அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, December 24, 2012

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா?

வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.

உலகம் இந்த அண்ட சராசரங்களை படைத்த – பிறப்பும் இறப்பும் இல்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத கர்த்தருக்கே(?) பிறந்த நாளா? என்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்த கர்த்தர்(?) பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா? அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா? அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா? என்றால் எந்த ஒரு ஆதாரமும் எதிலும் கிடையாது. மாறாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதமாக இருக்காது என்பதற்கு வேண்டுமானால் மிகத் தெளிவான ஆதாரங்கள் பைபிளிலே இருக்கின்றது. அதை இனி பார்ப்போம்.

இயேசு பிறந்தது எப்போது?

இயேசு பிறந்த காலகட்டத்தையும், அவர் பிறக்கும் போது நடந்த சில நிகழ்வுகளையும் லூக்கா தனது சுவிஷேசத்தில பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது அவர்கள் மிகவும் பயந்தார்கள். – லூக்கா 2:1-9

இந்த வசனங்களில், சொல்லப்பட்டுள்ள கருத்தை நாம் உற்று நோக்கினால், கண்டிப்பாக இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

ஏனெனில், இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அத்தனை நிகழ்வுகளும் கண்டிப்பாக கடும் குளிர் நிறைந்த டிசம்பர் மாதத்தில் நடக்கும் சம்பவங்களே அல்ல என்பது தான் நாம் இங்கே கவணிக்கவேன்டிய மிக முக்கியமான கருத்து. காரணம், இந்த வசனங்களில் லூக்கா பின்வரும் சில நிகழ்வுகளை தனது சுவிஷேசத்தில் கோடிட்டுக்காட்டுகின்றார்:

•    அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 

•    அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

•    அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கே குறிப்பிடப்படும் முக்கியமான இந்த மூன்று நிகழ்வுகளில், எந்த ஒரு நிகழ்வும், கண்டிப்பாக குளிர் காலங்களில் - அதுவும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் - நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம்.

முதலாவதாக, எந்த ஒரு அரசனும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக, குளிர்காலங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம், அப்படிப்பட்ட நாட்களில் பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது. அதுவும் வாகன வசதியே இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது இது அறவே சாத்தியமில்லாதது. ஆனால் லூக்கா இயேசு பிறந்த போது அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள் என்று குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் பார்த்தால், கண்டிப்பாக இயேசு கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.

அடுத்து, கர்ப்பவாதியான ஒரு பெண் சாதாரன நாட்களிலேயே கூட பல இடங்களுக்கும் அலைந்து திரியமுடியாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மரியாள், எந்த வாகன வசதியும் இல்லாத அன்றைய காலத்தில் பல மைல் தூரமுள்ள கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் செல்கின்றார் என்றால், குளிர் நிறைந்த காலங்களான டிசம்பர் மாதத்தில் சென்றிருப்பார்களா? அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் - ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா? என்பதை சிந்தித்தாலே கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியில் தான் இயேசுவின் பிறப்பு நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். எனவே இதைவைத்து பார்த்தாலும் இயேசு கண்டிப்பாக கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.

அதைவிட மிக முக்கியமாக அவர் பிறந்த போது, இரவு நேரத்தில், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இரத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மேய்பர்கள் வயல்வெளியில் தங்கி இரவுக் காலங்களில் மந்தைகளைக் காத்துக்கொண்டிருப்பது எந்த காலமாக இருக்கும்? குளிர் நிறைந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா? அல்லது கோடைகலாத்தின் பிற்பகுதிகளான, ஜூன் - ஜூலை மாதங்களிலா? என்பதை நாம் சிந்தித்தாலே இது கண்டிப்பாக கோடையில் பிற்பகுதிகளில் தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில், எந்த ஒரு பகுதியிலும் கடும் குளிர் அடிக்கும் டிசம்பர் மாதங்களில் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்க மாட்டார்கள் - தங்கவும் முடியாது. அதுவும் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது சாத்தியமா? என்பதை எல்லாம் கவனித்தால், இந்த சம்பவம் கண்டிப்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவாகும்.

லூக்காவின் 2:1-9 வசனங்களின்படி இயேசுவின் பிறப்பு எப்போது நடைபெற்றிருக்கும் என்றால் கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியான ஜூன் - ஜூலை மாததங்களில் தான் என்பது தெளிவு. எனவே கண்டிப்பாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல.

இயேசுவின் பிறந்தநாளை அவரோ அல்லது அவரது சீடர்களோ கொண்டாடியாதாக எந்த ஒரு ஆதாரமும் பைபிளிலோ அல்லது வரலாற்று ஆதாரங்களிலோ இல்லாதபோது, அதற்கு மாற்றமாக அவரது பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்தவர்கள், தங்களது வேதத்திற்கு முரணில்லாத வகையில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருந்தால், எந்த ஒரு கேள்வியும் யாருக்கும் எழப்போவதில்லை. ஆனால், லூக்கா சுவிஷேசத்தின் படி மிக மிகத் தெளிவாக டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுத் தெரிந்தும் அந்த நாளை ஒரு பண்டிகைத் தினமாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அவர்கள எந்த அளவுக்க பைபிளை விட்டு இயேசுவின் போதனைகளை விட்டு வெளியேறி மனித கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பது நன்றாகப் புரியும்.

