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டார் - அப்படி வருத்தப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று தெளிவாக கூறியிருக்க எப்படி கர்த்தர், தான் மனிதனைப்படைத்தற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள் முடியும்? அப்படி மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படும் பைபிள் வசனங்கள் எப்படி இறைவசனங்களாக இருக்க முடியும்?

அது மட்டுமல்ல அவர் மனிதன் என்ன நினைக்கின்றான் - என்ன நினைப்பான் என்பதை எல்லாம் அறிந்தவர் என்றும் ஒரிடத்தில் கூறப்படுகின்றது:

தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், - 1 இராஜாக்கள் 8:40

இப்படி எல்லா மனிதனின் செயல்பாடுகளையும் அறிந்தவராகத்தான் கர்த்தர் இருப்பார் என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளின் சில வசனங்களும் உறுதிபடுத்தி இருக்க, எப்படி கர்த்தர் மனிதன் என்ன செய்வான் என்று அறியாதவர் போன்று வருத்தப்பட்டதாகவும் - சவுல் இராஜாவானதும் என்னென்ன அக்கிரமம் செய்வான் என்று அறியாவதவர் போன்று அவனை இராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் - கர்த்தரை சிறுமைப்படுத்தி சொல்லப்படும் பைபிள் வசனங்களை இறைவசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவ நன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

எனவே கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டார் என்பதெல்லாம் கண்டிப்பாக கர்த்தரின் பெயரால் சில விஷமிகளால் பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்கள் தான் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதை நிரூபிக்கும் வகையில் பைபிள் வசனங்கள் உட்பட பல சாண்றுகள் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

எனவே உன்மையையும் பொய்யையும் பிரித்தரிவிக்கும் முகமாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவனால் அருளப்பட்ட இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் மட்டும் தான் கர்த்தரை உயர்வாக கூறப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, அதன் படி வாழ கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு கர்த்தர் அருள் புரிவாராக.

இறைவன் நாடினால் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Labels: , , , , ,

Thursday, June 18, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4



முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்


முரண்பாடு 15:

பென்யமீனுடைய குமாரர்கள் எத்தனைபேர்? 1 நாளாகமம் பின்வருமாறு கூறுகின்றது:

பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். - 1 நாளாகமம் 7:6

இந்த வசனத்தில் பென்யமீனின் குமாரர்கள் மொத்தம் மூன்று பேர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக இதே ஆகாமத்தில் மற்றோர் இடத்தில் வேறு விதமாக கூறப்படுகின்றது:

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான். - 1 நாளாகமம் 8:1-2

மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு நேர் முரணான இந்த வசனங்களில் பென்யமீனுக்கு மொத்தம் 5 குமாரர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு இடங்களிலும் பென்யமீனின் குமாரர்களில் பேலா என்பவனைத் தவிர மற்ற அனைவரையும் வேறு வேறு பெயர்களில் சம்பந்தமில்லாமல் கூறப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 3 குமாரர்கள் என்றும் மற்றொரு இடத்தில் 5 குமாரர்கள் என்று ஒரே ஆகாமத்திற்குள்ளேயே முரண்பாடுகள், இது ஒரு புறமிருக்க, இதே பென்யமீனுக்கு வேறு சில குமாரர்களும் இருந்ததாக பைபிளின் மற்றொரு இடத்தில் சொல்லப்படுகின்றது.

பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள். - ஆதியாகமம் 46:21

இந்த வசனத்திற்கும் மேலே சொல்லப்பட்ட வசனங்களுக்கும், பெயர்களில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றது என்பதை கவனியுங்கள். அடுத்து இந்த மூன்று இடங்களில் சொல்லப்பட்ட வசனங்களுக்கும் மாற்றமாக இதே பென்யமீனும்கு வேறு பெயர்களைக்கொண்ட சில குமார்கள் இதே பைபிளின் மற்றோர் இடத்தில் சொல்லப்படுகின்றது:

பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும், சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்.. - எண்ணாகமம் 26:38-40

இப்படி பைபிளின் நான்கு இடங்களில் பென்யமீனுடைய குமார்கள்பற்றி பல முரண்பட்ட தகவலே கொடுக்கப்படுகின்றது. இந்த பென்யமீனுக்கு எத்தனைக்குமாரர்கள் இருந்தால் என்ன? அவனுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள் என்பது பற்றி சொல்வதன் மூலம் கர்த்தர் என்ன உபதேசத்தை இந்த உலக மக்களுக்கு சொல்லவருகின்றார், அதை ஒரு இறைவேதத்தில் பல இடங்களில் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இப்படி ஒன்றுக்கொண்று முரண்பட்ட புத்தகங்களைக் கொண்ட பைபிளை எப்படி இறைவேதமாக ஏற்க முடியும்? இந்த புத்தகங்கள் எப்படி பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டதாக நம்ப முடியும்?

