அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, June 22, 2009

கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டாரா?


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 3

பைபிளில் கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டதாகவும், அவரது இருதயத்திற்கு அது விசனமாக இருந்ததாகவும் - மனிதனை ஏன்டா படைத்தோம் என்று நொந்து நூலானதாகவும் கூறி - சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரை பலவீனப்படுத்தி - இழிவுபடுத்துகின்றது:

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:5-6

இதை WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர் பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும் மிருகங்களையும் ஊர்வனவற்றையும் வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப்போகிறேன். ஏன் என்றால் இவற்றை எல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகின்றறேன் என்றார். - ஆதியாகமம் 5:6-7

கர்த்தர் தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் படைத்தார். மனிதன் என்னென்ன செய்வான் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வான் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கர்த்தர் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மனஸ்தாபப்படுவாரா? - வருத்தப்படுவாரா? கர்த்தர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா?

ஆனால் அப்படி பலவீனரைப்போன்று 'தெரியாமல் படைத்துவிட்டோமே' என்று வருத்தப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இதே போன்று மற்றோர் இடத்தில் சவுலை ராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார் அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:10-11

ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதை முன்கூட்டியே அறியாத பலவீனராகத்தான் கர்த்தர் இருந்தார் - தான் செய்த செயல்களை நினைத்து வருத்தப்படும் அளவுக்கு மனிதனைப்போன்ற பலவீனராகத்தான் கர்த்தர் இருக்கின்றார் என்று இந்த பைபிள் வசனங்கள் நமக்கு உணர்த்துக்கின்றது. ஆரம்பத்தில் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்ட கர்த்தர் அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தும் இது போன்று மற்றொரு முறை தனது செயலுக்காக வருத்தப்பட்டதாக 1 சாமுவேல் 15:10-11 குறிப்பிடுகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் என்ற ஒரு தவறான கருத்து இந்த பைபிள் வசனங்களின் மூலம் தினிக்கப்படுகின்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் - அனைத்தையும் அறிந்த கர்த்தருக்கு, தன்னால் படைக்கப்பட்ட மனிதன் என்ன செய்வான் - எப்படி நடந்துக்கொள்வான் - என்பது எப்படித் தெரியாமல் போகும்? சவுல் இராஜாவானதும் என்னென்ன செய்வான் என்று எப்படி தெரியாமல் போகும்? இப்படி குறிப்பிடுவது கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் வல்லமைக்கும், இழுக்கு ஏற்படுத்தும் செயல் இல்லையா? பைபிள் சொல்வது போல் நம்புவது கர்த்தருடைய சக்தியை குறைத்து மதிப்பிடும் செயலாகாதா?

இப்படிப்பட்ட கர்த்தரின் பெயராலேயே அவருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பைபிளில் எழுதப்பட்ட இது போன்ற பொய்யான வசனங்களை இனம் காடடும் முகமாகத்தான் - கர்த்தர் என்ன நடக்கும் என்பதை அறியாத பலவீனராக இருந்தார் என்றக் கூற்றை முற்றாக மறுத்து, திருக்குர்ஆன் அவரின் வல்லமையை பின்வருமாறு பறைசாற்றுகின்றது:

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

அவனே மறைவனாதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன் (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன் அன்புடையோன். - அல்குர்ஆன் 32 : 6.

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன். - அல்குர்ஆன் 67 : 13.

மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் மிக்க பொறுமையாளன். - அல்குர்ஆன் 33 : 51

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான். மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன் விவேகம் மிக்கோன். - அல்குர்ஆன் 24 : 18.

இந்த வசனத்தில் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், வானங்களிலும் பூமியிலும் இந்த அகில உலகனைத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்தவன், அவன் அறியாதது ஒன்றும் இல்லை - அவனுக்குத் தெரியாதது எதுவும் இருக்கமுடியாது - அவன் இறந்தகாலத்தையும் அறிந்தவன் - அவன் நிகழ்காலத்தையும் அறிந்தவன் - அவன் எதிர்காலத்தையும் அறிந்தவன் - அவன் யாவற்றையும் நன்கறிந்த மாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவன் - அவன் மனிதருடைய இருதயத்தில் என்ன இருக்கின்றது என்பதையும் நன்கறிந்தவன் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக சொல்லியிருக்க - இந்த வசனங்களுக்கு மாற்றமாக பைபிளில் கர்த்தரை எப்படி குறிப்பிட்டு அவரை சிறுமைப்படுத்துகின்றது என்பதை நாம் உணரவேண்டும்

