அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, March 03, 2009

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மிஷினரிகள் குர்ஆனில் ஏதேனும் முரண்பாடு கிடைக்குமா என்று தேடத்தொடங்கியதன் விளைவு, தற்போது நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுத தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடாகத்தான் 'குர்ஆனில் முரண்பாடு - நோவாவின் வயது?' என்று அவர்களால் சமீபத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பதிவு எந்த அளவுக்கு பலவீனமான வாதங்களை கொண்டிருந்தது என்பதை எமது பதில் பதிவான 'நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா? என்ற கட்டுரையின் மூலம் விளக்கமளித்திருந்தோம். அதே போன்று அதே நோவாவின் வரலாற்றில் மற்றுமொரு குழப்பம் இருக்கின்றது என்று மேலும் ஒரு பதிவை ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் எந்த அளவுக்கு பலவீனமான வாதத்தைக் கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்:

அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் நூஹ் (அலை) அவர்களின காலத்தில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு கூறுகின்றான்:

இன்னும்; நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். -அல்குர்ஆன் 25:37

மற்றோர் வசனத்தில்: நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள். - அல்குர்ஆன் 26:105

இந்த வசனங்களில் இறைவன் நூஹ் நபியுடைய காலத்தவர்கள் இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று பன்மையாக கூறுகின்றான்.

இதைப்பற்றி உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது:

நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

இப்படி குறிப்பிட்டு விட்டு கீழ்கானும் வசனத்தைக் கேடிட்டுக்காட்டி அதன் மூலம் ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றார்:

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;. அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். -அல்குர்ஆன் 37:77

இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

இது தான் இவரது கேள்வி. இந்தக் கேள்வியின் மூலம் இவரது அறியாமை வெளிக்காட்டப்படுவதுடன் - குர்ஆனை எப்படியேனும் குற்றம் சுமத்தியாகவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது என்பதும் தெளிவாக விளங்கும். எனினும் இவரது இந்தக் கேள்விக்கு பதில் மிக எளிதானது. ஏனெனில் 'தூதர்கள்' என்றால் யார் யார்? தூதர்கள் என்று பன்மையாக சொல்லப்படுவது ஏன்? என்று விளங்கிக் கொண்டால் பதில் கிடைத்துவிடும்.

அதற்கு முன்பாக இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?' என்று கேள்விக்கான பதில், அந்த தூதர்கள் யாரும் வெள்ளத்தில் முழ்கடிக்கப்படவில்லை. காரணம் நூஹ் (அலை) அவர்களின சமுதாயத்திற்கு நூஹ் (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் அனுப்பப்படவில்லை. எனவே இந்த கேள்விக்கு வேலையே இல்லை.

அப்படியானால், குர்ஆன் ஏன் பன்மையில் தூதர்கள் என்று குறிப்பிடுகிறது? அவ்வாறு குறிப்பிடப்படும் அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? அதையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

குர்ஆனின் ஒரு வசனத்திற்கு அதன் பிற வசனங்கள் விளக்கமாக இருக்கும். அல்லது நபி மொழிகள் அதற்கு விளக்கமாக அமையும். ஆனால் இந்த கிறிஸ்தவரோ இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் அவ்வசனத்தில் கூறப்பட்ட 'தூதர்கள்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு 'பார்த்தீர்களா முரண்பாடு உள்ளது' என்று பிதற்றுவது குர்ஆனில் குறை காணவேண்டும் என்ற குறுமதியின் வெளிப்பாடு மட்டுமே!

இவர் குறிப்பிடும் அந்த வசனத்தில் 'நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? என்பதை மற்ற குர்ஆன் வசனங்களை கவனித்தாலே உன்மை விளங்கும்.

இவ்வாறு பன்மையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னும் சில வசனங்கள்:

நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்। அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது; ''நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' 26:105, 106


ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது 26:123, 124

ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:140,141

லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது, 26:160,161

தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள். ஷுஐப் அவர்களிடம்; ''நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:176,177

நூஹ் உடைய சமூகத்தவர்கள் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று கூறிய போது அவர்களுக்கிடையே வாழ்ந்திருந்த தூதரைப் பற்றிக் கூறும் போது நூஹ் (அலை) பற்றி மட்டுமே குறிப்பிடுகிறான்.

ஸமூது சமுதயாத்தினர் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று குறிப்பிட்டு விட்டு அவர்களுக்கிடையே செய்தியைச் சொன்னவரைப் பற்றிக் கூறுகையில் ஸாலிஹ் (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடுகிறான்.

லூத் நபியின் சமூகத்தைப் பற்றியும் மத்யன் வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்தி என்ன? ஒவ்வவொரு சமூகத்தவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரைப் பொய்ப்பிப்பது என்பது மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் பொய்ப்பிப்பதற்கு சமம் என்பதாகும்। இக்கருத்தைத் தான் பிரபல திருமறை விரிவுரையாளரான இமாம் இப்னு கஃதீர் (ரஹ்) அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

(Allah destroyed them completely, and similar (awaits) the disbelievers) (47:10). And when the people of Nuh denied him, Allah destroyed them likewise, for whoever denies one Messenger denies all the Messengers, because there is no difference between one Messenger and another. If it had so happened that Allah had sent all His Messengers to them, they would have denied them all. (Tafsir Ibn Kathir – English version – Darusssalam)

இறைதூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியும் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒருவரை நிராகரித்தல் மற்ற அனைவரையும் நிராகரிப்பதற்குச் சமமே!