இதை பிஷப் பர்னஸ் என்பவர் தனது ‘Rise of Christianity’ எனும் நூலில் ஒப்புக்கொள்கின்றார்:

'மேலும் டிசம்பர் 25 ஏசுவின் பிறந்த நாள் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. லூக்காவில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியான – பெத்லகேமுக்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் அப்போது இடையர்கள் தங்கள் மந்தைகளை இரவுக் காலங்களில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு நாம் ஏதும் மதிப்பு கொடுப்பதாயிருந்தால் நிச்சயமாக இயேசுவின் பிறப்பு குளிர்காலத்தில் நிகழவில்லை. குன்றுகள் நிறைந்த யூதேயா பகுதிகளில் குளிர்கால இரவுகளில் தட்பவெப்ப நிலை பனி உரைந்து மிகவும் தாழ்ந்து இருக்கும். பல கடுமையான வாதங்களுக்குப் பின்னரே நமது கிறிஸ்துமஸ் நாள் ஏறக்குறைய கி.பி 300 வாக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது.'

இதைத்தான் 'தி ஆக்ஸ்போர்ட் டிஷ்னரி ஆஃப் கிறிஸ்டியன் சர்ச்' என்ற நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்று (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280 

ஆக, இயேசுவின் பிறந்த தினம் என்பது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இன்றி, இவர்களால் கற்பனையாக ஏற்படுத்த ஒன்று என்பதை இவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள்.

இவர்களைக் குறித்து தான் ஏசாயா 29:13ல் 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது' என்று கூறப்படுகின்றது.

எப்படி இயேசு கடவுள் இல்லை, அவரை வணங்கக்கூடாது என்பதற்கு பைபிளிலே தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரை கடவுள் என்று கிறிஸ்தவர்கள் வணங்கிக்கொன்றார்களோ அது போல், இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அதையும் மீறி அவர்கள் அந்த நாளை சிறப்பு தினமாக, பண்டிகை நாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால், அவர்கள் இயேசுவையோ அல்லது இயேசுவின் கொள்கைகளையோ ஒரு போதும் பின்பற்றவில்லை, மாறாக அவர்கள் புறமத கலாச்சாரங்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகளையுமே பின்பற்றுகின்றார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

எனவே, இயேசு டிசம்பர் 25 - பிறக்கவில்லை என்பது மேற்கூறப்பட்டுள்ள பைபிள் வசனங்களிலிருந்தே தெளிவாக தெரிகின்றது. இருந்தாலும் கிறஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி கிறிஸ்தவமத்தில் நுழைந்து என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

இறைவன் நாடினால் தொடரும்...

Saturday, December 22, 2012

கற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும் போதுமா?



கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி காமுகர்களால், கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியவின் பல்வேறு இடங்களில் இந்த சம்பவத்திற்கு எதிராக அனைத்துத்தரப்பினரும் கண்டனக்குரல் எழுப்புவதுடன், ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு 'மரணதன்டனை' தான் தீர்வாக அமையும் என்ற கேரிக்கையும் வழுத்து வருகின்றது. ஆள்வோர் முதல் பாமரன் வரையில் அனைவராலும் இதே கோரிக்கைதான் முன்வைக்கப்படுகின்றது.

கற்பழிப்புகளுக்கு மரணதண்டனை விதிப்பதால் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற குற்றங்கள் குறைந்து விடுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைத்துவிடுமா? என்றால் முடியாது! காரணம், இது போன்ற குற்றங்களை வெறும் சட்டங்கள் போடுவதால் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியும் என நினைப்பது தவறான ஒரு வாதமாகும். அதுவும் இது போன்ற குரல்கள் பாமரனிடம் மட்டுமல்ல, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிடத்திலிருந்தும், எழுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி சொல்வதால், நாம் ஏதோ மரணதண்டனைகளுக்கு எதிரானவர்கள் எனக் கருதிவிடக்கூடாது. இஸ்லாம் இது போன்ற குற்றங்களுக்கு  மரணதண்டனைத் தான் சரியான தீர்வாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாகச் பதிவுசெய்கின்றது. ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்? அதற்கு முன்பாக நாம் என்னென்ன முன்னேற்பாடுகளை கையாளவேண்டும்? என்பதையும் தெளிவாக வழிகாட்டுகிறது. அது தான் இங்கே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம்.

நமது நாட்டைப் பொருத்தவரை, ஒரு பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு தெளிவான தீர்வைத் தேடாமல், ஒரு சம்பவம் நடந்ததும் உணர்ச்சி வசப்பட்டு குரல் கொடுப்பதும், சில நேரம் ரோட்டிலே நின்று போராடுவதையுமே வழக்கமாகிக் கொண்டிருக்கின்றோம்.  பின்னர் அந்த பிரச்சினை நீர்த்து போனதும் அதை அப்படியே மறந்துவிடுகின்றோம். மீண்டும் அதே பிரச்சினை தலைத்தூக்கியதும் அதே பல்லவி. மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை! இது தொடர்கதையாவது ஏன்? இப்படிப்பட்ட தவறுகள் எங்கிருந்து ஏற்படுகின்றது? அதை அடிப்படையிலேயே கலைவதற்கு தெளிவான வழி என்ன? என்பதை எல்லாம் நாம் ஆராய்வதில்லை. எல்லா குற்றச்செயல்கள் விஷயங்களிலும் இதுபோன்ற தவறுகளை நாம் செய்வதால் தான்  இப்படிப்பட்ட குற்றங்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகின்றது.

தற்போது பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்ற கற்பழிப்புச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏன் நடைபெறுகிறது? பெண்கள் விஷயத்தில் ஒரு முறையான கட்டுப்பாடு இல்லாததே இதற்கு காரணம். ஒரு பெண் பலவந்தமாக கற்பழிக்கப்படுகினறாள் என்றால், பெரும்பாலும், அதை செய்யக்கூடிய ஆண் அவ்வாறு தூண்டப்படுகின்றான் என்பதை நாம் கவனிப்பதில்லை.