அடுத்து இன்னொன்றையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது, முற்றும் அறிந்த - ஞானமிக்கவராகத்தான் நம்மை எல்லாம் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் இருப்பார் என்பது கடவுள் கோட்பாட்டின் அடிப்படையான ஒரு தத்துவம். இந்த உன்மையை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது - குறிப்பாக கிறிஸ்தவர்களும் இதை மறுக்க மாட்டார்கள். அப்படி மறுப்பவன் கடவுளைப் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

நாம் இந்த பொதுவான அளவுகேலின் படி பர்த்தாலும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்கள் கர்த்தரின் பெயரால் - சாத்தானின் தூண்டுதலால் - அவரது கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால்தான் எழுதப்பட்டிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.

இந்த பொதுவான விதி என்பது ஒரு புறமிருக்க, மேலே சொல்லப்பட்ட பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரின் வசனங்களாக இருக்க முடியாது என்பதை பைபிளின் வேறு சில வசனங்களும் உறுதிபடுத்துகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

இப்படி கர்த்தர் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டார் - அப்படி வருத்தப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று தெளிவாக கூறியிருக்க எப்படி கர்த்தர், தான் மனிதனைப்படைத்தற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள் முடியும்? அப்படி மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படும் பைபிள் வசனங்கள் எப்படி இறைவசனங்களாக இருக்க முடியும்?

அது மட்டுமல்ல அவர் மனிதன் என்ன நினைக்கின்றான் - என்ன நினைப்பான் என்பதை எல்லாம் அறிந்தவர் என்றும் ஒரிடத்தில் கூறப்படுகின்றது:

தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், - 1 இராஜாக்கள் 8:40

இப்படி எல்லா மனிதனின் செயல்பாடுகளையும் அறிந்தவராகத்தான் கர்த்தர் இருப்பார் என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளின் சில வசனங்களும் உறுதிபடுத்தி இருக்க, எப்படி கர்த்தர் மனிதன் என்ன செய்வான் என்று அறியாதவர் போன்று வருத்தப்பட்டதாகவும் - சவுல் இராஜாவானதும் என்னென்ன அக்கிரமம் செய்வான் என்று அறியாவதவர் போன்று அவனை இராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் - கர்த்தரை சிறுமைப்படுத்தி சொல்லப்படும் பைபிள் வசனங்களை இறைவசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவ நன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

எனவே கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டார் என்பதெல்லாம் கண்டிப்பாக கர்த்தரின் பெயரால் சில விஷமிகளால் பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்கள் தான் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதை நிரூபிக்கும் வகையில் பைபிள் வசனங்கள் உட்பட பல சாண்றுகள் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

எனவே உன்மையையும் பொய்யையும் பிரித்தரிவிக்கும் முகமாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவனால் அருளப்பட்ட இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் மட்டும் தான் கர்த்தரை உயர்வாக கூறப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, அதன் படி வாழ கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு கர்த்தர் அருள் புரிவாராக.

இறைவன் நாடினால் தொடரும்...

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Thursday, June 18, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4



முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்

முரண்பாடு 15:
பென்யமீனுடைய குமாரர்கள் எத்தனைபேர்? 1 நாளாகமம் பின்வருமாறு கூறுகின்றது:

பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். - 1 நாளாகமம் 7:6

இந்த வசனத்தில் பென்யமீனின் குமாரர்கள் மொத்தம் மூன்று பேர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக இதே ஆகாமத்தில் மற்றோர் இடத்தில் வேறு விதமாக கூறப்படுகின்றது:

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான். - 1 நாளாகமம் 8:1-2

மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு நேர் முரணான இந்த வசனங்களில் பென்யமீனுக்கு மொத்தம் 5 குமாரர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு இடங்களிலும் பென்யமீனின் குமாரர்களில் பேலா என்பவனைத் தவிர மற்ற அனைவரையும் வேறு வேறு பெயர்களில் சம்பந்தமில்லாமல் கூறப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 3 குமாரர்கள் என்றும் மற்றொரு இடத்தில் 5 குமாரர்கள் என்று ஒரே ஆகாமத்திற்குள்ளேயே முரண்பாடுகள், இது ஒரு புறமிருக்க, இதே பென்யமீனுக்கு வேறு சில குமாரர்களும் இருந்ததாக பைபிளின் மற்றொரு இடத்தில் சொல்லப்படுகின்றது.

பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள். - ஆதியாகமம் 46:21

இந்த வசனத்திற்கும் மேலே சொல்லப்பட்ட வசனங்களுக்கும், பெயர்களில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றது என்பதை கவனியுங்கள். அடுத்து இந்த மூன்று இடங்களில் சொல்லப்பட்ட வசனங்களுக்கும் மாற்றமாக இதே பென்யமீனும்கு வேறு பெயர்களைக்கொண்ட சில குமார்கள் இதே பைபிளின் மற்றோர் இடத்தில் சொல்லப்படுகின்றது:

பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும், சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்.. - எண்ணாகமம் 26:38-40

இப்படி பைபிளின் நான்கு இடங்களில் பென்யமீனுடைய குமார்கள்பற்றி பல முரண்பட்ட தகவலே கொடுக்கப்படுகின்றது. இந்த பென்யமீனுக்கு எத்தனைக்குமாரர்கள் இருந்தால் என்ன? அவனுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள் என்பது பற்றி சொல்வதன் மூலம் கர்த்தர் என்ன உபதேசத்தை இந்த உலக மக்களுக்கு சொல்லவருகின்றார், அதை ஒரு இறைவேதத்தில் பல இடங்களில் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இப்படி ஒன்றுக்கொண்று முரண்பட்ட புத்தகங்களைக் கொண்ட பைபிளை எப்படி இறைவேதமாக ஏற்க முடியும்? இந்த புத்தகங்கள் எப்படி பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டதாக நம்ப முடியும்?

முரண்பாடு 16:
இஸ்ரவேலை ஆண்ட இராஜா ரெகொபெயாம் என்பவனின் மகன் அபியா என்பவன் அவனுக்குப்பின் இராஜாவானதாக 2 நாளாகமம் 12:16ல் சொல்லப்படுகின்றது. அவன் 3 வருடங்கள் எருசலேமை ஆண்டதாகவும், ஆனால் அவனது தாயார் யார், அவளது பெயர் என்ன என்பதில் பைபிளின் புத்தகங்கள் வழக்கம் போல் ஒன்றுக்கொண்று முரண்படுகின்றது.

அவனது தாயார் பெயர் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் என்று 2 நாளாகமம் 13:2ல் சொல்லப்படுகின்றது.

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள் - 2 நாளாகமம் 13:2

ஆனால் இதற்கு நேர்முரணாக 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை மணமுடித்து அவள் மூலம் அபியாவைப் பெற்றதாக கூறுகின்றது :

அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான் அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். - 2 நாளாகமம் 11:20

உன்மையில் ரெகொபெயாம் யார் மூலம் அபியாவைப் பெற்றான்? ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் மூலமா? அல்லது அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலமா? இது ஒருபுறம் இருக்க, 2 நாளாகமம் 11:20ல் உள்ள மற்றொரு குளறுபடியையும் கவனியுங்கள். அதாவது, இந்த 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலேமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலம் அபியாவைப் பெற்றதாக சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அப்சலேமுக்கு ஒரு குமாரத்திதான் இருந்தாள், அவள் பெயர் தாமார் என்று 2 சாமுவேல் 14: 27ல் குறிப்பிடப்படுகின்றது. அப்சலேமுக்கு இல்லாத குமாரத்தியாகியா மாகாளின் மூலம் எப்படி அபியாவை ரெகொபெயாம் பெற்றெடுக்க முடியும்?

