அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label பைபிள். Show all posts
Showing posts with label பைபிள். Show all posts

Monday, November 10, 2008

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1

யார் இந்த புனித பவுல்? - பாகம் 2

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? - பாகம் 3

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 4

இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

பவுல் பிரச்சாரம் செய்த காலத்திலேயே "வேறொரு சுவிசேஷத்தை", "வேறொரு இயேசுவைப்" பற்றிய பிரச்சாரம் அங்கே இருந்து வந்தது.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்க திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிஷேத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான். மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:6-12)

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் ப்றிற உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாக வெறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக் கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மாக பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன். (2 கொரிந்தியர் 11:3-6)

இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களிமிருந்து கற்றதாக பவுல் ஒரு போதும் சொன்னதில்லை. அது மாத்திரமல்லாமல் அது தேவையுமில்லை என்று அவர் கூறுகின்றார். ஏனெனில், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் எனப் பவுல் கூறுகின்றார்.

பவுலின் இந்தக் கூற்று நன்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் பிரச்சாரம் செய்தது இயேசு செய்த அதே பிரச்சாரம்; தான் என்றால் அதற்கு சாட்சியாக இயேசுவின் நேரடி சீடர்களை கோடிட்டு காட்டி என் பிரச்சாரமும் அவர்கள் பிரச்சாரமும் ஒன்று தான் என்று கூறியிருக்க முடியும். இவர் பிரச்சாரம் செய்வது இயேசுவின் நேரடி சீடர்களின் பிரச்சாரத்திற்கு நேர் எதிராக இருந்தால் அவர் நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவரின் வார்த்தையில் கிறிஸ்துவத்தின் கொள்கை அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது தான். இவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையும், அவர் இயேசுவோடு உரையாடியாதாக சொல்லப்பட்ட சம்பவகளும் எந்த அளவுக்கு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் மேலே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு மேற்கண்ட பவுலின் கூற்று பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் : உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகின்றேன் என்றால் என்ன?

கிறிஸ்துவின் கிருபையினாலே அழைப்பது என்றால் என்ன எனத் தெரிந்தால் தான் பவுல் அவர்கள் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று சொல்வதன் முழு அர்த்தம் என்ன என்பது தெரிய வரும்.

இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளுக்குக் கீழப்படிந்து நியாயப்பிரமாணங்களில் உள்ளவற்றைப் பின்பற்றி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழும் போது தான் நிலையான பெருவாழ்வை - பரலோக இராஜ்ஜியத்தை - மனிதன் அடைய முடியும் என்பது அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனையாயிருந்தது.

ஆனால் பவுலோ இதற்கு முற்றிலும் மாற்றமாக பிரச்சாரம் செய்தார். நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுவதெல்லாம் இயேசுவிற்கு முன்பு வரைதான். இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை கிருபைக்கு உள்ளாக்கி விட்டார். ஆகவே நியாயப் பிரமாணங்களைப் பின்பற்றத் தேவையில்லை. இனி இயேசு நம்மை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கவே தம்மை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் என்று நம்பினால் போதும். நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டியதில்லை. இவை எல்லாம் பவுலின் வாதம். அதானல் தான் பவுல் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறுகின்றார்.

இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோசனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப் பிரமாணத்திலினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். (கலாத்தியர் 6:2-4)

அதாவது இவரின் புதிய போதனையின் படி கிறிஸ்துவை நம்பி விட்டால் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையையே உங்களுக்கு நிலையான பெருவாழ்வை அளிக்க போதுமானதாக இருக்கும் போது நியாயப் பிரமாணம் உங்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் எண்ணினால் அந்த விசுவாசம் உங்களிடம் இல்லை என்று அர்த்தம். இதைத் தான் பவுல் அவர்கள் : நியாயப் பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்த கிருபையினின்று விழுந்தீர்கள் என்று கூறுகின்றார்.

பவுல் மேலும் கூறுகின்றார் : நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர் 2:21)

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டால் நீதிமான்களாக்கப்படுவோம் என்று பவுல் சொல்வது என்ன என்பதை வாசகர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். பவுல் கூறும் விசுவாசம் என்பது இயேசுவை இறைமகன் என்றோ, இறைத்தூதர் என்றோ மாத்திரம் விசுவாசித்து விட்டு நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் அந்த விசுவாசம் விசுவாசமே அல்ல. அதனால் பலனும் இல்லை. ஆனால் இயேசுவின் மேலுள்ள விசுவாசம் என்னவெனில், அவர் நம்மை நியாயப்பிரமாணங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்து விட்டார் என நம்பி நியாயப்பிரமாணத்தை கைவிட்டு விட வேண்டும். இது தான் பவுல் கூறும் இயேசுவின் மேலுள்ள விசுவாசம். பவுலின் இந்தப் பிரச்சாரம் நன்கு கவனிக்கப்பட வேண்டியதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதுமாகும்.

பவுலை எதிர்த்து "சுவிசேஷத்தையும்'', ''வேறொரு இயேசுவையும்'', பிரச்சாரம் செய்தவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளாமல் இருந்தனரா? அவர்கள் இயேசுவின் மீது விசுவாம் கெர்ணடிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் பவுலிற்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமை என்ன? அவர்கள் இயேசுவை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று ஏற்றுக் கொண்டு இறைவனின் கட்டளைகளை பின்பற்றி அவனுக்குக் கீழ்ப்படிந்தால் தான் இறைவனின் திருப்தியும் நீதியும் கிடைக்கும் என நம்பினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? மனிதர்களை பாவங்களிலிருந்தும் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் விடுவிக்கவே இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.

சகோதரரே..! இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தை பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்ககும் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும். (கலாத்தியர் 6:11-12)

பிரச்சினை இது தான். சிலுவையிலறையப்பட்டதால், மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட வேண்டியதில்லை என்ற அந்த பவுலின் கொள்கை தான் பிரச்னைக்கு பிரதான காரணமாயிருந்திருக்கிறது.

இயேசுவை ஏற்றுக் கொண்ட மக்கள் மனிதர்களின் பாவத்தை நீக்குவதற்காக இயேசு சிலுவையில் தன்னைத் தானே ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இயேசு அதைப் போதிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும். அவர் அதற்காகவும் வரவில்லை. மக்கள் இறைவனிற்கு கீழ்ப்படிந்து நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே வந்தார். ஆனால் பவுல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் இது அவருடைய சொந்தக் கண்டுபிடிப்புதானே அல்லாமல் அது வேறென்னவாக இருக்க முடியும்?

