அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Monday, January 12, 2009

அப்ரஹா மன்னனின் யானைப்படையும் - கிறிஸ்தவர்களின் கேள்வியும

அன்பு சகோதரருக்கு

முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.

கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.

Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question
....................................

திருக்குர்ஆனில் 105வது அத்தியாயமாக அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.

இதன் பின்னர் அரபுகள் தம்முடைய ஆண்டுகளை இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே யானை ஆண்டு என்று அமைத்துக் கொண்டார்கள்.

சகோதரரர் அன்சர் மூலம் கேட்கப்படும் அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகளே இல்லையே, எத்தியோப்பியாவில் கூட அன்றைக்கு யானைகள் இருந்ததில்லை என்று பலர் கூறுகின்றர்களே, அப்படி இருக்கையில் இந்த யானைப்படை சம்பவம் அன்றைக்கு அதுவும் யானைகளே இல்லாத அரபுப் பிரதேசத்தில் எப்படி நடந்திருக்கும், எனவே இது குர்ஆனில் உள்ள தவறு என்ற தோரனையில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள். நியாயமாக சிந்தித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி தவறானது என்பதை உணரலாம்.

ஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் அங்கே வாழக்கூடியதும் அங்கே உற்பத்தியாகக்கூடியது மட்டும் தான் இருக்கும் அல்லது இருக்கமுடியும் என்று நினைப்பது தவறு.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ அதைக் கொண்டுவரமுடியாது என்று சொல்லமுடியுமா?

கங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. இந்தியாவில் இல்லை என்பதற்காக அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று யாராவது சொல்வோமா?

அது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான இன்னபிற படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கடினமான காரியமாக இருக்காது - இருக்கவும்முடியாது.

பொதுவாக இந்தக் கேள்வி எப்பொழுது வரவேண்டும் என்றால்? (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த) 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றாலோ, அல்லது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளும் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.

1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா? இல்லையா? அப்படி யானைகள் ஏதும் இருந்திருந்தால் அதை அது கிடைக்கக்கூடிய பகுதியிலிருந்து கொண்டுவரமுடியுமா முடியாதா? அல்லது ஒரு இடத்தில் கிடைக்காத பொருளோ அல்லது ஏதேனும் உயிரினமே அது கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து அது கிடைக்காத வேறு இடங்களுக்கு கொண்டுவரமுடியுமா? என்பதை கேள்விக் கேட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவிட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதன் வசனங்களையே நாம் சான்றாக வைக்கின்றோம்.
.
'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் -3:15

தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள். எசேக்கியேல் 27 : 15
அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. உன்னதப்பாட்டு - 5 : 14
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ..உன்னதப்பாட்டு 7 : 4
1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றிருந்தால் பைபிலில் 'யானைத்தந்தங்கள்' என்ற வார்த்தை எப்படி இடம் பெற்றிருக்கும்? அதன் தந்தங்கள் எப்படி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மன்னர்களுக்கு கிடைத்திருக்கும்?

அதுமட்டுமல்ல தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக அது கிடைக்கக்கூடிய வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள் தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்று வாங்கி வந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதையும் இந்த பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு விளக்கப்படுகின்றது. அதாவது தங்கள் நாட்டில் கிடைக்காதவற்றை வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. அதே போல் தான் இந்த அப்ரஹா என்ற மன்னனும் தனது படைக்குத் தேவையான யானைகளை அது வாழக்கூடிய இடங்களிலிருந்து கொண்டுவந்திருப்பான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

சகோதரரர் அன்சர் அவர்களிடம் கேள்வி கேட்ட அந்த கிறிஸ்தவர்கள் இந்த திருக்குர்ஆனின் 105வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து குர்ஆனைப் பொய்ப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதும் அது எப்படி அபத்தமானது என்பதை பைபிள் ஆதாரங்களை வைத்தே நாம் பார்த்தோம். அத்துடன் இந்த சம்பவத்தின் மூலம் திருக்குர்ஆன் ஓர் ஒப்பற்ற இறைவேதம் என்பதற்கான முக்கியமான வேறு சான்றும் உள்ளது என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)

புகழனைத்தும் இறைவனுக்கே!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

Friday, June 27, 2008

கடவுளுக்கு மனிதர்களின் காணிக்கைகள் தேவையா?

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!.
(பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்
.
(பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும்
.
(பாகம் -3) செல்ல இங்கே அழுத்தவும்
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -4)
.
கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
.

பொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று.

கடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகின்றது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் படைக்கப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றாரா? என்றால் அதுவுமில்லை. கடவுளுக்கென்று படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். அதுவும் ஒரு உயர்ந்த ஜாதிசை; சேர்ந்த சில புரோகித கும்பல் மட்டும் தான் அதை உண்ணுகின்றது. இப்படிப்பட்ட தேவையுள்ள கடiவுளை 'மறுத்துத் தான் ஆக வேண்டும்' என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பல பூஜை பொருள்களை கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்?

