அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

Tuesday, November 18, 2008

விருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன?

பவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1

யார் இந்த புனித பவுல்? பாகம் 2

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? பாகம் 3

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4

நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? பாகம் 5


பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 6

விருத்தசேதனம் (சுன்னத்) என்பது எந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த, பல பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து மனிதனைத் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த முறை என்பது பலரும் அறிந்ததே. விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்திலும் இதை யாராலும் மறுக்க முடியாது என்பதோடு இதை அனைவரும் செய்ய வேண்டும் என்றே மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

விருத்தசேதனம் என்ற முறை முதன் முதலில் கர்த்தரால், ஆபிரகாம் மூலம் அவர் காலம் முதல் இனி பிறக்கும் ஆண்மக்கள் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டது என்று பைபிள் கூறுகின்றது. அதை பழைய ஏற்பாட்டு வசனங்கள் பின்வருமாறு உறுதிபடுத்துகின்றது:

'உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். - ஆதியாகமம் 17: 6

நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன் - ஆதியாகமம் 17:7 (WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பு)
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். - ஆதியாகமம் 17:10-11

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம். இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. - ஆதியாகமம் 17:13

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். - ஆதியாகமம் 21:4

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். - லூக்கா 2:21

விருத்தசேதனம் என்பது கர்த்தரால், முடிவில்லாத - நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்ட - கண்டிப்பாக அனைவரும் செய்யவேண்டும் - என்று வலியுறுத்தப்பட்ட ஒரு சட்டம் என்பது மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகின்றது.

ஆனால், இயேசுவை அதிசயமாக தரிசித்ததாக (?) ஒரு பொய்யைச்சொல்லி தன்னை கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்று சொல்லிக்கொண்ட பவுல், நியாயப்பிரமாணங்களை - மோசேயின் சட்டங்களை பின்பற்றுவது தனது புதிய கொள்கையின் படி தேவையற்றது என்று போதித்ததுடன் அதை பின்பற்றுபவன் இரட்சிப்பை பெற முடியாது என்றும் கூறினார் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மக்களை இயேசு போதித்த கொள்கையிலிருந்து வழிகெடுக்க பவுல் கையில் எடுத்த மிக முக்கியமான நடைமுறை, கர்த்தரால் அனைத்து ஆண்மக்களுக்கும் செய்யப்படவேண்டிய நித்திய உடன்படிக்கை என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட விருத்தசேதனம் என்ற முறையையே! காரணம் அன்றைய கால மக்கள் எந்த சட்டத்தை பின்பற்றினார்களோ இல்லையோ அனைத்து ஆண்மக்களுக்கும் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று கர்த்தரால் வலியுறுத்தப்பட்ட விருத்தசேதன முறையை மிக அவசியமானது என்றென்னி செய்துவந்தனர். காரணம் அதை விடுபவன் 'ஜனத்தில் இராதபடிக்கு அருப்புண்டு போவான்' என்று கர்த்தர் இட்ட சாபமே என்பதை பைபிளின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது :

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். - ஆதியாகமம் 17:14

இந்த அளவுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்ட, கர்த்தரின் இந்த நித்திய உடன்படிக்கையை விட்டும் மக்களை திசைத்திருப்பி விட்டால் தனது தவறான கொள்கைகளை இலகுவாக திணித்துவிடலாம் என்ற எண்ணத்துடன், தனது புதிய கொள்கையின் மூலம் இதை தேவையற்ற ஒன்று - இதை செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று போதிக்கத் தொடங்கினார் பவுல். அதுவும் இந்த தவறான கொள்கையை காத்தரின் பெயராலும், பழைய ஏற்பாட்டை தானும் பின்பற்றியதுடன் மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்ன இயேசுவின் பெயராலும் போதிக்கத் தொடங்கினார் :

இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். - காலத்தியர் : 5: 2

கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். - காலத்தியர் : 5: 6

பவுல் சொல்வது போன்று விருத்தசேதனம் செய்வதால் கிறிஸ்துவினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றால் அதை பவுலின் காலத்திலேயே வாழ்ந்த இயேசு கிறிஸ்துவே போதித்து விட்டு சென்றிருப்பாரே? அவர் யாரையும் செய்யாதீர் அதனால் எந்த ஒரு பலனும் - புண்ணியமும் இல்லை என்று கூறியிருப்பாரே? ஏன் அப்படி கூறவில்லை. மாறாக, நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட சட்டங்களை செய்யாதே என்று போதிப்பவன் வழிகேடன் - எனது கொள்கைக்கு மாற்றமானவன் என்று தானே போதித்தார் என்பதை எல்லாம் கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

நித்திய உடன்படிக்கை என்றால் என்ன?
அது மட்டுமல்ல மேலே நாம் எடுத்துக்காட்டிய ஆதியாகமம் வசனங்களில் இந்த விருத்தசேதன முறையை கர்த்தர் மனிதனுக்கு ஏற்படுத்திய நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன?

