அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, March 19, 2008

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...

- அபு இப்ராஹீம், சென்னை.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல் இருப்பதற்காகவும், இஸ்லாம் அல்லாத மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது - அல்லது அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இஸ்லாத்தை - அதன் அறிவுப்பூர்வமான கருத்துக்களை - மக்களிடம் எடுத்துச்சொல்வதோடு இவர்கள் பின்பற்றக்கூடிய மௌடீகக் கொள்கைகளை குறிப்பாக கிறிஸ்தவத்தின் உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வேண்டி - பல தலைப்புகளில் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து எழுதிவருகின்றோம்.

இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி நமது 'ஏகத்துவம்' என்ற வலைத்தளத்தில் வெளிவந்த எமது இரண்டாவது கட்டுரையான 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபில்' என்றத் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள், எதையாவது சொல்லி மறுத்தாகவேண்டும் என்பதற்காக 'ஈசா குர்ஆன்' என்றப்பெயரில் ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தனர் :

'1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், 'இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்' என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்' என்று எழுதியிருந்தனர்.

அதாவது நாம் எழுதின கட்டுரைகளுக்கு இவர்கள் பதில் அளித்து இருந்தார்களாம். நாம் அதற்கு பதில் எழுதவில்லையாம். உடனே அடுத்த கட்டுரைக்கு நாம் தாவி ஓடிவிட்டோமாம்.

எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்பானாம். அது போல் 'இருக்கின்றவன் - இயைத்தளங்களைப் படிக்கின்றவன் - அனைவரும் கேனையன், இவர்கள் மட்டும் அறிவாளிகள்' என்ற எண்ணத்தில் இப்படி எழுதியுள்ளார்கள்.

இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக இவர்களைப்பற்றிய சில தகவல்களை உங்களுக்கு நினைவுட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

பகிரங்க விவாதத்திற்கு பயந்து ஓடிய கூட்டம்:

சமீபத்தில் இவர்கள் நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி தரக்குறைவாகவும் வெறித்தனமாகவும் - சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் இந்த வெளித்தனமான எழுத்துக்களுக்கு பதிலடியாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ மூலமாக நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவர்கள் சொல்வது உன்மையாக இருந்தால், இவர்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்வதை எங்கள் முன் நிரூபிக்கட்டும். அது உன்மையாக இருந்தால் எங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவத்தைத் தழுவுகிறோம்' என்று பகிரங்க விவாத அழைப்பு விடுத்தனர். இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு - இந்தச் சவாலை ஏற்க பயந்துக்கொண்டு - நாங்கள் இனையத்தளம் மூலம் மட்டும் தான் எழுதுவோம். நீங்களும் அது போல் எழுதுங்கள் - நமக்கு நேரடிவிவாதமெல்லாம் சரிவராது என்று நெண்டிக்காரணங்களைக் கூறியவர்கள், இனையத்தளம் மூலம் நாம் எழுத்து விவாதம் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எழுதி ஒழிந்துக்கொண்டனர். அதாவது அவர்கள் ஒழிந்துக்கொண்டு எழுதுவார்களாம். நாமும் ஒழிந்துக்கொண்டு எழுதவேண்டுமாம். இவர்களில் ஒரு சிலரை மட்டும் நமது சகோதரார்கள் அழைத்தார்களாம். அவர்களுக்கு பேசத்தெரியாதாம். இவை எல்லாம் இவர்கள் நமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து எழுதிய வெத்துக் காரணங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நீங்களல்ல. நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ, அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும் - நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும், அவர்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு எமது சகோதரர்கள் தயார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கின்றோம்.

இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம், நமது இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் Peace - Vision of Islam என்ற இஸ்லாமியக் கண்காட்சில் - இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக வருவதாக இருந்த சில நாட்களுக்கு முன்னால் 'வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன்; விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்' என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்கள். அதில், 'அவரது சொற்பொழிவை எந்தக் கிறிஸ்தவர்களும் கேட்டுவிடக்கூடாது - மாற்று மதத்தவர்களுக்காக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் எந்தக் கிறிஸ்தவனும் கேள்விக்கேட்டுவிடக்கூடாது - என்பதற்காக நாமெல்லாம் பிரார்த்திப்போம்' என்று பயந்து அதில் எழுதியிருந்தனர்.

மற்ற கிறிஸ்தவர்கள் சென்று சகோதரர் ஜாகிர் நாயக்குடைய சொற்பொழிவைக் கேட்கக்கூடாதாம். பாவம், அவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாம்;. சரி இருக்கட்டும். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே - அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு (?) எழுதும் அளவுக்கு திறமை (?) உள்ளவர்கள் தானே? இவர்கள் சென்று அவரிடம் விவாதமல்ல - கேள்வியாவது கேட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு மேடையில் ஏறி பேசத்தெரியாது என்று கூறி எமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பு எழுதியிருந்தார்கள். சரி, நீங்கள் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்பு என்று உங்கள் தளத்தில் பதித்த அந்தக் கேள்விகளையாவது அவரிடம் நேரடியாக கேட்டு மடக்கி இருக்கவேண்டியதுதானே? அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.

அதே போல் சகோதரர். பீஜேவிற்கும் பதிலாம். ஜாகிர் நாயக்காவது பலநாடுகளுக்கும் சென்றுவரக்கூடிய வடஇந்தியாவைச் சார்ந்தவர். இந்த பீஜே இங்கேயே ஊருக்கு ஊரு 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அங்கே போய் அவருக்கு மறுப்பு கொடுத்து அவரை தினரடிக்க வேண்டியது தானே? முடியாது. காரணம் இவர்களின் எழுத்தில் சத்தியமில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இஸ்லாத்தை வசைப்பாட வேண்டும். அதன் மூலம் தங்கள் மார்க்கம் வளர்கிறதோ இல்லையே - இஸ்லாம் வளரக்கூடாது என்று குறுகிய நோக்கம் மட்டுமே.

ஓழிந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவதை எங்கும் நிரூபிக்கும் தைரியம் வேண்டும். அது சத்தியமான - உன்மையான எழுத்தாக - கருத்தாக இருந்தால் மட்டுமே முடியும். அது இஸ்லாமியர்களாகிய - எங்களால் முடியும் - ஏனெனில் நாங்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்கின்றோம் - அதனால் அதை எங்கும் நிரூபிப்போம் என்பதை இங்கே ஆணித்தரமாக குறிப்பிடக்கடமைப் பட்டிருக்கின்றேன்.

இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமான பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?

அதில் வரக்கூடிய வரிகள் என்ன?

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள.

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?

அடுத்து, அந்த ஆபாசக்கதையில வரும் விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்த அந்த ஆண்களுடைய மர்ம உறுப்பு பற்றியது. அந்த ஆண்களின் 'ஆண்உறுப்பு' கழுதைக்கு இருக்குமே அந்த அளவுக்கு பெரியதாக இருந்ததாம். அவர்களுக்கு வந்த 'விந்து' குதிரைக்கு வருமே அந்த அளவுக்கு கொட்டியதாம்'

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...' (கத்தோளிக்க மொழிப்பெயர்ப்பு) என்று கடவுள் இந்த அசிங்கமான வர்ணனையைச் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர். இதில் எங்கே உவமை உள்ளது. வெட்கமாக இல்லை இதெல்லாம் உவமை என்பதற்கு.

இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.

அடுத்து நாம் 'ஏகத்துவம்' வலைதளத்தில் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையான (இவர்களுக்கு மறுத்து நாம் எழுதிய) 'இயேசு தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோரையும் அவமதித்தார்' என்ற கட்டுரைக்கு இவர்கள் அளித்த பதில் என்ன?

இயேசு தனது தாயை மதித்ததாக பைபிளில் கிடையாது. அவரை தரக்குறைவாக நடத்தியதாகத்தான் பைபிள் காட்டுகிறது. குர்ஆன் மட்டுமே இயேசு தாயை மதிப்பதாக கூறுகிறது என்று நாம் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? திரும்பத் திரும்ப இயேசு தாயை மதித்தார் என்று நீங்களாகத்தான் எழுதி இருந்தீர்களே யொழிய பைபிள் வசனங்களை உங்களால் ஆதாரம் காட்ட இயலவில்லை. 'இல்லை' என்று இப்பொழுதும் நீங்கள் மறுத்தீர்களேயானால் நாம் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். நாம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அறிஞர்களிடம் உங்கள் பைபிளில் வரக்கூடிய - 'இயேசு தாயை மதிக்கும் லட்சனங்களின் வசனங்களை எடுத்துச்சொல்வோம்' அந்த வசனத்தின் சரியான விளக்கத்தை (அதில் சொல்லப்பட்டுள்ள விதம் பற்றி) அவர்களிடம் கேட்போம். அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு நீங்கள் தயாரா? அந்த அத்தனை வசனங்களிலும் மிகத் தெளிவாகவே தெரிகின்றது இயேசு தனது தாயை மதிக்க வில்லை என்பது. அதற்கு மேலும் நீங்களாகத்தான் சுயமாக விளக்கம் அளிக்கின்றீர்களே யொழிய, பைபிளில் ஒரு இடத்திலும் உங்களின் சுயக்கருத்துக்களுக்கு ஆதரவான வசனங்கள் கிடையாது.

அடுத்து நாம் அதே கட்டுரையில் இயேசு யூதர்களைச்சேர்ந்த பரிசேயர்களைப் பார்த்து தேவ்டியா மக்களா... - வேசி மக்களா - விபச்சார சந்ததிகளா என்று அவர்களையல்ல அவர்களின் பெற்றோரையும் - மூதாதையரையும் இன்றைய ரௌடிகள் உபயோகப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினார் என்று கூறி பைபிள் இயேசுவைக் கேவலப்படுத்துகிறது, குர்ஆன்தான் அவரை கண்ணியப்படுத்துகிறது என்று நாம் எழுதி இருந்தோம். அதற்கு நீங்கள் எழுதின பதில் என்ன? இது வரை பதில் எழுதவில்லையே ஏன்?