அதனால் தான் கடவுள் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகின்றது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன். அதற்காக 1000 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப்போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை - நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர, படைப்புகளிடம் அதையும் எதிர்பார்பவனாக இருக்ககக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் - தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும் - தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன் - மிக்க பொறுமையாளன். (அல்குர்ஆன் - 2:263 )


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 2:267 )

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு உபதேசம் செய்தோம். நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் - 6:133 )

உழைப்பவர் தமக்காவவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். (அல்குர்ஆன் - 26:6 )

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ தேவையற்றவன். (திருக்குர்ஆன் 35:15 )
.
தொடரும்... இறைவன் நாடினால்
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Friday, June 20, 2008

கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை

..
.
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -2)
.
.
கலப்பில்லாத ஓரிறைக் கொள்கையை போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்!
.
.
இது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும் - மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம்.

உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.

தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க ஒரு கடவுள், இன்பத்தை வழங்க ஒரு கடவுள், மழைக்குத் தனி கடவுள், உணவு வழங்க இன்னொரு கடவுள் கல்விக்கு என்று ஒரு கடவுள் என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஓரு மனிதனை அழிக்க வேன்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? அல்லது காக்கப்படுவானா?

இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழனுக்கும் மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும் அரபியனுக்கும் சன்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

இந்த பூமியையும், ஏனைய கோள்களையும் அண்ட வெளிiயும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்து சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எப்போதோ ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. ஏந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும் எந்தெந்த பகுதியில் முழமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.
பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால்தான் கோள்கள் ஒன்றுடன் ஓன்று மோதுவதில்லை. இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் சொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கிறது.

மொத்த உலகத்திற்கும் ஓரே கடவுள் தான் இருக்க முடியும் பல கடவுள்கள் இருக்க முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

இதை குர்ஆன் தர்க்க ரீதியாகவே சொல்லி வாதிக்கிறது.

அதாவது 'இந்த உலகத்திலே ஒரு கடவுளைத் தவிர இன்னும் கொஞ்சம் கடவுகள் இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சீர்கெட்டுப் போய் இருக்கும்' (அல்குர்ஆன்)

ஒரு கடவுள் தான் என்ற கொள்கையை கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்களே பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஓரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்கு சமாதி கட்டப்பட்டது.

ஆனால் கடைசி இறைத்தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 'ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள். அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.

நபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லீமும் வழிபடுவதில்லை.

நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லீம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.

மனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.

இதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லீமும் உயர்த்துவதில்லை.

அதனால்தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.
.
.

Wednesday, June 11, 2008

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -1)

இந்த உலகில் உள்ள ஏராளமான மதங்களில் இஸ்லாமிய மார்க்கம் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கம் எந்த வகையில் ஏனைய மார்க்கங்களிலிருந்து வேறுபட்டிக்கிறது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இஸ்லாமிய மார்க்கம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது.

முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை.

இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்.

இவ்விரு கொள்கைகள் தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள். இந்த கொள்கையை ஒருவன் நம்புகின்ற காரணத்திணால் ஏனைய மார்க்கங்களிலிருந்து தனித்தவனாக, ஏனையமார்க்கங்களைத் தவிர்த்து வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறிவிடுகின்றான்.

இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும் இக்கொள்கைகளை ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லையென்றும் சொல்லகூடிய அளவுக்கு அப்படி என்ன தத்துவம் அதில் இருக்கின்றது? என்றால் இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதன் உள்ளத்தில் பதிந்து விடுமானல், அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மனிதனுடைய வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இவை எப்படி ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
.
.
மனித குல ஒருமைப்பாடு

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட குலத்தில் பிறிந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.
'நாங்கள் மட்டும் தான் பூஜைசெய்யவேண்டும்' எனக் கூறினாலும் 'நானும் சுத்தமாகக் குளித்துவிட்டுத்தான் வந்துள்ளேன்' எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குளத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ் போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத, குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை' என்று ஒருவன் சொல்லி, அவன் ஓரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஓப்புக் கொள்கின்றான். உலத்திற்கு ஓரே ஒரு கடவுள் தான் இறுக்கின்றான் என்று மனிதன் நம்பக்கூடிய நேரத்தில் அவனிடையே மொழியால் இருந்த பிளவுகள், இனத்தால் இருந்த பிளவுகள், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகிறது.

மொத்த உலகத்திற்குமே இறைவன் ஒருவன் தான், மொத்த உலகத்ததைப் படைத்த பரிபாலித்து, காத்துக் கொண்டு இருப்பவன், மொத்த உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவன் ஓரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது, நான் தழிழன், நீ மலையாளி, அவன் கன்னடத்துக் காரன் என்றெல்லாம் மனிதன் மொழியின் பெயரால் கூறுபட்டுப் போவதை இந்த கொள்கைப் பிரகடனம் தடுத்து வீடுகின்றது.

நான் இந்தியன், அவன் பாகிஸ்தானியன், நீ அமெரிக்கன் என்றெல்லாம் தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் ஏகத்துவக் கொள்கை மாற்றிவீடுகின்றது.

அதைப் போல் நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன், நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.

மொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன், மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஓரே இறைவனின் அடிமைகளாகி, 'அடிமைகள் என்ற வட்டத்துக்குள் ஒன்று பட்டு விடுகின்றனர்.

ஆக ஏக இறைவனுக்கு அடிமைகள் தான் நாம், என்று நம்பும் போது, தமிழனும் அவனுக்கு அடிமை, மலையாளியும் அவனுக்கு அடிமை, கன்னடக்காரனும் இறைவனுக்கு அடிமை என்று எல்லோரும் 'அடிமை' என்று ஒன்று பட்டு விடுகின்றோம்.