'இனி மாற்றப்படவே முடியாத நிலையான ஒன்று' அல்லது 'முடிவில்லாத ஒன்று' என்றும் அர்த்தம் வரும். இது ஏதோ சக மனிதர்களுக்குள் செய்துக்கொண்ட ஒப்பந்தமாக பைபிள் சொல்லவில்லை. மாறாக கடவுள் ஆபிரகாமுக்கு செய் என்று கட்டளை இட்டதுடன் இதை அனைவரும் செய்தே ஆகவேண்டும் என்றும் இது நித்திய உடன்படிக்கை - இதை செயல்படுத்தாதவன் 'அறுப்புண்டு போவான்' என்று வலியுறுத்தவும் செய்கின்றார். இதை இயேசுவும் செய்திருக்கின்றார். (பைபிளின் படி) அனைவரும் நியாயப்பிரமானங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருக்கின்றார். அதை நானும் பின்பற்றத்தான்வந்துள்ளேன், நீங்களும் பின்பற்றுங்கள் என்றும் சொல்லியிருக்கின்றர். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றமாக, அதே இயேசுவின் பெயராலேயே கர்த்தரின் மாற்றப்படமுடியாத நித்திய உடன்படிக்கையை எதிர்த்து தனது தவறான கொள்கையை போதிக்கின்றார் பவுல். இவரின் இந்த தவறான வழிகாட்டுதலைத் தான் இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

சரி இவரின் இந்த கூற்றிலாவது உறுதியாக இருந்தாரா? என்றால் அதுவும் கிடையாது. இவர் விருத்தசேதனம் தேவையில்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்திலேயே, வேறு ஒருவருக்கு இவரே விருத்தசேதனம் செய்துவிட்டதாக அப்போஸ்தலருடைய நடபடிகள் கூறுகின்றது:

'அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.' - அப்போஸ்தலர் 16 : 3

கடவுலின் பெயரால் போதிக்கக்கூடியவர் - உன்மையில் அது தான் சரியானதாக இருந்தால் அதை யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சுறுதியுடனல்லவா போதித்திருக்க வேண்டும்? இவர் சாதாரனமான பாமரனாக இருந்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால், பரிசுத்த ஆவி என்ற 'பவர் ஃபுல் சக்தி' தனக்கு வழிகாட்டுகிறது(?) - அது தன்னைப் பாதுகாக்கின்றது(?) என்று சொல்லிக்கொண்டவர், அதன் மூலம் பல அதிசயங்களை செய்தவர்(?) மற்றவனுக்கு பயந்து செயல்படவேண்டிய அவசியம் என்ன? இந்த பொய்யான நயவஞ்சகத்தனமான வேலை எதற்கு? விருத்தசேதனம் தேவையற்றது என்றால் அதை ஏன் அடுத்தவனுக்கு செய்து விடவேண்டும்? தனது கொள்கை உன்மையானதாக இருந்தால் அதையாருக்கும் அஞ்சாமல் உரத்து சொல்லவேண்டியது தானே? இதன் மூலமே பவுல் எப்படிப்பட்டவர் என்பது புரிகின்றதல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே!(பவுல் எப்படிப்பட்டவர் என்பதற்கு அடுத்த கட்டுரைகளில் விரிவான விளக்கம் வருகின்றது இறைவன் நாடினால்...)

இவரைப் போன்றவர்களைக் குறித்து தான் இயேசு கூறினார் :

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். - மத்தேயு 5:19

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. - மத்தேயு 23:23

இந்த இயேசுவின் போதனைகள் அனைத்தும் (பரிசேயரைச் சேர்ந்த ) இந்த பொய்யர் பவுலுக்குப் பொருந்துகின்றதா இல்லையா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே! நீங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்றோம் என்றப்பெயரில் இயேசுவைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது பவுலைப் பின்பற்றுகின்றீர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே!


மீண்டும் நினைவுட்டுகின்றோம். இந்த விருத்தசேதனம் :
கர்த்தரால் சொல்லப்பட்ட கட்டாயம் செய்யபட வேண்டிய நித்திய உடன் படிக்கை என்று பைபிள் கூறுகின்றது. இந்த உடன்படிக்கையில் மாற்றமோ - முடிவோ ஏற்படாதவகையில் இருக்கவேண்டும் என்பதற்காக இது முடிவில்லாத - நித்திய - உடன்படிக்கை என்று கார்த்தரால் சொல்லப்பட்டது. 'இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனதுசந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். (ஆதியாகமம் 17:7 (WBTC மொழிப்பெயர்ப்பு))

விருத்தசேதனம், இயேசுவால் செயல்படுத்தப்பட்டதுடன், (விருத்தசேதன சட்டம் இடம்பெற்றுள்ள) நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்றும், அவைகளில் சொல்லப்பட்டவைகளை செய்யாதவனும், தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களை பின்பற்றவேண்டாம் என்று சொல்பவனும் வழிகேடன் என்றும் சொல்லப்பட்டது.