முரண்பாடு 17:
சாலமோன் ராஜா தான் கட்டிய அரண்மனையில் வென்களக்கடல் என்னும் தொட்டியைக் கட்டினானாம். அதைப்பற்றி பைபிளின் இரண்டு இரங்களில் சொல்லப்படுகின்றது. 1 இராஜாக்கள் 7: 26ல் அந்தத் தொட்டியின் அளவு 2000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும், ஆனால் அதற்கு நேர் முரணாக 2 நாளாகமம் 4: 5ல் 3000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உன்மையில் எத்தனைக் குடம் தண்ணீர்ப்பிடிக்கும் வகையில் சாலமோன் அந்த வெண்களக்கட்ல் தொட்டியைக் கட்டினான்?

முரண்பாடு 18:

சவுல் இறந்தது எப்படி?

தற்கொலை செய்து கொண்டு செத்ததாக 1 சாமுவேல் 31:4-6ம் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இதற்கு நேற்முரணாக சவுலை அமலேக்கியன் என்பவன் தான் கொன்றதாக 2 சாமுவேல் 1:1-16ல் சொல்லப்படுகின்றது. உன்மையில் சவுல் இறந்தது எப்படி? அவனின் மரணம் குறித்து எந்த புத்தகத்தில் சொல்லப்படும் செய்தியை நம்ப வேண்டும்?

முரண்பாடு 19:
தாவீதின் படைத்தலைவன் ஒரே நேரத்தில் எத்தனைபேரை கொண்று போடுவான்?

தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன். இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான். - 1 நாளாகமம் 11:11

இந்த வசனத்தில் தாவீதின் சேர்வைக்காரரின் தலைவனாக இருந்தவன் ஒரே நேரத்தில் 300 பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்குவதன் மூலம் கொண்று போடுவான் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேல் 23:8ல் பின்வருமாறு கூறப்படுகின்றது:

தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன். இவன் எண்ணூறு பேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். - 2 சாமுவேல் 23:8

இந்த வசனத்தில் ஒரே நேரத்தில் 800 பேர்களை கொண்று போடுவதாக இந்த இடத்தில் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? 800 பேர்களையா? ஆல்லது 300 பேர்களையா? அது போல், தாவீதின் சேர்வைக்காரின் தலைவன் பெயர் என்ன? தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பசெபத்தா? அல்லது அக்மோனியின் குமாரணாகிய யாஷோபியாமா?


முரண்பாடுகள் தொடரும்... இறைவன் நாடினால்


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Monday, June 08, 2009

கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -2
.
.
கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.

இதைத் தான் இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும்போது:

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

இந்த வசனத்தில், இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சாராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அதனால் எந்தவித கலைப்பும் ஏற்படவில்லை என்றும் - அப்படி ஏற்படும் அளவுக்கு அவன் பலவீனமானவனாகவும் இருக்க மாட்டான் என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றது.

இறைவனின் வல்லமையை பறைசாற்றும் இந்த திருக்குர்ஆனின் வசனத்திற்கு மாற்றமாக, சர்வ வல்லமைப்படைத்த கர்த்தருக்கு, இந்த உலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்ததால், கலைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும், கார்த்தரின் மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் பைபிளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..' (யாத்திராகமம் 31:17)

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். - ஆதியாகமம் 2:2

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார் ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். - யாத்திராகமம் 20:11

கர்த்தர் உலகம் மற்றும் இந்த அண்டசாராசரங்கள் அனைத்தையும் படைத்துவிட்டு அதன் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டு பலவீனனான மனிதனைப் போன்று ஓய்வெடுத்ததாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது.

மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலவீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு மட்டுமே உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன். எனவே கர்த்தருடைய கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் இத்தகைய பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரால் சொல்லப்பட்டிருக்காது, மாறாக கர்த்தருடைய எதிரியான சாத்தானின் தூண்டுதலால் தான் எழுதப்பட்டிருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தான் திருமறைக்குர்ஆனில் சர்வ வல்லமை பொருந்திய இறைவன் கூறுகின்றான்:

அவர்கள் இறைவனை கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக இறைவன் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

ஓய்வு நாள் ஏன்?

இது ஒருபுறமிருக்க, இப்படி கர்த்தரால் ஓய்வெடுக்கப்பட்ட அந்த நாளைத்தான் யூதர்களும் - பைபிளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கிறிஸ்தவர்களும் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். - யாத்திராகமம் 20:9-10

கர்த்தரே ஓய்ந்திருந்த அந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்காமல் எவரேனும் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14

கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், கர்த்தர் ஒய்வு எடுத்ததாகவும், அந்த நாளைத்தான் யூதர்களுக்கு ஓய்வு நாளாக அனுசரிக்கும் படி கட்டடையிடப்பட்டதாகவும் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது. அப்படிப்பட்ட ஓய்வு நாளில் எவரேனும் வேலை செய்தால் அவன் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் குறிப்பிடுகின்றது.

