அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, August 15, 2008

பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்?

இஸ்லாத்தின் மீது எப்படியேனும் குற்றம் சுமத்தி அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீது ஒரு தவறான கண்னோட்டத்தை உருவாக்கிடவேண்டும் என்ற தவறான எண்ணங்களுடன் தற்போது இணையங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் குர்ஆனில் வரலாற்றுத் தவறுகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதன்மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் இல்லை என்று நிரூபனம் ஆகிவிட்டதாகவும் ஒரு அபார கண்டுபிடிப்பை (?) கண்டுபிடித்துவிட்டது போல் சமீபத்தில் தங்கள் வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.

அதாவது, திருக்குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுகின்றது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் குர்ஆன் கூறும் பொழுது,

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகிறான். இந்த யஹ்யா (அலை) அவர்களை பைபிள் யோவான் ஸ்னானன் (John the Baptist) என்று வேறு ஒரு பெயரில் அழைக்கிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படப்படாத) பைபிளில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த யோவான் ஸ்னானன் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே யஹ்யா என்ற பெயரின் சிறப்பு குறித்து குர்ஆன் கூறுவது ஒரு தவறான வரலாற்று பிழை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.

இவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டிற்கு எமது சகோதரர்களால் மிகத் தெளிவாக பதில் எழுதப்பட்டுள்ளது. பார்க்க :


குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்! - சகோ. தேங்கை முனீப்

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா? - சகோ. அபூமுகை


என்றாலும், இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலை பதிவு செய்ய விரும்புகின்றோம். அதாவது, இன்றைய பைபிளில் உள்ள எல்லா கருத்துக்களையும் எல்லா வரலாற்றுத் தகவல்களையும், அப்படியே குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், பல இடங்களில் குர்ஆன் பைபிளுக்கு மாற்றமான தகவல்களைக் சொல்கின்றது எனபதையும் இன்றைய முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இருவருமே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு உன்மை.

இதில் முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாற்றமான பல தகவல்களைக் கொண்ட பைபிளை முற்றிலுமாக நிராகரிப்பதற்குக் காரணம் அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய :

என்பன போன்ற பலவீனங்களை அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு அத்தனை விதமான குறைபாடுகளையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடியதாக இன்றைய பைபிள் அமைந்துள்ளது என்பதே!

இப்படிப்பட்ட அனைத்து வகையான குறைபாடுகளை உடைய பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரை வைத்து, அதை குர்ஆனோடு சம்பந்தப்படுத்தி, குர்ஆனில் வரலாற்று பிழை உள்ளது என்று இவர்கள் சொல்வது எப்படி சரியாகும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போது இந்த 'யஹ்யா' என்ற பெயர் சம்பந்தமான இவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டச்சாட்டைப் பொருத்தவரையில், யஹ்யா (அலை) அவர்களுக்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயர்தான் முன்பு பலருக்கு இருந்ததாக கூறுகின்றார்களே யொழிய 'யஹ்யா' என்ற பெயரில் அதற்கு முன் யாரும் வாழ்ந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை, நிரூபிக்கவும் முடியாது. காரணம் இறைவன் அந்த 'யஹ்யா' என்றப் பெயர்கொண்டவரைத்தான் இதற்கு முன் ஏற்படுத்தவில்லை என்கிறான்.

அடுத்து இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய இந்த 'யஹ்யா' சம்பந்தமான குர்ஆன் வசனம், திருக்குர்ஆனில் வேறு ஒரு இடத்தில் உள்ள வசனத்திற்கு முரண்படுகின்றது என்று சொன்னால் அதை நியாயமானது எனலாம். அல்லது, பைபிளில் குறிப்பிடப்படாத குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்ட 'யஹ்யா' என்ற சிறப்புப் பெயர் இதற்கு முன் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது என்ற ஒரு வரலாற்று ஆதாரத்தையேனும் எடுத்துக் காட்டினால் அதையேனும் நியாயமானது எனலாம். மாறாக குர்ஆனில் யஹ்யா என்று ஒரு பெயர் குறிப்பிடப்பட்டு அந்த பெயரைக் கொண்ட (இறைத்தூதரான)வர் இதற்கு முன் இருந்ததில்லை என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்க, அதற்கு மாற்றமாக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள) வேறு ஒரு பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை வைத்து இந்த யோவான் என்றப் பெயர் முன்பே பலருக்கு இருக்கின்றது என்று சொல்வது எப்படி சரியாகும்? அதுவும் முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபில் குறிப்பிடக்கூடிய பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரும், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள யஹ்யா என்றப் பெயரும் முற்றிலும் மாறுபட்ட பொருளுடையதாக இருக்க இரண்டும் எப்படி ஒரே பெயராகும்?