ஓரே ஒரு கடவுளுக்குத் தங்களை அடிமைகள் என்று அத்தனை பேரும் ஒன்று பட்டுக் கூறும் போது மனிதன் இன்னொருவனை விட உயர்ந்தவன் என்று கருதமாட்டான்.

என் தாய் மொழி 'தமிழ்' என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி 'மலையாளம்' என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ, இன்னும் யாருமே தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள், சொல்லவும் முடியாது. நாம் எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்புகின்ற போது, நம்மையெல்லாம் படைத்து, பரிபாலித்து வரக்கூடிய ஒரு சர்வசக்தன் நம் அனைவரின் எஜமான் என்று நம்புகின்ற போது மனிதனுக்கிடையேயுள்ள வேற்றுமை களையெடுக்கப் படுகின்றன.

இப்படிப்பட்ட ஒற்றுமை 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று அரபியில் சொல்லக்கூடிய 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய இந்த தத்துவத்தினால் ஏற்படக்கூடிய பயன் ஆகும்.

அடுத்தப்படியாக நாம் நம் இந்தியாவில் பார்க்கக்கூடிய ஜாதிப்பிரிவுகள் எங்ஙனம் இந்திய சமுதாயத்தைக் கூறுபோட்டுக் கொண்டு இக்கின்றது என்பதையும் மதத்தின் பெயரால், உயர்வு, தாழ்வு கற்பித்துக் கொண்டு மக்கள் சின்னாபின்னமாகி விடுவதையும் நம் நாட்டில் மட்டுமின்றி ஏனைய உலக நாடுகளிலும் பரவலாக நம்மால் காணமுடிகின்றது.

ஒரு மனிதனின் தோலின் நிறத்தை வைத்து அவன் தாழ்ந்தவன் என்றும் மற்றவன் உயர்ந்தவன் என்றும் சொல்லப் படுவதைப் பார்க்கின்றோம். இத்தகைய வேறுபாடுகள் ஓழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த வேறுபாடுகள் ஓழியும்? இத்தகைய வேறுபாடுகள் ஒழிவதற்காக உலகத்தில் இதுவரை தீட்டப்பட்டு வந்துள்ள திட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.

இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் மனிதன், தான் கடவுளுக்கு 'அடிமை' என்பதை உணர வேண்டும். ஒப்புக் கொள்ளவும் வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன் தான் இன்னொருவனைவிடச் சிறந்தவன் என்று கூறமாட்டான் கூறவும் முடியாது.

நானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன், நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ, அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கிகன்றான். நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான். ஆக எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன் என்றும், மற்றொருவன் கீழானவன் என்றும் சொல்லக்கூடிய ஏற்றதாழ்வுகள் முற்றாகவே அடிபட்டுப் போகின்றன.

இங்ஙணம் அடிப்பட்டுப் போகச் செய்யக் கூடிய கொள்கைத் தத்துவம் தான் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லக் கூடிய வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை என்ற கொள்கைப் பிரகடனமாகும்.

இன்றைக்கு நம் சமூகத்தில் ஒரு மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ அல்லது சிறந்த பதவியை அடைந்துவிட்டாலோ அல்லது அதிகாரம் அவன் கைக்குள் வந்துவிட்டாலோ அல்லது மற்றவர்களைவிட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்துவிட்டாலோ, இவைகளெல்லாம் இல்லாத இன்னொருவன் அவனுக்கு சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் வீழ்ந்து கடக்கின்றான்.
ஆரசியல் தலைவரகளுடைய கால்களில் வீழ்ந்து கிடக்கும் கட்சிகளின் தொண்டர்களையும் செல்வந்தர்களின் பிடிகளில் வீந்திருக்கும் ஏழைகளையும் நாம் கண்கூடாகவே காண்கின்றோம்.

இப்படி எல்லா வகையிலும் சிறந்த ஒருவனை தன் முன்னால் காணும் போது, அவனுடைய கால்களில் போய் வழவேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது அவனுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டுதான் இருக்கின்றான்.

ஆக இப்படிச் செய்வதிலிருந்து மனிதனைத் தடுத்து நிறுத்தி அவன் ஒரு கடவுளுக்கு மாத்திரம் தான் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது. அனைவரும் நம்மைப் போலவே மல, ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் தாம், தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் தாம் என்று எல்லா மனிதனும் நினைக்க ஆரம்பித்து விட்டால், இவைப்போல உள்ள எந்த மனிதனின் காலிலும் விழமாட்டான் மற்றவர்கள் தம் காலில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான்.
இதைத்தான் திருமறைக்குர்ஆன் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.

'மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்!' (அல்குர்ஆன் 49:13)

'மனிதர்களே!' என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.

உங்கள் அனைவரின் மூலபிதா யார் எனில் ஒரு ஆண்தான், உங்கள் அனைவரின் மூலத்தாயும் ஒரு பெண்தான். இன்னும் தொடர்ந்து அல்லாஹ் கூறுகின்றான்.

ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களை குடும்பங்களாகவும் (கிளைகளாகவும்), கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள், உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத்தான்.(அல்குர்ஆன் 49:13)

'உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல' என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
இதனை லாயிலாஹா இல்லல்லாஹ்'வின் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விடுமேயானால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஓழிந்து போய்விடும்.