முரண்பாடு 16:

இஸ்ரவேலை ஆண்ட இராஜா ரெகொபெயாம் என்பவனின் மகன் அபியா என்பவன் அவனுக்குப்பின் இராஜாவானதாக 2 நாளாகமம் 12:16ல் சொல்லப்படுகின்றது. அவன் 3 வருடங்கள் எருசலேமை ஆண்டதாகவும், ஆனால் அவனது தாயார் யார், அவளது பெயர் என்ன என்பதில் பைபிளின் புத்தகங்கள் வழக்கம் போல் ஒன்றுக்கொண்று முரண்படுகின்றது.

அவனது தாயார் பெயர் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் என்று 2 நாளாகமம் 13:2ல் சொல்லப்படுகின்றது.

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள் - 2 நாளாகமம் 13:2

ஆனால் இதற்கு நேர்முரணாக 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை மணமுடித்து அவள் மூலம் அபியாவைப் பெற்றதாக கூறுகின்றது :

அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான் அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். - 2 நாளாகமம் 11:20

உன்மையில் ரெகொபெயாம் யார் மூலம் அபியாவைப் பெற்றான்? ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் மூலமா? அல்லது அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலமா? இது ஒருபுறம் இருக்க, 2 நாளாகமம் 11:20ல் உள்ள மற்றொரு குளறுபடியையும் கவனியுங்கள். அதாவது, இந்த 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலேமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலம் அபியாவைப் பெற்றதாக சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அப்சலேமுக்கு ஒரு குமாரத்திதான் இருந்தாள், அவள் பெயர் தாமார் என்று 2 சாமுவேல் 14: 27ல் குறிப்பிடப்படுகின்றது. அப்சலேமுக்கு இல்லாத குமாரத்தியாகியா மாகாளின் மூலம் எப்படி அபியாவை ரெகொபெயாம் பெற்றெடுக்க முடியும்?

முரண்பாடு 17:

சாலமோன் ராஜா தான் கட்டிய அரண்மனையில் வென்களக்கடல் என்னும் தொட்டியைக் கட்டினானாம். அதைப்பற்றி பைபிளின் இரண்டு இரங்களில் சொல்லப்படுகின்றது. 1 இராஜாக்கள் 7: 26ல் அந்தத் தொட்டியின் அளவு 2000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும், ஆனால் அதற்கு நேர் முரணாக 2 நாளாகமம் 4: 5ல் 3000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உன்மையில் எத்தனைக் குடம் தண்ணீர்ப்பிடிக்கும் வகையில் சாலமோன் அந்த வெண்களக்கட்ல் தொட்டியைக் கட்டினான்?

முரண்பாடு 18:

சவுல் இறந்தது எப்படி?

தற்கொலை செய்து கொண்டு செத்ததாக 1 சாமுவேல் 31:4-6ம் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இதற்கு நேற்முரணாக சவுலை அமலேக்கியன் என்பவன் தான் கொன்றதாக 2 சாமுவேல் 1:1-16ல் சொல்லப்படுகின்றது. உன்மையில் சவுல் இறந்தது எப்படி? அவனின் மரணம் குறித்து எந்த புத்தகத்தில் சொல்லப்படும் செய்தியை நம்ப வேண்டும்?

முரண்பாடு 19:

தாவீதின் படைத்தலைவன் ஒரே நேரத்தில் எத்தனைபேரை கொண்று போடுவான்?

தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன். இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான். - 1 நாளாகமம் 11:11

இந்த வசனத்தில் தாவீதின் சேர்வைக்காரரின் தலைவனாக இருந்தவன் ஒரே நேரத்தில் 300 பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்குவதன் மூலம் கொண்று போடுவான் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேல் 23:8ல் பின்வருமாறு கூறப்படுகின்றது:

தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன். இவன் எண்ணூறு பேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். - 2 சாமுவேல் 23:8

இந்த வசனத்தில் ஒரே நேரத்தில் 800 பேர்களை கொண்று போடுவதாக இந்த இடத்தில் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? 800 பேர்களையா? ஆல்லது 300 பேர்களையா? அது போல், தாவீதின் சேர்வைக்காரின் தலைவன் பெயர் என்ன? தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பசெபத்தா? அல்லது அக்மோனியின் குமாரணாகிய யாஷோபியாமா?


முரண்பாடுகள் தொடரும்... இறைவன் நாடினால்


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Labels: , , , , ,