பொது இடங்கள் முதல் கோயில்கள் வரை, சினிமா முதல் டிவி நிகழ்ச்சிகள்; வரை ஒரு பெண் அரைநிர்வாணத்துடனேயே காட்சியளிக்கின்றாள்;. சினிமாக்களில், எந்த அளவுக்கு உடைகளை குறைத்து காட்ட முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றாள். இதை தடுக்க வேண்டிய அரசுகளே அவற்றைத் தடுக்காமல் அனுமதிப்பதுடன், ஒரு சில அதிகபட்ட ஆபாசங்களைக் காட்டக்கூடிய படங்களுக்கு 'அட்ல்ட்ஸ் ஒன்லி' என்ற 'A' சான்றிதழ் வழங்கி அதற்கும் அனுமதி கொடுக்கின்றது.

பொதுமக்கள் கூடும் இடங்களில், ஒரு ஆண்மகனுக்கு எந்த அளவுக்கு உணர்ச்சியை ஏற்படுத்த முடியுமோ அந்த அத்தனை வகையிலும், தன்னுடைய உடையாலும், கவர்ச்சியாலும், பேச்சாலும் உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் இன்றையப் நவநாகரீகப் பெண்கள். இன்று ஃபேஷன் ஷோவிலிருந்து, அத்தனை ஆபாசங்களும் இலவசமாகவே நமது வீட்டு வரேற்பறைக்கு வந்துவிட்டது. இதைப் பார்க்கக்கூடிய ஆண்மகன் என்ன நிலைக்கு ஆளாவான் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, அதனால் ஏற்படுகின்ற விபரீதத்திற்கு மட்டும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூறுவது எப்படி சரியான தீர்வாக அமையும்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

ஒரு ஆண்மகனை விபச்சாரத்திற்கு தூண்டும் அத்தனை காரியங்களையும் செய்வது! அவனை மயக்குவதற்காக எந்த அளவுக்கு அடைகளை குறைக்க முடியுமே அந்த அளவுக்கு குறைத்துக் காட்டுவது, முடிந்தால் நீச்சல் உடைகள் போன்ற ஆபாச உடைகளை உடுத்தி அவனை உசுப்பேற்றுவது, பொது இடங்களில், திருமணமுடிக்காத தன் ஆண் நன்பனோடு மிருகங்களைக் காட்டிலும் மேலாக அசிங்கங்களில் ஈடுபடுவது, கூடுதலாக சினிமா டிவி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள மூலம் அவனை கற்பழிக்கத் தூண்டும் அத்தனை செயல்களையும் செய்வது, இப்படி எல்லா வகையிலும் ஒரு ஆண்மகளை கற்பழிக்கும் படி உசுப்பேற்றிவிட்டு விட்டு – அதனால் அவன் மணரீதியாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்துவிட்டால் அவனுக்கு மரணதன்டனைக் கொடுக்கவேண்டும் என்று கூக்குரல் இடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

டெங்கு காய்ச்சல் வந்தால், காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கும் அதேசமயம், அதற்கு காரணமான கொசுவையும் ஒழிக்கின்றோம். காரணம், நோயும் போகவேண்டும் நோய்க்கு காரணமான கொசுவும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. இதை முறையாக செய்யாத அரரை கையாலாக அரசு என்று குறைகூறுகின்றோம். ஆனால் அதே நிலைபாட்டை நாம் ஏன் மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் எடுப்பதில்லை?

இதையே ஒர் அரசு கற்பழிப்புக்கு மரணதன்டனையை சட்டமாக்குவதற்கு முன், அதற்கு அடிப்படையாக காரணமாக விளங்கும் பெண்கள் விஷயத்தில் சில கட்டுப்படுகளை விதித்தால் நமது நாட்டில் சும்மா விடுவோமா?; 'தாலிபானிசம்' என்று குறைகூறுவோம். அந்த அரரைச கலைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுவோம். ஆனால், அப்படி பெண்கள் விஷயத்தை கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தைக்(?) கொடுத்து, அதன் காரணமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றால், கற்பழித்தவனுக்கு  மரணதன்டனை கொடுக்கவேண்டும் - சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம். இது தான் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அதற்காக இந்த கற்பழிப்புச் செயல்களை நாம் நியாப்படுத்தவில்லை. ஆனால் அதற்கான காரணம் எங்கிருந்து உருவாகிறது? அதை ஏன் நாம் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது நமது கேள்வி.

இதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு முன், அந்த குற்றங்கள் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கப்படுகின்றது.

ஏதோ இஸ்லாம் குற்றங்களை குறைப்பதற்கு சட்டத்தை மட்டும் கடுமையாகினால் குற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறவில்லை. மாறாக, அதற்கு அடிப்படையான அனைத்து விஷயங்களையும் களையெடுக்கின்றது. ஒருவன் திருடினால், அதற்காக கை வெட்டப்படும் என்றால், அவன் திருடாத வகையில் அத்தனை வழிகளையும் கையாண்டபிறகே, அந்த சட்டதையும் நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு பெண்னை கற்பழித்தால், அவனுக்கு மரணத்தன்டனை என்று சொல்லும் இஸ்லாம், அந்த பெண் கற்பழிக்கப்படாத வகையில் அதற்கான நிர்பந்தம் ஒரு ஆணுக்கு ஏற்படுவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கின்றது. அதனால்தான் பெண்களுக்கு ஃபர்தாவை அவசியமாக்குகிறது. இப்படி எல்லா சட்டங்களுக்கு இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டளை காட்டுகின்றது. அதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால், நபி(ஸல்) அவர்கள் தனது தோழரிடம் இஸ்லாமிய ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய ஒரு பாதுகாப்பான நிலை இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்: 'ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வாள். அவளது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது' என்றார்கள்;.

அதை அவர்களது ஆட்சிக்காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் வந்த கலீஃபாக்கள் ஆட்சிகாலங்களிலும் செய்து காட்டினார்கள். மக்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆட்சியை கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் மூலமும் - அது கூறக்கூடிய வழிவகைகள் மூலமும் தெளிவாகவே இருக்கின்றது.