மட்டுமல்ல, மருத்துவ ரீதியாக இது மனிதனுக்கு பயனள்ள முறை என்பதும், பாலியல் ரீதியான பல பிரச்சனைகளிலிருந்து மனிதனைப் பாதுகாக்கக்கூடிய மிக சிறந்த வழிமுறை என்றும் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

இவற்றில் எந்த ஒன்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவத்தின் மூலம் இயேசுவை தரிசித்தேன் என்று சொல்லிக்கொண்ட பவுலின் தவறான கொள்கையையே தற்போது பின்பற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

கார்த்தரின் உடன்படிக்கை என்ற வகையிலாவது அல்லது இயேசுவின் போதனை என்ற வகையிலாவது, அல்லது மருத்துவரீதியிலாவது - எப்படிப் பார்த்தாலும் எல்லாவகையிலும் நன்மை பெற்றுத்தரக்கூடிய இந்த முறையை - செயல்படுத்தவேண்டிய இந்த சட்டத்தை - பவுல் சொன்னார் என்பதற்காக உங்களின் அறியாமையால் நன்மையை இழந்துக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதரர்களே!

இப்படி நீங்கள் பவுலை பின்பற்றுவதால் (இயேசுவின் போதனைப்படி) மரணத்திற்குப் பிறகு வரும் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பதும் அரிது, விஞ்ஞானிகள் சொல்வது போல் இந்த முறையை கைவிடுவதால் இவ்வுலக வாழ்விலும் பல சிரமங்கள்... இது தேவையா? சிந்தியுங்கள் சகோதரர்களே!.

இயேசுவின் பெயரால் அவருக்கு எதிராக இன்னும் எத்தனை எத்தனை குளறுபடிகளை பவுல் செய்துள்ளார் என்பதை அடுத்தடுத்து பதிவுகளில் பார்ப்போம்.

கர்த்தர் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Thursday, November 13, 2008

நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1
.யார் இந்த புனித பவுல்? - பாகம் 2
இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? - பாகம் 3
பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4


பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 5
.
நியாயப்பிரமாணங்களை - கர்த்தரின் கற்பனைகளை - பின்பற்றுவது தேவையற்றது என்று போதித்தால் தான் அதற்கு மாற்றமான தனது புதிய கொள்கைகளைப் திணிக்க முடியும் என்பதற்காக, அவை அனைத்தும் ஏட்டளவில் தானேயொழிய செயலளவில் தேவை இல்லை, அவை பலவீனமாகிவிட்டது, பயணற்று போய்விட்டது, அதைப் பின்பற்றுபவன் இரட்சிப்பைப் பெறமுடியாது, இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்ததன் மூலம் நம்மை நியாயப்பிரமானத்தை விட்டும் நீங்களாக்கினார் என்று தனது புதிய கண்டுபிடிப்பை - தனது துர் போதனைகளை போதிக்க தொடங்கினார் பவுல். இவை தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. இன்றைய சர்ச்சுகள் போதிப்பதும், இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதும் பவுலின் இந்த சொந்தக்கற்பனையையே அன்றி இயேசுவின் கொள்கைகளையோ அல்லது இயேசு போதித்த கோட்பாடுகளையோ அல்ல. உன்மையில் சொல்லப்போனால் இயேசுவுக்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

பவுலின் இந்த புதிய கொள்கை என்பது முழுக்க முழுக்க இயேசுவின் கொள்கைக்கு மாற்றமானதும் அவரின் போதனைகளுக்கு எதிரானதுமாகும் என்பதை இன்றைய பைபிளே தெளிவுபடுத்துகின்றது. உன்மையில் நியாயப்பிரமானங்கள் குறித்தும், கர்த்தரின் கற்பனைகள் குறித்தும் இயேசுவின் போதனை தான் என்ன?

நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-20)

இந்த வசனங்களின் மூலம் நியாயப்பிரமாணம் மற்றும் பழைய ஏற்பாட்டைப் பற்றிய இயேசுவின் நிலைபாடு என்ன வென்று தெளிவாக புரிந்திருக்கும்.

இயேசு இந்த வசனங்களின் மூலம் நியாயப்பிரமானத்தை தான் அழிக்கவரவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதோடு, அதை நிறைவேற்றவே - அதை செயல்படுத்தவே - வந்தேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றார். அது மட்டுமல்ல நியாயப்பிரமானத்தை கைக்கொள்ளுவதன் மூலமே ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தில் பெரியவன் என்பபடுவான் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளவைகளை மீறி செயல்படுவதுடன், அதையே மற்றவர்களுக்கும் போதிப்பவன் பரரோக இராஜ்ஜியத்தில் சிறியவன் எனப்படுவான் - அவன் வழிகேடன் - என்றும் போதிக்கின்றார். இது பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை நன்கு கவனிக்க வேண்டும்:

இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.

இந்த வசனங்களை WBTC பைபிளின் மொழிபெயர்ப்பில் இன்னும் தெளிவாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:

... ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக் கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதை கடைப்பிடிக்க வேண்டாமென்று கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால் கட்டளைகளை கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்க சொல்லுகிறவன் பரலோக இரஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பான் - மத்தேயு 5:19