இது இவ்வாறிருக்க, நியாயப்பிரமாணங்கள் பற்றி இயேசு என்ன கூறுகின்றார்? பவுலின் இந்தப் பிரச்சாரம் இயேசுவின் பிரச்சாரத்திற்கு உகந்ததா? நான் சிலுவையில் அடிக்கப்பட்டு உங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப் போகின்றேன். ஆகவே நீங்கள் நியாயப்பிரமாணங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று சொன்னாரா? அல்லது அதற்கு மாற்றமாக சொன்னாரா? பரலோகராஜ்யம் செல்வதற்குரிய வழி என்னவெனில் பிரமாணங்களை கையாளுவதுதான். இதைத் தான் இயேசு தன்னுடைய வாழ்நாளில் பிரச்சாரம் செய்து வந்தார். அதையேதான் அவரது உன்மையான சீடர்களின் போதனையாகவும் இருந்திருக்க வேண்டும்.
இயேசுவின் போதனைகளுக்கும் அவரின் கொள்கைகளுக்கும் மாற்றாக பவுல் எவ்வாறெல்லாம் போதித்தார், எவற்றையெல்லாம் போதித்தார் என்பதை இனி காண்போம்.

நியாயப்பிரமானங்களையும் தீர்க்கதரிசனங்களையும் இயேசு பின்பற்ற சொன்னாரா? அல்லது பின்பற்ற கூடாது என்றாரா? - நாளைத் தொடரும்... இறைவன் நாடினால்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Saturday, November 08, 2008

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1
யார் இந்த புனித பவுல்? - பாகம் 2



பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 3
... இந்த அளவுக்கு பவுல் ஒரு பொய்யைச் சொல்லி இயேசு தனக்கு அதிசயத்தைக் காட்டி தன்னைக் கடவுள் ஊழியத்திற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டதாக சொல்லவருவதுடன் இந்த பொய்யான சம்பவத்தையும் கடவுள் பெயரால் பவுல் சொல்வருவதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? அதற்கு இயேசுவின் நேரடி சீடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றால்தான் இயேசுவைப் பின்பற்றக்கூடிய மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால் பவுலின் வாதத்தை பொய் என்று நிராகரித்து விடுவார்கள். ஆகவே பவுல் இயேசுவிற்கு கீழ்ப்படிபவராக மாறியவுடன் சீடர்களை சந்திக்க ஜெருஸலம் சென்றார் எனவும், அதன்பிறகு அவர் வெகு தீவிரமாக அங்கு இயேசுவின் மார்க்கத்தை பிரச்சாரம் செய்தார் எனவும் அதனால் யூதர்கள் அவரை கொல்ல சதி செய்தனர் எனவும் அப்போஸ்தலரின் செயல்பாடுகளை எழுதியவர் குறிப்பிடுகின்றார்.

சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரரென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு : எருசலேமில் இந்த நாமத்தைத் தொழு கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயம் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்கு கொண்டு போகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். சவுல் அதிகமாகத் திடன் கொண்டு. இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப் பண்ணினான். அநேக நாள் சென்ற பின்பு, யூதர்கள் அவனைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்து கொள்ளப் பார்த்தான். அவர்கள் அவனைச் சீஷரென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசியதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய் பிரசங்கித்து. கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான் : அவர்களோ அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 9:18-29)

பவுல் எனப்படும் இவர் இயேசுவின் நேரடி சிஷ்யர்களின் அங்கீகாரத்தை பெற்றதாக இதிலிருந்து அப்போஸ்தலரின் நடபடிகளை எழுதியவர் தன் வாசகர்களுக்குச் சொல்கின்றார். அது மாத்திரமல்லாமல் அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான். ஆகவே பவுலை எருசலேத்தில் உள்ளவர்கள் அனைவரும் நண்பர்களும் எதிரிகளும் - குறிப்பாக சர்ச்சில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பர் என்பது போல் எழுதுகிறார்.

ஆனால் இது உண்மையா? பவுல் இயேசுவின் நேரடி சீடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றாரா? அப்போஸ்தலர்களின் நடபடிகளை எழுதியவருக்கு நேர் மாற்றமாக பவுல் எழுதுவதைப் பாருங்கள் :

தம்முடைய குமாரனை நான் புறஜாதியார்களிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்த போது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும், எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்: அரபி பிரதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டு கொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவதையும் நான் காணவில்லை.

நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். பின்பு சிரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். (கலாத்தியர் 1:16-21)

இப்பொழுது எது உண்மை? பவுலின் சொந்த வார்த்தைகளா அல்லது அப்போஸ்தலரின் நடபடிகளை எழுதியவர் சொல்வதா? பவுல் கிறிஸ்துவின் சீடரென கூறிக் கொண்ட உடனேயே தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான் என்பதும் பின்பு அவர் எருசேலம் சென்று அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாம்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்தான் என்று அப்போஸ்தலர் நடபடிகள் எழுதியவர் சொல்வது உன்மையா? அல்லது அப்போஸ்தலரானவரிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்: அரபி பிரதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டு கொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை என்று பவுல் சொல்வது உண்மையா?

பவுலின் கூற்றுப்படி அவர் அப்போஸ்தலர்களைச் சந்திக்கவில்லை. அவர் எருசலேத்திலே பிரச்சாரம் செய்யவுமில்லை என்பது தெளிவு. இதை அவரின் கீழக்கண்ட ஒப்புதல் மிகவம் தெளிவுபடுத்துகின்றது :

நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். பின்பு சிரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். (கலாத்தியர் 1:20-21)

இது பவுல் சத்தியம் செய்து சொல்வதாகும். இது உண்மையெனில் 'அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்: அவர்களோ அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள்' என்பது பொய். ஏனெனில் அவர் முன்பு அவ்வாறு பிரச்சாரம் செய்திருந்தால் யூதாயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவராக இருந்திருக்க முடியாது. பவுலினை உயர்த்தி சொல்வதற்காகவும் அவரின் பிரச்சாரத்திற்கு இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களின் அங்கீகாரம் இருந்ததென காண்பிப்பதற்காகவும் அப்போஸ்தலர்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியவர் கட்டிய கதையே இது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் நன்கறியலாம். இப்படி ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து உண்மைகளைக் கண்டறிவது அத்தனை எளிதானதா? இதையும் வேதப் புத்தகம் என்று சொல்வது அறிவீனமல்லவா?