இயேசுவிடம் அவரது சீடன் ஒருவன் தனது தகப்பனின் மரனச்செய்தியை சொல்லிவிட்டு - அவரை அடக்கம் பண்ணிவிட்டு வருகின்றேன் என்று அனுமதிக்கேட்டதற்கு, அதை மறுத்த மறுத்த இயேசு 'அதல்லாம் மற்றவன் பார்த்துக்கொள்வான் - நீ என்னோடு வா' என்று கூறி ஒரு மனித உரிமை மீறலை செய்த இரக்கமற்றவர் என்று பைபிள் கூறுகிறது என்று ஆதாரத்துடன் நாம் எழுதிய பகுதிக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? ஒன்றும் கிடையாது.

இஸ்லாம் கல்வி தளத்தில் சகோதரர் எம். எம். அக்பர் அவர்கள் எழுதி தமிழில் வெளிவந்த 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி-1)'க்கு இது வரை நீங்கள் பதில் எழுதவில்லையே, ஏன்?

இது மட்டுமல்ல இனி நாம் எழுதப்போகிற எந்தக் கட்டுரைக்கும் உங்களால் பதில் எழுத முடியாது. பைபிளில் பெரும்பாலும் இருப்பது கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வதைத் தவிர. அப்படியே மறுப்பு என்று நீங்கள் எழுதுவதாக இருந்தால் வழக்கம் போல் நீங்கள் எழுதும் 'மறுப்பு' என்று எழுதிவிட்டு இதுதான் மறுப்பு. 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.

நான் கேட்கின்றேன், உங்களிடம் கேட்பதற்கு கேள்வியே இல்லையா? பைபிளில் ஒன்று இரண்டு பலவீனமா இருக்கின்றது? ஆயிரக்கணக்கான முரண்பாடுகள். அவ்வளவு அசிங்கங்களும் - அபாசங்களும் நிறைந்த வசனங்கள், அறிவுக்கு பொருந்தாத கருத்துக்கள், வர்னாசிரமத்தை போதிக்கும் வசனங்கள், நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர்முரனான கருத்துக்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனை பலவீனங்களும் உங்கள் பைபிளில் இருக்கின்றது, அது சம்பந்தமாக ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் எங்களுடன் விவாதம் வேண்டாம். பாவம் உங்களுக்கு முடியாது. குறைந்தபட்சம் கேள்விபதில் நிகழ்சியாவது நடத்த திரானிஇருக்கிறதா? முடியாது! முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.

ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?

இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)

இங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களால் நடக்கும் அடையாளங்களாம்.

1. இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்துவார்களாம். (இதைத்தான் இவர்கள் வக்கலத்து வாங்கும் பால் தினகரன் போன்றோர் செய்வதாக சொல்லி ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர்)

2. சர்பங்களை - பாம்புகளைப் பிடிப்பார்களாம். இவர்களை ஒன்றும் செய்யாதாம். (ஹி... ஹி... நினைப்பு பிழைப்ப கெடுக்குமாம்)

3. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் - அதாவது சாகடிக்கக்கூடிய எந்தவிதமான விஷத்தைக் குடித்தாலும் அந்த விஷம் இவர்களை ஒன்றும் செய்யாதாம்.

4. வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களாம். அப்படி கையை வைத்ததும் குணமாவார்களாம்.

உலகத்தில் எந்த கிறிஸ்தவானாவது உன்மையான கிறிஸ்தவனாக இருந்தால் - உங்கள் மதம் சத்தியமான மதமாக இருந்தால் இவற்றில் உள்ள அத்தனையையும் நிரூபியுங்கள். எங்களுடைய கேள்விகளுக் பதில் அளிக்க வேண்டாம். பாவம் உங்களுக்கு பேசத்தெரியாது. விவாதத்திற்கும் வரவேண்டாம். ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது. மேற்கூறப்பட்ட கிறிஸ்துவத்தை நம்பக்கூடிய இவர்களால் நடத்த முடியும் என்று சொல்லப்பட்ட அதிசயங்களை மட்டும் இவர்கள் செய்து காட்டட்டும். அல்லது அதில மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ளதே -- இவர்கள் எந்த விஷத்தைக் குடித்தாலும் அது இவர்களை ஒன்றும் செய்யாது என்று - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதை குடித்துவிட்டு உயிரோடு இருந்து காட்டட்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் வக்கிர எழுத்துக்களைத் தொடரட்டும். முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஏராளமான தலைப்புகளில் இவர்களின் மார்க்கம் பற்றியும் - இவர்களின் நம்பிக்கையின் மடத்தனங்கள் பற்றியும் - பைபிளின் உன்மைநிலைப் பற்றியும் பல கட்டுரைகள் மூலம் விளக்க இருக்கின்றோம். அதன் பிறகு நமது சகோதரர்கள் பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக (?) அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தக்க ஆதாரங்களுடன் - அறிவுப்பூர்வமான வாதங்களுடன் மறுப்புக்களை கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அந்த மறுப்பும் கூட இவர்களுக்காக அல்ல. இவர்களுக்கு பதில் கொடுப்பதும் ஒன்றே, கொடுக்காததும் ஒன்றே. மாறாக நமது விளக்கங்கள் அனைத்தும் மற்ற பொது மக்களின் தெளிவிற்காக...

அடுத்து பொதுவான ஒரு சந்தேகம் உங்களுக்கு எழழாம். அதாவது, நாம் ஏன் அவர்கள் மறுப்பாக எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானாரை இழிவு படுத்தி எழுதும் வக்கிர எழுத்துக்களுக்கும் பதில் அளிக்கவே இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.
இவர்கள் எழுதும் அத்தனை அவதூறுக் கட்டுரைகளும் வேண்டும் என்றே நமது கவனத்தைத்திசைதிருப்புவதற்காகவும, நமது நேரத்தை சம்பந்தம் இல்லாத கேள்விகள் மூலம் வீனடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அவை ஒவ்வென்றுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டிருந்தால் - நாம் நமது பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். நமது கருத்துக்களை நம்மால் மக்களிடம் சென்று சேர்க்கமுடியாது. இவர்களின் எண்ணமும் இது தான். காரணம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் கேள்விகளுக்கு பதில் அல்ல. நமது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதே. அப்படி பதில் தேவைப்படுபவர்களாக இருந்தால், ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதியவர்கள் அவர் சென்னை வந்ததும் அவரின் பேச்சை யாரும் கேட்டுவிடாமல் இருப்பதற்காக பிரார்த்தனை செய்வோம் என்று எழுதி இருக்க மாட்டார்கள். நேரடியாக சென்று கேள்விக்கேட்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு பதில் வேண்டும் என்றால் எங்கள் சகோதரார்கள் www.iiponline.org மூலம் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொது மேடையில் சந்திக்க வரட்டும். அங்கே நாம் அவர்களின் பதில்களுக்கு தக்க பதில் கொடுக்க தயாராக இருக்கின்றோம். அது வரை இவர்களின் இந்த அவதூறுப்பிரச்சாரங்களுக்கு பதில் எழுதுவது என்பது நமது நேரம், உழைப்பு அத்தனையையுமே - நாமே வீனடிப்பதற்கு சமமானதே என்றுக்கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
.
.
.
.

23 comments:

Unknown said...

haseeeeஇவர்களின் பைபிளே நரகள் நடையாய் இருக்கும்போது, இவர்களின் எழுதுமட்டும் என்ன அதிலும் குறைவா இருக்கும்,, "வாழ்க கிருஸ்து ,,

Asalamsmt said...

சரியாக சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் இதற்கு எல்லாம் மசிய மாட்டார்கள். நீங்கள் சொன்னது போல் இப்படி தினசரி எதையாவது சொல்லி (நமது ஜெயலலிதாவின் தினசரி போராட்டம்,தினசரி அறிக்கை மாதிரி) தினசரி அறிக்கை விட்டு தன் கிறுத்துவ மக்களின் பார்வையை இஸ்லாம் பக்கம் வந்து விடக்கூடாதே என்று தான் இருந்து கொண்டு இருக்கும் வேளையில் உங்களோடு நேரிடையாகவோ, அல்லது வேறு யாருடனுமோ விவாதத்திற்கு வர அவர்கள் தயார் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு!!!

Asalamsmt said...

// ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?

இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18) //

பீஸ் PEACE T.V யில் கிருத்தவர் ஒருவருகும், சக்கீர் நாயக் ஒருவருக்கும் உள்ள் விவாதத்தில் ஒரு அன்பர் 1 கிளாஸ் விஷத்தை அந்த உண்மை கிறுத்தவர் விவாதம் பண்ணியவரிடம் கொடுத்து, உங்கள் சோதனையை இதில் காண்பித்து தாருங்கள் என்று கேட்டு, அந்த நேரம் அந்த கிருத்தவருக்கு ஏற்பட்ட நெருக்கடியை பார்த்தவருக்குதான் தெரியும். உண்மை கிருத்தவர் ஏன் தயங்கினார்? மேலை கண்ட பைபிளின் வார்த்தை படி செய்து காண்பித்து அவரின் உண்மை வேதத்தை உண்மை படுத்தி இருந்தால் அன்றே அவரின் கிருத்தவ மதத்தின் ஞாயத்தை காண்பித்து சக்கீர் நாயக்கை தோல்வி அடைய செய்து இருக்கலாமே.

Unknown said...