இப்படிப்பட்ட இயேசுவின் எச்சரிக்கைளுக்கு மாற்றமாக - அவரின் இந்த வார்த்தைகளுக்கு நேர் முரணாக - இயேசுவை அதிசயமான முறையில் தரிசித்ததாக ஒரு பொய்யை சொல்லி தனக்கு இயேசுவே நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன பவுல், எப்படிப்பட்ட ஒரு தவறான கொள்கையை - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஒரு கொள்கையை - போதிக்கின்றார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நியாயப்பிரமானத்தை பின்பற்றாதே என்று சொல்பவன் வழிகேடன், அப்படிப்பட்டவன் இரட்சிப்பை பெறமுடியாது என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக போதிக்கும் பவுலின் கொள்கை எப்படி பரலோக இராஜ்யத்தைப் பெற்றுத் தரும்? இவரின் கொள்கையைப் பின்பற்றுபவன் எப்படி நித்திய ஜீவனை அடைய முடியும்? என்பதை கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமல்ல இயேசு தன் சீடர்கள் உட்பட அனைவரும் யூதர்களைக் காட்டிலும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதை - நியாயப்பிரமாணத்தை - அதிகம் பின்பற்ற வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்று பைபிள் கூறுகின்றது :

'பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.' - மத்தேயு - 23:1-3

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கக்கூடியவர்கள் - நியாயப்பிரமாணத்தை - மோசேயின் சட்டங்களைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் - சொல்வது போன்று நியாயப்பிரமாணங்களை - கர்த்தரின் கற்பனைகளை - நிங்களும் பின்பற்ற வேண்டும் அதன்படி செயல் படவேண்டும் என்று தனது சீஷர்களுக்கும், மக்களுக்கும் உபதேசிக்கின்றார்.

(பைபிளின்படி) தான் மட்டுமல்ல தன்னைப் பின்பற்றும் அனைவரும் நியாயப்பிரமாணத்தை - பழைய ஏற்பாட்டை - பின்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கொள்கை - அவரது நிலைபாடு என்பது மிகத் தெளிவாக மேற்கூறப்பட்ட வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப் படுகின்றது. இப்படி மக்களுக்கும் தனது சீஷர்களுக்கும் தெளிவாக உபதேசித்திருக்க சில ஆண்டுகளிலேயே அதற்கு மாற்றமாக பவுலுக்கு எப்படி நியாயப்பிரமாணம் தேவையற்றது பலவீனமடைந்துவிட்டது அதை பின்பற்றத் தேவையில்லை என்று இயேசு சொல்லியிருப்பார்? அப்படி நியாயப்பிரமானமும் கர்த்தருடைய கற்பனைகளும் தேவை இல்லை என்றால் அதை அவரே சொல்லியிருக்கலாமே? ஆனால் அதற்கு மாறாக பவுல் போன்று நியாயப்பிரமானம் தேவையற்றது என்று போதிப்பவன் வழிகேடன் - பரோலக இராஜ்யத்தில் சிரியவன் எனப்படுபவன் என்று தானே போதித்தார்!

இதுமட்டுமல்ல ஒருவன் இயேசுவிடம் நித்திய ஜீவனை அடைவதற்கு என்ன செய்யவேண்டும்? எதைப் பின்பற்றவேண்டும் என்று கேட்கின்றான். அதற்கு இயேசு சொன்ன பதிலைப் பாருங்கள் :

அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். - மத்தேயு 16-19

இயேசுவின் போதனைகள் அனைத்தும் இப்படித்தான் இருந்தது. (பைபிளின்படி) இயேசுவைப் பொருத்தவரையிலும் பழைய ஏற்பாட்டைப் பொருத்தவரையிலும் நியாயப்பிரமானத்தைத் உறுதியாகப் பிடித்து அததைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு மாற்றமாக இயேசுவிற்குப் பிறகு ஒரு பொய்யான சம்பவத்தின் மூலம் அவரை தரிசித்ததாக கூறிய பவுல், தனது தவறான கொள்கையை அதே இயேசுவின் பெயராலேயே மக்கள் மத்தியில் திணிக்கின்றார். அதை தனது எபிரேயர் என்ற புத்தகத்தில் பின்வருமாறு தெரியப்படுத்துகின்றார்:

முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். - எபிரேயர் - 7:18-19

இந்த வசனத்தின் மூலம் இயேசுவுக்கு முன்னும் இயேசுவும் போதித்த அனைத்தும் பவவீனமடைந்து விட்டதாகவும் பயனற்று போய்விட்டதாகவும் அதனால் மாற்றப்பட்டது என்றும் பவுல் கூறுகின்றார். அது மட்டுமல்ல நியாயப்பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்றும் அதிக நன்மையான நம்பிக்கையை அது வருவிக்கவில்லை என்றும், எனவே அது மாற்றப்பட்டது என்றும் தன் சுய கருத்தை தினிக்கின்றார்.