நாம் இப்பொழுதும் சொல்லுகின்றோம், குழப்பங்கள் நிறைந்த பைபிளில் குறிப்பிடப்படும் பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை விட்டுவிட்டுங்கள். குர்ஆனில் உள்ள சிறப்புப் பெயர் என்று குறிப்பிடப்படும் 'யஹ்யா' என்றப் பெயரை அவருக்கு முன் வாழ்ந்தவர்கள் யாருக்காவது (குறிப்பாக எந்த இறைத்தூதருக்காவது) இருக்கின்றது நிரூபித்து விட்டு குர்ஆனை பொய்ப்படுத்தி விட்டோம் என்று வாதியுங்கள். அதை விடுத்து ஏதோ ஆய்வு என்றப்பெயரில் சம்பந்தமில்லாமல் குழப்பங்கள் நிறைந்த பைபிளை குர்ஆனுடன் இணைத்து உளறிக்கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

அடுத்து இவர்கள் எந்த யஹ்யா (அலை) சம்பந்தமான வசனத்திற்காக பைபிளை ஆதாரமாக வைத்து திருக்குர்ஆனில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினார்களோ, அதே பைபிளில் அவர்கள் எடுத்துக்காட்டும் யோவான் ஸ்னானன் சம்பந்தமாக உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் பாருங்கள் :

எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும்! யோவானும்!

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்கிறது.

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர்தான் யோவான் என்று இயேசுவே சுறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கின்றது.

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் நன்கு கவனிக்கவேண்டும். அதாவது, தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்கு சான்றாக 'யோவான்தான் எலியா' என்று இயேசு கூறுகின்றார். இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவான் 'நான் எலியா அல்ல' என்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் ஏன் அதை மறுக்கிறார்? எலியா ஏன் வரவேண்டும் என்றால் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும்போது அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான்ஸ்னானன் தான் எலியா என்பதற்கு அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால் அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும் அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கின்றார்.

யோவான் கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் யோவான் பற்றி 'அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவரானார்' (யோவான் 1:30) என்றும் 'ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை' (மத்தேயு 11:11) என்றும் யேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களிலேயே சிறந்தவரும் இயேசுவைவிடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்குமூலத்திலிருந்தே அறிகிறோம்.

யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களால் யோவானையும் பெய்யரென்றும் கூற முடியாது. இயேசுவையும் பொய்யரென்று கூற முடியாது. அவர்வாறு கூறினால் கிறிஸ்தவமே ஆட்டம் கண்டு விடும். கிஸ்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உன்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

எனவே இது போன்ற ஏராளமான முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தங்கள் பைபிளிலேயே வைத்துக்கொண்டு, அதுவும் நீங்கள் எந்த யோவானின் பெயரை வைத்து குர்ஆனின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்க பைபிளை ஆதராமாக எடுத்தீர்களோ அதே பைபிளிலேயே - அதே யோவானின் வரலாற்றிலேயே - இது போன்ற முரண்பாடுகளை வைத்துக்கொண்டு, குர்ஆனில் தவறு இருக்கின்றது என்று எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

5 comments:

B.M.இல்யாஸ் said...

நல்ல முயற்சி இவர்களின் இஸ்லாம் குறித்த இந்த அவதூறுகளே இவர்களின் குளருபடிகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு நல் வாய்ப்பாக அமைந்து விட்டது இதை பார்க்கும்பொழுது சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும் என்ற இறைவசனம் தான் ஞாபகம் வருகிறது

அபூ அப்திர்ரஹ்மான் said...