அதானால் தான், இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கக்கூடிய நாடுகளில், இன்று வரையில் குற்றச்செயல்கள் குறைந்து காணப்படுகின்றது.

நம் கண்முன்னே நமக்கு ஏற்படுகின்ற எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது. ஆனால், அவற்றை நாம் முறையாக கையாளாததே இது போன்ற குற்றச்செயல்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சட்டம் போடுவதற்கு முன் அது சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு வழிகோலும் அடிப்படையான அனைத்து வழிகளையும் சேர்த்து அடைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். அது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.

இத்தனை காலங்களாக, இஸ்லாமிய சட்டங்களே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வா அமையும் என்று நாம் கூறினோம். ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்காமல், அதற்கு எதிரான அனைத்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ஆனால், தற்போது அதன் அவசியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை காட்டுமிராண்டித்தனம் என்றவர்கள், தற்போது அதன் ஒரு பகுதியை, விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்கள். பெண்களின் உடைக்கட்டுப்பாடு விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களை பிற்போக்குத்தனமானது – பெண் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கக்கூடியது என்றார்கள் - ஆனால், இன்று அது தான் சரி என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் தீட்டுகிறது.

எதிர்காலத்தில், அனைத்து தரப்பினரும் ஒரு சேர, இஸ்லாமிய நடைமுறைகளை சட்டமாக்கவேண்டும் என்று கோரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

Friday, December 21, 2012

இயேசு பிறந்த ஆண்டு எது?


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4

பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம் விளக்கியிருந்தோம். அதை பார்க்க:






இயேசு பிறந்தபோது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளைப் போலவே, இயேசு எந்த ஆண்டில் பிறந்தார் என்பதிலும் சுவிஷேசங்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றது.

அவர் எப்போது பிறந்தார் என்பதை மத்தேயு பின்வருமாறு பதிவு செய்கின்றார்:

(Herod the Great) ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது,... - மத்தேயு 2:1

ஏரோது ராஜாவின் ஆட்சிகாலத்தில் தான் இயேசு பிறந்ததாக மத்தேயு இந்த வசனத்தின் மூலம் குறிப்பிடுகின்றார். இயேசு பிறக்கும் சமயத்தில், இந்த ஏரோது ஆட்சியில் இருந்த காரணத்தினால்தான், இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக அவரது தாயும் அவருக்கு புருஷனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தாகவும் - அதற்கு ஆதாரமாக பல்வேறு சம்பவங்களையும் மத்தேயு தனது சுவிஷேசத்தில் குறிப்பிடுகின்றார்.

இந்த ஏரோது வாழ்ந்த காலகட்டம் எது? என்பதை  Encyclopedia Wikipedia பின்வருமாறு தெரிவிக்கின்றது:

‘Herod also known as Herod the Great (born 73 or 74 BCE, died 4 BCE in Jericho[1]), was a Roman client king of Judea


அதாவது, ஏரோது ராஜா கி.மு 73 அல்லது 74ம் ஆண்டில் பிறந்ததாகவும், அவர் மரணமடைந்தது கி.பி 4ம் ஆண்டில் என்று குறிப்பிடுகின்றது. அதாவது அவர் மொத்தம் 70 வயது வரை வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றது. அதுபோல் அவரது ஆட்சிக்காலம் கி.மு 37 முதல் கி.பி. 4ம் ஆண்டுவரை, அதாவது அவர் மரணமடையும் வரை ஆட்சி செய்ததாகவும் அதே விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கின்றது.  


மத்தேயு சுவிஷேசத்தின்படி பார்த்தால், இயேசு கண்டிப்பாக கி.பி 4ம் ஆண்டுக்கு முன், அதாவது ஏரோது மரணமடையும் முன்பே பிறந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஆனால் லூக்காவே இதற்கு நேர்முரணாக தனது சுவிஷேசத்தில் இயேசுவின் பிறந்த ஆண்டை வேறு விதமாக பதிவு செய்கின்றார்:


அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு (Cyrenius or Quirinius) என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. – லூக்கா – 2:1-2

அதாவது அவர் பிறக்கும் போது, மக்கள் தொகை கணக்கெடுக்கும் படி
Caesar Augustus - அகஸ்துராயனால் கட்டளை பிறந்தததாகவும், அப்போது சீரியா (Syria) நாட்டில் சிரேனியு என்கிற கிரேனியு (Cyrenius or Quirinius) என்பவன் Governor - தேசாதிபதாயாக இருந்ததாகவும், அந்த சமயமே, முதலாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொண்டுவரப்பட்டதாகவும் லூக்கா பதிவு செய்கின்றார்.

இதன் மூலம், இயேசு பிறக்கும் பொழுது Caesar Augustus – அகஸ்துராயன் ஆட்சிசெய்தான், அப்போது Syria - சீரியா நாட்டிற்கு சிரோனியு (Cyrenius or Quirinius) என்பவன்  Governor – தேசாதிபதியாக இருந்தான் என்று லூக்கா குறிப்பிடுகின்றார். இந்த சிரோனியு தேசாதிபதியாக பதவியேற்றது எப்போது? அதை Encyclopedia Wikipedia பின்வருமாறு குறிப்பிடுகின்றது: 

Publius Sulpicius Quirinius (Greek Κυρήνιος - Kyrenios or Cyrenius, c. 51 BC – AD 21) was a Roman aristocrat. After the banishment of the ethnarch Herod Archelaus from the tetrarchy of Judea in AD 6, Quirinius was appointed legate governor of Syria, to which the province of Iudaea had been added for the purpose of a census.[1]


அதாவது, இந்த சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொறுப்பேற்றது கி.பி 6ம் ஆண்டு என்கிறது விக்கிபிடியா கலைக்களஞ்சியம்.

