அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label அபாபீல். Show all posts
Showing posts with label அபாபீல். Show all posts

Monday, January 12, 2009

அப்ரஹா மன்னனின் யானைப்படையும் - கிறிஸ்தவர்களின் கேள்வியும

அன்பு சகோதரருக்கு

முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.

கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.

Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question
....................................

திருக்குர்ஆனில் 105வது அத்தியாயமாக அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.

இதன் பின்னர் அரபுகள் தம்முடைய ஆண்டுகளை இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே யானை ஆண்டு என்று அமைத்துக் கொண்டார்கள்.

சகோதரரர் அன்சர் மூலம் கேட்கப்படும் அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகளே இல்லையே, எத்தியோப்பியாவில் கூட அன்றைக்கு யானைகள் இருந்ததில்லை என்று பலர் கூறுகின்றர்களே, அப்படி இருக்கையில் இந்த யானைப்படை சம்பவம் அன்றைக்கு அதுவும் யானைகளே இல்லாத அரபுப் பிரதேசத்தில் எப்படி நடந்திருக்கும், எனவே இது குர்ஆனில் உள்ள தவறு என்ற தோரனையில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள். நியாயமாக சிந்தித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி தவறானது என்பதை உணரலாம்.

ஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் அங்கே வாழக்கூடியதும் அங்கே உற்பத்தியாகக்கூடியது மட்டும் தான் இருக்கும் அல்லது இருக்கமுடியும் என்று நினைப்பது தவறு.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ அதைக் கொண்டுவரமுடியாது என்று சொல்லமுடியுமா?

கங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. இந்தியாவில் இல்லை என்பதற்காக அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று யாராவது சொல்வோமா?

அது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான இன்னபிற படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கடினமான காரியமாக இருக்காது - இருக்கவும்முடியாது.

பொதுவாக இந்தக் கேள்வி எப்பொழுது வரவேண்டும் என்றால்? (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த) 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றாலோ, அல்லது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளும் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.

1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா? இல்லையா? அப்படி யானைகள் ஏதும் இருந்திருந்தால் அதை அது கிடைக்கக்கூடிய பகுதியிலிருந்து கொண்டுவரமுடியுமா முடியாதா? அல்லது ஒரு இடத்தில் கிடைக்காத பொருளோ அல்லது ஏதேனும் உயிரினமே அது கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து அது கிடைக்காத வேறு இடங்களுக்கு கொண்டுவரமுடியுமா? என்பதை கேள்விக் கேட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவிட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதன் வசனங்களையே நாம் சான்றாக வைக்கின்றோம்.
.
'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் -3:15

தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள். எசேக்கியேல் 27 : 15
அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. உன்னதப்பாட்டு - 5 : 14
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ..உன்னதப்பாட்டு 7 : 4
1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றிருந்தால் பைபிலில் 'யானைத்தந்தங்கள்' என்ற வார்த்தை எப்படி இடம் பெற்றிருக்கும்? அதன் தந்தங்கள் எப்படி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மன்னர்களுக்கு கிடைத்திருக்கும்?

அதுமட்டுமல்ல தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக அது கிடைக்கக்கூடிய வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள் தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்று வாங்கி வந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதையும் இந்த பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு விளக்கப்படுகின்றது. அதாவது தங்கள் நாட்டில் கிடைக்காதவற்றை வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. அதே போல் தான் இந்த அப்ரஹா என்ற மன்னனும் தனது படைக்குத் தேவையான யானைகளை அது வாழக்கூடிய இடங்களிலிருந்து கொண்டுவந்திருப்பான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

சகோதரரர் அன்சர் அவர்களிடம் கேள்வி கேட்ட அந்த கிறிஸ்தவர்கள் இந்த திருக்குர்ஆனின் 105வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து குர்ஆனைப் பொய்ப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதும் அது எப்படி அபத்தமானது என்பதை பைபிள் ஆதாரங்களை வைத்தே நாம் பார்த்தோம். அத்துடன் இந்த சம்பவத்தின் மூலம் திருக்குர்ஆன் ஓர் ஒப்பற்ற இறைவேதம் என்பதற்கான முக்கியமான வேறு சான்றும் உள்ளது என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)

புகழனைத்தும் இறைவனுக்கே!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.