கண்ணியம் நிறைந்த கிருஸ்தவ நன்பர்களே. வேதாகமத்தை ஏற்றுக்கொன்ற நீங்கள், அதன் மீது அசைக்கமுடியா நம்பிக்கையும் ஆளமானெ ஈடுபாடும் கொண்டுள்ள நீங்கள்,, மற்றவர்களால் அதன் புனிததன்மை கேள்விக்குள்ளாக்கப் படும்போது.. அசைக்கமுடியா ஆதாரங்கலொடு அதை முரியடிக்கனும்மே தவிர..பதில் என்ற பெயரிள் கட்டுரைப்போட்டி நடத்துவது, தான் ஏற்று கொண்ட கொள்கையின் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதைதான் காட்டும்..."

அதுபோல் நாம் ஏற்று கொண்ட கொள்கை சோதனைக்கு உட்படுத்த பட்டாள், எந்த சோதனைக்கும் தயார் என்று சவாள் விடனுமெ தவிர,

ஏற்று கொள்ளமுடியாத காரணங்கள் சொல்லி தப்பிக்கபார்பது. கேள்வி கேப்பவர்களின் மார்க்கத்தை பற்றி எந்த அடிப்படையிம் இல்லாமள் தாருமாராக எலுதுவது,, இதுவெல்லாம் உண்மையான மார்க்கம் எங்களிடம்தான் உள்ளது என்று சொல்பவர்களின் தகுதியில்லை

Anonymous said...

சபாஷ்! பிரிச்சி மேஞ்சிருக்கிறீங்க!! வாழ்த்துக்கள்

Unknown said...

என்ற தலதில் இஸ்லாமுக்கு பதில் என்று சொல்லிகொண்டு.. மற்றவர்களும் படிப்பார்களே என்ற வெக்கம் கூட இல்லாமல், கண்ணியமிக்க?"உமர் அரிப்பை சொரிந்து கொள்வதை பார்கலாம்

"குர்‍ஆனில் இப்படிப்பட்ட சரித்திர கதைகள் இல்லை என்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறென்" என்னெ? அழகான பதில்.


அபு இப்ராஹீம் தெளிவா கேட்டுருக்காரு ""எசேக்கியேல் 23 : 1 - 49"" என்னா சொல்லுது என்று. பதில் என்னடானு பார்தால் 'அதா அது உவமை'' என்கிறார்ரு உமர்..

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள. அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள். இவைகளே அவர்களுடைய பெயர்கள். அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம். அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை. அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள். அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள். அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள். தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள். சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள். அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள். அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள். கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தானங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம் பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள். அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள். அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன். நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும். ...நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்

இதுதான் உவமையோ?' நள்ள கர்தர் தொடரட்டும் கர்தரின் ............................கள்

SUNDAR said...

விசுவசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்று பைபிள் சொல்கிறது அதன் அடிப்படையில் "நான் கொடுக்கும் விஷத்தை குடித்து பிழைக்க முடியுமா" "நான் அழைத்து வரும் நொண்டியை குணப்படுத்த முடியுமா?" என்ற அருமையான கேவிகளை முன்வைத்துள்ளீர்கள். முடியுமா முடியாதா என்று பதிலுரைக்க முடியாத கேள்விதான்.

ஆனால் நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் "நேர் வழியில் நடப்பவருக்கு இறைவன் சுவனம் என்னும் சொர்க்கத்தையும் தூய கன்னிகைகளையும் தருவார் என்று திருக்குர்ரான் சொல்கிறது அதை யாரால் நிரூபித்து காட்ட முடியும். சொர்க்கத்தையும் அப்படிப்பட்ட கன்னிகைகள் இரண்டை கண்பியுங்கள் நான் குரானை நம்புகிறேன் என்று சொல்வது சரியா?

எந்த மதமாயினும் "விசுவாசம்" என்ற அடிப்படை கல்லின் மீது தான் கட்டப்படுகிறது இறைவனின் வார்த்தைகளை மனிதனால் நிரூபித்து காட்ட முடியாது.

முடியாது என்ற காரணத்துக்காக அது உண்மையல்ல என்று சொல்வது சரியல்ல. ஏனென்றால் அதை சொல்லவும் நிரூபிக்கவும் அவர் ஒருவராலே முடியும்.

ஒரு இஸ்லாமிய பக்திமான் ஒருவர் மரித்து அவர் நரகம் போய்விட்டால் இறைவன் பொய் சொல்லிவிட்டார் என்றா சொல்வீர்கள், அந்த மனிதன் சரியாக நடக்கவில்லை என்றுதானே சொல்வீர்கள் அது போல் இயேசுவின் வார்த்தைகள் வார்த்தைகளை நிரூபித்து காட்ட முடியாவிடால், மனிதனிடம் அவர் எதிர் பார்க்கும் அளவு விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தமே தவிர அவர் சொன்ன வார்த்தை சரியல்ல என்று அர்த்தமாகாது.

மேலும் ஆபாசம் நிறைந்த எசேக்கியேல் தீர்க்கதரிசி வார்த்தைகள் என்பதற்கும்
நான் சொல்லும் பதில் "இறைவன் இப்படித்தான் வசனம் சொல்லவேண்டும் அவர்
ஆபாசம் நிறைந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்று சொல்ல நாம் யார்? அபாசத்தையும் நிர்வாணத்தையும் படைத்த அவரை பார்த்து, நான் ஆபாசமாக நடப்பேன், ஆபாசத்தை விரும்புவேன், எல்லா உறுப்புகளையும் தொட்டு பார்ப்பேன் ஆனால் நீர் இது போல் சொல்லக்கூடாது என்று சொல்வது சரியா?

அல்லது உங்கள் விருப்பப்படி இறைவன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
sundararaj
www.kandukonden.blogspot.com

Anonymous said...

சகோதரர் சுந்தர் ராஜ் அவர்கள் எமது கேள்விகளை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக வைக்கக்கூடிய வாதங்கள் இவை. அந்தக் கண்னோட்டத்தில் பார்த்தால் எதற்குமே தீர்வை எட்ட முடியாது என்றுச்சொல்லி எனது பதிலுக்கு வருகின்றேன்.

முதலில் நாம் குறிப்பிட்ட மாற்கு 16:17-18ல் இயேசுவை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடிய - நடத்தப்பட முடியும் அடையாளங்கள் என்று தெளிவாகச் சொல்லுகின்றது. (இதில் வேறு எந்த வாதத்திற்கும் இடமில்லை)

இது பரலோகம் என்னும் சொர்க்கத்தில் நடத்தப்பட முடியும் என்று சொல்லப்ட்ட கருத்தல்ல. நீங்கள் நன்றாக விளங்கவேண்டும். இந்த உலகத்திலேயே இந்த அதிசயங்களை கிறிஸ்தவர்கள் செய்வார்களாம். இப்படியே அந்த வசனத்தில் வருகின்றது. நாம் என்ன கேட்கின்றோம் என்றால், அந்த வசனத்தில் நான்காவதாக 'நோயாளி ஒருவனை கிறிஸ்தவர்கள் தொட்டால் குணமடைந்து விடுவார்கள்' என்று சொல்லப்பட்டுள்ளதே அதைவைத்து இன்று பால்தினகரன் போன்ற பல கிறிஸ்தவர்கள் அந்த அதிசயங்களை செய்கின்றனர் என்று சொல்லி நீங்கள் - உங்களைச் சார்ந்தவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்கள் செய்யும் அதிசயங்களை (?) டிவிக்களில் காட்டி 'இதை நாங்களல்ல இயேசுவே செய்கின்றார்' என்று சொல்லி பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர். இதை வைத்து தான் நான் கேட்கிறேன், நான் ஒரு 'நொன்டியானவனை அழைத்து வருகின்றேன். அல்லது குருடனை அழைத்து வருகின்றேன். அவர்களை குணமாக்கச்சொல்லுங்கள்? அது முடியாது முடியவே முடியாது.

அதே போல் இயேசுவை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களால் நடத்த முடியும் என்று இயேசு சொன்ன அடையாளங்களில் ஒன்றான - விஷத்தைக்குடித்தால் அவர்களை ஒன்றும் செய்யாது என்றுச் சொல்லப்படுகின்றதே - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதைக் குடித்துவிட்டு உயிரோடு இருந்துக்காட்டுங்கள் என்றுச் சொல்கின்றோம். இதை உலகத்தில் உள்ள எந்தக்கிறிஸ்தவராலும் செய்ய முடியாது என்பது தான் உன்மை. இதெல்லாம் கிறிஸ்தவம் உன்மை என்பதற்கு இயேசு கிறிஸ்தவர்களுக்கு கொடுத்த அடையாளங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அது பொய். அப்படி உங்களால் நிரூபிக்க முடியாது.