மேற்கூறப்பட்ட வரலாற்று ஆதாரங்களின் படி, சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொருப்பேற்றது, ஏரோது ராஜா மரணித்து சில ஆண்டுகள் கழித்து தான் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது ஏரோது ராஜா மரணமடைந்தது கி.பி.4ம் ஆண்டு, ஆனால், சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொருப்பேற்றதோ கி.பி 6 ம் ஆண்டு. இப்படி இருக்கும் பொழுது ஏரோதுவின் காலத்திலும், சிரேனியுவின் காலத்திலும் இயேசு எப்படி ஒருசேர பிறந்திருக்க முடியம்?

ஒன்று, மத்தேயுவின் கூற்றுப்படி இயேசு பிறந்தது ஏரோதுவின் ஆட்சிக் காலத்தில் என்றால், சிரோனியு தேசாதிபதியாக இருந்திருக்க முடியாது?  ஏனெனில், சிரோனியு தேசாதிபதியாக வரும் முன்பே ஏரோது இறந்துவிட்டதாக வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இல்லை, கிரேனியுவின் ஆட்சிக்காலத்தில்தான் இயேசு பிறந்தார் என்றால், ஏரோதுவின் கொடுமைகளை இயேசுவின் பெற்றோர் சந்தித்திருக்க முடியாது. ஏனெனில், சிரோனியு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏரோது மரணித்து விட்டானே! பிறகு எப்படி அவன் இயேசுவின் பெற்றோரை கொடுமை செய்திருப்பான்? சிந்திக்க வேண்டாமா?

மத்தேயு தனது சுவிஷேசத்தில் இயேசு பிறக்கும் சமயம், ஏரோது ஆட்சியில் இருந்ததன் காரணத்தால், இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக அவரது தாயாரும், அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்ததாகவும், அதற்கு பயந்து பல ஊர்களில் மறைந்தும் ஒளிந்தும் வாழ்ந்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் ஏரோது ராஜா குழந்தை இயேசுவை கொலைசெய்யத் தேடியது தான் என்றும் கூறுகின்றார். அதற்காக பல்வேறு வகையான முன்னறிவிப்புகளையும்(?) கோடிட்டு காட்டுகின்றார். ஆனால் லூக்காவே, "ச்.சச்.. சே.. அப்படியெல்லாம் நடக்கவே இல்லை! சும்மா கதை விடக்கூடாது. இயேசு பிறந்ததோ ஏரோது ராஜா மரணித்து சில ஆண்டுகள் கழித்து, சிரோனியு சிரியாவில் தேசாதிபதியாக பெருப்பேற்றப் பிறகுதான். அப்படி இருக்கும் பொழுது, ஏரோது எப்படி குழந்தை இயேசுவை கொலைசெய்ய தேடியிருப்பார்? சும்மா சிறுபிள்ளைத் தனமாக வரலாற்றை மாற்றாதீர்கள்" என்கிறார்.

இதில் எது சரி கிறிஸ்தவர்களே!

பைபிள் உன்மையிலேயே கர்த்தருடைய வேதமாக இருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்குமா? கர்த்தருடைய குமாரன்(?) எப்பொழுது பிறந்தார் என்பதில் கர்த்தருக்கே குழப்பமா?  சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

இயேசுவின் பிறந்த ஆண்டிலே இவ்வளவு முரண்பாடுகள் என்றால், அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் டிசம்பர் 25 எம்மாத்திரம்! அதையும் அடுத்த கட்டுரையில் இனஷா அல்லாஹ் அலசிவிடுவோம்.

நீங்கள் உன்மையான கிறிஸ்துவின் வரலாற்றை அறிய வேண்டுமானால் உடனே படிக்கவேண்டியது இறுதித் திருமறையான திருக்குர்ஆனைத் தான்.

திருக்குர்ஆனை திறந்த மனதுடன் படியுங்கள். சத்தியத்தை அறியுங்கள்! சத்தியம் உங்ளை விடுதலையாக்கும்!


Thursday, December 20, 2012

அநாகரிகம்....! தினமணி தலையங்கம் - 20-12-2012

புதுதில்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் கொடுமை குற்றங்களுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் தேவை என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நகரங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வல்லுறவுக்கு இலக்காகிறார் என்று தில்லியின் ஒரு பத்திரிகை புள்ளிவிவரம் தருகிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்.

இதே தில்லி நகரில், ஒரு ஜெர்மனிப் பெண் கடந்த மாதம் 4 பேரால் வல்லுறவுக்கு இலக்கானார். ஆனால், அது பெரிதாகப் பேசப்படவே இல்லை. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஒரு மாணவி தன் தந்தையாலும் சகோதரராலும் தன் வீட்டுக்குள்ளேயே தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்கூட கடந்த வாரம் செய்தியாக வந்தது. இதுவும் மறுநாளே மறக்கப்பட்டது.

ஆனால், தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.

துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?.

காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் 'அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.

ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.

உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

'எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். 'நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

'புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?

'முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான்! கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்!' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.

சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நன்றி: தினமணி - 20-12-2012

**************

இறைவன் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

"இன்னும் இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் இறைவனின் பக்கம் திரும்புங்கள்.  அல்குர்ஆன் -  24 : 31.

Monday, December 17, 2012

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5 படிக்க இங்கே அழுத்தவும்
 முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6 படிக்க இங்கே அழுத்தவும் 


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
   புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
   
   புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்   


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7

முரண்பாடு : 29

தாவீது சீரியரில் எத்தனைப்பேரைக் கொன்று போட்டான்?

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். – 1 நாளாகமம் 19:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 7000 இரதங்களின் மனுஷரையும் 40000 காலாட்களையும் கொன்று போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத் தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்
- 2 சாமுவேல் 10:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 700 இரதவீரரையும் 40000 குதிரைவீரரையும் கொண்றதாகவும் கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? தாவீது கொன்று போட்டது 700 இரதவீரர்களையா அல்லது 7000 இரதவீரர்களையா? 40000 குதிரை வீரரையா அல்லது 40000 காலாட்களையா? பைபிள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட முரண்வருமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


முரண்பாடு : 30

பாஷா அரசாண்டது எத்தனை வருடங்கள்?