உதாரணமாக, முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு, ஈஸா (அலை) மூஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ள வில்லையானால், இறைவனால் அனுப்பப்பட்ட மொத்த தூதர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பொருளாக அமையும். எனவே அவர் முஸ்லீமாக - இறைநம்பிக்கைக் கொண்டவராக முடியாது. அதே போல் முஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டுவிட்டு முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்தால் அவர்களும் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீமாக முடியாது. அதே போல் இறைதூதர்களான வானவர்களை (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) ஏற்க மறுத்து நிராகரிப்பவர்களும் இறைநம்பிக்கையுடையவர்களாக ஆக முடியாது. காரணம் இறைவனால் அனுப்பபட்ட தூதர்கள் அனைவரும் ஒரே செய்தியைத்தான் கொண்டுவந்தார்கள். அவர்கள் போதித்ததெல்லாம் ஒரே கொள்கையைத்தான் என்று குர்ஆன் கூறுகின்றது:

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ழைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். 16:36

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. 21:25

இவர்களில் ஒருவரை ஏற்றுக்கொண்டு ஒருவரை நிராகரித்தாலும் அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக முடியாது. அதைத் தான் பின்வரும் வசனங்களின் மூலம் இறைவன் தெளிவுபடுத்தப்படுகின்றது:

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, ''நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். – அல்குர்ஆன் 4:150,१५१

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும்விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின்கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்குமுன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது இன்னும் அது வழிகாட்டியாகவும்,நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (2:97)

எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும்,ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறுநிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:98)

பொதுவாக இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இறை தூதர்களான வானவர்கள் (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) உட்பட அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் - 2:285

(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக -2:136

இதில் இறைவனின் செய்தியைக் கொண்டுவரும் ஒருவரை நிராகரித்தால் கூட அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீம்களாக முடியாது என்பது தெளிவாக விளங்கும். அவர்களுக்கு அனுப்பபட்ட தூதர்களை ஏற்றுக்கொண்டு மற்ற தூதர்கள் பற்றி சொல்லும் போது அதை ஏற்க முடியாது என்று சொன்னாலும், எனக்குப் பின் இந்த தூதர் வருவார் என்று நம்பமறுத்தாலும், இறைதூதர்களான வானவர்களையும் ஏற்க முடியாது என்று சொன்னாலும் அதுவும் இறைவனின் தூதர்களை நிராகரித்தவர் என்று தான் பொருள்படும். இன்னும் சொல்லப்போனால் ஒருவர் ஒரு தூதரை நிராகரிக்கின்றார் என்று சொன்னால் அவர் மற்றவர்களையும் நிராகரிக்கின்றார். அந்த மற்றவர்களில் வானவர்களும் அடங்குவர் நபிமார்களான மனிதர்களும் அடங்குவர்.

அது போல் தான் நூஹ் (அலை) அவாகளின் சமுதாயத்தினார் நூஹ் அவர்களை நிராகரித்ததுடன் மற்ற இறைத்தூதர்களான வானவர்கள் உட்பட, மற்ற தூதர்களையும் (அவர்களுக்கு பின்னர் வர இருப்பவர்களையும்) அவர்களும் போலிகள் தான் அவர்களை நம்பமாட்டோம் என்று நிராகரிக்கின்றனர். இதை தான் இறைவன் 'நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று கூறுகின்றான்। எனவே இவர் கேட்பது போன்று மற்ற தூதர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்கே இங்கு வேலை இல்லை என்பது தெளிவாக விளங்கும்। ஏனெனில் நூஹ் அவர்கள் சமுதாயத்திற்கு அவர்கள் மட்டும் தான் அனுப்பப்பட்டார்கள்।

அடுத்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. என்று குறிப்பிடுகின்றார். இது முற்றிலும் தவறான – அறைவேக்காட்டுத்தனமாக வாதம். இவர் சொல்வது போன்று தான் குர்ஆன் குறிப்பிட்டுக் கூறுகின்றதா என்றால் கிடையாது. மாறாக அவரது குடும்பத்தாரையும், அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் காப்பாற்றினோம் என்று தான் குறிப்பிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) ''உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்'' என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. (அல்குர்ஆன் - 11:40) (மேலும் பார்க்க 7:64, 10:73)

எனவே இவர் எந்த அளவுக்கு அறைகுறை ஞானத்துடன் கேள்விகளைக் கேட்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

உமர் என்ற கிறிஸ்தவர் இப்படி குற்றநோக்குடன் அறியாமையில் ஏன் பதிவுகள் போடுகின்றார் என்றால், பெரும்பாலும் அவர் சுயமாக எதையும் எழுதுவது கிடையாது। ஆன்சரிங் இஸ்லாம் என்றத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழ் மக்களைக் குழப்புவது தான் இவரது தலையாய பணி. இதற்காகவே இவருக்கு வெளிநாட்டிலிருந்து கூலிகள் கிடைக்கின்றது போலும். இவர் மொழிப்பெயர்த்து வெளியிடும் கட்டுரைகள் சரியா அல்லது தவறா? நாம் போடுவது முறையான பதில் தானா? என்றெல்லாம் இவர் பார்ப்பது கிடையாது. இஸ்லாத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதா? குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லப்படுகின்றதா? அது போதும். அது சரியோ அல்லது தவறோ அதை ஒரு பதிவாகப் போட்டுவிட வேண்டியது தான் என்று மனம் போனப் போக்கில் மொழிப்பெயர்த்து வெளியிட்டுவிட்டு பின்னர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார். பாவம் அவர் என்ன செய்வார். வாங்கும் கூலிக்கு வேலை செய்துதானே ஆக வேண்டும்.

நோவாவின் வரலாற்றில் முரண்படும் பைபிள் - அடுத்த பதிவில் இறைவன் நாடினால்...
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

1 comments:

Anonymous said...

first of all, he (umar) does not know what he is translating and there is no one to question him about his illogical articles.whatever he writes evrybody there,appreciating him regardless whether it's worthy or filthy.

thanks
Amir.