புதிதாக மதம் மாறிய ஒருவர் அம்மதத்தில் ஏற்கனவே இருந்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பர். குறிப்பாக இயேசுவின் நேரடி சிஷ்யர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ள முயற்சிப்பர். ஆனால் இவருக்கு அந்த ஆர்வம் எல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவருக்கு இயேசு நேரடியாக போதிக்கின்றாராம்.

கிறிஸ்து முதல் கான்ஸ்டன்டைன் வரை என்ற தனது புத்தகத்தில் ஜேம்ஸ் மாக்கினோன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்கள் :

அவர் மதம் மாறியவுடன் அரேபியாவிற்கு (நபாத்தியர் பாகம்) சென்றது அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு எனக் கூறிட முடியாது. ஆனால் தனது புதிய மதத்தை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தான் அங்கே சென்றார் என்பது தெளிவு. மூன்று வருடத்திற்குப் பிறகு தான் பீட்டரையும், கர்த்தரின் சகோதரனான ஜேம்ஸையும் சந்திக்க அவர் ஜெருஸலம் செல்கின்றார். ஒரு வேளை இயேசுவைப் பற்றி அவர்களிடம் கேட்பதற்காக இருக்கலாம்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கூறுகின்றது :

தன்னுடைய புதிய நிலமைகளைப் பற்றி சிந்திக்க அமைதியாக ஆரவாரமற்ற ஒரு இடம் தேவையென்பதை பவுல் உணர்ந்தார். அதனால் தான் அவர் டமஸ்களின் தெற்கிலுள்ள பிரதேசங்களுக்கு சென்றார்... தன்னுடைய புதிய அனுபவத்தின் ஒளியில் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் போதனைகளையும் புதிய உருவில் எவ்வாறு விளக்குவது என்பதே அவருக்கிருந்த முக்கியப் பிரச்னையாக இருந்தது.

இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

- பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன?
.
.
- நாளை தொடரும் இறைவன் நாடினால்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Friday, November 07, 2008

யார் இந்த புனித பவுல் ?

பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 2)
.
பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும்
.
.சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைலீசியாவிலுள்ள (இன்றைய துருக்கி) டார்சஸ் நகரில் பிறந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இயேசுவை இவர் நேரில் சந்தித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. பிறப்பிலேயே யூதரான பவுல் இளமையிலேயே எபிரேயு மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார்? அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:

'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா

இந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)

எந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.

பவுலின் ஆரம்பக் காலம் :
யூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.

சவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)

இந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.

சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான். (அப்போஸ்தலர் 9:1-2)

இப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான (?) சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.

இயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி?
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :

அவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)

அதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் (?) நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.

இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.

இந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:

ஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.

இரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.

மூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.

நான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.

இவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:

அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)

இந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா? அல்லது கேட்கவில்லையா? வெளிச்சத்தைக் கண்டார்களா? அல்லது காணவில்லையா? இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் (?) எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்?

அடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.

'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)

முதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.

இரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.

மூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி? முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா? அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா?

இது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்?

முதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே?

இது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள். அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி? பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா? அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா?

இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா? அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம்? இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா?

உன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.


.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Saturday, September 13, 2008

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த 'திரித்துவக் கடவுள் கொள்கை' என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.

கடவுள் என்பவர்,

- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.

- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.

- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.

- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,

- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,

- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,

- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.

- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.

இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!

எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.

திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -

Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.

மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?

Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.

இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?

Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் 'திரித்துவத்திற்கு' உவமைகள் கூற முற்படுவர். சிலர் 'முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.

ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?

Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.

ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?

Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.

சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?

Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.

இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?

Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.

நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?

Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் "மகன்" தன்மை உடையவராகவும் "தெய்வீகத்" தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?

Q 9. "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.

ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,

"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று கூறவில்லையா?

Q 10. இயேசு கிறிஸ்து "தேவகுமாரர்" என்றும் "மேசியா" என்றும் "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை "தேவகுமாரர்கள்" என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி "தெய்வ மகன்" அல்லது "தேவகுமாரன்" என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)

ஹிப்ரு மொழியில் "மேசியா" என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. "இரட்சகன்" (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.

"கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்" (II இராஜாக்கள் 13:5)

ஆகையால் "தேவகுமாரர்" (Son of God) அல்லது "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் "தேவன்" அல்லது அவர் மட்டும் தான் "தேவனின் உண்மையான குமாரர்" என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

Q 11. நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் "ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற "ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?

Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .

இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட "அவருடைய தேவன் நம்முடைய தேவன்" மற்றும் "அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்" என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?

மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?

Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?

Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?

அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.

இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?

மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?

Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -
பிதாவும் (Father) கடவுள்
தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்
பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்
ஆனால்,

பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.

எளிமையான கணக்குப்படி,

G என்பது தேவனையும் (God)
F என்பது பிதாவையும் (Father)
S என்பது தேவகுமாரனையும் (Son)
H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.

இதன் படி,

F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,

அதாவது

பிதா என்பவர் தேவன்! (F=G)
தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G)
பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)

என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.

ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F S H

அதாவது

பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F S)
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S H)
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H F)

இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?

Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?

Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து "நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே" என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?

Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு 'திரித்துவம்' மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?
மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!

Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?

அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)

தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?

Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)

Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.

சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Friday, August 15, 2008

பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்?

இஸ்லாத்தின் மீது எப்படியேனும் குற்றம் சுமத்தி அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீது ஒரு தவறான கண்னோட்டத்தை உருவாக்கிடவேண்டும் என்ற தவறான எண்ணங்களுடன் தற்போது இணையங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் குர்ஆனில் வரலாற்றுத் தவறுகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதன்மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் இல்லை என்று நிரூபனம் ஆகிவிட்டதாகவும் ஒரு அபார கண்டுபிடிப்பை (?) கண்டுபிடித்துவிட்டது போல் சமீபத்தில் தங்கள் வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.

