அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label வெள்ளப்பிரளயம். Show all posts
Showing posts with label வெள்ளப்பிரளயம். Show all posts

Thursday, March 05, 2009

நோவா காலத்து வெள்ளப்பிரளயம் : முரண்படும் பைபிள்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக சமீபத்தில் கிறிஸ்தவர்கள் நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுதி தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்கள் சொல்லவருவது போல் உன்மையில் குர்ஆன் முரண்படுகின்றதா? அல்லது அவர்களது அறியாமையின் வெளிப்பாடா? என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தோம். அதைப் பின்வரும் தொடுப்புகளின் மூலம் அறியலாம்:


நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி குர்ஆனில் முரண்பாடு என்று எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் எழுதும் உமர் என்ற கிறிஸ்தவர், ஏன் பைபிளில் அதே நோவாவின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை கண்டுக்கொள்ள தவறினார்? என்பதற்கு காரணம் என்னவோ இறைவனுக்கே வெளிச்சம்.

ஏனென்றால் அவர் அரைகுறை அறிவுடன் - முரண்பாடே இல்லாமல் குர்ஆனின் மீது குற்றம் சுமத்த முற்படும் போது, அதை விட இமாலயத்தவறுகள் பைபிளில் இருப்பதை ஏன் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றார்? பைபிளில் இதே நோவாவின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகள் இவரது கண்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?



முரண்பாடு - 1



நோவா பேழைக்குள் எப்பொழுது பிரவேசித்தார்?

ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. (ஆதியாகமம் 7:7-10)

இந்த வசனங்கிளில் நோவா பேழைக்குள் பிரவேசித்ததன் பின்னர் ஏழு நாள் கழித்தே ஜலப்பிரலயம் வந்தது என்று செல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக அடுத்த வசனங்களிலேயே ஜலப்பிரளயம் தொடங்கிய அன்றுத்தான் பேழைக்குள் சென்றதாக சொல்லப்படுகின்றது:

நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். (ஆதியாகமம் 7:11-13)

இதில் எது சரி? நோவாவும் மற்றவர்களும், உயிரினங்களும் கப்பலுக்குள் சென்றப்பின் ஏழு நாள் கழித்து ஜலப்பிரளயம் ஏற்பட்டதா? அல்லது ஜலப்பிரளயம் தொடங்கிய அன்று தான் பேழைக்குள் பிரவேசித்தார்களா? ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரே ஆகாமத்தில் எப்படி இந்த முரண்பாடு வந்தது?

முரண்பாடு - 2



எத்தனை ஜோடி உயிரினங்கள் நோவாவுடன் பேழைக்குள் ஏற்றுமாறு கர்த்தரால் சொல்லப்பட்டது?



சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். (ஆதியாகமம் 6:19)

இந்த வசனத்தில் எல்லா உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வோரு ஜோடியாக கப்பலில் ஏற்றிக்கொள்ளுமாறு சொல்லப்படுகின்றது. ஆனால், அதற்கு மாற்றமாக ஆதியாகமம் 7:2 ம் வசனத்தில் ஏழு ஏழு ஜோடிகளாக ஏற்றிக்கொள்ளும் என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது:

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். - (ஆதியாகமம் 7:1-3)

இதில் எது சரி? கப்பலில் ஏற்றச்சொன்னது ஒவ்வொரு ஜோடிகளையா? அல்லது ஏழு ஏழு ஜோடிகளையா? மேலே உள்ள வசனத்தில் அனைத்து உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை மட்டும் ஏற்றச்சொன்னதாக சொல்லபட்பட்டிருக்க அதற்கு மாற்றமாக ஏழு ஏழு ஜோடியை பேழையில் ஏற்றுமாறு கூறியதாக சொல்லப்படுவது எப்படி? இதில் எது சரி?


முரண்பாடு - 3



நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது (கப்பலில் ஏறியவர்களைத் தவிர) பூமியில்இருந்த அனைத்து உயிரினங்களும் அழிந்ததா? இல்லையா?


அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின் நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. – ஆதியாகமம் 7:21-23

இந்த வனங்களின் மூலம் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது கப்பலில் ஏறியவர்களைத் தவிர மற்ற பூமியில் இருந்த அத்தனை உயிரினங்களும் அழிந்துப் போய்விட்டது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக பூமியில் வாழ்ந்த 'இராட்சதர்கள்' என்பவர்கள் நோவாவின் காலத்திற்குப் பிறகும் பல வருடங்கள் கழித்தும் வாந்தார்கள் என்று கூறப்படுகின்றது.

அந்நாட்களில் இராட்சதர் (Nephilium) பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். – ஆதியாகமம் 6:4

இந்த வசனத்தில் நோவாவின் காலத்தில் வெள்ளப் பிரளயம் ஏற்படுவதற்கும் முன்னர் இராட்சதர்கள் (மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் Nephilium என்று மொழிப்பெயர்கப்பட்டுள்ளது) என்பவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் ஏனேக்கின் வம்சாவழியினர் என்று பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் நோவாவுடன் பேழையில் ஏற்றப்படவில்லை. ஏனெனில் நோவாவுடன் அவரது குடும்பத்தார் மட்டுமே ஏற்றப்பட்டதாக பைபிளில் சொல்லப்படுகின்றது (பார்க்க ஆதியாகமம் 6:18, 7:7,13,14) ஆனால் இந்த Nephilium என்னும் பலவான்கள் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்திற்குப் பின்னரும் வாழ்ந்தார்கள் என்று பைபிளில்; சொல்லப்படுகின்றது.

கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திதரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான் அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள். (எண்ணாகமம் 13:1-2)

தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும் அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள் தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். (எண்ணாகமம் 13:18-20)

அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். - (எண்ணாகமம் 13:18)

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் (Nephilium) கண்டோம் நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம். (எண்ணாகமம் 13:33)

இந்த வசனங்களில் (Nephilium என்னும்) இராட்சதர்களை தாங்கள் பார்த்ததாக இஸ்ரவேல் தலைவர்கள் சொன்னதை இந்த வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், ஆதியாகமம் 7:21-23ம் வசனத்தில், பேழையில் ஏற்றப்பட்டவர்களைத்தவிர வேறு யாரும் உயிருடன் இருக்கவில்லை. பூமியில் வாழ்ந்து அனைத்து உயிரினங்களும் இறந்துவிட்டது என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டதாக மேலே சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக அவர்களுக்குப் பின்னும் அதே இராட்சத பிறவியான Nephilium என்பவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் அழிக்கப்பட்டார்களா? இல்லையா?

எண்ணாகமத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படுவது சரியா? அல்லது ஆதியாகமத்தில் உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது என்று சொல்லப்படுவது சரியா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
.

இறைவன் நாடினால் தொடரும்...
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.