இதனை இஸ்லாம் ஒரு தத்துவமாக மட்டும் சொல்வதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. இன்றைக்கும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
.
.
நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்

கேட்பதற்கு இனிமையான தத்துவம் என்று மாத்திரம் அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாத வறட்டு தத்துவம் என்று மாத்திரம் நினைத்துவிடக்கூடாது. இந்தக் கொள்கை ஒருவனுடைய உள்ளத்தில் நுழைந்த பிறகு ஒருவனுடைய ஜாதியையும் அவனுடைய கோத்திரத்தையும் அவனுடைய பூர்வீகம் என்ன என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டான். இந்தக் கொள்கையை ஏற்றுவிட்டால் என்னுடைய சகோதரன் என்று ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணி அவனிடம் கண்ணியமாக நடந்து கொள்வான்.

பள்ளிவாயில்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். இந்த நாட்டினுடைய ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின்னால் வந்தால் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும். வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்கள் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்கமாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்தங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படி கேட்டால் வெளியே போ! என்று சொல்லும் அளவிற்கு இந்த சமுதாயம் பண்பட்டு இருக்கிறது.
  • இந்த பண்பாட்டைக் கொடுத்தது எது?
  • அவர்களை இப்பழ உருவாக்கியது எது?
எவனுக்கு தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்தியது எது? என்ற கேள்வியெல்லாம் கேட்டால் ஒரே பதில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை' என்ற கொள்கைதான் அவர்களை இப்படி மாற்றியது.
.
.
சுயமரியாதையைப் போதித்த ஒரே மார்க்கம்

இதற்குச் சான்றாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மூஆத் (ரலி) என்ற ஒரு நபித்தோழர் இருந்தார். அவர் ஒரு நாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கே அரசவையில் ஒரு காட்சியைக் காண்கின்றார். அதாவது, அங்குள்ள மன்னருக்கு மக்கள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து மரியாதை செய்யக் கூடிய காட்சியைப் பார்க்கின்றார். உடனே அவர் நாமும் நபி (ஸல்) அவர்களை சந்தித்த உடன் இதே போன்று செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு மதீனாவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைகிறார்.

'அல்லாஹ்வுடைய தூதரே! நான் பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குள்ள மக்கள் அங்குள்ள மன்னர்களுக்கு சாஷ்டாங்கம் செய்யக் கூடிய நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கக் கூடிய காட்சியை நான் கண்டிருக்கின்றேன் என்று மூஆத் (ரலி) கூறினார்கள். மேலும் அந்த மன்னர்களைவிட உங்களுக்கு அதிகமான தகுதி இருக்கின்றது. அவர்களைவிட நாங்கள் அதிகமாகவே மதிக்கிறோம். உங்களுக்கும் நாங்கள் அதே மரியாதையை செய்கிறோம்'. என்று கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) கூடாது. அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதை மார்க்கம் தடுக்கின்றது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் இந்த மரியாதையை செய்ய வேண்டுமென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்த வரலாற்றை நாம் இன்றும் காண்கின்றோம்.

இது மட்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். 'நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழந்து நிற்கமாட்டோம். காரணம் இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆகவே நாங்கள் அமர்ந்திருக்கும் ஒரு சபைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து நிற்பதில்லை' என்று அனஸ் (ரலி) கூறுகிறார்கள் (நூல்: அஹ்மத்).
ஆக மனிதன் பிற மனிதனை மதிக்ககூடிய, எல்லோரும் சமமானவர்கள் என்று நடைமுறைப்படுத்திய ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கூட எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்கு அடிப்படைக் காரணம் 'லாயிலாஹ இல்லல்hஹ்' (வணக்கத்திற்கு சொந்தக்காரன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற ஏகத்துவ அடிப்படைக் கொள்கைதான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தை அடைந்த பின்னரும் அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசாகவும் இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களிலெல்லாம் வலுமிக்கதாக இருந்தது.

ஆக இவ்வளவு உயர்நத நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும் - ஏன் தமக்காக எழுந்து நிற்பதையும் கூட நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்று சொன்னால் அதற்கு காரணம் என்ன? 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை' என்று அவர்கள் பிரச்சாரம் செய்ததே. அந்த பிரச்சாரத்தில் மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்தது கொண்டார்கள் என்பது தான் உண்மை.
.
.
.
.

Wednesday, June 04, 2008

இஸ்லாமும் பிற மதங்களும்...!

................................................. - டாக்டர். ஜாகிர் நாயக்

உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.

பதில்:

1) இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:

எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

2) உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ) இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.
எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ) இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.
இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ) திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

திருடினான் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:

'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 5 : 38)

'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா? இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்

ஈ) இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.

3) மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ) வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ) இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.

இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இ) பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

ஈ) ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

உ) இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ) வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

எ) அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில் 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.

அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 x 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது. மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.

ஏ) இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4) மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.

.
.
.
.

Friday, April 18, 2008

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்?

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்! படிக்க இங்கே அழுத்தவும்

நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:

மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.

இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.

நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.

இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.

மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.

மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.

தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.

ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.

இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.

அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

தொடரும் இறைவன் நாடினால்...
.
.
.

Wednesday, April 16, 2008

இஸ்லாம் என்றால் என்ன? (பாகம் - 1)

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்!