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, - 1 இராஜாக்கள் 15:33

பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். – 1 இராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய 3ம் வருடத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலருக்கு ராஜாவானதாகவும் 24 ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் மேலே உள்ள 15:33ம் வசனம் குறிப்பிடுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்த உடன் அவன் மகன் ராஜாவானதாக 16:6ம் வசனம் குறிப்பிடுகின்றது.

யூதாவுக்கு ஆசா ராஜாவான 3ம் வருடம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சிசெய்து மரணித்திருக்கின்றான். அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கின்றான். இதை கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் படியுங்கள்.

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலன் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். – 2 நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27 ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட 36ம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவனும் உயிர்ததெழுந்தான் என்று கிறிஸ்தவ உலகம் சொல்லப்போகின்றதா?

முரண்பாடு : 31

மலடி பிள்ளை பெற்றாளா?

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தான் மரணமடையும் நாள் வரை பிள்iயே பெறாமல் மரணித்ததாக பைபிளின் 2 சாமுவேல் கூறுகின்றது:

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. – 2 சாமுவேல் 6:23

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக சவுலின் குமாரத்திக்கு அவள் மரணமடையும் நாள் வரை பிள்ளையே இல்லாமல் மரணித்தாள் என்று கூறப்பட்டிருக்க இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு 5 குமாரர்கள் இருந்ததாக பைபிளின் 2 சாமுவேல் 21:8 கூறுகின்றது:

...சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து, - 2 சாமுவேல் 21:8

சவுலின் குமாரத்திக்கு பிள்ளைகள் இருந்ததா? அல்லது பிள்ளையே இல்லாமல் மரணித்தாளா?
முரண்பாடுகள் தொடரும்...இறைவன் நாடினால்

Wednesday, December 12, 2012

ஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா? 50000 ஆண்டுகளுக்கு சமமா?

 திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 3
- எம்.எம். அக்பர்

இறைவனிடம் ஒரு நாளின் அளவு பூமியிலே 1000 ஆண்டுகளுக்கு சமம் என்று குர்ஆனில் 22:47, 32:5 என்ற வசனங்கள் கூறியிருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று 70:4 வசனம் கூறுகிறது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

முரண்பாடுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆய்வோம்.

(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.  – அல்குர்ஆன் 22:47.   

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். – அல்குர்ஆன் - 32:5

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். - அல்குர்ஆன் 70:4

இம்மூன்று வசனங்களில் 'நாள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது, 'யவ்ம்' என்னும் அரபிப்பதமேயாகும். சாதாரணமாக இருபத்தி நான்கு மணிநேரமுள்ள ஒரு நாளையே அரபியில் 'யவ்ம்' என்று கூறுவர். இன்னும் 'யவ்ம்' என்னும் பதத்திற்கு 'கால அளவு', 'காலகட்டம்' என்னும் பொருளும் கொள்வதுண்டு. குர்ஆனில், இத்தகைய பொருளில் 'யவ்ம்' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதுண்டு.

'ஸலாமுடன் - சாந்தியுடன் இ(ச்சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள். இது தான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்' (என்று கூறப்படும்) (அல்குர்ஆன – 50:34) நித்தியமாக தங்கியிருக்கும் நாள் என்றால் சூரியன் உதித்து அஸ்தமிக்கும் இடையிலான கால அளவு இல்லையல்லவா? ஏனென்றால் இது எல்லைக்குள்ளான கால அளவு ஆகும். எந்நிலையிலும்  முடிவுறாத நித்தியமான அழிவில்லாத மறுமையினையே இங்கே (50:34) 'நாள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதன் உபயோகத்திலிருந்து விளங்குகிறது.

கியாம நாளில் நிகழும் காரியங்களைக் குறித்தும் கூறும் போதும் குர்ஆன் 'நாள்' (யவ்ம்) என்னும் பதத்தையே உபயோகப்படுத்தியுள்ளது.

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.  - அல்குர்ஆன் - 101:4-5

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள். - அல்குர்ஆன் - 14:48

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். - அல்குர்ஆன் - 99:6   

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். - அல்குர்ஆன் - 89:25   


அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். - அல்குர்ஆன் - 88:2-3   

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். - அல்குர்ஆன் - 86:9   

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். - அல்குர்ஆன் - 83:6   

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. - அல்குர்ஆன் - 82:19   

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;, தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். - அல்குர்ஆன் - 80:34-37   

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். - அல்குர்ஆன் - 79:35

'பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;' - அல்குர்ஆன் - 79:6

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். - அல்குர்ஆன் - 78:38   

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். - அல்குர்ஆன் - 78:40   

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. - அல்குர்ஆன் - 78:39   

மேற்காணும் இவ்வசனங்களில் உள்ள ஒவ்வொரு சம்பவங்களுடனுமுள்ள 'நாள்' என்பது அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவே என்பது தெளிவாக விளங்கும். ஓவ்வொரு சம்பவங்களின் அடிப்படையில் கால அளவும் மாறுபாடாக இருக்கும். மனிதர்கள் தம் கர்மங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாள், மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் போலாகும் நாள் போல இருப்பதில்லை.  ஓவ்வொரு நாளின் கால அளவும் வேறுபட்டிருக்கும். அவைகளின் அளவு குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களாகிய நாம் அதைக் குறித்து அறிய நம்முடைய கையில் எந்த வழியும் இல்லை.