பவுலின் இந்த புதிய கொள்கையின் மூலம் எப்படிப்பட்ட தவறான - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஒரு கொள்கையை போதிக்கின்றார் நாம் கவனிக்க வேண்டும். நியாயப்பிரமாணம் உட்பட முந்தின கட்டளைகள் அனைத்தும் பலவீனம் அடைந்து விட்டதாம். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லையாம். அது அதிக நன்மையையும் நம்பிக்கையையும் வருவிக்கவில்லையாம். அதனால் மாற்றப்பட்டு இவர் புதிய கொள்கையை போதிக்கின்றாராம். இதை எப்பொழுது சொல்லுகின்றார்? இயேசுவிற்குப் பிறகு 1000 ஆண்டுகள் கழித்தா? அல்லது 500 ஆண்டுகள் கழித்தா? அல்லது 200 ஆண்டுகள் கழித்தா? இல்லையே! இயேசுவிற்குப் பிறகு ஒரு சில ஆண்டுகளில் இந்தக் கருத்தை இவர் சொல்கின்றார்? அது உன்மையாக இருந்தால் அதை அதேகாலத்தில் வாழ்ந்த இயேசுவே போதித்துவிட்டுப் போயிருப்பாரே? அப்படி நியாயப்பிரமானம் பலவீனமடைந்துவிட்டது என்றால் அதை இயேசுவும் அறிந்திருப்பாரே? அது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்று தன் வாழ்நாளிலேயே சொல்லியிருப்பாரே? அப்படியா சொன்னார்? இல்லையே! மாறாக இயேசு தனது வாழ்நாள் முழுவதும் பல எதிர்ப்புகளையும் மீறி நியாயப்பிரமானத்தை பின்பற்றுங்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் பின்பற்றுங்கள் என்று தானே போதித்தார். அது மட்டுமல்ல, இந்த நியாயப்பிரமானத்தை தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களையும் பின்பற்றக்கூடாது என்று சொல்பவன் வழிகேடன் என்றும் போதித்தார்.

அடுத்து பவுலின் இந்தக் தவறான கருத்துக்கு மாற்றமாக உள்ள பைபிளின் மற்ற வசனங்களை பாருங்கள்:

கர்த்தரின் கட்டளைகள் எப்படிப்பட்டது என்பது குறித்து பழைய ஏற்பாடு சங்கீதம் கூறுகின்றது :

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. - சங்கீதம் 19:7,8

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் - 119 : 160

இந்த வசனங்களின் மூலம் கர்த்தரின் வேதம் எவ்வளவு பெரிய பலமிக்கது என்று சொல்வதுடன் ஆத்துமாவை உயிர்பிக்கக்கூடியது, பேதையை ஞானியாக்கும் சக்தி உடையது என்று சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக முந்தைய கட்டளைகள் பலவீனமடைந்துவிட்டதாகவும் பயனற்றுபோய் விட்டதாகவும், நம்பிக்கையை பூரணப்படுத்தவில்லை என்றும் பவுல் சொல்வது அனைத்தும் தனது சுயகருத்து - சாத்தானின் தூண்டுதலால், இயேசுவிற்கு மாற்றமாக சொல்லப்பட்ட கருத்து என்பது தெளிவாகின்றதல்லவா? பவுல் சொல்லுவது சரி என்றால் இந்த சங்கீதம் வசனங்கள் தவறென்றாகிவிடும். காரணம் சங்கீதம் வசனங்கள் கர்த்தருடைய வேதமும் கட்டளைகளும் எப்படிப்பட்ட பலமிக்கதென்று தெளிவாகவே சொல்லுகின்றது.

அது மட்டுமல்ல இது போன்ற பைபிள் வசனங்களுக்கு மாற்றமாக இயேசு போதித்த கொள்கைகளுக்கு மாற்றமாக பவுல் சொல்லும் புதிய கொள்கைகளைப் பாருங்கள் :

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. - ரோமர் 6:14

நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. - காலத்தியர் 2:16

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். - ரோமர் 7: 4

ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்;;பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. - காலத்தியர் : 5:18

சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து,... - எபேசியர் 2:15

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். - ரோமர் 7:4-6

இவை அனைத்தும் இயேசு வலியுறுத்தி சொன்ன கொள்கைளுக்கு மாற்றமாக - பைபிளின் எண்ணற்ற வசனங்களுக்கு மாற்றமாக - இயேசுவிற்குப் பின் சில ஆண்டுகளில் இந்த புதிய கொள்கையை திணிக்கின்றார் பவுல். இயேசுவால் பரலோக இராஜ்யத்தில் சிரியவன் எனப்படுவான் என்று எவர்களைக் குறித்து கூறினாரோ அந்த கொள்கையைத்தான் போதிக்கின்றார் பவுல். பவுலின் இந்த கோட்பாட்டுகளைத் தான் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றார்களே யொழிய இயேசு போதித்த கொள்கையை அல்ல. இயேசுவை அவர்கள் ஒரு போதும் பின்பற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் போதனைகளின் படி பவுல் சொல்வதைப் பின்பற்றுபவன் இரட்சிப்பைப் பெறமுடியாது, அவன் வழிகெட்ட பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