யூதர்கள் ஆசாரிக்கும் 'ஓய்வு நாள்' ஏற்படுத்தப்பட்டதற்கு காரணம் 'கர்த்தர் ஓய்ந்திருந்தது' தான் என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றம் பைபிளின் இந்த வசனங்களின் மூலம் ஏற்படுத்தப்படுன்றது.

ஓய்வு நாள் ஏற்படுத்தப்பட்டதற்கு இது தான் காரணமாக இருந்தால் முதல் மனிதன் ஆதாம் காலம் தொட்டே 'ஓய்வு நாள்' என்னும் அந்த கட்டளையை கர்த்தர் கொடுத்திருப்பாரே? அல்லது அவருக்கு உண்மையான விசுவாசியாக இருந்த ஆபிரகாமின் காலத்திலிருந்தாவது கர்த்தர் அந்த கட்டளையை கொடுத்திருப்பாரே? ஏன் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மோசேயின் காலத்தில் இப்படிப்பட்ட ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்படவேண்டும்? காரணம் இஸ்ரவேவலர்கள் செய்த செயல்களின் காரணமாக - அவர்களை சோதிக்கும் பொருட்டு - இறைவன் இந்த ஓய்வு நாள் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தானே அல்லாமல், கர்த்தர் ஓய்திருந்தார் என்பதற்காக அல்ல. அப்படி சொல்வது கர்த்தரை இழிவு படுத்துவதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு நாள் யூதர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்ற உன்மையைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்துகின்றது:

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அல்குர்ஆன் 7 : 163.)

மேலும், அவர்களிடம் (இஸ்ரவேலர்களிடம்) வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம். மேலும் ''(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்'' என்றும் அவர்களுக்கு கூறினோம். இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (அல்குர்ஆன் 4 : 154)

இப்படி எல்லாம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் பொருட்டே யூதர்களுக்கு சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆக்கப்பட்டதே அல்லாமல், பைபிளில் சொல்லப்படுவது போன்று கர்த்தர் ஓய்ந்திருந்தார், அதன் காரணமாகவே அந்த நாளை பரிசுத்தமாக்கும் பொருட்டு ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகின்றது என்று கூறுவது கர்த்தரின் கண்ணியத்தையும் - அவரின் மகத்துவத்தையும் - அவரின் வல்லமையையும் - குறைத்து மதிப்பிடும் செயல் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உன்மையில் கர்த்தருக்கு, இது போன்ற கலைப்போ, அதன் காரணமாக ஓய்வோ தேவைப்படாது என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளிலும் ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. -ஏசாயா 40:28

இதை WBTC மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு கூறுகின்றது :

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக கர்த்தரின் வல்லமை பறைசாற்றப்பட்டிருக்க, அவர் ஓய்வு எடுக்க மாட்டார் - அவர் எத்தகையை பெரிய காரியங்களை செய்தாலும் அதனால் அவருக்கு எந்த வித கலைப்பு ஏற்படாது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்க - எப்படி கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்றும் அதன் காரணமாகவே ஓய்வு நாள் யூதர்களுக்கு கடமையாக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த கூற்று பைபிளுக்கே எதிரான கருத்தில்லையா? யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போன போக்கில் பைபிளின் மற்ற வசனங்ளே முரண்படும் வகையில் தங்கள் வேதத்தில் தங்களுக்கு சாதகமாக விளையாடிவிட்டார்கள் என்பது விளங்குகின்றதா இல்லையா? தங்களுக்கு சோதனையாக கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாள் சட்டத்தின் நோக்கத்தையே திரித்து - அதை மாற்றி, கர்த்தர் ஓய்திருந்தால் தான் தங்களுக்கு அந்த ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்பட்டது என்று ஒரு தவறான கருத்துத் திணிப்பு வேலை பைபிளில் நடைபெற்றுள்ளது என்பது விளங்குகின்றதா இல்லையா?