அதாவது, திருக்குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுகின்றது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் குர்ஆன் கூறும் பொழுது,

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகிறான். இந்த யஹ்யா (அலை) அவர்களை பைபிள் யோவான் ஸ்னானன் (John the Baptist) என்று வேறு ஒரு பெயரில் அழைக்கிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படப்படாத) பைபிளில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த யோவான் ஸ்னானன் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே யஹ்யா என்ற பெயரின் சிறப்பு குறித்து குர்ஆன் கூறுவது ஒரு தவறான வரலாற்று பிழை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.

இவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டிற்கு எமது சகோதரர்களால் மிகத் தெளிவாக பதில் எழுதப்பட்டுள்ளது. பார்க்க :


குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்! - சகோ. தேங்கை முனீப்

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா? - சகோ. அபூமுகை


என்றாலும், இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலை பதிவு செய்ய விரும்புகின்றோம். அதாவது, இன்றைய பைபிளில் உள்ள எல்லா கருத்துக்களையும் எல்லா வரலாற்றுத் தகவல்களையும், அப்படியே குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், பல இடங்களில் குர்ஆன் பைபிளுக்கு மாற்றமான தகவல்களைக் சொல்கின்றது எனபதையும் இன்றைய முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இருவருமே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு உன்மை.

இதில் முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாற்றமான பல தகவல்களைக் கொண்ட பைபிளை முற்றிலுமாக நிராகரிப்பதற்குக் காரணம் அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய :
என்பன போன்ற பலவீனங்களை அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு அத்தனை விதமான குறைபாடுகளையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடியதாக இன்றைய பைபிள் அமைந்துள்ளது என்பதே!

இப்படிப்பட்ட அனைத்து வகையான குறைபாடுகளை உடைய பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரை வைத்து, அதை குர்ஆனோடு சம்பந்தப்படுத்தி, குர்ஆனில் வரலாற்று பிழை உள்ளது என்று இவர்கள் சொல்வது எப்படி சரியாகும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போது இந்த 'யஹ்யா' என்ற பெயர் சம்பந்தமான இவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டச்சாட்டைப் பொருத்தவரையில், யஹ்யா (அலை) அவர்களுக்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயர்தான் முன்பு பலருக்கு இருந்ததாக கூறுகின்றார்களே யொழிய 'யஹ்யா' என்ற பெயரில் அதற்கு முன் யாரும் வாழ்ந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை, நிரூபிக்கவும் முடியாது. காரணம் இறைவன் அந்த 'யஹ்யா' என்றப் பெயர்கொண்டவரைத்தான் இதற்கு முன் ஏற்படுத்தவில்லை என்கிறான்.

அடுத்து இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய இந்த 'யஹ்யா' சம்பந்தமான குர்ஆன் வசனம், திருக்குர்ஆனில் வேறு ஒரு இடத்தில் உள்ள வசனத்திற்கு முரண்படுகின்றது என்று சொன்னால் அதை நியாயமானது எனலாம். அல்லது, பைபிளில் குறிப்பிடப்படாத குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்ட 'யஹ்யா' என்ற சிறப்புப் பெயர் இதற்கு முன் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது என்ற ஒரு வரலாற்று ஆதாரத்தையேனும் எடுத்துக் காட்டினால் அதையேனும் நியாயமானது எனலாம். மாறாக குர்ஆனில் யஹ்யா என்று ஒரு பெயர் குறிப்பிடப்பட்டு அந்த பெயரைக் கொண்ட (இறைத்தூதரான)வர் இதற்கு முன் இருந்ததில்லை என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்க, அதற்கு மாற்றமாக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள) வேறு ஒரு பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை வைத்து இந்த யோவான் என்றப் பெயர் முன்பே பலருக்கு இருக்கின்றது என்று சொல்வது எப்படி சரியாகும்? அதுவும் முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபில் குறிப்பிடக்கூடிய பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரும், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள யஹ்யா என்றப் பெயரும் முற்றிலும் மாறுபட்ட பொருளுடையதாக இருக்க இரண்டும் எப்படி ஒரே பெயராகும்?

நாம் இப்பொழுதும் சொல்லுகின்றோம், குழப்பங்கள் நிறைந்த பைபிளில் குறிப்பிடப்படும் பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை விட்டுவிட்டுங்கள். குர்ஆனில் உள்ள சிறப்புப் பெயர் என்று குறிப்பிடப்படும் 'யஹ்யா' என்றப் பெயரை அவருக்கு முன் வாழ்ந்தவர்கள் யாருக்காவது (குறிப்பாக எந்த இறைத்தூதருக்காவது) இருக்கின்றது நிரூபித்து விட்டு குர்ஆனை பொய்ப்படுத்தி விட்டோம் என்று வாதியுங்கள். அதை விடுத்து ஏதோ ஆய்வு என்றப்பெயரில் சம்பந்தமில்லாமல் குழப்பங்கள் நிறைந்த பைபிளை குர்ஆனுடன் இணைத்து உளறிக்கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

அடுத்து இவர்கள் எந்த யஹ்யா (அலை) சம்பந்தமான வசனத்திற்காக பைபிளை ஆதாரமாக வைத்து திருக்குர்ஆனில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினார்களோ, அதே பைபிளில் அவர்கள் எடுத்துக்காட்டும் யோவான் ஸ்னானன் சம்பந்தமாக உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் பாருங்கள் :

எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும்! யோவானும்!

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்கிறது.

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர்தான் யோவான் என்று இயேசுவே சுறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கின்றது.

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் நன்கு கவனிக்கவேண்டும். அதாவது, தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்கு சான்றாக 'யோவான்தான் எலியா' என்று இயேசு கூறுகின்றார். இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவான் 'நான் எலியா அல்ல' என்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் ஏன் அதை மறுக்கிறார்? எலியா ஏன் வரவேண்டும் என்றால் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும்போது அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான்ஸ்னானன் தான் எலியா என்பதற்கு அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால் அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும் அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கின்றார்.

யோவான் கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் யோவான் பற்றி 'அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவரானார்' (யோவான் 1:30) என்றும் 'ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை' (மத்தேயு 11:11) என்றும் யேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களிலேயே சிறந்தவரும் இயேசுவைவிடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்குமூலத்திலிருந்தே அறிகிறோம்.

யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களால் யோவானையும் பெய்யரென்றும் கூற முடியாது. இயேசுவையும் பொய்யரென்று கூற முடியாது. அவர்வாறு கூறினால் கிறிஸ்தவமே ஆட்டம் கண்டு விடும். கிஸ்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உன்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

எனவே இது போன்ற ஏராளமான முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தங்கள் பைபிளிலேயே வைத்துக்கொண்டு, அதுவும் நீங்கள் எந்த யோவானின் பெயரை வைத்து குர்ஆனின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்க பைபிளை ஆதராமாக எடுத்தீர்களோ அதே பைபிளிலேயே - அதே யோவானின் வரலாற்றிலேயே - இது போன்ற முரண்பாடுகளை வைத்துக்கொண்டு, குர்ஆனில் தவறு இருக்கின்றது என்று எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Wednesday, August 06, 2008

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்!

- தேங்கை முனீப்


வராலாற்றுச் செய்திகளில் குர்ஆனும் பைபிளும் சில இடங்களில் ஒரே தகவல்களைத் தந்தாலும் பல இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மாறுபாடுகள் குர்ஆனை பைபிளிலிருந்து பிரித்துக் காட்டி அதன் பரிசுத்த தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. அகிலங்களின் இறைவனால் இது இறக்கப்பட்டது என்ற குறிப்பு குர்ஆனில் உள்ளது. பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்ற குறிப்பு பைபிளிலும் உள்ளது. இந்த இரண்டு அடிப்படைகளை வைத்து ஆராயும்போது குர்ஆன் பைபிள் இதில் எது உண்மையான இறைவேதம் என்பதைத் தெளிவு பட விளங்க இயலும்.

பைபிள் இறைவேதமல்ல என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் பைபிளிலிருந்தே விவரித்துக் காட்டிய போது அதற்கு மறுப்பளிக்க இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த மிஷினரிகளுக்கு ஆறுதலாக குர்ஆனை விமர்சிக்கும் ஒரு இணைய தளம் கிடைத்தது. இவர்களைப் போன்றே சர்வதேச அறிஞர்களால் பைபிள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாத கிறித்தவ மிஷினரிகளின் மூளையில் உதித்த தந்திரத்தின் வெளிப்பாடே குர்ஆனின் மீதான குற்றச்சாட்டுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மகத்தான அற்புதம்! இவர்கள் எந்தெந்த வசனங்களைக் குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களோ அந்த வசனங்கள் குர்ஆனின் மகத்துவத்தைப் பறை சாற்றுவதாகவும் அது இறைவேதம் என்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. குர்ஆனை விமர்சித்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள் பைபிளை விமர்சிக்க மாட்டார்கள் என்ற இவர்களின் சர்வதேச தந்திரத்தை நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவனது மகத்தான பேரொளிக்கு முன்னால் இவர்கள் வைக்கும் புரட்டு வாதங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்பது நிச்சயம்!

யஹ்யாவும் யோவானும்

குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் கூறும் வசனம்.

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' ( (19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த யஹ்யாவை பைபிள் யோவான் என்று கூறுகிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படாத) இந்த யோவான் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது. எனவே இது குர்ஆனில் உள்ள ஒரு வரலாற்றுப் பிழை. இதுவே மிஷினரிகளின் குற்றச் சாட்டு.

விளக்கம் :

1. பைபிள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குர்ஆனை ஆராய வேண்டுமெனில் முதலில் பைபிளின் புனிதத் தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். பைபிளில் ஏராளமான வரலாற்று முரண்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் புரோகிதர்கள் தங்கள் விருப்பப்படி எழுதியதால் அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களும் முரண்பாடுகளும் மலிந்துள்ளன என்று நாம் கூறி வருகிறோம். இந்நிலையில் முதலில் பைபிளின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்காமல் பைபிளை அடிப்படையாகக் கொண்டு குர்ஆன் கூறும் தகவலை உரசிப் பார்த்தல் என்ற அடிப்படையே தவறாகும்.

2. குர்ஆனில் ஜாண் என்றோ யோவான் என்றோ யோஹனான் என்றோ ஒரு பெயர் இல்லை, யஹ்யா என்பதும் யோவான் (அல்லது ஜாண் அல்லது யோஹனான்) என்பதும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களைக் கொண்ட இரண்டு பெயர்கள் என்று ஒரே வரியில் உள்ள மறுப்பே இதற்குப் போதுமானது. இருப்பினும் இவர்களில் சிலரையேனும் சிந்திக்க வைக்கக் கூடும் என்பதால் இது பற்றிய ஒரு விசாலமான ஆய்வு இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது குர்ஆனில் உள்ள யஹ்யா என்ற பெயரும் பைபிளில் உள்ள யோவான் என்ற பெயரும் ஒன்றுதானா? என்பதைப் பற்றியாகும்.

மேற்கண்ட வசனத்திற்கு சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் யஹ்யா என்ற இடத்தில் ஜாண் என்று நோரடியாகவும் சிலர் அடைப்புக் குறிக்குள்ளும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை கிறித்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியிருக்கலாம். தமிழ் தர்ஜமாக்களில் எங்கேனும் யோவான் என்று உள்ளதா என்று துளாவியவர்களுக்கு கிடைத்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் யஹ்யா என்றே உள்ளது. மேலும் ஜலாலைன் தஃப்ஸீர் என்று இவர்கள் மேற்கோள் காட்டியதின் அரபிப் பதிப்பில் யோவான் என்ற பதமே இல்லை. மாறாக யஹ்யா என்றே உள்ளது.




எது எவ்வாறாயினும் குர்ஆனில் சில மொழி பெயர்ப்பாளர்கள் ஜாண் என்று குறிப்பிட்ட பெயரும் குர்ஆனில் காணப்படும் யஹ்யா என்ற பெயரும் முற்றிலும் வேறுபட்ட பொருள் உடைய இரண்டு பெயர்களாகும்.

யஹ்யா - யோவான் இரண்டும் ஒன்றா?
குர்ஆனில் இதற்கு முன்பு இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது யஹ்யா என்ற பெயராகும். யஹ்யா என்பதும் யோவான் என்பதும் ஒரே பதம் என்று தவறாகக் கருதிய சில மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் மொழி பெயர்ப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் யோவான் என்ற பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்பதாக இருந்தால் அரபு மொழியில் உள்ள பைபிளிலும் இதே பெயர் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். (இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற பதமே அரபி பைபிளில் உள்ளது என்பதை முன்பு விளக்கியிருந்தோம்). அரபி பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:

(எஸ்றா 8:12)

(யோவான் 1:6)

மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள யஹ்யாவும் பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ள யோவானும் ஒன்றல்ல என்பதை விளங்ககிக் கொண்டோம்.