அடுத்து இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். இன்றைய கிறிஸ்தவர்கள் பலர் இயேசு சொல்வது போல் நியாயப்பிரமானங்களையும் கர்த்தரின் கற்பனைகளையும் பின்பற்றுவதா அல்லது அவருக்கு மாற்றமாக சில ஆண்டுகள் கழித்து புதிய கருத்துக்களை போதித்த பவுல் சொல்வதைப் பின்பற்றுவதா என்று சரியான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தங்களுக்குள்ளேயே ஒரு குழப்ப நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. நியாயப்பிரமாணத்தை - பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது கூடாதா? என்று சில கிறிஸ்தவ தளங்களில் விவாதங்கள் வைக்கப்பட்டு - பவுல் சொன்ன புதிய கொள்கையின் படி அந்த நியாயப்பிரமாணத்தையும் பத்துக்கட்டளைகளையும் பின்பற்றுவது தவறு என்று ஒரு சிலரால் வலியுறுத்தப்படுவதுடன் அதற்கு என்ன பதில் சொல்வது என்று திணறும் பல கிறிஸ்தவர்களின் பரிதாப நிலையையும் காண முடிகின்றது. அது மட்டுமல்ல, அந்த பதிவையே சில நாட்களில் வஞ்சகத்தனமாக தளநிர்வாகிகளால் நீக்கப்படும் கொடுமையும் நடக்கின்றது. காரணம் பவுலை பின்பற்றுவதா அல்லது இயேசுவை பின்பற்றுவதா என்ற குழப்பமே. ஏனெனில் பவுலை பின்பற்றினால் இயேசுவை பின்பற்ற முடியாது. இயேசு சொல்வதை பின்பற்றினால் பவுலுக்கு எதிரானதாக அது ஆகிவிடும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இயேசுவின் கொள்கைகளுக்கு எதிரான பவுலுடைய வழிகெட்ட போதனையும் குழப்பமான கருத்தும் பைபிலிலேயே இடம்பெற்றுள்ளதுடன், அந்த பவுல் சொல்லும் அனைத்தும் பரிசுத்த ஆவியின் மூலம் சொல்லப்பட்ட வசனங்களே என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பதும் தான் கொடுமையிலும் கொடுமை.

பவுல் தனது புதிய கொள்கைகள் மூலம் இயேசு போதித்த அவர் பின்பற்றிய, கர்த்தர் பழைய ஏற்பாட்டு வசனங்களின் மூலம் இனி வரும் அனைவரும் பின்பற்றியே ஆகவேண்டும் என்று வலியுறுத்திய எண்ணற்ற சட்டங்களை தனது மனோ இச்சையின் மூலம் கடவுளின் பெயராலும் இயேசுவின் பெயராலும் மாற்றி அமைக்கின்றார். அவற்றில் சிலவற்றை இனி காண்போம்.


கர்த்தர் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Monday, November 10, 2008

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1

யார் இந்த புனித பவுல்? - பாகம் 2

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? - பாகம் 3

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 4

இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

பவுல் பிரச்சாரம் செய்த காலத்திலேயே "வேறொரு சுவிசேஷத்தை", "வேறொரு இயேசுவைப்" பற்றிய பிரச்சாரம் அங்கே இருந்து வந்தது.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்க திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிஷேத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான். மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:6-12)

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் ப்றிற உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாக வெறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக் கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மாக பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன். (2 கொரிந்தியர் 11:3-6)

இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களிமிருந்து கற்றதாக பவுல் ஒரு போதும் சொன்னதில்லை. அது மாத்திரமல்லாமல் அது தேவையுமில்லை என்று அவர் கூறுகின்றார். ஏனெனில், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் எனப் பவுல் கூறுகின்றார்.

பவுலின் இந்தக் கூற்று நன்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் பிரச்சாரம் செய்தது இயேசு செய்த அதே பிரச்சாரம்; தான் என்றால் அதற்கு சாட்சியாக இயேசுவின் நேரடி சீடர்களை கோடிட்டு காட்டி என் பிரச்சாரமும் அவர்கள் பிரச்சாரமும் ஒன்று தான் என்று கூறியிருக்க முடியும். இவர் பிரச்சாரம் செய்வது இயேசுவின் நேரடி சீடர்களின் பிரச்சாரத்திற்கு நேர் எதிராக இருந்தால் அவர் நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவரின் வார்த்தையில் கிறிஸ்துவத்தின் கொள்கை அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது தான். இவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையும், அவர் இயேசுவோடு உரையாடியாதாக சொல்லப்பட்ட சம்பவகளும் எந்த அளவுக்கு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் மேலே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு மேற்கண்ட பவுலின் கூற்று பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் : உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகின்றேன் என்றால் என்ன?

கிறிஸ்துவின் கிருபையினாலே அழைப்பது என்றால் என்ன எனத் தெரிந்தால் தான் பவுல் அவர்கள் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று சொல்வதன் முழு அர்த்தம் என்ன என்பது தெரிய வரும்.

இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளுக்குக் கீழப்படிந்து நியாயப்பிரமாணங்களில் உள்ளவற்றைப் பின்பற்றி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழும் போது தான் நிலையான பெருவாழ்வை - பரலோக இராஜ்ஜியத்தை - மனிதன் அடைய முடியும் என்பது அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனையாயிருந்தது.

ஆனால் பவுலோ இதற்கு முற்றிலும் மாற்றமாக பிரச்சாரம் செய்தார். நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுவதெல்லாம் இயேசுவிற்கு முன்பு வரைதான். இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை கிருபைக்கு உள்ளாக்கி விட்டார். ஆகவே நியாயப் பிரமாணங்களைப் பின்பற்றத் தேவையில்லை. இனி இயேசு நம்மை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கவே தம்மை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் என்று நம்பினால் போதும். நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டியதில்லை. இவை எல்லாம் பவுலின் வாதம். அதானல் தான் பவுல் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறுகின்றார்.

இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோசனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப் பிரமாணத்திலினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். (கலாத்தியர் 6:2-4)

அதாவது இவரின் புதிய போதனையின் படி கிறிஸ்துவை நம்பி விட்டால் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையையே உங்களுக்கு நிலையான பெருவாழ்வை அளிக்க போதுமானதாக இருக்கும் போது நியாயப் பிரமாணம் உங்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் எண்ணினால் அந்த விசுவாசம் உங்களிடம் இல்லை என்று அர்த்தம். இதைத் தான் பவுல் அவர்கள் : நியாயப் பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்த கிருபையினின்று விழுந்தீர்கள் என்று கூறுகின்றார்.

பவுல் மேலும் கூறுகின்றார் : நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர் 2:21)

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டால் நீதிமான்களாக்கப்படுவோம் என்று பவுல் சொல்வது என்ன என்பதை வாசகர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். பவுல் கூறும் விசுவாசம் என்பது இயேசுவை இறைமகன் என்றோ, இறைத்தூதர் என்றோ மாத்திரம் விசுவாசித்து விட்டு நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் அந்த விசுவாசம் விசுவாசமே அல்ல. அதனால் பலனும் இல்லை. ஆனால் இயேசுவின் மேலுள்ள விசுவாசம் என்னவெனில், அவர் நம்மை நியாயப்பிரமாணங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்து விட்டார் என நம்பி நியாயப்பிரமாணத்தை கைவிட்டு விட வேண்டும். இது தான் பவுல் கூறும் இயேசுவின் மேலுள்ள விசுவாசம். பவுலின் இந்தப் பிரச்சாரம் நன்கு கவனிக்கப்பட வேண்டியதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதுமாகும்.

பவுலை எதிர்த்து "சுவிசேஷத்தையும்'', ''வேறொரு இயேசுவையும்'', பிரச்சாரம் செய்தவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளாமல் இருந்தனரா? அவர்கள் இயேசுவின் மீது விசுவாம் கெர்ணடிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் பவுலிற்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமை என்ன? அவர்கள் இயேசுவை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று ஏற்றுக் கொண்டு இறைவனின் கட்டளைகளை பின்பற்றி அவனுக்குக் கீழ்ப்படிந்தால் தான் இறைவனின் திருப்தியும் நீதியும் கிடைக்கும் என நம்பினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? மனிதர்களை பாவங்களிலிருந்தும் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் விடுவிக்கவே இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.

சகோதரரே..! இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தை பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்ககும் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும். (கலாத்தியர் 6:11-12)

பிரச்சினை இது தான். சிலுவையிலறையப்பட்டதால், மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட வேண்டியதில்லை என்ற அந்த பவுலின் கொள்கை தான் பிரச்னைக்கு பிரதான காரணமாயிருந்திருக்கிறது.

இயேசுவை ஏற்றுக் கொண்ட மக்கள் மனிதர்களின் பாவத்தை நீக்குவதற்காக இயேசு சிலுவையில் தன்னைத் தானே ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இயேசு அதைப் போதிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும். அவர் அதற்காகவும் வரவில்லை. மக்கள் இறைவனிற்கு கீழ்ப்படிந்து நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே வந்தார். ஆனால் பவுல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் இது அவருடைய சொந்தக் கண்டுபிடிப்புதானே அல்லாமல் அது வேறென்னவாக இருக்க முடியும்?

இது இவ்வாறிருக்க, நியாயப்பிரமாணங்கள் பற்றி இயேசு என்ன கூறுகின்றார்? பவுலின் இந்தப் பிரச்சாரம் இயேசுவின் பிரச்சாரத்திற்கு உகந்ததா? நான் சிலுவையில் அடிக்கப்பட்டு உங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப் போகின்றேன். ஆகவே நீங்கள் நியாயப்பிரமாணங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று சொன்னாரா? அல்லது அதற்கு மாற்றமாக சொன்னாரா? பரலோகராஜ்யம் செல்வதற்குரிய வழி என்னவெனில் பிரமாணங்களை கையாளுவதுதான். இதைத் தான் இயேசு தன்னுடைய வாழ்நாளில் பிரச்சாரம் செய்து வந்தார். அதையேதான் அவரது உன்மையான சீடர்களின் போதனையாகவும் இருந்திருக்க வேண்டும்.
இயேசுவின் போதனைகளுக்கும் அவரின் கொள்கைகளுக்கும் மாற்றாக பவுல் எவ்வாறெல்லாம் போதித்தார், எவற்றையெல்லாம் போதித்தார் என்பதை இனி காண்போம்.

நியாயப்பிரமானங்களையும் தீர்க்கதரிசனங்களையும் இயேசு பின்பற்ற சொன்னாரா? அல்லது பின்பற்ற கூடாது என்றாரா? - நாளைத் தொடரும்... இறைவன் நாடினால்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Monday, February 25, 2008

தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?

பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :
- அபுஇப்ராஹீம், சென்னை

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்' என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )

இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள். அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.

இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)

இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.

இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார். இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார். இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?

அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?

//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//
//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //

உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?

இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?

அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.

அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4

இங்கே யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளத்தை காட்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு இயேசு அந்த யூதர்களின் மேல் எரிச்சலடைந்து யூதர்களைத் திட்டாமல் யூதர்களின் தாய்மார்களைத் திட்டுகிறார். அதில் வரக்கூடிய வாசகம் 'விபச்சார சந்ததியர்' இதை நம்ம தமிழ் பைபிள் மொழிப்பெயர்பாளர்கள் கொஞ்சம் 'டீசன்டாக' மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக.

ஆனால் இயேசு திட்டியதாக சொல்லப்படும் அந்த வார்த்தையின் நேரடி மொழிப்பெயர்ப்பு என்ன?

பொல்லாத விபச்சார சந்ததியினர் = கெட்ட வேசிமக்கள் = கெட்ட வேசிபிள்ளைகள் = கெட்ட வேசி சந்ததியினர் = கெட்ட தேவ்டியா மக்கள் = கெட்ட தேவ்டியா பிள்ளைகள்

அதவாது 'இந்த கெட்ட வேசிமக்கள் - தேவ்டியாமக்கள்' அடையாளத்தை தேடுகிறார்கள் ...'

இப்படிப்பட்ட கேவலமான - இன்றைய ரௌடிகளும், பொருக்கிகளும் உபயோகப்படுத்தும் வாத்தைகளைத் தான் பரிசுத்த இயேசு பயன்படுத்தினார் என்று சொல்கிறது பைபிள்.

இப்படித் திட்டுவது தான் பெற்றோர்களையும் - தாய்மார்களையும் - அடுத்தவன் குடும்பத்தினரையும் மதிக்கும் லட்சனமா? அடுத்தவன் தாயை இப்படி விபச்சாரி என்றுத் திட்டலாமா? தன்னிடம் வம்புக்கு வரும் ஒருவனைப்பார்த்து 'நாயே' 'பேயே' என்றால் அவனை மட்டும் திட்டுவதாக அமையும். அதற்கு பதிலாக அவனது தாயை திட்டுவது எந்த வித்தில் நியாயம்? அவன் தாய் என்ன செய்தார்? இப்படித்திட்டினால் எவனுக்கு கோபம் வராது?

சமீபத்தில் இந்த உன்மைஅடியான் மற்றும் அவரது சகாக்கள் வேண்டுமென்றே பெருமானாரை இழிவு படுத்தும் விதமாக எழுதியதற்கு பதிலாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ (பாகம் 1, பாகம் 2), மூலம் 'இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் நேரடியாக பொது மேடையில் பதில் தருகின்றோம். எங்களிடம் நேரடி விவாதத்திற்கு தயாரா?' என்று சவால்விட்டிருந்தனர். அதற்கு பயந்த இந்த பயந்தாங்கொள்ளிகள் 'எங்களை தொடை நடுங்கி' என்றெல்லாம் திட்டுகின்றனர். இது தான் 'இவர்களின் விவாத லட்சனம்' என்று நமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பெழுதியிருந்தனர்.
விபச்சாரம் என்னும் அசிங்கமான கலாச்சராம் உலகம் முழவதும் தலைவிரித்தாடும் இந்த காலத்திலேயே பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவைப்போண்று உங்கள் தாயை அல்ல, உங்களை 'தொடை நடுங்கி' என்று கூறியதற்கே, திட்டுகின்றனர் - இது தான் இவர்களின் லட்சனம்' என்று கூச்சலிட்டீர்களே, இங்கே யூதர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் குறிக்கும் விதமாக 'கெட்ட வேசிமக்கள்' என்று தாய்மையையே அசிங்கப்படுத்துகிறாரே இதற்கு என்னப்பா பதில் சொல்லப் போகின்றீர்? எங்களைப் பொருத்தவரை ஒரு தீர்க்கதிரிசி, உங்களைப்பொருத்தவரை கடவுளின் குமாரன், இது தான் அவர் நமக்கு ஒழக்கத்தைக் கற்றுத்தரும் லட்சனமா?

உலகத்திலேயே ஒரு புனித வேதத்தில் 'பொள்ளாத விபச்சார சந்ததியினர்' - 'கெட்ட தேவ்டியா மக்கள்' என்று ஒரு பரிசுத்தர் கூறிய வார்த்தை வருகிதென்றால் அந்த சிறப்பு பைபிளை மட்டுமே சாரும்.

இப்படிப்பட்ட அநாகரீக செயல்களைக் குறித்து குர்ஆனின் படி இயேசுவின் வழியில் இறுதியாக வந்த நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உலகமக்களுக்கு கற்றுத்தரும் ஒழுக்கத்தைப் பாருங்கள் :

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது 'மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்;. அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இது போண்ற ஒழுக்கத்தை சொல்லக்கூடியவராகவும், அதை செயல்படுத்தக்கூடியவராகவும் தான் இயேசுவும் இருந்திருப்பார்கள் - இருந்திருக்க வேண்டும். அதை முஸ்லீம்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குர்ஆன் அவரை நல்லோர்களில் ஒருவர் என்று கூறுகிறது. ஆனால் பைபிளோ அவரையும் அவரைப்போண்ற தீர்க்கதிரிசிகளையும் மிக மிக மோசமானவர் என்பது போல் காட்டுகிறது.

தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)