எனவே கிறிஸ்தவர்களே நீங்கள் உன்மையை உணரவேண்டும். சத்தியத்தை அறியவேண்டும். இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை - பைபிளில் இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்திகளை - பிரித்து, உன்மை எது பொய் எது என்று பிரித்தறிவிக்கும் முகமாகத்தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தராகிய அல்லாஹ் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகின்றான். அதைத்தான் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் கூறும் போது:

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மதின்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் - 25 : 1)

எனவே சகோதரர்களே அசத்தியத்தை விட்டு வெளியே வாருங்கள்! சத்தியத்தை அறியுங்கள். ஏக இறைவனாகிய கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக.

தொடரும்!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Wednesday, June 03, 2009

பைபிளின் எண்ணிக்கை முரண்பாடுகள்

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
.
.
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3

முரண்பாடு 11:

இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிலிருந்து யூதாவுக்கும் திரும்பியதைப் பற்றி பைபிளில் இரண்டு ஆகாமங்களில் சொல்லப்படுகின்றது. இதில் பலரின் சந்ததிகளில் எத்தனை எத்தனைப்பேர் தங்கள் சொந்த பட்டினத்திற்கு சென்றார்கள் என்பதில் இந்த எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களின் பல வசனங்கள் ஒன்றுக்கொண்று முன்னுக்குப்பின் முரணாக சொல்கின்றது. அந்த முரண்பாடுகள் இதோ:

1) அவர்களில் ஆராகின் புத்திரர் எத்தனைப் பேர்?

ஆராகின் புத்திரர் அறுநூற்றுஐம்பத்திரண்டுபேர் - நெகேமியா 7:10

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக எஸ்றா 2 : 6ல் 'ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

ஆராகின் புத்திரர்கள் மொத்தம் எத்தனைபேர் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்?

2) இதேவரிசையில், பாகாத் மோவாபின் புத்திரர்களும் தங்கள் தேசமாகிய யூதா மற்றும் எருசலேமுக்குத் திரும்பினார்களாம். அவர்களின் தொகைiயும் இதே நெகேமியா என்ற புத்தகமும் எஸ்றா என்ற புத்தகமும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது:
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். - எஸ்றா 2:6

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:11ல் பின்வருமாறு கூறப்படுகின்றது?

யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.

இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

3) இதே வரிசையில் சத்தூவின் புத்திரர்களையும் இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.
சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். - நெகேமியா 7:13

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்ரா 2:8ல் 'சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சரி?

4) இதே வரிசையில் பெபாயின் புத்திரர்களையும் பற்றி இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுவதைப் பாருங்கள்:

பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்தெட்டுப்பேர். - நெகேமியா 7:16

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:11ல் 'பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

5) இதே வரிகையில் அஸ்காத்தின் புத்திரர்கள் எத்தனை என்பது பற்றியும் இந்த இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.
அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். - எஸ்றா 2:12

ஆனால் இதற்கு நேர்முரணாக நெகேமியா 7:17ல் 'அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

6) இதேபோல் இந்த எண்ணிக்கையின் முரண்பாடுகள் இந்த இரண்டு புத்தகங்களிலும் தொடர்ந்துக்கொண்டே போகின்றது:
ஆதொனிகாமின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். - எஸ்றா 2:13

ஆனால் இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:18ல் 'அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்' என்றும் கூறுகின்றது.

7) பிக்டவாயின் புத்திரர்கள் எத்தனைபேர்?
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர் - நெகேமியா 7:19

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்ரா 2:14ல், 'பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

8) ஆதீனத்தின் புத்திரர்கள் எத்தனைபேர்?
ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். - நெகேமியா 7:20

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:15ல் 'ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்.' ஏன்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

9) பேசாயின் குமாரர்கள் எத்தனைப்பேர்?

பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். - ஏஸ்றா 2:17

இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:23ல் 'பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்' என்று கூறப்படுகின்றது. இதில் எது சரி?

10) பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் எத்தனைப்பேர்?

பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். - நெகேமியா 7:32

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:28ல் பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்' என்று கூறப்படுகின்றது.