அருமையான ஆக்கம். குர்ஆனில் சரித்திர தவறு என்று கிறுக்காய்வு நடத்திய மிஷ'நரி'களுக்கு சரியான சம்மட்டி அடி. யஹ்யா யோவான் பற்றி இனி மூச்சு விட நினைக்கும் இவர்களின் வருங்கால தலைமுறையையும் வாயடைக்கச் செய்யும் மறுப்பு. தொடருங்கள்!. முன்னேறுங்கள்! இவர்களை விடாதீர்கள் சகோதரரே!. உங்கள் எழுதுகோல் என்னும் போர்வாளின் கூர்மையில் இவர்களை ஓட ஓட விரட்டுங்கள் விடாதீர்கள்.

Anonymous said...

பைபிளைப் பற்றிய உமது அறியாமையை என்னவென்பது? சில வசனங்களை மட்டும் பிரித்தெடுத்துப் பொருள் கூறியுள்ளீர்? முதலில் பைபிள் முழுவதையும் ஆழ்ந்து படித்துப் பாரும். சில வசனங்களை மட்டும் படித்து விட்டு தவறாகப் பொருள் தந்துள்ளீர்.

நீங்கள் குறிப்பிட்டது

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)

நல்ல செய்தி??? யஹ்யா என்பது யோவான் எனில் குர்ஆன் கூறியது தவறுதான். இப்படிப்பட்ட பலர் முன்பு வாழ்ந்ததற்கு ஆதாரம் உள்ளது. இனி யோவான் வேறு யஹ்யா வேறு என்றால் பைபிள் கூறியதுதான் சரி. காரணம் யோவானுக்கு யஹ்யா என்ற பெயர் கிடையாது. உன் மூளைக்கு விளங்கினால் சரி.

சிட்டு

Anonymous said...

//பைபிளைப் பற்றிய உமது அறியாமையை என்னவென்பது? சில வசனங்களை மட்டும் பிரித்தெடுத்துப் பொருள் கூறியுள்ளீர்? முதலில் பைபிள் முழுவதையும் ஆழ்ந்து படித்துப் பாரும். சில வசனங்களை மட்டும் படித்து விட்டு தவறாகப் பொருள் தந்துள்ளீர்.//

சரி. சரியான பொருளை நீங்கள் விளக்க வேண்டியது தானே! 100 சதவிகிதம் இந்த வசனங்கள் முரண்பாடு எனும் போது வேறு எங்கே பதில் கிடைக்க போகின்றது. நாமும் பல இடங்களில் தேடியப்பின்னர் தான் இந்த பதிவையே வெளியிட்டோம். ஆபாசமான பைபிள் வசனங்களுக்கே 'இதெல்லாம் உவமையாக சொல்லப்பட்டது' என்று சமாளித்து பதில்(?) அளித்த ஒரு சில கிறிஸ்தவர்கள் இதுவும் உவமையாக சொல்லப்பட்டதுதான் என்று வழக்கமாக சமாளிப்பது போல் சமாளித்தால் தான் இதற்கு பதில் உண்டு.

//நல்ல செய்தி??? யஹ்யா என்பது யோவான் எனில் குர்ஆன் கூறியது தவறுதான். இப்படிப்பட்ட பலர் முன்பு வாழ்ந்ததற்கு ஆதாரம் உள்ளது. இனி யோவான் வேறு யஹ்யா வேறு என்றால் பைபிள் கூறியதுதான் சரி. காரணம் யோவானுக்கு யஹ்யா என்ற பெயர் கிடையாது. உன் மூளைக்கு விளங்கினால் சரி.//

இதெல்லாம் பதிலா சகோதரா?

இந்த பதிவை அதற்கான உங்கள் பதிலையும் உங்களைச் சார்ந்தவர்கள் நடத்தக்கூடிய தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நீங்கள் பதித்திருந்ததை நான் படித்தேன். அதில் உங்களைச் சார்ந்தவர்களே இது சரியான பதில் அல்ல என்று மறுப்பு வெளியிட்டுள்ளனர். நீங்கள் யாரை திருப்தி படுத்த இந்த பதிலை எழுதினீரோ அவர்களே இது சரியான பதில் அல்ல என்று சொல்லிவிட்டப் பிறகு நான் என்ன சொல்ல?

Unknown said...

Ethu unmai