கியாமநாளுடன் தொடர்புடைய இரு சம்பவங்களின் கால அளவை மட்டுமே குர்ஆன் மூலமாக அல்லாஹ் அறிவித்துத் தருகிறான். காரியங்கள் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் ஒரு நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்று 32:5ம் வசனம் மூலமாக அறிவிக்கின்றான். மலக்குகளும் ஆன்மாக்களும் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள 5000 ஆண்டுகளுக்குச் சமம் என்று 70:4ம் வசனம் மூலமாக அறிவிக்கிறான்.

இரண்டு வசனங்களிலும் விவரிக்கப்பட்டது கியாம நாளின் போதான இருவேறு சம்பவங்கள் ஆகும். இந்த இரு வேறு சம்பவங்களும் நடைபெற எடுத்துக்கொள்ளும் கால அளவும் வேறு வேறாகும் என்பதை இக்குர்ஆன் வசனங்கள் மூலமாகவே விளங்க முடிகிறது. மற்றபடி இவ்விரண்டுக்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. இரண்டும் இரு சம்பவங்கள். இரு வேறு சம்பவங்களும் எடுத்துக்கொள்ளும் கால அளவும் இரு வேறு கால அளவாகும் என்றிருக்க இவை எப்படி முரண்பாடாகும்?

அது போல், திருக்குர்ஆனின் 22:47ம் வசனத்தில் '(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்' என்று இறைவன் கூறுகின்றான்.   நிராகரிப்போருக்கு தண்டனை உண்டு என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த போது அதை பரிகாசம் செய்து, நாங்கள் நிராகரித்து ஆண்டுகள் பல ஆகியும் தன்டனை வந்து சேராது ஏனோ? என்னும் கேள்விக்கு இறைவனில் பதிலாகும் இந்த வசனம். இறைவனின் தண்டனை சில காலத்திலேயே வந்தடைய வேண்டும் என்றில்லை. வரலாற்றில் இறைவனின் தண்டனை இறங்குவது மனிதர்களின் கணக்கை அனுசரித்தோ அவன் இஷ்டத்தை அனுசரித்தோ அல்ல. (மாறாக அது) அல்லாஹ்வின் தீர்மானப்படியாகும். அவன் இஷ்டப்படியாகும் என்பதையே இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது. அல்லாஹ்வின் கணக்குப்படி ஒரு நாள் என்பது மனிதர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம். ஆதலால் தண்டனையிறங்கவில்லையே என்று பரிகாசம் செய்யவேண்டாம் என்று இவ்வசனம் தெளிவாக்குகிறது. மனித வரலாற்றில் தெய்வீக தலையீடுகளை மனித கணக்குப்படி கணிப்பது கூடாது என்பதே இவ்வசனத்தின் பாடம். இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்ற இரு வசனங்களோடு தொடர்பு இல்லாதது ஆகும். மூன்று வசனங்களும் கூறுவது மூன்று விதமான விஷயங்களாகும். அவைகளின் சம்பவங்களும் வேறுபாடாகும். அதனால் அவைகளுக்கு இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.

தொடரும் ... இன்ஷா அல்லாஹ்...

Friday, December 07, 2012

பைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி?

பைபிளின் அறிவற்ற கூற்றுக்கள்

 
கிறிஸ்தவர்கள் வேதமாக நம்பக்கூடிய பைபிளின் பழைய ஏற்பாடு ஆதியாகமம் 9:11-16ம் வசனங்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
11.இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை பைபிள் குறிப்பிடுகிறது. இதில் 11 வது வசனத்தில் "இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும் உடன்படிக்கை எற்படுத்துகிறேன்" என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் இன்றளவும் சுனாமி, பெருவெள்ளம் போன்ற ஜலப்பிரளயங்கள் வந்து மாமிசமான விலங்குகளை சங்கரிக்கின்றன. கர்த்தர் சொன்னதை மறந்துவிட்டாரோ ? ஆனால் நாம் அந்த விஷயத்தை இங்கே முக்கியமாக கூறவில்லை.


12 , 13 ஆகிய வசனங்களில் தேவன் எதற்காக வானவில்லை உண்டாக்கினார் என்ற ஒரு மாபெரும் அறிவியல் தத்துவத்தை பைபிள் சொல்கிறது. வானவில்லை நான் எதற்கு வைத்தேன் தெரியுமா ? இனி உங்களை ஜலப்பிரளயத்தில் கொல்ல மாட்டேன் என்று நான் உங்களிடம் உடன்படிக்கை செய்துள்ளேனே ? அதற்கு அடையாளமாக வானவில் இருக்கும். இந்த உடன்படிக்கை எனக்கு மறந்து போக கூடாதுன்னு இந்த வானவில்லை வைத்து நான் நினைவு கூர்ந்து கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்.வானவில்லை வைத்துதான் கர்த்தர் நினைவு கூற வேண்டுமா ? கர்த்தருக்கு நினைவாற்றல் அவ்வளவு மந்தமா ? வானவில் இல்லை என்றால் கர்த்தர் ஜலப்பிரளயத்தை மறந்து விடுவாரா? என்பன போன்ற கேள்விகளை கூட ஒதுக்கி வைத்து விடலாம்.இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலபிரளயதிர்க்கு பின்புதான் வானவில்லை கர்த்தர் வானத்தில் வைத்தாராம் !!!!வானவில் எதனால் உண்டாகிறது ? "Principle Of Dispersion Of Light " என்று பள்ளிகளில் நாம் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புக்களில் படித்திருப்போம். அந்த அளவிற்கு கூட கர்த்தரின் அறிவு வளரவில்லை என்பதற்கு [ஆதியாகமம் 9 :13] சாட்சி.

