அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, August 30, 2008

திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்

இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.

சகோதரியின் கேள்வி: -

தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.

அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.

மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)

மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)

'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,

பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.

ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)

யோவான், 14 அதிகாரம், வசனம் 28

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான், 10 அதிகாரம், வசனம் 29

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

யோவான், 5 அதிகாரம், வசனம் 30

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!

(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)

யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:

  • ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்
  • பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம்
  • பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்
  • குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்
எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.

திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)

(திரித்துவம் மற்றும் இயேசு கடவுளா? என்பது பற்றிய மிக விரிவான ஆய்வுக் கட்டுரை கூடுதல் விளக்கங்களுடன் விரைவில் ஏகத்துவம் வலைதளத்தில் வர இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்...)

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-1 English

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-2 English

நன்றி : சுவனத்தென்றல்
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Thursday, August 28, 2008

யோசேப் அறியாத ராம்சேஸ் பட்டினம்

இஸ்ரவேலர்களால் உருவாக்கப்பட்ட பித்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டகசாலைப் பட்டணங்களைக் குறித்து பைபிள் கூறுகின்றது. யாத்திராகமத்தில் காணப்படுவதாவது,

அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். (யாத்திராகமம் 1:11)

இந்த இரு நகரங்களும் உருவாக்கப்பட்டது இரண்டாவது ராம்செஸின் காலத்திலாகும். (BC 1279-1212) ராமசெஸ் II என்ற பர்வோனின் நினைவாகவே இந்த பெயர் வழங்கப்பட்டதாம் (Dr. D Babupaul : வேத சப்த ரத்னாகரம், பக்கம் 584) யோசேப்பைக் குறித்து எதுவும் அறியாத ஒரு புதிய மன்னராகவே ராம்சேஸைப் பற்றி பைபிள் குறிப்பிடுகின்றது.

''யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.'' (யாத்திராகமம் : 1:8)

மேற்கண்ட பைபிளின் வரிகளின் அடிப்படையில் நாம் பின்வரும் முடிவுக்கு வரலாம்.

1. யோசேப்புக்குப் பின் பலகாலம் கடந்தே ராம்சேஸ் அதிகாரமேற்றான்

2.இந்த ராம்சேஸின் காலத்தில் உருவாக்கப்பட்டதே ராம்சேஸ் என்ற நகரம்.

3.யோசேப்புடைய காலத்தில் இப்படிப்பட்ட ஒரு நகரம் இல்லை.

ஆனால் ஆதியாகமத்தில் இது குறித்துக் கூறப்பட்டுள்ளது முற்றிலும் முரண்படுகின்றது. பர்வோனின் கட்டளைப்படி யாக்கோபுக்கும் அவரது புத்திரர்களுக்கும் வழங்கப்பட்ட நகரமே ராம்சேஸ் என்று ஆதியாகமம் கூறுகின்றது.

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். (ஆதியாகமம் 47:11)

யோசேப்புடைய காலத்தில் ராம்சேஸ் என்ற நகரமே இல்லை என்றிருக்க பிறகு எவ்வாறு யோசேப் அதனை தனது தகப்பனுக்கும் சகோதரர்களுக்கும் வழங்க முடியும்?

இவ்வாறாக பைபிளில் ஏராளமான அபத்தங்களை நாம் காண முடிகின்றது. இத்தகை அபத்தங்களை நியாயப்படுத்தவும் முடியாமல் விளக்கவும் முயாமல் பைபிள் பண்டிதர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

Saturday, August 23, 2008

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்: எலியா யார்..?

வெட்ட வெளிச்சமாகும் பைபிளின் முரண்பாடுகள்!

முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபிளை இறைவேதம் என்று நம்பியதன் விளைவு அதன் தெளிவான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியதும் அதை நடுநிலைக் கண்னோட்டத்தோடு சிந்திக்க மனமில்லாமல், அதற்கு பதில் என்றப் பெயரில் எதையாவது எழுதி தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் திருப்திபடுத்தியாக வேண்டும் என்றக் கட்டாய நிலைக்குத் சில கிறிஸ்தவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதற்கு தற்போது நமக்கு பதில்(?) என்றப் பெயரில் அவர்கள் எழுதும் பதிவுகளே சாட்சி. நாம் எடுத்துக்காட்டிய ஒரு முரண்பாட்டை சமாளிப்பதற்காக இவர்கள் எத்தனை எத்தனை முரண்பாடுகளை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் பதிவுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

காரணமின்றி பைபிளோடு திருக்குர்ஆனை இணைத்து, திருக்குர்ஆனில் வரலாற்றுத் பிழைகள் இருப்பதாக ஒரு கிறிஸ்தவர் எழுதியதற்கு அவரது அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டி தெளிவாக விளக்கமளித்ததுடன், இவர்கள் எந்த பைபிளை - எவருடைய பெயரை வைத்து குர்ஆனில் தவறுகள் இருப்பதாக எழுதினார்களோ அதே பைபிளின் அதே யோவான் ஸ்னானனின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.

எங்கேயாவது - எந்தத் தளத்திலாவது நமது கட்டுரைக்கு பதில் கிடைக்குமா? என்று தேடி அலைந்தவர்கள், தற்போது ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து ஒருவருக்கு பதிலாக எழுதியிருந்த மழுப்பலான பதிலை மொழி பெயர்த்து ஏகத்துவத்திற்கு பதில் என்று வெளியிட்டுள்ளனர். நாம் முன்பு பைபிளில் உள்ள அறுவருக்கத்தக்க ஆபாசமான வசனங்களை சுட்டிக்காட்டியபோது சம்பந்தமில்லாமல் அவை எல்லாம் உவமையாக சொல்லப்பட்டது என்று சொல்லி சமாளித்து தப்பித்துக்கொண்டது போல், இதையும் ஒரு வகை உவமையாக சொல்லப்பட்டதுதான் என்று சமாளித்து தப்பித்துக்கொள்வார்களோ என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்படி சமாளிப்பதாவது எவ்வளவோ மேல் என்று எண்ணும் அளவுக்கு இவர்களின் இந்த பதில் பதிவு அமைந்துள்ளது என்பது தான் நகைச்சுவையான விஷயம்.

நமக்கு பதில் என்றப்பெயரில் பதிவு போட்ட கிறிஸ்தவர் சுயமாக பதில் ஏதும் எழுதவில்லை. போகட்டும். மற்றவர் யாராவது இதற்கு பதில் எழுதியிருக்கின்றார்களா? என்று தேடியவர், கிடைத்த அந்த மழுப்பலான பதிலை மொழிப்பெயர்த்து வெளியிடும் முன் அந்த மறுப்பு சரியானதுதானா? என்று சற்று படித்துப் பார்த்திருக்க வேண்டாமா? ஏதோ குறுட்டுத்தனமாக எதையாவது எழுதி 'இதுதான் மறுப்பு' என்று போட்டுவிட்டால் அவை எல்லாம் மறுப்புகளாகிவிடுமா? இப்படி குருட்டுத்தனமாக மறுப்பு என்றப் பெயரில் எதையாவது எழுதுவதால் உங்கள் பைபிளில் முரண்பாடுகள் இருப்பது உறுதி என்பது படிப்பவர்களுக்குத் தெரிந்துவிடாதா? என்பதை எல்லாம் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஏகத்துவத்துக்கு பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ளனர். சரி விளக்கத்திற்கு வருவோம்.

நாம் ஏகத்துவம் தளத்தில் மிகத் தெளிவாகவே பைபிளின் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்? யோவானா? அல்லது வேறு ஒருவரா? என்று பைபிள் ஆதாரங்களை வைத்து கேள்வி எழுப்பியதுடன், இயேசு யோவான் ஸ்னானன் தான் எதிர்ப்பர்க்கப்பட்ட அந்த எலியா என்று சொல்லியிருக்க (பார்க்க மத்தேயு 17:10-13, 11:14) அதற்கு நேர் மாற்றமாக 'நான் எலியா அல்ல' என்று யோவான் மறுத்தார் என்று பைபிள் கூறுகின்றது. (பார்க்க யோவான் 1:19-22) இது பைபிளில் சொல்லப்பட்ட யோவானின் வரலாற்றில் உள்ள தெளிவான முரண்பாடு என்று சில விளக்கங்களுடன் எழுதியிருந்தோம்.