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல் இறவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம். இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது.

இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.

இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?

துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்!

இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும்.

ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4:1)

எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2 - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்? செல்ல இங்கே அழுத்தவும்.
.

Thursday, March 27, 2008

ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!

ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை. இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன. ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பௌத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பௌத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும். MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல் இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன. இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர். அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக்கொண்டே பொய்க்கடவுளர்களின் கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா? ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை. இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான 'இன இழிவு இஸ்லாமே நன் மருந்து' ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார். பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான். இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள். எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே! அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே! ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை. அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள்.

அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள். இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது. மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை. அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள். சமீபத்தில் கூட விழுப்புரம் மாவட்டம் எறையூர் கிராமத்தில் உயர் ஜாதிக்கிறிஸ்தவர்களுக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஜாதிப் பிரச்சனையால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மதத்திலிருந்து வேறு மதம் மாற முடிவு செய்துள்ளனர் என்ற செய்திகளை பத்திரிக்கைகளில் நாம் பார்த்து வருகின்றோம். அம்பேத்கார் தழுவிய பௌத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது. அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்? இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை. அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க்கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள். இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர். தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.

அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும். இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல்

என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர். (25:30 அல்குர்ஆன்)

என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை. எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம். மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா? (நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

Friday, March 21, 2008

இரண்டாம் கற்காலம் !

இரண்டாம் கற்காலம் !
...................................................-- ஆரூர் புதியவன்

கல்லும், உளியும்
கலந்த பொழுது
கர்ப்பமான கல்
சிற்பமானது

மலையை செதுக்கத் தெரிந்த
மனிதன் தன்
மனத்தை செதுக்கத்தான்
மறந்தே போனான்

கல்லுக்குத்தான்
எத்தனை பரிணாமங்கள்
கல் கடவுளாக்கப்பட்டது
பகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...
காலம் புரண்டது...
கடவுளை கல்லால் அடித்தவர்களும்
கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.

கடவுள் பக்திக்கு மட்டுமின்றி
கலவரத்திற்கும்...
கல்லே மூலமாய்...

மனிதனுக்கு
கல்லையும் கடவுளாய்ப்
பார்க்க முடிந்தது ...
மற்றவனைத்தான்
தன்போல் பாவிக்க முடியவில்லை.

உடைப்பட்ட சிலைகளுக்காய்
உருள்கின்றன தலைகள்...

ஒரு தலைவர் ஆற்றிய
சேவைகளை விட
அவருக்கு வைக்கப்படும்
சிலைகளே ...
அவர் தகுதி உரைக்கிறது...

ஒன்று மட்டும் உண்மை
மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது.

நகரவீதிகள் தோறும்
நகரா சிலைகள்
ஓ ... இது இரண்டாம் கற்காலம் !

இங்கே
அடிமைத்தளை நீக்க
யுத்தம் செய்பவர்களை விட
தலைவர் சிலை வைக்க
ரத்தம் சிந்துவோர் அதிகம்

சட்ட சபைகள்
நலத்திட்டங்களை விட
சிலைத்திட்டங்களே
அதிகம் அறிவிக்கின்றன

இருபத்தோராம் நூற்றாண்டின்
இனிய தமிழா ...
கணிப்பொறி யுகத்தில்
உலகம்...
நீ இன்னும்
கற்காலத்தை
கடக்காமலா?

ஒவ்வொரு சிலையும்
மலையின் தவணைமுறை சமாதி
என்பதை மறவாதே !

சிலைகளை மற
மனிதனை நினை
ஜாதிகளும், சிலைகளும்
அறிவுக்கு அமைக்கப்பட்ட
வேகத்தடைகள்
நாம் விரைந்து முன்னேற
இரண்டையும் தகர்ப்போம்...!
.
.

Wednesday, March 19, 2008

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...
- அபு இப்ராஹீம், சென்னை.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல் இருப்பதற்காகவும், இஸ்லாம் அல்லாத மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது - அல்லது அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இஸ்லாத்தை - அதன் அறிவுப்பூர்வமான கருத்துக்களை - மக்களிடம் எடுத்துச்சொல்வதோடு இவர்கள் பின்பற்றக்கூடிய மௌடீகக் கொள்கைகளை குறிப்பாக கிறிஸ்தவத்தின் உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வேண்டி - பல தலைப்புகளில் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து எழுதிவருகின்றோம்.

இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி நமது 'ஏகத்துவம்' என்ற வலைத்தளத்தில் வெளிவந்த எமது இரண்டாவது கட்டுரையான 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபில்' என்றத் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள், எதையாவது சொல்லி மறுத்தாகவேண்டும் என்பதற்காக 'ஈசா குர்ஆன்' என்றப்பெயரில் ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தனர் :

'1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், 'இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்' என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்' என்று எழுதியிருந்தனர்.

அதாவது நாம் எழுதின கட்டுரைகளுக்கு இவர்கள் பதில் அளித்து இருந்தார்களாம். நாம் அதற்கு பதில் எழுதவில்லையாம். உடனே அடுத்த கட்டுரைக்கு நாம் தாவி ஓடிவிட்டோமாம்.

எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்பானாம். அது போல் 'இருக்கின்றவன் - இயைத்தளங்களைப் படிக்கின்றவன் - அனைவரும் கேனையன், இவர்கள் மட்டும் அறிவாளிகள்' என்ற எண்ணத்தில் இப்படி எழுதியுள்ளார்கள்.

இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக இவர்களைப்பற்றிய சில தகவல்களை உங்களுக்கு நினைவுட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

பகிரங்க விவாதத்திற்கு பயந்து ஓடிய கூட்டம்:

சமீபத்தில் இவர்கள் நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி தரக்குறைவாகவும் வெறித்தனமாகவும் - சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் இந்த வெளித்தனமான எழுத்துக்களுக்கு பதிலடியாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ மூலமாக நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவர்கள் சொல்வது உன்மையாக இருந்தால், இவர்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்வதை எங்கள் முன் நிரூபிக்கட்டும். அது உன்மையாக இருந்தால் எங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவத்தைத் தழுவுகிறோம்' என்று பகிரங்க விவாத அழைப்பு விடுத்தனர். இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு - இந்தச் சவாலை ஏற்க பயந்துக்கொண்டு - நாங்கள் இனையத்தளம் மூலம் மட்டும் தான் எழுதுவோம். நீங்களும் அது போல் எழுதுங்கள் - நமக்கு நேரடிவிவாதமெல்லாம் சரிவராது என்று நெண்டிக்காரணங்களைக் கூறியவர்கள், இனையத்தளம் மூலம் நாம் எழுத்து விவாதம் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எழுதி ஒழிந்துக்கொண்டனர். அதாவது அவர்கள் ஒழிந்துக்கொண்டு எழுதுவார்களாம். நாமும் ஒழிந்துக்கொண்டு எழுதவேண்டுமாம். இவர்களில் ஒரு சிலரை மட்டும் நமது சகோதரார்கள் அழைத்தார்களாம். அவர்களுக்கு பேசத்தெரியாதாம். இவை எல்லாம் இவர்கள் நமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து எழுதிய வெத்துக் காரணங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நீங்களல்ல. நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ, அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும் - நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும், அவர்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு எமது சகோதரர்கள் தயார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கின்றோம்.

இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம், நமது இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் Peace - Vision of Islam என்ற இஸ்லாமியக் கண்காட்சில் - இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக வருவதாக இருந்த சில நாட்களுக்கு முன்னால் 'வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன்; விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்' என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்கள். அதில், 'அவரது சொற்பொழிவை எந்தக் கிறிஸ்தவர்களும் கேட்டுவிடக்கூடாது - மாற்று மதத்தவர்களுக்காக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் எந்தக் கிறிஸ்தவனும் கேள்விக்கேட்டுவிடக்கூடாது - என்பதற்காக நாமெல்லாம் பிரார்த்திப்போம்' என்று பயந்து அதில் எழுதியிருந்தனர்.

மற்ற கிறிஸ்தவர்கள் சென்று சகோதரர் ஜாகிர் நாயக்குடைய சொற்பொழிவைக் கேட்கக்கூடாதாம். பாவம், அவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாம்;. சரி இருக்கட்டும். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே - அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு (?) எழுதும் அளவுக்கு திறமை (?) உள்ளவர்கள் தானே? இவர்கள் சென்று அவரிடம் விவாதமல்ல - கேள்வியாவது கேட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு மேடையில் ஏறி பேசத்தெரியாது என்று கூறி எமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பு எழுதியிருந்தார்கள். சரி, நீங்கள் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்பு என்று உங்கள் தளத்தில் பதித்த அந்தக் கேள்விகளையாவது அவரிடம் நேரடியாக கேட்டு மடக்கி இருக்கவேண்டியதுதானே? அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.

அதே போல் சகோதரர். பீஜேவிற்கும் பதிலாம். ஜாகிர் நாயக்காவது பலநாடுகளுக்கும் சென்றுவரக்கூடிய வடஇந்தியாவைச் சார்ந்தவர். இந்த பீஜே இங்கேயே ஊருக்கு ஊரு 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அங்கே போய் அவருக்கு மறுப்பு கொடுத்து அவரை தினரடிக்க வேண்டியது தானே? முடியாது. காரணம் இவர்களின் எழுத்தில் சத்தியமில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இஸ்லாத்தை வசைப்பாட வேண்டும். அதன் மூலம் தங்கள் மார்க்கம் வளர்கிறதோ இல்லையே - இஸ்லாம் வளரக்கூடாது என்று குறுகிய நோக்கம் மட்டுமே.

ஓழிந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவதை எங்கும் நிரூபிக்கும் தைரியம் வேண்டும். அது சத்தியமான - உன்மையான எழுத்தாக - கருத்தாக இருந்தால் மட்டுமே முடியும். அது இஸ்லாமியர்களாகிய - எங்களால் முடியும் - ஏனெனில் நாங்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்கின்றோம் - அதனால் அதை எங்கும் நிரூபிப்போம் என்பதை இங்கே ஆணித்தரமாக குறிப்பிடக்கடமைப் பட்டிருக்கின்றேன்.

இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமான பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?

அதில் வரக்கூடிய வரிகள் என்ன?

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள.

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?