// ஆனால் நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் 'நேர் வழியில் நடப்பவருக்கு இறைவன் சுவனம் என்னும் சொர்க்கத்தையும் தூய கன்னிகைகளையும் தருவார் என்று திருக்குர்ரான் சொல்கிறது அதை யாரால் நிரூபித்து காட்ட முடியும். சொர்க்கத்தையும் அப்படிப்பட்ட கன்னிகைகள் இரண்டை கண்பியுங்கள் நான் குரானை நம்புகிறேன் என்று சொல்வது சரியா? //

இந்த வாதமே தவறானது. ஓருவன் சொர்க்கம் செல்வதும் நரகம் செல்வதும் இந்த உலகத்தல் நடக்கக்கூடியதல்ல. மரனத்திற்குப் பிறகு நடக்கக்கூடியது. உங்களால் அதிசயம் நடத்த முடியும் என்று இயேசு சொன்னது இந்த உலகத்திலேயே உங்களால் நடத்த முடியும் என்பதற்காகவாம். உங்கள் மதம் சத்தியம் என்பதற்கு இயேசு உங்களுக்கு கொடுத்துள்ள பவராம் (சக்தியாம்). அதைத்தான் நிரூபியுங்கள் என்று சொல்கின்றோம். அப்படி அவர் சொல்லி இருக்க மாட்டார். அப்படி சொல்லியிருந்தால் நீங்கள் அதை நிரூபியுங்கள். அது அவர் பெயரால் இட்டுக்கட்டப்பட்டது. (அதை நிரூபிக்கக்கூடிய கட்டுரைகள் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்)

நாங்கள் என்ன கேட்கின்றோம். வேண்டும் என்றே இஸ்லாத்தைப் பற்றி தவறாக எழுதுகின்றனர் சில கிறிஸ்தவர்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்த அவதூறுகளை - நீங்கள் சொல்வது சத்தியமாக இருந்தால் - எங்களோடு பொது மேடையில் விவாத்திற்கு வந்து நிரூபியுங்கள் என்று சொல்கின்றோம். அது உன்மையாக இருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சொல்கின்றோம். அதற்கு பயந்தவர்கள் எங்களுக்கு மேடையில் பேசத் தெரியாது என்றனர். காரணம் வேண்டும் என்றே மறுப்பதற்காக.

அடுத்து எங்கள் சகோதரர்கள் நடத்தும் கேள்விபதில நிகழ்சிகளில் அந்தக் கேள்விகளை வைத்து கேள்விக்கேளுங்கள் என்றோம். அதற்கும் பயந்தவர்கள் ' நாங்கள் மட்டுமல்ல வேறு எந்தக் கிறிஸ்தவனும் அவர்களிடம் கேள்விக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக பிரார்த்திப்போம் என்றனர். காரணம் அவர்கள் சொல்வது அத்தனையும் பொய் என்பது நிரூபனம்.

அடுத்து எங்களுக்கு கிறிஸ்தவம் பற்றி ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றது. எங்களது சந்தேகங்களைப் போக்கும் விதமாக நீங்களாவது கேள்விபதில் நிகழ்ச்சி நடத்துங்கள் என்றால் 'நாங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை – எங்களுக்கு அந்த நிர்பந்தம் இல்லை' என்று மழுப்பி எழுதியிருந்தார்கள்.

சரி அதற்கும் உங்களுக்கு திரானிஇல்லையா? என்றப்பிறகு தான் உங்களாலேயே உங்கள் பைபிள் சொல்வது போல் ஒரு அதிசயத்தையாவது செய்து காட்டுங்கள் என்று சொல்கின்றோம். அதற்கு பேச்சுத்திறமையோ அல்லது வாதத்திறமையோ வேண்டாம். எத்தனையோ பேர் கலந்துக்கொண்டு கேட்பது போல் கேள்வி கேட்க வேண்டாம். காரணம் உங்களிடம் சத்தியம் இல்லை. குறைந்த பட்சம் உங்களால் முடியும் என்ற அதிசயத்தையாவது செய்து காட்டுங்கள் என்று சொல்கின்றோம். உங்களால் முடியாது. காரணம் அது இயேசு சொன்னதல்ல. இது அவர் பெயரால் கட்டப்பட்ட பொய். அவ்வளவுதான் (இது சம்பந்தமான விரிவானக் கட்டுரை விரைவில் நமது தளத்தில் இன்ஷா அல்லாஹ்)


// எந்த மதமாயினும் 'விசுவாசம்' என்ற அடிப்படை கல்லின் மீது தான் கட்டப்படுகிறது இறைவனின் வார்த்தைகளை மனிதனால் நிரூபித்து காட்ட முடியாது.

முடியாது என்ற காரணத்துக்காக அது உண்மையல்ல என்று சொல்வது சரியல்ல. ஏனென்றால் அதை சொல்லவும் நிரூபிக்கவும் அவர் ஒருவராலே முடியும் //

இது தவறான வாதம். இந்த அதிசயங்களை இந்த உலகத்தில் உங்களால் செய்ய முடியும் என்று இயேசு உத்திரவாதம் கொடுத்துள்ளார் என்கிறது. அதனால் நீங்கள் செய்யுங்கள். இல்லை என்றால் இது அவர் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பது தான் அர்த்தம்.

// ஒரு இஸ்லாமிய பக்திமான் ஒருவர் மரித்து அவர் நரகம் போய்விட்டால் இறைவன் பொய் சொல்லிவிட்டார் என்றா சொல்வீர்கள், அந்த மனிதன் சரியாக நடக்கவில்லை என்றுதானே சொல்வீர்கள் அது போல் இயேசுவின் வார்த்தைகள் வார்த்தைகளை நிரூபித்து காட்ட முடியாவிடால், மனிதனிடம் அவர் எதிர் பார்க்கும் அளவு விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தமே தவிர அவர் சொன்ன வார்த்தை சரியல்ல என்று அர்த்தமாகாது. //

இதற்கு மேலே பதில் சொல்லி இருக்கின்றேன்.


// மேலும் ஆபாசம் நிறைந்த எசேக்கியேல் தீர்க்கதரிசி வார்த்தைகள் என்பதற்கும்
நான் சொல்லும் பதில் 'இறைவன் இப்படித்தான் வசனம் சொல்லவேண்டும் அவர்
ஆபாசம் நிறைந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்று சொல்ல நாம் யார்? அபாசத்தையும் நிர்வாணத்தையும் படைத்த அவரை பார்த்து, நான் ஆபாசமாக நடப்பேன், ஆபாசத்தை விரும்புவேன், எல்லா உறுப்புகளையும் தொட்டு பார்ப்பேன் ஆனால் நீர் இது போல் சொல்லக்கூடாது என்று சொல்வது சரியா?

அல்லது உங்கள் விருப்பப்படி இறைவன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? //

இது இறைவன்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்?

நானாக ஒன்றும்சொல்லவில்லை பைபிளே சொல்கின்றது கர்த்தர் தனது வேதத்தில் இது போண்ற அசிங்கங்களை சொல்லமாட்டார் என்று : பார்க்க சங்கீதம் 33 : 4

'கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது'

'For the word of the LORD is right; and all his works are done in truth' (kjv)


அதாவது கடவுள் உத்தமுமாகத்தான் சொல்வாராம்(word of Lord is Right) அசிங்கமாக சொல்லமாட்டாராம் என்று பைபிள் ஒரு புறம் சொல்லிவிட்டு இன்னொரு இடத்தில் அவர் பெயராலேயே அசிங்கமாகச் இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்கின்றோம்.

சாத்தான் தான் இப்படிப்பட்ட அசிங்கமான வசனங்களைச் சொல்வான் என்றும் பைபிளே சொல்கின்றது.


'துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்ள. அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளதுள. புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். (சங்கீதம் 36:1-3)

கடவுள் அல்ல சாத்தான் தான் அசிங்கமாக பேசுவானாம். கடவுள் அவ்வாறு அருளமாட்டார் என்று பைபிளே சொல்கின்றதே. இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள்?


பைபிளில் ஒரே சம்பவத்தை நேர் முரனாக - முரண்பாடான - மனிதனே முரண்பட்டுச் சொன்னால் கூட நாம் ஒத்துக்கொள்ளமாட்டேம் - என்ற அளவுக்குள்ள பைபிள் வசனங்கள் ஏராளம்.

நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர் முரனான பைபிள் வசனங்கள் ஏராளம்.

வர்ணாசிரமக் கொள்கைக்கு ஆதரவான பைபிள் வசனங்கள் ஏராளம்.

கடவுள் இப்படி எல்லாம் உளரக்கூடியவரா? என்று கேட்கின்ற அளவுக்குள்ள பைபிள்வசனங்கள் ஏராளம்

ஏன் அந்த அளவுக்குச் சொல்ல, கடவுளைவீட சாத்தான் சக்திமிக்கவன் என்று பைபிள் சொல்கின்றது. கடவுள் சாத்தானிடம் தோற்றதாக பைபிள் சொல்கின்றது. ஒரு கடவுளுடைய வேதம் கடவுளை மட்டம் தட்டி - தரக்குறைவானவராக காட்டக்கூடிய வசனங்கள் ஏராளம். இவை எல்லாம் கடவுள் சொன்னதா? அல்லது கடவுளின் பெயரால் - சாத்தானுடைய தூண்டுதலால் - இட்டுக்கட்டப்பட்டதா?

இப்படி அத்தனை பலவீனங்கள் பைபிளிலே இருக்கின்றது. இதை எல்லாம் கடவுளின் வசனங்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்.

அபு இப்ராஹீம், சென்னை

Anonymous said...

Mr, Sundaraj,
பைபில் என்ன சொல்கிறது- குர் ஆன் - என்ன சொல்கிறது என்று விளங்கிதானே பேசுகிறீர்கள்''

நன்பா' பரலோகம் உன்டென் நம்புவீர்கள் என நினைக்கிரேன்.. நன்மை செய்தவனுக்கும் தீமை செய்தவனுக்கும் தீர்ப்பு எழுதும் இடம் என்றும். அது பரலோகம் என்றும் இஸ்லாம் தெளிவாக இஸ்லாம் சொல்லிகாட்டி இருந்தும்,

சொர்கத்தையிம் அதில் உல்லதயிம் எப்படி உலகில் காட்டமுடியாதோ.. என்ற உங்களின் உவமையில் இருந்தே உங்களின் என்னங்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்..

சப்பைகட்டு கட்டவேண்டியதுதான் அதுக்காக இப்படியா' ' நன்பா உங்களை சார்ந்த கிருஸ்தவ சகோதரர்களும் இதை படித்துவருகிறார்கள் என்பதை மனதில் வைத்து நல்ல பதில் எழுதுங்கள்..