யோவான் (யோஹனான்) என்பது ஹீப்ரு வார்த்தை. யஹ்யா என்பது அரபிப் பதம். யோவான் என்ற ஹீப்ரு பதம். யோவான் என்ற ஹீப்ரு பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்றிருப்பின் இரண்டினதும் பொருள் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? யோவான் (யோஹனான்) என்ற ஹீப்ரு பதத்தின் பொருள் யெஹோவாவின் கிருபை அல்லது யெஹோவாவின் இரக்கம் என்பதாகும். அதாவது இரண்டு வார்த்தைகளை உடைய ஒரு வாக்கியம். யூ + ஹனான் = யூஹனான். யூ என்பது யெஹோவாவையும் ஹனான் என்பது கிருபையையும் குறிக்கும். ஹன்னான் என்ற ஹீப்ரு பதம் இரக்கம், கிருபை என்ற பொருளை ஹனான் என்ற அரமாயிக் மூலத்திலிருந்து உருவான பதமாகும்.

யஹ்யா என்ற அரபிப் பதம் ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவானதாகும். இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. முதலாவது அல்-ஹயாத் என்ற பதத்திலிருந்து உருவான 'ஜீவன்' அல்லது 'உயிர்' என்ற பொருளுடையது. இரண்டாவது அல்-ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவான 'வெட்கம்', 'நாணம்' என்ற பொருளைக் கொண்டதாகும்.

யஹ்யா என்ற பெயரும் யோவான் என்ற பெயரும் முற்றிலும் மாறுபட்ட பெயர்கள் ஆகும் என்பதை விளக்கினோம். மிஷினரிகளின் விமர்சனம் அடிப்படையற்றது என்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாகும்.

3. குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்தும் இன்னும் சில சான்றுகள்
நாங்கள் யோவான் ஸ்நானனைப் பின்பற்றுபவர்கள் என்றும் அவர் இறுதி இறைதூதர் என்றும் நம்பக்கூடிய ஒரு மதப் பிரிவினர் ஈராக் மற்றும் ஈரானில் இன்றும் காணப்படுகின்றனர். போர்ச்சுகீஸ் கிறித்தவ மிஷினரிகள் இவர்களை யேவானுடைய கிறிஸ்தவர்கள் (Christians of John the Baptist) என்று அழைக்கின்றனர். ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் இவர்கள் ஞானஸ்நானம் செய்வதை தங்களின் முக்கிய மதச் சடங்காகக் கடைபிடித்து வருகின்றனர். தங்கள் மதத்தைக் குறித்து மந்தாய் என்றும் தங்களை மந்தாயியர்கள் என்றும் இவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமில் உள்ளது போன்று பிரார்த்தனை, நோன்பு, தர்மம் செய்தல் போன்ற சில மதச் சடங்குகளை இவர்களும் கடைபிடித்து வருகின்றனர். அரமேய மொழியுடன் தொடர்புடைய ஸெமிட்டிக் வழக்கைக் கொண்ட மந்தாயி என்னும் மொழியில் (Mandiac language ) இவர்களின் மத கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. கின்ஸா ராபா, த்ராஷா இத் யஹ்யா, ஆதாம் போஹ்ரா, தி கிலெஸ்தா, நியானி முதலானவையே இவர்களுடைய மத புத்தகங்களாகும் (Ref: http://www.mandaeans.org/aboutthemandaeans.htm)

தாங்கள் இறைதூதராகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்ட யோவான் ஸ்நானனைக் குறித்து இவர்கள் கூறுவது யஹ்யா யூஹனான் என்பதாகும். இவர்களின் ஒரு மதநூலின் பெயரே த்ராஷா இத் யஹ்யா என்பதைக் கவனிக்க. (Drasha id Yahia: It includes the teachings and wise sayings of the prophet Yehia bin Zekaria.) யஹ்யாவின் புத்தகம் என்பது இதன் பொருளாகும். இவர்களுடைய முக்கிய மத நூலாகிய கின்ஸா ராபாவில் (Ginza Raba) 410 வது அத்தியாயத்தின் தலைப்பு யஹ்யாவின் பிரார்த்தனைகள் என்பதாகும். இவற்றின் மூலம் ஜகரிய்யாவின் புதல்வருக்கு யஹ்யா மற்றும் யோஹனான் ஆகிய இரண்டு பெயர்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

மந்தாயி மக்களைப் பற்றியும் அவர்களின் மதச் சடங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராகிய இ.எஸ் ட்ரோவர். இவரும் மார்க்குச் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு அகராதி (E.S. Drowoer & R. Marcuch: A MANDAIC DICTIONARY 1963 OXFORD) மந்தாயியர்களின் மத அடிப்படைகளையும் சடங்குகளையும் உள்ளடக்கியதாகும். இப்புத்தகத்தின் 185 மற்றும் 190 ஆம் பக்கங்களில் முறையே யஹ்யா மற்றும் யூஹனான் ஆகிய இரு பெயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அவற்றைக் காண்க.





இத்தகைய ஆதாரங்களிலிருது நமக்குச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதாவது ஒவ்வொரு மந்தாயியர்களுக்கும் மல்வாஷா பெயர் என்றும் லகப் என்றும் இரண்டு பெயர்கள் வழங்கப் படுகின்றன. எதற்காக இவ்விரு பெயர்கள்? இ.எஸ் ட்ரோவர் எழுதுகிறார்: இரண்டாவது பெயர் பொதுவாக வழங்கப்படும் முஹம்மதிய பெயராகும். இவையே வழக்கமாக உபயோகிக்கப் படுகிறது. முதலாவது பெயர் அவருடைய உண்மையான ஆன்மீகப் பெயராகும். மதம் மற்றும் சடங்குகள் சம்மந்தப் பட்ட காரியங்களில் இப்பெயர் வழங்கப்படும். (E.S. Drower. The Mandaeans of Iraq and Iran (1962-Lieden) Page 81)

யோவான் ஸ்நானனுடைய மால்வாஷா நாமம் (இயற்பெயர்) யஹ்யா என்பதும் அவருடைய லகப் (சிறப்புப்) பெயர் என்றும் இந்தக் குறிப்புகள் கூறுகின்றன. மக்கள் பொதுவாக அவரை யோஹன்னான் என்று அழைத்தார்கள். ஆனால் அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் யஹ்யா என்பதாகும். மத சம்மந்தமான விஷயங்களில் இப் பெயரே புழங்கப் பட்டுள்ளது. யஹ்யாவின் புத்தகங்களில் பெரும்பாலும் இப்பெயரைக் கொண்டே துவங்குகிறது. ஆக யஹ்யா என்பது அவருடைய உண்மைப் பெயராகவும் அதே சமயம் மக்கள் அவரை யோஹன்னான் என்று அழைத்து வந்தனர் என்பதும் புலனாகிறது.