இந்த  "Principle Of Dispersion Of Light " என்றால் என்ன ? http://en.wikipedia.org/wiki/Dispersion_(optics) . வெள்ளை ஒளி ஒரு முப்பட்டகம் (Prism ) வழியாகவோ  அல்லது ஒரு அலைவளைவுக் கீற்றணி (Differential Grating) வழியாகவோ சென்றால் தன்னுள் ஐக்கியமாகி இருக்கும் பல நிறங்களாக (அலைநீளங்களாக Wavelenghths)  பிரியும். வானவில் எதனால் வானத்தில் உண்டாகிறது என்றால் மழை துளிகளோ, அல்லது மிக சிறிய பனி துளிகளோ பூமியில் விழும் போது சூரியனின் வெள்ளை ஒளி அதில் படும். அப்போது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு முப்பட்டகம் போல் செயல்படும். எல்லா முப்பட்டகங்களிலும் உள்ளுக்குள் ஏற்படுகின்ற Refraction - Reflection -Refraction இந்த நீர்துளிகளிலும் ஏற்படும். அதனால் பல அலைநீலங்களாக வெள்ளை ஒளி பிரிந்து வானவில்லாக நமக்கு காட்சியளிக்கும். வானவில்லின் உள்ளுள்ள பகுதியில் Scattering Of Light (ஒளி சிதைவு) அதிக அளவில் இருக்கும்.

இது நோவாவின் காலத்தில்தான் முதன்முதலில் நடந்ததா ? நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது. அப்போவெல்லாம் வெள்ளை ஒளி பிரியவில்லையா ? அப்படி பிரியவில்லை என்றால் நோவாவின் காலத்தில் கடல் ஊதா நிறத்தில் இருந்திருக்காது,  வானம் ஊதா நிறத்தில் நோவாவிற்கு தெரிந்திருக்காது, இலைகள் பச்சை நிறத்தில் தெரிந்திருக்காது, நோவாவும் மனிதன் இருக்கும் நிறத்தில் இருந்திருக்க மாட்டார். பூமியில் எல்லாமுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருந்திருக்கும் !!!!!ஆக  [ஆதியாகமம் 9 :13] த்தில் பைபிள் சொல்வது அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் என்று தெளிவாகிறது. கர்த்தர் கொடுத்த வார்த்தையாக இருந்திருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது.

பின் குறிப்பு : Dispersion Of Light எனும் நியதியை கண்டுபிடிக்க பெரும் துணையாக இருந்தது 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லீம் விஞ்ஞானி "இப்ன் அல் ஹய்தம்". இவரது "கிதாப் அல் மனாசீர் (Book Of Optics ) இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. http://en.wikipedia.org/wiki/Alhazen


நன்றி: ஜீசஸ் இன்வைட்ஸ்

Wednesday, December 05, 2012

மர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா? மலக்குகளா?

திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 2
 - எம்.எம். அக்பர்


ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம்.

அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்' 


அல்குர்ஆன் - 19:17-21: அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார். ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார். ''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' எனக் கூறினார்.

மர்யம் (அலை) அவர்களின் வாழ்கையில் நடந்த இரண்டு சம்பவங்களையே குர்ஆன் வசனங்கள் கூறுகிறது என்பதை மிகத் தெளிவாக விளங்களாம்.

மர்யம் (அலை) அவர்களின் வாழ்வில், ஒரேயொரு முறை மட்டுமே மலக்குகளுடன் உடையாடல் நடந்தது என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. குர்ஆன் அப்படிக் கூறியிருந்தால் அவ்விரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்னும் வாதம் சரியானது எனலாம்.

உன்மையில் சூரத்துல் ஆல இம்ரானின் வசனம் (3:42-45) கூறும் மலக்குகளுடைய உரையாடல் ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்தல் - அதாவது நன்மாராயங்கூறல் மட்டுமேயாகும். அதைச் செய்தது மலக்குகளுடைய ஒரு கூட்டமாகும். அந்த கூட்டத்தில் எந்தெந்த மலக்குகள் உட்பட்டிருந்தார்கள் என்பதை அவ்வசனம் கூறவுமில்லை.

இந்த சந்தோஷ செய்தி அறிவிக்கப்பட்ட பின் அதை நிவைறவேற்றவே பரிசுத்த ஆத்மா என்றழைக்கப்படும், ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் மர்யத்தின் பக்கம் அனுப்பி வைத்தான். அவர் ஜனங்களிடமிருந்து தனித்திருந்து, இறைபணி செய்து வரும் மர்யம் (அலை) அவர்களை நோக்கி இறைவனின் கட்டளையை பூர்த்திசெய்ய வந்த போது நடந்த உரையாடலே அல்குர்ஆனின் 19:17-21 விரை உள்ள வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரீலின் வரவு மலக்குகள் செய்தது போல சந்தோஷ வார்த்தையை அறிவிக்க அல்ல, நிறைவேற்றுவதற்கேயாகும். பரிசுத்தமான ஒரு ஆண் குழந்தையை தானம் செய்வதற்கே யாகும். இறைவனின் முன்னறிவிப்பை நிறைவேறுவதற்கான வகையில் மர்யம் (அலை) அவர்களின் உடலில் உண்டாகக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கமே ஜிப்ரீலின் வரவின் நோக்கம் என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது.

எவ்வாறாயினும் இவ்விரு வசனங்களும் விவரிப்பது இரு வேறு நிகழ்வுகளையாகும்.

1.    மலக்குகளுடைய சந்தோஷ வார்த்தை குறித்த அறிவிப்பாகும்.
2.    சந்தோஷ வார்த்தையை நிறைவேற்றுவதற்கான ஜிப்ரீலின் வரவும் அது பற்றிய உரையாடலுமாகும்.

இரண்டும் இரண்டு நிகழ்வுகள், இரண்டு நிகழ்விலும் இரண்டு விதமான உரையாடல்கள், இரண்டு நிகழ்விலும் உரையாடுபவர்கள் வித்தியாசமானவர்கள். அப்படியிருக்க இரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்று எப்படி கூற முடியும்?

இறைவன் நாடினால் விளக்கங்கள் தொடரும்...