11) அதுபோல் லோத், ஆதீத் ஓனோ என்பவர்களின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். ஏஸ்றா - 2:33

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:37ல் 'லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்' என்று சொல்லப்படுகின்றது.

12) அபோல் செனாகா புத்திர்கள் எண்ணிக்கையிலும் இரண்டு புத்தகங்களும் நேர்முரனாக கூறுகின்றது.
செனாகா புத்திரர் மூவாயிரத்துத்தொளாயிரத்து முப்பதுபேர். - நெகேமியா 7:38ம் அதற்கு மாற்றமாக எஸ்றா 2:35ல் சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர் என்று கூறுகின்றது.

இப்படி எஸ்றா என்ற புத்தகத்தின் 2ம் ஆகமமும் நெகேமியா என்ற புத்தகத்தின்; 7ம் ஆகாமமும் ஒரே சம்பவத்தில் இடம்பெற்ற எண்ணிக்கைகளை முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது. இந்த இரண்டு புத்தகங்களின் வசனங்களும் கர்த்தரின் பரிசுத்தஆவியின் உந்துதலால் தான் எழுதப்பட்டதென்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்?


முரண்பாடு 12:

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இப்படி தங்கள் சொந்த ஊரான எருசலேமுக்கும், யூதாவுக்கும் திரும்பியவர்களின் கணக்கில் இந்த இரண்டு ஆகாமங்களிலும் இவ்வளவு குளறுபடிகள் இருக்க, எப்படி அனைவரின் மொத்த தொகையின் கூட்டல் தொகை ஒரே எண்ணிக்கையாக வரும்? ஆனால் அப்படி ஒரே தொகையாக வந்ததாக இந்த இரண்டு ஆகாமங்களும் அறிவிக்கின்றன.

சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். (பார்க்க எஸ்றா 2:64, மற்றும் நெகேமியா 7:66)

அதாவது ஒவ்வொரு பட்டியலிலும் இரண்டு ஆகாமங்களும் முன்னுக்குபின் முரணாக கூறியிருக்க, சபையாரின் மொத்த தொகையினர் என்று வரும் போது மட்டும் இரண்டு ஆகாமத்தின் தொகையும் 46360 பேர் என்று வந்துவிட்டதாம். இது எப்படி சாத்தியமாகும்? எழுதியவர்கள் சற்று கூட்டிப்பார்த்திருக்க வேண்டாமா? இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், நாம் இரண்டு ஆகாமத்தில் உள்ளதையும் கூட்டியவரை, முறையே எஸ்றா ஆகாமத்தில் 29818 பேரும், நெகேமியா ஆகாமத்தில் 31,089 பேருமே வருகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு ஆகாமங்களிள் வரும் மொத்த சபையாரின் கூட்டுத்தொகையோ 46360 என்று இரண்டு ஆகாமங்களிலும் சொல்லப்படுகின்றது. இந்த தெளிவான முரண்பாடுகளைக்கொண்ட வசனங்களையும் வேடிக்கைகள் நிறைந்த வசனங்களையும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாம?

முரண்பாடு 13:
இவர்களுடன் இருந்த மொத்த பாடகரும் பாடகிகளும் எத்தனைப்பேர்?
இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். - நெகேமியா 7:67

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:65ல் 'இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.' என்று கூறுகின்றது. இதில் எது சரி?


முரண்பாடு 14:

பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொடுத்தான். அதன் விவரங்களை எஸ்ரா 1:1லிருந்து 10 வரை சொல்லப்படுகின்றது.

அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். - எஸ்றா 1 :9-10

ஆனால் இதற்கு அடுத்தவசனத்திலேயே மேலே கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பொன் மற்றும் வெற்றிப் பணிமுட்டுகளெல்லாம் எல்லாம் சேர்த்து மொத்தம் 5400 என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க எஸ்றா 1:11) ஆனால் மேலே 9 மற்றும் 10ம் வசனங்களில் வரும் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் 2499 மட்டும்தான் வருகின்றது. ஆனால் 11ம் வசனத்தில் 5400 என்று வந்துள்ளது. இந்த கணக்கு எப்படி சரியாகும்? கணித அறிவுகூட இல்லாதவரா கர்த்தர்? அல்லது கர்த்தரின் பெயரால் இந்த கதைகள் இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ளதா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.
.