அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, December 07, 2012

பைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி?

பைபிளின் அறிவற்ற கூற்றுக்கள்

 
கிறிஸ்தவர்கள் வேதமாக நம்பக்கூடிய பைபிளின் பழைய ஏற்பாடு ஆதியாகமம் 9:11-16ம் வசனங்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
11.இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை பைபிள் குறிப்பிடுகிறது. இதில் 11 வது வசனத்தில் "இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும் உடன்படிக்கை எற்படுத்துகிறேன்" என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் இன்றளவும் சுனாமி, பெருவெள்ளம் போன்ற ஜலப்பிரளயங்கள் வந்து மாமிசமான விலங்குகளை சங்கரிக்கின்றன. கர்த்தர் சொன்னதை மறந்துவிட்டாரோ ? ஆனால் நாம் அந்த விஷயத்தை இங்கே முக்கியமாக கூறவில்லை.


12 , 13 ஆகிய வசனங்களில் தேவன் எதற்காக வானவில்லை உண்டாக்கினார் என்ற ஒரு மாபெரும் அறிவியல் தத்துவத்தை பைபிள் சொல்கிறது. வானவில்லை நான் எதற்கு வைத்தேன் தெரியுமா ? இனி உங்களை ஜலப்பிரளயத்தில் கொல்ல மாட்டேன் என்று நான் உங்களிடம் உடன்படிக்கை செய்துள்ளேனே ? அதற்கு அடையாளமாக வானவில் இருக்கும். இந்த உடன்படிக்கை எனக்கு மறந்து போக கூடாதுன்னு இந்த வானவில்லை வைத்து நான் நினைவு கூர்ந்து கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்.வானவில்லை வைத்துதான் கர்த்தர் நினைவு கூற வேண்டுமா ? கர்த்தருக்கு நினைவாற்றல் அவ்வளவு மந்தமா ? வானவில் இல்லை என்றால் கர்த்தர் ஜலப்பிரளயத்தை மறந்து விடுவாரா? என்பன போன்ற கேள்விகளை கூட ஒதுக்கி வைத்து விடலாம்.இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலபிரளயதிர்க்கு பின்புதான் வானவில்லை கர்த்தர் வானத்தில் வைத்தாராம் !!!!வானவில் எதனால் உண்டாகிறது ? "Principle Of Dispersion Of Light " என்று பள்ளிகளில் நாம் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புக்களில் படித்திருப்போம். அந்த அளவிற்கு கூட கர்த்தரின் அறிவு வளரவில்லை என்பதற்கு [ஆதியாகமம் 9 :13] சாட்சி.

இந்த  "Principle Of Dispersion Of Light " என்றால் என்ன ? http://en.wikipedia.org/wiki/Dispersion_(optics) . வெள்ளை ஒளி ஒரு முப்பட்டகம் (Prism ) வழியாகவோ  அல்லது ஒரு அலைவளைவுக் கீற்றணி (Differential Grating) வழியாகவோ சென்றால் தன்னுள் ஐக்கியமாகி இருக்கும் பல நிறங்களாக (அலைநீளங்களாக Wavelenghths)  பிரியும். வானவில் எதனால் வானத்தில் உண்டாகிறது என்றால் மழை துளிகளோ, அல்லது மிக சிறிய பனி துளிகளோ பூமியில் விழும் போது சூரியனின் வெள்ளை ஒளி அதில் படும். அப்போது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு முப்பட்டகம் போல் செயல்படும். எல்லா முப்பட்டகங்களிலும் உள்ளுக்குள் ஏற்படுகின்ற Refraction - Reflection -Refraction இந்த நீர்துளிகளிலும் ஏற்படும். அதனால் பல அலைநீலங்களாக வெள்ளை ஒளி பிரிந்து வானவில்லாக நமக்கு காட்சியளிக்கும். வானவில்லின் உள்ளுள்ள பகுதியில் Scattering Of Light (ஒளி சிதைவு) அதிக அளவில் இருக்கும்.

இது நோவாவின் காலத்தில்தான் முதன்முதலில் நடந்ததா ? நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது. அப்போவெல்லாம் வெள்ளை ஒளி பிரியவில்லையா ? அப்படி பிரியவில்லை என்றால் நோவாவின் காலத்தில் கடல் ஊதா நிறத்தில் இருந்திருக்காது,  வானம் ஊதா நிறத்தில் நோவாவிற்கு தெரிந்திருக்காது, இலைகள் பச்சை நிறத்தில் தெரிந்திருக்காது, நோவாவும் மனிதன் இருக்கும் நிறத்தில் இருந்திருக்க மாட்டார். பூமியில் எல்லாமுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருந்திருக்கும் !!!!!ஆக  [ஆதியாகமம் 9 :13] த்தில் பைபிள் சொல்வது அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் என்று தெளிவாகிறது. கர்த்தர் கொடுத்த வார்த்தையாக இருந்திருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது.

பின் குறிப்பு : Dispersion Of Light எனும் நியதியை கண்டுபிடிக்க பெரும் துணையாக இருந்தது 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லீம் விஞ்ஞானி "இப்ன் அல் ஹய்தம்". இவரது "கிதாப் அல் மனாசீர் (Book Of Optics ) இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. http://en.wikipedia.org/wiki/Alhazen


நன்றி: ஜீசஸ் இன்வைட்ஸ்

2 comments:

Adirai Iqbal said...

assalamu alaikkum ,

please visit www.islamiyaarangam.blogspot.in

Unknown said...

//நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது.//

நோவாவின் காலத்திற்கு முன்னரே மழை போழிந்ததற்கான ஆதாரம் தரவும்