'' பதில் என்ற பெயரிள் மேலும் கிருஸ்துவத்தை கேவளப்படிதாதீர்கள்''


//விசுவசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்று பைபிள் சொல்கிறது அதன் அடிப்படையில் "நான் கொடுக்கும் விஷத்தை குடித்து பிழைக்க முடியுமா" "நான் அழைத்து வரும் நொண்டியை குணப்படுத்த முடியுமா?" என்ற அருமையான கேவிகளை முன்வைத்துள்ளீர்கள். முடியுமா முடியாதா என்று பதிலுரைக்க முடியாத கேள்விதான்.//

கர்தரை விசுவசிக்கிற விசுவாசியாள் இந்த உலகில் நடப்பாக்க முடியிம் என்கிறது, நன்பா மனசாச்சிய தொட்டு இரண்டிள் ஒன்று சொல்..
இது நான் கிருஸ்தவன் ஆவதர்கோ அல்லது நீ முஸ்லிம் ஆவதர்கோ அல்ல..

Anonymous said...

சுவர்க்கம் நரகம் என்பது இறப்பிற்குப் பிறகு நடக்கக்கூடிய விசயங்கள். ஆனால் மேலே கூறப்பட்ட வசனங்கள் நடந்து முடிந்த வரலாற்றுச்சம்பவங்களாக சொல்லப்பட்டிருக்கின்றன.
எல்லா மத புனித புத்தகங்களிலும் வரலாற்றுச் சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் கடவுளின் வார்த்தை என்று சொல்லி எழுதப்பட்டுள்ள இந்த கட்டுக்கதைகள் அநாகரிகமாக உங்களுக்குத் தெரியலையா?. இன்னும் இதை கடவுளின் வார்த்தையாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?.

உங்களுக்கு ஒரு சவால், மேற்கண்ட வசனத்தை உங்கள் தங்கைகள், தமக்கை, பெற்றோர், நண்பர்கள், இன்னும் நீங்கள் விரும்பும் நபர்கள் முன்னிலையில் வாசித்து அந்த சம்பவத்தின் பின்னனியுடன், வரலாற்றுச் சம்பவங்கள் ('அமுக்கினர்' போன்ற வார்த்தைகளுடன்) உங்கள் வீட்டில் பிரசங்கம் செய்து அதனை வீடியோவில் பதிந்து யூடிபில் போட்டு பின்னூட்டமிடமுடியுமா? முடியாது அவ்வளவு அநாகரிகமான வார்த்தைகள்

Unknown said...

tamilchrictians. என்ற தளத்தில் 'உமர் என்ற பெயரில் வீரவசணம் பேசியவர், கேக்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல். திரும்பவும் தேய்ந்து போன பழய சீடி ஏயே திரும்ப திரும்ப போட்டு.அவரின் அடிவருடிகளை தலைகுனிய வைகிறார்...

பாவம் உமர், அவரும் எவ்வளோ தான் சமாளிக்க முடியிம். அடிவருடிகளின் எதிர்பார்பு அதிகமாயிட்டதால் அவர் என்ன செய்வார்.
மற்றவர்கள் காறிதுப்பினாளும் அது அவருக்கு பழகிபோச்சு.

பைபிளின் வண்டவாளம் தண்டவாளம் ஏற்ற பட்டு, சிலுவை ஏற்ற படுகிறது, காப்பற்றுவார் என்று எதிர்பார்த்த "உமரும் உன்மைஅடியானும் சிலுவை ஏற்றப்பட்ட புனித வேதத்தை?காப்பற்றாமள்.

எவனோ எடுத்த வாந்திய திரும்ப எடுப்பதை பார்து 'அவரின் அடிவருடிகளின் ஆழ் மனம் அழுது துடிப்பதை நம்மாள் உனறமுடிகிறது....!

உமரே, யாரை திருப்திபடுத்த நீர் பக்கம் பக்கமக எழுதுகிரீர். கேற்கின்ற கேளிவிக்கு நீர் பதில் கொடுத்துவிட்டு,, நி பக்கம் பக்கமாக எழுதும் உம் வக்கிரபுத்தியை,,

அதை கண்டு சந்தோசப்டும் உம் கூட்டம். ஆனால் எமக்கு தேவை பதில்.

நீர் இஸ்லமுக்கு பதில் என்று தலைப்பு மட்டும் வைகிறீர், எழுதுவதுக்கும் தலைப்பிற்கும் மட்டுமிலை,
உமக்கு அரிஉள்ளதா என்று தோனுகிறது,

Anonymous said...

நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா அவர் உன்மையில் கிறிஸ்தவர்தானா என்பதில்பலருக்கு சந்தேகம் இருக்கு. அவர் முஸ்லீமைப்பற்றி எழுகிறேன் என்றப் பெயரில் கிறிஸ்தவர்களை கேவலப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று ஏராளமானக் கிறிஸ்தவர்கள் பேசிக்கொள்வதாக எனது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒற்றுமையாக இருந்த தமிழ் கிறிஸ்தவர்களையும் - முஸ்லீம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி இது என்றும் அந்த செயல்களில் ஈடுபடுவர்கள் சில ஆதிக்க சக்திகள் என்றும் செய்திகள் வந்த வன்னம் உள்ளன. இந்த உன்மையை அறியாமல் தான் சில கிறிஸ்தவ இனையங்களே இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் பலியாகிக்கொண்டிருக்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்துக்கொண்டுள்ளது. விரைவில் சில உண்மைகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்ப்போம்.

Unknown said...

நன்பர்களே, மோதவேண்டியது கருத்துகளாக இருக்கனுமே தவிர, நாமாக இருக்கக்கூடாது.. இங்கே கருத்து பறிமாற்றத்திள் யாருக்கும் நல்ல நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

எழுதும் நம்மை யார்? YAர்க்கபோகிரார்கள் என்பதாள், கண்ணியம் நிறைந்த புத்தகங்கள் களங்கபடுத்த படுகின்றன..

உமர் அல்லது உண்மைஅடியான் இவர்கள் கிருஸ்துவத்திற்க்கு ஆதரம் ஒன்றுமில்லை. அவர்கள் முடிந்தவரை உங்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிவருகிரார்கள். அதில் தவரு இருப்பின் எங்களை போன்றவர்களுக்கு இது தவரு இதற்க்கு இதுதான் பொருள் என்று விளக்கும் கடமை உங்களுக்கு உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் கேட்ட கெள்விகளுக்கு (மாற்கு:16: 17/18) கண்டிப்பாக பதில் தருவரர்கள்,, அவர்கள் பதில் பர்த்தபின்பு என் பதிலையும் தருகிறேன்.. காரணம் என்னைவிட அவர்கள் ஞானமிக்கவைகள் என்பதால் என் பதிவை தமதிக்கிறேன்..

Anonymous said...

//நன்பர்களே மோதவேண்டியது கருத்துகளாக இருக்கனுமே தவிர நாமாக இருக்கக்கூடாது.. இங்கே கருத்து பறிமாற்றத்திள் யாருக்கும் நல்ல நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.//

நல்ல நோக்கத்தை கெடுத்தது யார்? எங்களைப் பொருத்வரை இஸ்லாத்தை சொல்லுகின்றோம். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற அடிப்டையில் தான் இங்கே சத்தியத்தை எடுத்துச்சொல்லப்படுகின்து.


//எழுதும் நம்மை யார்? பார்க்கபோகிரார்கள் என்பதாள் கண்ணியம் நிறைந்த புத்தகங்கள் களங்கபடுத்த படுகின்றன..//

இது 2008ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை. இந்த வேலையை செய்வது யார்? அவர்களா? அல்லது நாங்களா? நாங்கள்தான் இங்கே எழுதுவதை பகிரங்க விவாதத்திலும் சொல்கிறோம் என்கிறோமே. அவர்கள் அல்லவா ஒழிந்துக்கொண்டு எழுத்து விவாதம் வைத்துக்கொள்வோம் என்கின்றனர். அவர்கள் எழுதும் அவதூறு எழுத்துக்களை எங்கள் இஸ்லாமிய சகோதரர்களுடன் பொது மேடையில் நிரூபிக்கச் சொல்லுங்களேன்?

கண்ணியமிக்க புத்தகங்களா? கண்ணியத்தின் அர்த்தம் என்ன நன்பரே? ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் வருவதெல்லாம் கண்ணியமான வர்ணனைகளா? உங்கள் விளக்கம் புரியவில்லை.


//உமர் அல்லது உண்மைஅடியான் இவர்கள் கிருஸ்துவத்திற்க்கு ஆதரம் ஒன்றுமில்லை. அவர்கள் முடிந்தவரை உங்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிவருகிரார்கள். அதில் தவரு இருப்பின் எங்களை போன்றவர்களுக்கு இது தவரு இதற்க்கு இதுதான் பொருள் என்று விளக்கும் கடமை உங்களுக்கு உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.//

அவர் பதில் எழுதவில்லை அவதூறு எழுதுகின்றார். வேண்டும் என்றே பொய்யை இட்டுக்கட்டுகிறார். இது தான் உன்மை.

//நீங்கள் கேட்ட கெள்விகளுக்கு (மாற்கு:16: 17ஃ18) கண்டிப்பாக பதில் தருவரர்கள். அவர்கள் பதில் பர்த்தபின்பு என் பதிலையும் தருகிறேன்.. காரணம் என்னைவிட அவர்கள் ஞானமிக்கவைகள் என்பதால் என் பதிவை தமதிக்கிறேன்..//

விவாதத்தில் தான் பதில் தரவேண்டும். இதற்கு பதில் எழுதவேண்டிய அவசியமே இல்லை. செய்து காட்டுங்கள். அதான் இயேசுவை நம்பக்கூடிய கிறிஸ்தவர்களால் முடியும் என்று இயேசுவே சொல்லிவிட்டாரே செய்துக் காட்டுங்கள் போதும். உங்களால் விவாதத்திற்கு வரமுடியாது, இதை மட்டும் செய்து காட்டுங்கள் போதும். அதுவே பெரிசு.