அடுத்து, அந்த ஆபாசக்கதையில வரும் விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்த அந்த ஆண்களுடைய மர்ம உறுப்பு பற்றியது. அந்த ஆண்களின் 'ஆண்உறுப்பு' கழுதைக்கு இருக்குமே அந்த அளவுக்கு பெரியதாக இருந்ததாம். அவர்களுக்கு வந்த 'விந்து' குதிரைக்கு வருமே அந்த அளவுக்கு கொட்டியதாம்'

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...' (கத்தோளிக்க மொழிப்பெயர்ப்பு) என்று கடவுள் இந்த அசிங்கமான வர்ணனையைச் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர். இதில் எங்கே உவமை உள்ளது. வெட்கமாக இல்லை இதெல்லாம் உவமை என்பதற்கு.

இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.

அடுத்து நாம் 'ஏகத்துவம்' வலைதளத்தில் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையான (இவர்களுக்கு மறுத்து நாம் எழுதிய) 'இயேசு தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோரையும் அவமதித்தார்' என்ற கட்டுரைக்கு இவர்கள் அளித்த பதில் என்ன?

இயேசு தனது தாயை மதித்ததாக பைபிளில் கிடையாது. அவரை தரக்குறைவாக நடத்தியதாகத்தான் பைபிள் காட்டுகிறது. குர்ஆன் மட்டுமே இயேசு தாயை மதிப்பதாக கூறுகிறது என்று நாம் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? திரும்பத் திரும்ப இயேசு தாயை மதித்தார் என்று நீங்களாகத்தான் எழுதி இருந்தீர்களே யொழிய பைபிள் வசனங்களை உங்களால் ஆதாரம் காட்ட இயலவில்லை. 'இல்லை' என்று இப்பொழுதும் நீங்கள் மறுத்தீர்களேயானால் நாம் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். நாம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அறிஞர்களிடம் உங்கள் பைபிளில் வரக்கூடிய - 'இயேசு தாயை மதிக்கும் லட்சனங்களின் வசனங்களை எடுத்துச்சொல்வோம்' அந்த வசனத்தின் சரியான விளக்கத்தை (அதில் சொல்லப்பட்டுள்ள விதம் பற்றி) அவர்களிடம் கேட்போம். அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு நீங்கள் தயாரா? அந்த அத்தனை வசனங்களிலும் மிகத் தெளிவாகவே தெரிகின்றது இயேசு தனது தாயை மதிக்க வில்லை என்பது. அதற்கு மேலும் நீங்களாகத்தான் சுயமாக விளக்கம் அளிக்கின்றீர்களே யொழிய, பைபிளில் ஒரு இடத்திலும் உங்களின் சுயக்கருத்துக்களுக்கு ஆதரவான வசனங்கள் கிடையாது.

அடுத்து நாம் அதே கட்டுரையில் இயேசு யூதர்களைச்சேர்ந்த பரிசேயர்களைப் பார்த்து தேவ்டியா மக்களா... - வேசி மக்களா - விபச்சார சந்ததிகளா என்று அவர்களையல்ல அவர்களின் பெற்றோரையும் - மூதாதையரையும் இன்றைய ரௌடிகள் உபயோகப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினார் என்று கூறி பைபிள் இயேசுவைக் கேவலப்படுத்துகிறது, குர்ஆன்தான் அவரை கண்ணியப்படுத்துகிறது என்று நாம் எழுதி இருந்தோம். அதற்கு நீங்கள் எழுதின பதில் என்ன? இது வரை பதில் எழுதவில்லையே ஏன்?

இயேசுவிடம் அவரது சீடன் ஒருவன் தனது தகப்பனின் மரனச்செய்தியை சொல்லிவிட்டு - அவரை அடக்கம் பண்ணிவிட்டு வருகின்றேன் என்று அனுமதிக்கேட்டதற்கு, அதை மறுத்த மறுத்த இயேசு 'அதல்லாம் மற்றவன் பார்த்துக்கொள்வான் - நீ என்னோடு வா' என்று கூறி ஒரு மனித உரிமை மீறலை செய்த இரக்கமற்றவர் என்று பைபிள் கூறுகிறது என்று ஆதாரத்துடன் நாம் எழுதிய பகுதிக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? ஒன்றும் கிடையாது.

இஸ்லாம் கல்வி தளத்தில் சகோதரர் எம். எம். அக்பர் அவர்கள் எழுதி தமிழில் வெளிவந்த 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி-1)'க்கு இது வரை நீங்கள் பதில் எழுதவில்லையே, ஏன்?

இது மட்டுமல்ல இனி நாம் எழுதப்போகிற எந்தக் கட்டுரைக்கும் உங்களால் பதில் எழுத முடியாது. பைபிளில் பெரும்பாலும் இருப்பது கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வதைத் தவிர. அப்படியே மறுப்பு என்று நீங்கள் எழுதுவதாக இருந்தால் வழக்கம் போல் நீங்கள் எழுதும் 'மறுப்பு' என்று எழுதிவிட்டு இதுதான் மறுப்பு. 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.