இதற்கு முன் இப்பெயர் வழங்கப்படவில்லை என்ற குர்ஆனின் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற பெயர் குறித்தாகும். அவரது சிறப்புப் பெயராகிய யூஹனான் என்ற பெயர் குறித்து அல்ல. யஹ்யா என்பது இறை கட்டளைப்படி அவரது தாய் தந்தையர்கள் அவருக்கு வழங்கிய பெயராகும். மேலும் அது அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் என்ற மந்தாயி மக்களின் மத நூல்களில் காணப்படும் குறிப்புகள் குர்ஆன் இறை வாக்கு என்பதை இன்னும் உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்ற வாதத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படாத யோஹன்னான் ஸ்நானனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற நாமம் குர்ஆனில் கூறப்படுள்ளது அது இறைவாக்கு என்பதற்கான ஆதாரம் என்பது மிகப்பெரிய உண்மையாகும். ஆக மிஷினரிகள் குர்ஆனில் சரித்திர தவறு உள்ளது என்பதற்கு கண்டு பிடித்த ஆதாரம் குர்ஆன் இறைவாக்கு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

4. பைபிளில் ஏன் யோவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது?
பைபிளில் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்த சுவிசேஷங்கள் அவருக்குப் பின்னர் அறுபதோ எழுபதே ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை ஆகும். மேலே குறிப்பிட்டதைப் போல் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்து அன்றைய மக்கள் வழங்கிய பெயராகிய யோவான் என்பதைக் குறித்த சுவிஷேச எழுத்தர்கள் அவருடைய உண்மைப் பெயராகிய யஹ்யா என்பதை அறியாமல் இருந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கேள்விப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சுவிசேஷங்களில் யோவான் என்ற அவரது குறிப்புப் பெயர் இயல்பாகவே இடம் பெற்றுவிட்டது.

5. யோஹன்னான் என்ற பதம் குறித்துக் குர்ஆன் என்ன கூறுகிறது?
யூ + ஹன்னான் ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஹீப்ரூ பத மே யூஹன்னான் என்பதையும் கிருபை அல்லது இரக்கம் என்பதே இதன் பொருள் என்பதையும் முன்னர் விளக்கினோம். அரபி, ஹீப்ரு மற்றும் அரமாய மொழி ஆகிய மூன்றும் ஒரே வகையான செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவை. இரக்கம் அல்லது கிருபை என்ற பொருளைத் தரக்கூடிய அரபிப் பதம் ஹனான் என்பதாகும். அற்புதம்! திருக்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் 13 ஆம் வசனத்தைக் காண்க.



மேற்கண்ட வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

'அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்' (19:13)

நம்மிடமிருந்து இரக்கசிந்தனை என்ற வாக்கியத்தின் மூல மொழியில் வ ஹனானன் மின் லதுன்னா என்று உள்ளது.

யூ ஹனானன் என்ற இரண்டு வார்த்தைகளில் உள்ள ஹனான் என்ற பதம். ஆக யூ ஹனான் என்ற பதத்திற்கு என்ன பொருளோ அதே பொருளைக் கொண்ட ஒரு பெயர் குர்ஆனில் யஹ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை அவருக்கு இப்படி ஒரு சிறப்புப் பெயர் இருந்ததைக் காட்டுகிறது.

முடிவுரை:

குர்ஆன் இதற்கு முன்னர் அப்பெயர் வழங்கப்படவில்லை என்று வழங்கியது யஹ்யா என்ற பெயராகும். யோவான் அல்லது யோஹன்னான் என்ற பெயர் அவரது சிறப்புப் பெயராகும். பைபிள் எழுதிய எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் எந்தப் பெயரால் பிரபலமடைந்தாரோ அந்த பெயரை எடுத்துக் கொண்டு அவரது இயற்பெயரை விட்டு விட்டனர். காரணம் அது குறித்து அவர்கள் அறியவில்லை. குர்ஆன் இறை கட்டளையால் அவரது தாய் தந்தையர் அவருக்கு வழங்கிய பெயரைக் கூறுகிறது. பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன.


.
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Monday, July 07, 2008

ஆடைகளுக்கு குஷ்டரோகம் வருமாம் - பைபிள் கூறுகின்றது

தொழுநோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவராவது நம்புவார்களா? நம்ப முடியுமா? அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால் பைபிள், ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் (?) கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதை கேளுங்கள்:

''47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,

(The garment also that the plague of leprosy is in, whether it be a woolen garment, or a linen garment)

48. பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டரோகம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும் அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it is a plague of leprosy, and shall be shewed unto the priest:

50. ஆசாரியன் அதைப்பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
And the priest shall look upon the plague, and shut up it that hath the plague seven days:

51. ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன். வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும்.
52. அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன். அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

53. வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்த தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

54. அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,


55. அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன். அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும். அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும். அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.

56. கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.

57. அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம். ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

58. வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும். அப்பொழுது சுத்தமாயிருக்கும்.

59. ஆட்டு மயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
- லேவியராகமம் 13:47 - 59

இவை அனைத்தும் பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்.

குஷ்டரோகமும் அதற்கான பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக்கூட நீங்கள் சோதிக்க முடியாதாம். பக்தர்களிடம் காணிக்கைப் பெற்று வாழ்ந்து வரும் புரோகிதக்கும்பலைச் சேர்ந்த 'ஆசாரியன்' தான் சோதிக்க வேண்டுமாம். இவர்கள் தங்கள் வருமானங்களுக்கா எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்காளா? பாவம் பக்தர்கள்.

கர்த்தரின் பெயரால் சொல்லப்பட்டுள்ள இந்த அபார கண்டுபிடிப்பு கர்த்தரே சொன்னதா? அல்லது கர்த்தரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? யோசிக்க வேண்டாமா?

விஞ்ஞானம் வளர்ந்த 20ம் நூற்றான்டில் பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா?

சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
தொடரும்...
.
.
.
.

Friday, July 04, 2008

மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!

'என்ன கொடுமை சார் இது! '
'மாதவிடாய்' என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி கூறுவது என்ன தெரியுமா?

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக. அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்ள. அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக. அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். (லேவியராகமம் - 15:19-30 )
இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றியும் அது ஏற்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் பற்றியும் பைபிள் எந்த அளவுக்கு இழிவாய் கூறுகிறது என்று பார்த்தீர்களா? தேவைப்படும்போது பெண்களை அனுபவித்து விட்டு 'அந்த' நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட அந்த பொருட்களைத் தொட்டவனுக்கும் தீட்டு, அந்த பெண்ணால் தீட்டான அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர் போல தீட்டு தொடர்கிறது.

இதைவிடப பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா? அல்லது கர்த்தரின் பெயரால் இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதா?

கிறிஸ்தவ பெண்களே! இந்தக் கொடுமையான வசனங்கள் உங்களைச் சிந்திக்க தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

மாதவிடாய் முடிந்து எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது தகனப்பளியாக விட வேண்டுமாம். அதுவும் பக்தர்களிடம் காணிக்ககைளில் வாழும் புரோகிதக்கும்பளின் மூலம் தான் செய்ய வேண்டுமாம். பைபிளை சிதைத்த யூத புரோகிதக்கும்பல் தங்களின் வருமானங்களுக்காக எந்த அளவுக்கு கீழ்த்தரமாக எழுதிவைத்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா?

கிறிஸ்தவ உலகில் எந்தக் கிறிஸ்தவராவது இதை கடைபிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்த போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க் முடியாது. ஆனால் கர்த்தர் தான் சொன்னார் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதர சகோதரிகளே!

பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில்தான் இது போன்ற கருத்துக்கள் உருவாகியிருக்க முடியும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.


மாதவிடாய் பெண்களை இஸ்லாம் எவ்வாறு நடத்துகிறது?

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: 'அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.' (அல் குர்ஆன் 2 : 222)

இதற்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தே காட்டியதாக நபிமொழிகள் நமக்கு சான்று பகர்கின்றது.

'யூதர்கள் தங்களின் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களுக்கு தங்களுடன் உணவு உண்ணவோ தங்களது வீடுகளில் கலந்து (தங்களோடு) சேர்ந்து குடியிருக்கவோ விடமாட்டார்கள். (வீட்டுக்கு வெளியில் தனிமையில் ஆக்கிவிடுவார்கள்). ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி கேட்க, மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள், அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள். ஆகவே, மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள் என்ற (குர்ஆனின் 2:222) வசனத்தை அதன் கடைசிவரை-கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய-அல்லாஹ் இறக்கி வைத்தான். (இவ்வசனத்தில் கூறப்பட்ட நிலையை தெளிவு செய்யும் நிமித்தம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாதவிடாய் பெண்களோடு தாம்பத்திய உறவு நீங்கலாக எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக்கூறினார்கள். இக்கூற்று யூதர்களுக்கு எட்டியது (அதற்கவர்கள்) நம் காரியத்தில் நமக்கு மாற்றம் செய்வதை தவிர, அவர் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை எனக்கூறினர். உஸைத்பின் அல்ஹுளைரும், அப்பாது பின் பிஷ்ரும் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ? என நாங்கள் எண்ணும் வரை அவர்களின் முகம் மாறியது (அதை உணர்ந்த) அவ்விருவரும் வெளியேறிவிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

நூல் : முஸ்லீம் (171)

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்து கொடு என்று கூறியதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன் எனக்கூற (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை எனக்கூறினர். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : முஸ்லீம் (172)
நான் மாதவிடாய் வந்தவளாக இருக்கும் நிலையில் என் மடிமீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்தவாறு திருகுர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

நூல் : முஸ்லீம் (175)

மாதவிடாய் வந்துள்ள பெண் எந்த விதமான தொற்றும் அசுத்தத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. அவள் 'தீண்டத்தகாதவளோ அல்லது சபிக்கப்பட்டவளோ அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறது இஸ்லாம். அவள் தன்னுடைய தினசரி வாழ்க்கையை வழக்கம்போல் ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாட்டுடன் நடத்துகிறாள்: அதாவது அவள் திருமணமானவளாயிருந்தால் அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதைத் தவிர மற்ற எல்லா உடல் தொடர்புகளும் தொடுவதற்கு அனுமதிக்கப்பட்டவையே. மாதவிடாய் ஏற்படும் கால கட்டத்தில் மட்டும் பெண் தொழுவது நோன்பு வைப்பது போன்றவைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இந்த நேரங்களில் இவ்வாறான விஷயங்கள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பாதாலேயே நம்மைப் படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
.

Monday, June 30, 2008

மனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு

.மூலம்: M.M. அக்பர் .....................................தமிழில்: தேங்கை முனீப், பஹ்ரைன்
இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.

பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.

1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.
திருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது.

ஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது.

ஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது.

தான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது.

தான் முனரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது.

இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இனஉணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும்.

ஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை. திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன்இ அகில உலகத்தாரின் இரட்சகன்.


சில வசனங்கள்:

அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)

நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் 112: 1-4)

2. தீர்க்கதரிசிகளின் வரலாறு
வரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம்.

1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகாமம் 2:17)

பைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதியாகமம் 3:6,7 மற்றும் 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும்? ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை? இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.)

ஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை.

நன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.(அல்குர்ஆன் 2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை.

2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதியாகமம் 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதியாகமம் 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது. (பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 & 3:22)

இறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக்கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை.

3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதியாகமம் 3:22)

விலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது!

4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 3:1-5 & 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 2:35, 36)

ஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (அல்குர்ஆன் 2:35, 36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை.

இறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது ? கால்களால் நடந்து சென்றதா ? மனிதனால் விரும்பப்பட்டதா? இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.

5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதியாகமம் 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் ? (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்?)

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது. தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (அல்குர்ஆன் 29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது.

விலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை.

6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் என்று பைபிள் (ஆதியாகமம் 3:18, 19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (அல்குர்ஆன் 62:10) (இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகின்றது (அல்குர்ஆன் 4:34)) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை.

7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும்இ அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் ; (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

அதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)
..
இன்ஷா அல்லாஹ் தொடரும்
.
.
.
.