ஞானம் என்றால் அவதூறு என்று பொருள் கொண்டிருக்கின்றீர்கள். யார் அவதூரை தங்கள் பிரச்சாரமாக கொண்டிருக்கின்றனரோ அவர்களைப் பற்றி ஞானமிக்கவர்கள் (?) என்கிறீர்கள். அது தவறு முதலில் ஞானத்திற்கு அகராதியில் உள்ள அர்த்தத்தை புரிந்துக்கொண்டு பின்னூட்டமிடுங்கள்.

SUNDAR said...

இறைவனுடைய வார்த்தைகளை சோதனை சாவடியில் போட்டு சோதிப்பது போல் சோதிக்க அது ஒரு வேதிப்போருள்ள. அது உண்மை என்று நிரூபிக்கப்படட்டும் நான் அதை நம்புகிறேன் என்று சொல்பவர்கள் ஒருநாளும் உண்மையை அறிய முடியாது.
விசுவாசம் இல்லாத மக்களிடம் இயேசுவாலே அற்ப்புதம் செய்ய முடியாமல் போய்விட்டது என்று பைபிள் சொல்கிறது.அப்படியிருக்க எம்போன்ற மனிதர்கள் அற்ப்புதம் செய்வது எம்மாத்திரம்.

நம்பி வருவோர்க்கு அனேக அர்ப்புதங்கள் பென்னி ஹின், தினகரன் போன்ற தேவ மனிதர்களால் நடக்கத்தான் செய்கிறது ஆனால் நம்பாதவர்கள் கண்ணுக்கு அது தெரியாது. அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

குறை இல்லாத வேதம் எது இருக்கிறது? குர்ரானில் குறையே இல்லையா?

"தான் முதலில் இறக்கிய வேதங்களை தன்னாலேயே பாதுகாக்க முடியாமல் மனிதர்களால் கெட விட்டுவிட்டார்" என்று இறைவனை தான் இறக்கிய வார்த்தைகளை காக்க இயலாதவர் போல காட்டுகிறதே திருக்குரான். அவர் திருக்குரானை மட்டும் பாதுகாப்பார் என்று என்ன நிச்சயம்?

சரி கெடத்தான் விட்டுவிட்டார் பிறகு ஏன் "உங்களுக்கு எதாவது விளக்கம் வேண்டுமென்றால் முன்பு வேதம் வழங்கப்பட்ட்வர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று முரண்பாடான வார்த்தைகளை ஏன் சொல்கிறார்?

மேலும் " நாம் நிச்சயமாகவே நரகத்துக்கேன்று ஒரு கூட்ட மனிதர்களை படித்துள்ளேன்" என்று சொல்லி நரகத்துக்காக மனிதர்களை படைக்கும் ஒரு இரக்கமற்றவராக இறைவனை காண்பிக்கிறது. முதல் முதலில் படைக்கும் போதே
அவர் நரகத்துக்கேன்று படைத்துவிட்டால் அவர்களை யார் காப்பாற்ற முடியும்?

மேலும் இப்லீஸ் என்னும் தேவதூதன் மனிதர்களை நான் கெடுத்து காட்டுகிறேன் என்று அனுமதி கேட்டபோது அவர் அனுமதி கொடுத்ததன் மூலம் இறைவன் தானே தீமை இல்லாத உலகினும் தீமையை அனுமதித்து உலகை கெடுத்து விட்டார். ஒரு கொலை குற்றவாளி நீதிபதியிடம் நான் எல்லோரையும் கொலைகாரனாக மாற்றி காட்டுகிறேன் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்டால் நீதிபதி அவனுக்கு அனுமதி கொடுப்பாரா?

இதுபோல் எத்தனையோ முரண்பாடான கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்ககெல்லாம் எதாவது ஒரு பதில் சொல்வீர்கள் ஆனால் உங்கள் பதில் ஏற்றுக்கொளும்படி சரியாக இல்லை.

உலகினுள் தீமையை அனுமதித்து நரகத்துக்காக மனிதனை படைக்கும் இரக்கமற்றவறல்ல இறைவன்.

என்ஜனங்கள் கெட்டு போகிறார்களே என்று நமக்காக பரிதபிக்கும் இறைவன் நரகத்துக்காக மனிதனை படைக்கவும் மாட்டார் தீமையை உலகினும் அனுமதிக்கவும் மாட்டார்.

முதலில் நீங்கள் அடுத்தவரிடம் கேள்வி கேட்டு அதன் மூலம் இறைவனை அறியலாம் என்று நினைப்பது தவறு. இறைவனை அறிவது தனிமையின் மூலமும் நெடுநேர ஜெபத்தின் மூலமும் தான் அறிய முடியும். மற்றபடி மூளை அறிவின் மூலமோ அராச்சியின் மூலமோ அறிய நினைத்தால் இடறுண்டு போவீர்கள்.

உண்மை வார்த்தை எது இறைவனே என்று இறைவனிடம் மன்றாடி கேளுங்கள் அவர் தெரியாப்படுத்துவார். அவர் ஜீவனுல்லவர் யார் கேட்டலும் பதிலளிக்க தயாராக உள்ளார். உங்களில் யாராவது ஒரு 2-3 மணி நேரம் அமர்ந்து அப்படி கேட்டு இறைவனை நோக்கி மன்றாடியது உண்டா?

மனிதர்களை கேட்காதீர்கள் நாங்கள் எல்லோரும் உங்களை போன்ற மனிதர்களே.
இறைவன் வார்த்தைகள் உண்மை என்று நிரூபிக்கவும் அதன் உண்மை அருத்தத்தை தெரியப்படுத்தவும் அவர் ஒருவராலே ஆகும்.

Anonymous said...

// இறைவனுடைய வார்த்தைகளை சோதனை சாவடியில் போட்டு சோதிப்பது போல் சோதிக்க அது ஒரு வேதிப்போருளள்ள. அது உண்மை என்று நிரூபிக்கப்படட்டும் நான் அதை நம்புகிறேன் என்று சொல்பவர்கள் ஒருநாளும் உண்மையை அறிய முடியாது //

சகோதரரே முதலில் ஒரு உன்மையைப் புரிந்துக்கொள்ளுங்கள். உலகத்தில் ஒரே ஒரு வேதம் மட்டும் தான் கடவுளுடைய வேதம் என்றிருக்கின்றது என்றால் நீங்கள் சொல்வது சரியாகும். பலரும் தங்களிடம் இருப்பதுதான் கடவுளுடைய வேதம் என்கின்றனர். எதை நம்புவது? கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் இப்படி பல மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களிடம் இருப்பது மட்டும்தான் சத்தியமான வேதம் என்கின்றனர். இதில் எது கடவுளுடைய வேதம் என்பதையும் - உன்மையில் எதுவாக இருக்கும் என்பதையும் - ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக்கொள்ள முடியும். அதைத்தான் கடவுளும் எதிர்பார்ப்பார். ஹிந்துக்கள் தங்களிடம் இருக்கும் வேதம் தான் சரியான வேதம் என்கின்றனர். அவர்களின் புராணங்களில் இருக்கும் நம்பமுடியாத கதைகள் எராளம். 'உலகத்தை பாயாகச் சுருட்டி கடலில் விழுந்தான்' என்றெல்லாம் நம்ப முடியாத கதைகள் இருக்கின்றது. இன்னும் எத்தனையோ கதைகள் கடவுளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் கருத்தல்ல, உங்களிடம் இருக்கும் பைபிள் மட்டும் தான் கடவுளின் வேதம் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இன்றைய விஞ்ஞானிகள் மிகத்தெளிவாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து இன்று பல உன்மைகளை (வானம், பூமி, இந்த அண்டசராசரங்கள் பற்றிய உண்மைகளை) வெளிக்கொண்டுவந்திருக்கின்றனர். அதற்கெல்லாம் நீங்கள் நம்புகின்ற பைபில் நேர் முரணாக இருக்கின்றதே! அதை எப்படி கடவுளின் வேதம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? உதாரணத்திற்கு உங்களிடம் ஒருவன் 'பெட்ரோலை தண்ணீர் என்று சொல்கின்றான்' அது தான் சரி என்று அடித்துப் பேசுகின்றான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் சொல்லிவிட்டான் என்று ஏற்றுக் கொள்வீர்களா அல்லது அதை ஆராய்ந்து பார்ப்பீர்களா? அப்படி சொல்பவனை முட்டாள் என்று தானே சொல்வார்கள்? அதைபோல் தான் பைபிள் பல விஷங்களில் தெளிவாகத் தெரியும் பல உண்மைகளுக்கு நேர்மாறாக – நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு நேர்முரணாக பல விஷயங்களைச் சொல்கிறது. இதை எப்படி கடவுளின் வேதம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? (இந்த முரண்பாடுகள் குறித்து நமது ஏகத்துவம் தளத்தில் பல விளக்கக்கட்டுரைகள் தொடர்ந்து வரஇருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்)

// விசுவாசம் இல்லாத மக்களிடம் இயேசுவாலே அற்புதம் செய்ய முடியாமல் போய்விட்டது என்று பைபிள் சொல்கிறது.அப்படியிருக்க எம்போன்ற மனிதர்கள் அற்புதம் செய்வது எம்மாத்திரம்.//

இயேசுவாலேயே பல இடங்களில் அற்புதம் செய்யவில்லை என்று ஒத்துக்கொண்டதன் மூலம் அவர் சுயமாகச் எதையும் செய்யவில்லை – அப்படி செய்ய முடியாது என்பதையும், அவருக்கு மேல் பெரியவர் ஒருவர் உள்ளார் என்பதை ஒத்துக்கொண்டதோடு அவர் கடவுள் இல்லை என்பதையும் ஒத்துக்கொண்டு விட்டீர். எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.