நான் கேட்கின்றேன், உங்களிடம் கேட்பதற்கு கேள்வியே இல்லையா? பைபிளில் ஒன்று இரண்டு பலவீனமா இருக்கின்றது? ஆயிரக்கணக்கான முரண்பாடுகள். அவ்வளவு அசிங்கங்களும் - அபாசங்களும் நிறைந்த வசனங்கள், அறிவுக்கு பொருந்தாத கருத்துக்கள், வர்னாசிரமத்தை போதிக்கும் வசனங்கள், நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர்முரனான கருத்துக்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனை பலவீனங்களும் உங்கள் பைபிளில் இருக்கின்றது, அது சம்பந்தமாக ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் எங்களுடன் விவாதம் வேண்டாம். பாவம் உங்களுக்கு முடியாது. குறைந்தபட்சம் கேள்விபதில் நிகழ்சியாவது நடத்த திரானிஇருக்கிறதா? முடியாது! முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.

ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?

இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)

இங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களால் நடக்கும் அடையாளங்களாம்.

1. இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்துவார்களாம். (இதைத்தான் இவர்கள் வக்கலத்து வாங்கும் பால் தினகரன் போன்றோர் செய்வதாக சொல்லி ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர்)

2. சர்பங்களை - பாம்புகளைப் பிடிப்பார்களாம். இவர்களை ஒன்றும் செய்யாதாம். (ஹி... ஹி... நினைப்பு பிழைப்ப கெடுக்குமாம்)

3. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் - அதாவது சாகடிக்கக்கூடிய எந்தவிதமான விஷத்தைக் குடித்தாலும் அந்த விஷம் இவர்களை ஒன்றும் செய்யாதாம்.

4. வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களாம். அப்படி கையை வைத்ததும் குணமாவார்களாம்.

உலகத்தில் எந்த கிறிஸ்தவானாவது உன்மையான கிறிஸ்தவனாக இருந்தால் - உங்கள் மதம் சத்தியமான மதமாக இருந்தால் இவற்றில் உள்ள அத்தனையையும் நிரூபியுங்கள். எங்களுடைய கேள்விகளுக் பதில் அளிக்க வேண்டாம். பாவம் உங்களுக்கு பேசத்தெரியாது. விவாதத்திற்கும் வரவேண்டாம். ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது. மேற்கூறப்பட்ட கிறிஸ்துவத்தை நம்பக்கூடிய இவர்களால் நடத்த முடியும் என்று சொல்லப்பட்ட அதிசயங்களை மட்டும் இவர்கள் செய்து காட்டட்டும். அல்லது அதில மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ளதே -- இவர்கள் எந்த விஷத்தைக் குடித்தாலும் அது இவர்களை ஒன்றும் செய்யாது என்று - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதை குடித்துவிட்டு உயிரோடு இருந்து காட்டட்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் வக்கிர எழுத்துக்களைத் தொடரட்டும். முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஏராளமான தலைப்புகளில் இவர்களின் மார்க்கம் பற்றியும் - இவர்களின் நம்பிக்கையின் மடத்தனங்கள் பற்றியும் - பைபிளின் உன்மைநிலைப் பற்றியும் பல கட்டுரைகள் மூலம் விளக்க இருக்கின்றோம். அதன் பிறகு நமது சகோதரர்கள் பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக (?) அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தக்க ஆதாரங்களுடன் - அறிவுப்பூர்வமான வாதங்களுடன் மறுப்புக்களை கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அந்த மறுப்பும் கூட இவர்களுக்காக அல்ல. இவர்களுக்கு பதில் கொடுப்பதும் ஒன்றே, கொடுக்காததும் ஒன்றே. மாறாக நமது விளக்கங்கள் அனைத்தும் மற்ற பொது மக்களின் தெளிவிற்காக...

அடுத்து பொதுவான ஒரு சந்தேகம் உங்களுக்கு எழழாம். அதாவது, நாம் ஏன் அவர்கள் மறுப்பாக எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானாரை இழிவு படுத்தி எழுதும் வக்கிர எழுத்துக்களுக்கும் பதில் அளிக்கவே இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.
இவர்கள் எழுதும் அத்தனை அவதூறுக் கட்டுரைகளும் வேண்டும் என்றே நமது கவனத்தைத்திசைதிருப்புவதற்காகவும, நமது நேரத்தை சம்பந்தம் இல்லாத கேள்விகள் மூலம் வீனடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அவை ஒவ்வென்றுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டிருந்தால் - நாம் நமது பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். நமது கருத்துக்களை நம்மால் மக்களிடம் சென்று சேர்க்கமுடியாது. இவர்களின் எண்ணமும் இது தான். காரணம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் கேள்விகளுக்கு பதில் அல்ல. நமது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதே. அப்படி பதில் தேவைப்படுபவர்களாக இருந்தால், ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதியவர்கள் அவர் சென்னை வந்ததும் அவரின் பேச்சை யாரும் கேட்டுவிடாமல் இருப்பதற்காக பிரார்த்தனை செய்வோம் என்று எழுதி இருக்க மாட்டார்கள். நேரடியாக சென்று கேள்விக்கேட்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு பதில் வேண்டும் என்றால் எங்கள் சகோதரார்கள் www.iiponline.org மூலம் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொது மேடையில் சந்திக்க வரட்டும். அங்கே நாம் அவர்களின் பதில்களுக்கு தக்க பதில் கொடுக்க தயாராக இருக்கின்றோம். அது வரை இவர்களின் இந்த அவதூறுப்பிரச்சாரங்களுக்கு பதில் எழுதுவது என்பது நமது நேரம், உழைப்பு அத்தனையையுமே - நாமே வீனடிப்பதற்கு சமமானதே என்றுக்கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
.
.
.
.