// நம்பி வருவோர்க்கு அனேக அற்ப்புதங்கள் பென்னி ஹின், தினகரன் போன்ற தேவ மனிதர்களால் நடக்கத்தான் செய்கிறது ஆனால் நம்பாதவர்கள் கண்ணுக்கு அது தெரியாது. அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. //

என்னே சமாளிப்பு..? அவர்களால் மட்டுமல்ல உங்களாலும் அற்புதம் செய்ய முடியுமாம்? கிறிஸ்தவர்கள் அனைவராலும் அற்புதம் செய்ய முடியுமாம். இதை நானல்ல பைபிளே சொல்கிறது. அதை செய்து காட்டுங்களேன். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை குணமாக்கச் சொல்லுங்களேன். நாங்கள் விஷத்தை தருகின்றோம். ஆதை குடித்துவிட்டு உயிருடன் இருந்துக் காட்டுங்களேன். உங்களாளல்ல உலகில் யாராலும் முடியாது. இது எமது பகிரங்க சவால்.


// குறை இல்லாத வேதம் எது இருக்கிறது? குர்ரானில் குறையே இல்லையா?//

பைபிளில் குறையுள்ளது தான்! என்று ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. குர்ஆனில் ஒரு குறையும் இல்லை என்பதை 100 சதவிகிதம் அல்ல 200 சதவிகிதம் அடித்துச் சொல்கின்றோம். அதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிப்போம். அதற்காகத்தான் எங்கள் சகோதரர்களுடன் பொது விவாதம் வாருங்கள் என்று கூப்பிடுகின்றோம்.

அடுத்து நீங்கள் கடவுளின் வேதத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று ஒத்துக்கொள்ளும் போது அவரை எந்த அளவுக்கு கீழானவராக நினைத்துவிட்டீர் பார்த்தீர்களா?

பைபிளின் வசனத்திற்கே நீங்கள் மாற்றமாக பேசுகின்றிர்:

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் - 19:7)

பைபிளில் இது போண்ற வசனங்கள் இருந்தாலும் அதற்கு மாற்றமாக பல குழப்பங்கள் நிறைந்திருக்கின்றது என்பதை நீங்கள் மட்டுமல்ல பல கிறிஸ்தவர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உன்மை.

பைபிளை இறைவேதம் என்று நம்பக்கூடியவர்கள் உங்களைப்போன்ற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும் என்பதற்கு இதுவே சான்று.


// 'தான் முதலில் இறக்கிய வேதங்களை தன்னாலேயே பாதுகாக்க முடியாமல் மனிதர்களால் கெட விட்டுவிட்டார்' என்று இறைவனை தான் இறக்கிய வார்த்தைகளை காக்க இயலாதவர் போல காட்டுகிறதே திருக்குரான். அவர் திருக்குரானை மட்டும் பாதுகாப்பார் என்று என்ன நிச்சயம்?

சரி கெடத்தான் விட்டுவிட்டார் பிறகு ஏன் 'உங்களுக்கு எதாவது விளக்கம் வேண்டுமென்றால் முன்பு வேதம் வழங்கப்பட்ட்வர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என்று முரண்பாடான வார்த்தைகளை ஏன் சொல்கிறார்? //

இது மிகத் தவறான ஒரு கேள்வி. இது சம்பந்தமாக மிக அறிவிப்பூர்வமான - ஆராய்ச்சி மிகுந்த தனிக் கட்டுரை எமது தளத்தில் விரைவில் வர இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்... பொருத்திருந்து பாருங்கள்.


// மேலும் ' நாம் நிச்சயமாகவே நரகத்துக்கேன்று ஒரு கூட்ட மனிதர்களை படித்துள்ளேன்' என்று சொல்லி நரகத்துக்காக மனிதர்களை படைக்கும் ஒரு இரக்கமற்றவராக இறைவனை காண்பிக்கிறது. முதல் முதலில் படைக்கும் போதே அவர் நரகத்துக்கேன்று படைத்துவிட்டால் அவர்களை யார் காப்பாற்ற முடியும்?

மேலும் இப்லீஸ் என்னும் தேவதூதன் மனிதர்களை நான் கெடுத்து காட்டுகிறேன் என்று அனுமதி கேட்டபோது அவர் அனுமதி கொடுத்ததன் மூலம் இறைவன் தானே தீமை இல்லாத உலகினும் தீமையை அனுமதித்து உலகை கெடுத்து விட்டார். ஒரு கொலை குற்றவாளி நீதிபதியிடம் நான் எல்லோரையும் கொலைகாரனாக மாற்றி காட்டுகிறேன் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்டால் நீதிபதி அவனுக்கு அனுமதி கொடுப்பாரா?

இதுபோல் எத்தனையோ முரண்பாடான கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்ககெல்லாம் எதாவது ஒரு பதில் சொல்வீர்கள் ஆனால் உங்கள் பதில் ஏற்றுக்கொளும்படி சரியாக இல்லை.

உலகினுள் தீமையை அனுமதித்து நரகத்துக்காக மனிதனை படைக்கும் இரக்கமற்றவறல்ல இறைவன்.

என்ஜனங்கள் கெட்டு போகிறார்களே என்று நமக்காக பரிதபிக்கும் இறைவன் நரகத்துக்காக மனிதனை படைக்கவும் மாட்டார் தீமையை உலகினும் அனுமதிக்கவும் மாட்டார். //

இது குறித்து நீங்கள் முன்பே எமது தளத்தில் இதே கேள்வியை வைத்துள்ளீர்கள். அதற்கான பதில் ஏற்கெனவே தயார் செய்து விட்டோம். இது சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது – குர்ஆன் என்ன சொல்கிறது என்பதெல்லாம் தயாராகிவிட்டது. இன்ஷா அல்லாஹ் அதை விரைவில் எமது தளத்தில் இந்த கேள்விக்கான பதில் பதியப்பட இருக்கின்றது. அதற்கு பிறகு நீங்கள் உன்மையான இறைநம்பிக்கையாளராக இருந்தால் மறுப்பெழுதுங்கள்.

// முதலில் நீங்கள் அடுத்தவரிடம் கேள்வி கேட்டு அதன் மூலம் இறைவனை அறியலாம் என்று நினைப்பது தவறு. இறைவனை அறிவது தனிமையின் மூலமும் நெடுநேர ஜெபத்தின் மூலமும் தான் அறிய முடியும். மற்றபடி மூளை அறிவின் மூலமோ அராச்சியின் மூலமோ அறிய நினைத்தால் இடறுண்டு போவீர்கள்.//

எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பயந்து ஓடுகின்றனர் என்று சொன்னது யார்? அவர்களா? நாங்களா? அவதூறுபரப்பும் சில கிறிஸ்தவர்களுக்கு என்ற கட்டுரையில் நாம் இது பற்றி எழுதியுள்ளோம். அதை மீண்டும் ஒரு முறைப் படியுங்கள்.


// உண்மை வார்த்தை எது இறைவனே என்று இறைவனிடம் மன்றாடி கேளுங்கள் அவர் தெரியாப்படுத்துவார். அவர் ஜீவனுல்லவர் யார் கேட்டலும் பதிலளிக்க தயாராக உள்ளார். உங்களில் யாராவது ஒரு 2-3 மணி நேரம் அமர்ந்து அப்படி கேட்டு இறைவனை நோக்கி மன்றாடியது உண்டா? //

நாங்கள் ஒவ்வோரு நாளைக்கும் 5 முறை கடமையான தொழுகையின் மூலம் பிரார்த்தனை செய்கிறோம். ஓவ்வொரு தொழுகையிலும் இறைவா எங்களை நேர்வழியில் நடத்துவாயாக – அதிலேயே நிலைக்கச் செய்வாயாக என்று பிரார்த்திக்கின்றோம். நீங்கள் கடவுளுக்கு பயந்து ஒவ்வொண்றையும் சிந்தியுங்கள். கண்டிப்பாக உங்களுக்குத் தெளிவு கிடைக்கும்.

கடவுளை பலவீனராக எண்ணாதீர்கள். அவர் தான் அனைத்தையும் படைத்த மகா பெரியவர் என்ற சிந்தனையுடன் உன்மையைத் தேடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நேர்வழி கிடைக்கும். கடவுளின் வேதம் குறைவானது என்று எண்ணுகிற அளவுக்கு கடவுளை பலவீனராக ஆக்காதீர்கள். இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

// மனிதர்களை கேட்காதீர்கள் நாங்கள் எல்லோரும் உங்களை போன்ற மனிதர்களே.
இறைவன் வார்த்தைகள் உண்மை என்று நிரூபிக்கவும் அதன் உண்மை அருத்தத்தை தெரியப்படுத்தவும் அவர் ஒருவராலே ஆகும் //

சத்தியத்தை தேடுங்கள், உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு நேர்வழி கிடைக்க முஸ்லீம்களாகிய நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

அபூ இப்ராஹீம், சென்னை.

Anonymous said...

அன்பு நன்பர்

குரானே ஆனாளும் சரி நம்பிவிட்டோம் என்பதுக்காக. அதெயே பிடித்து கொண்டு தொங்கு என்று இஸ்லாம் கூறவில்லை. குரானும் இதைதான் அரைகூவள் விடுகிறது. எந்த ஆய்விற்க்கும் தயாராகவே உள்ளது..

// குறை இல்லாத வேதம் எது இருக்கிறது? குர்ரானில் குறையே இல்லையா?//

இல்லை என்பதை நிருபிப்பதற்க்குதான் உங்களின் வேத போதகர்களுக்கு நாங்கள் அரைகூவள் விடுகிரோம். எழுத்து விவாதத்திற்கு மட்டும் நாங்கள் தயார் என்பதெல்லம் சொரனை இல்லா சோம்பேரிகள் சொல்லும் சொல்.

உங்களின் எழுத்து லச்சனம் தெரிந்துதான் உங்களை பொதுமேடைக்கு அழைக்கிறோம். உங்களிள் யாரும் வரமாட்டீர்கள். வந்தாள் உங்களின் பொய்முகம் கிலிக்கபட்டுவிடும் என்று பயந்து நடுங்குறீர்கள்..

மரைந்து இருந்து எழுதினாள் என்ன வேன்டுமானாலும் எழுதலாம் கேப்பதர்கோ சுட்டி காட்டவோ யாரும் இருக்கமாட்டர்கள், என்னெ அறுமையான் விவாத அழைப்பு,

உங்களின் பயமும் ஞாயமானதுதான். உங்களின் வேததின் லச்சனம் அப்படி இருக்கு. இது ஒரு புலுகுமூட்டை. எதுக்கும் உதவாதெ ஒரு செக்ஸ் புத்தகம் என்பதை நிரூபிக்க ஒரு நாள் வேண்டாம் ஒரு சில மணி துளிகள் போதும்..


உங்களுக்கு நல்லது வாங்கின காசுக்கு ஓரமாக உக்காந்து தானா பொளம்புறதுதான்..

SUNDAR said...

நண்பரே,
நான் குறை இல்லாத வேதம் எதுவுமில்லை என்று சொன்னதன் அருத்தம் "அது மனித அறிவுக்கு குறை உள்ளதாக தெரிகிறது என்பதை குறிப்பிடத்தான்" இறை வேதத்தை குறை கூற அல்ல.

மேலும் திருக்குரான் உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் பைபிள் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதை நான் மனிதர்கள் சொல்லி அல்ல இறைவனிடமே பலமணி நேரம் அமர்ந்து விசாரித்து தெரிந்து கொண்டேன்
அகவே மனிதர்கள் சொல்வதை வைத்து தடம் மாறுவது சரியல்ல.

உங்கள் பதிலுக்கு நன்றி.

Anonymous said...

சகோதரர் சுந்தரராஜ் அவர்களே

தாங்களின் சந்தேகம்களையும், பதிலையும் அறிய விரும்பி, மடிக்காமல், சளைக்காமல் இனியும் உங்கள் கேள்வி கணைகளையும் தொடுங்கள் அன்பரே. இப்படி அடிக்கடி சந்தேகம் கேட்டு தெளிவு பெற்றவர்கள் தான் இஸ்லாத்தில் வந்து ஐக்கியமாகி இருக்கிறார்கள் பலரும். குறிப்பாக சொல்ல போனால்

Dr. Abu Ameenah Bilal Philips
Born in Jamaica, but grew up in Canada where he accepted Islam in 1972....

Abdur Rahim Green
He also delivers talks and lectures for Muslims, and concentrates on the pure teaching..

Yusuf Estes
He hold dialogs and discussion groups with all faiths and enjoy the opportunity to work alongside...

மேலே கண்ட சகோதரர்கள் எல்லாம் தாங்கள் போல் பல கேள்வி கணைகள் கேட்டு,பதிலும் பெற்று தண்ணை இஸ்லாத்தில் இணைத்து கொண்டவர்கள். பெட்ரோல் பணத்திற்கோ, அல்லது ஆசை வார்த்தை சொல்லியோ அல்லது பாலும் தேனும் தருவோம் என்று ஆசைவார்த்தை சொல்லியோ அவர்கள் வந்து சேரவில்லை. கேள்வியும் கேட்டு பதிலும் பெற்று மனதால் திருப்தி பெற்று கொண்டு ஐக்கியம் ஆனவர்கள். அதுப்போல் தான் தாங்களும் உங்கள் கேள்விக்கு சகோதரர்கள் அன்புடன் பதில் தந்துக்கொண்டு இருக்கிறார்கள், இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) தாங்களும் எந்தவித குற்ற உணர்ச்சி படாமல் விளக்கம்களை பெற்று இஸ்லாத்தின் தனித்தன்மையை புரிந்துகொள்ளும் காலம் விரைவில் வரும் இறைவன் நாடினால்

அன்புடன்
சகோதரன்
பெஹ்ரேனியன்

குரங்கு said...

அருமையான வாதங்கள் அபு இப்ராஹீம்.

வாழ்த்துக்கள்.

தொடரட்டும் தாங்களின் விளக்கம்.

ஆமாம்,
சுந்தரஜன் சில கேள்விகளை கேட்டு இருக்கறே, அவருக்கு பதில் கூறுவோம் என்று சொல்லியுள்ளீர்கலே, கூறியாகிவிற்றா???

Anonymous said...

//ஆமாம்,
சுந்தரஜன் சில கேள்விகளை கேட்டு இருக்கறே, அவருக்கு பதில் கூறுவோம் என்று சொல்லியுள்ளீர்கலே, கூறியாகிவிற்றா???//


இதுவரைப் பதியப்படவில்லை. காரணம் நாம் பைபிள் பற்றியும் கிறிஸ்தவம் பற்றியும் சில முக்கியமான கட்டுரைகள் வெளியிட வேண்டியிருக்கின்றது. அப்படி நாம் சில முக்கியமான பிரச்சினைகள் சம்பந்தமான கட்டுரைகள் வெளியிட்டுவிட்டால் அவர்களுக்கு பதில் அளிப்பது இலகுவாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே பதில் தள்ளிப் போட வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக அவர்களுக்கு பதில் கொடுக்கும் கட்டுரைகளின் போது சில இடங்கிளில் விளக்கத்திற்காக பழைய கட்டுரைகளை லிங்க் கொடுப்பதன் மூலம் பதில் கட்டுரை நீண்டுக்கொண்டு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே. அதுமட்டுமல்லாமல் சில முக்கியமான கட்டுரைகள் வெயிடுவதற்கு முன் ஆரம்பக் கட்டங்களிலேயே கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தால் கட்டுரைகள் வெளியிடுவது தள்ளிப்போகும் என்பதையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இன்னும் நாம் பைபிள் பற்றி ஏறாளமான கட்டுரைகள் எழுதியபின் அவரது கேள்விகளுக்கு மட்டுமல்ல இன்னும் பலருடைய கேள்விகளுக்கும் பதில கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்..

நாம் பல சொந்த வேலைகளுக்கு மத்தியிலேயே, குறிப்பாக தொழில்துறைகளுக்கு மத்தியிலேயே இந்த எழுத்துப்பணிகளை செய்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக ஒரு கட்டுரையை எழுதி அதை சரி பார்த்து வெளியிடுவதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வiயிலும் கூட சில நேரங்களில் எடுத்துவிடுவதுண்டு. இதன் காரணமாகவே பல கட்டுரைகள் வெளிவருவதற்கும் தாமதம் ஏற்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் முடிந்த அளவுக்கு சில முக்கியமான கட்டுரைகளை விரைவில் வெளியிட்டு விட்டு பின்னர் அவர்களின் பதிலுக்கு வந்துவிடுவோம்.

baruk said...

உங்கள் இணையதளத்தை பார்த்தேன் .
பைபிள் வேதத்தை நன்றாக அறிந்திருக்கிரிர்கள் அனல் அது எழுதப்பட்ட நோக்கத்தை புரிந்துக்கொள்ளாமல் குறைகளை கண்டறியும் நோக்கத்தோடு
படிதிருக்கிரிர்கள் . மீண்டும் ஒரு முறை குறைகளை பாராமல் யன்ன நோக்கத்தோடு எழுதப்பட்டது யன்று பாருங்கள் உங்களை அறியாமல் அதை நேசிப்பெர்கள் . அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வானத்தையும் பூமியையும் படித்த கர்த்தர் உயிர் கொடுத்து இருக்கிறார் என்ற நோக்கோடு படிங்கள்.

எத்தனியோ படித்தவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும்போது தங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்பயுள்ளனர் . வேதத்தை நசுக்க நினைத்தவர்கள் நசுங்கினர்கள். உங்கல் கேள்விகளுக்கு பதில் வண்டும் என்றால் முதலில் இரண்டு மெயில் முகவரி தறுகிரன்.பிறகு திருப்தி இல்லையனில் இன்னும் பல மெயில் முகவரிகலை தறுகிரன்.உங்கள் கேள்விகளை பதிவு செயுங்கள்.

drpushparaj@jamakaran.com
jamakaran@yahoo.com

Emilsingh said...

All the Christians are not true Christians. All the Muslims are not true Muslims. Are u agree? The bible writers were not a doll in the hands of God. But God helped them to write. Qua-ran was not written by Nabi. One of the Jew was written for Nabi. (I had read earlier in a book. I don't know that book.) O.k.. R u believe that Gabriel spoke with Nabi? How do u know? U believe Qua-ran. So U believe that Qua-ran was given by Alla through Gabriel. why not Qua-ran may be written be Jew? Now all the religions goes to new form. Do u know Inter-faith dialogue? Jesus did not established Christianity. YHWH did not create Jew-ism. Alla did not established Islam. before 1600 years where is Islam? Why Alla reveal Islam to the people in the creation? Why Gabriel Gave Qua-ran to Nabi? May be give another persons. What i Say to come that All the religions created by man not God. But God is one. He is I am that I am. Jesus is not God. He is son of God. Jesus revel God in his flesh. Do U know? All the arguments never ends.
Emilsingh. C