இதற்கு அந்த கிறிஸ்தவர் ஒரு விசித்திரமான பதிலை எழுதியிக்கிறார்:

//அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா? இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும்.//
அதாவது இயேசு சொன்னதும் சரியாம். யோவான் சொன்னதும் சரியாம். அது தான் 'இல்லை... மற்றும் ஆம் என்பதாகும்' என்பது தான் இவர் சுருக்கமாக சொல்லவரும் பதில். என்ன குழப்பமாக இருக்கின்றது என்று யோசிக்கின்றீர்களா? பைபிளை ஒருவர் இறைவேதம் என்று ஏற்றுக்கொண்டால் இது தான் நிலைமை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு வாதத்திற்காக இவரது 'ஆம்' மற்றும் 'இல்லை' என்ற பதிலை எடுத்துக்கொள்வோம். அதையாவது சற்று தெளிவாக குழப்பமில்லாதவகையில் சொன்னாரா என்றால் அதுவும் இல்லை. மாறாக ஒரு முரண்பாட்டைக் களைகின்றேன் என்றப் பெயரில் எத்தனை முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார் என்று பாருங்கள்.

அந்த கிறிஸ்தவர் எழுதுகின்றார்:

//எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி, அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4).//
இயேசு மிகத் தெளிவாகவே எலியா என்பவர் தனக்கு முந்தி வரவேண்டும், அது போல் அவர் (தனது முதல் வருகையின் போதே) வந்தாயிற்று என்று சொல்கின்றார். முதலில் பைபிளில் அவர் சொல்லியுள்ளதை நன்றாக கவனியுங்கள் :

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)

இங்கு இயேசு சொல்லியுள்ள வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் :

எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று

Elias truly shall first come, and restore all things. But I say unto you, That Elias is come already

அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்.

and they knew him not, but have done unto him whatsoever they listed.
நமக்கு மறுப்பெழுதிய கிறிஸ்தவர் சொல்வது போல் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்றால், ஏன் இயேசுவிடம் அவரது சீடர்கள் 'உங்களுக்கு முன்பே எலியா வந்தாக வேண்டுமா? என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று பதில் அளித்ததுடன், எலியா வந்தாயிற்று (That Elias is come already) என்றும் அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்கு செய்தார்கள் என்றும் இறந்த கால வினையில் சொல்லவேண்டும்? சற்று சிந்திக்க வேண்டாமா? ஆங்கிலத்தில் வரும் 'already' என்ற வார்த்தை உங்களின் பார்வையில் ஒரு வேலை எதிர்காலத்தைக் குறிக்குமோ? இயேசுவுக்கு முந்தியே எலியா என்பவர் வந்துவிட்டார் என்று சொன்னதோடு அவரை துன்புறுத்தி வேதனை செய்தார்கள், என்றும் அவர் தான் யோவான் என்றும் சொல்கின்றார். அப்படி இருக்க இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்று நீங்கள் சொல்வது முரண்பாடாக தெரியவில்லையா?

அடுத்து, 'இது போல் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்' என்று இயேசு தன்னைப் பற்றி எதிர்கால வினையுடன் சொல்கின்றார். இந்த எதிர்காலத்தில் நடக்க இருக்கும் வார்த்தையும் இறந்த காலத்தில் 'எலியா வந்து விட்டதாக' சொன்ன வார்த்தையும் எப்படி சரிசமமாகும்?

அது மட்டுமல்ல இந்த எதிர்ப்பார்க்கப்பட்ட எலியா யோவான் தான் என்று இயேசு மிகத்தெளிவாக மற்றொரு வசனத்தில் சொல்கின்றார்:

'நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் (மத்தேயு 11:14)

And if ye will receive it, this is Elias, which was for to come.

'வருகிறவனாகிய எலியா இவன் தான்' என்றால் என்ன அர்த்தம்? வந்துவிட்டான் என்று தானே அர்த்தம்!

எதிர்ப்பார்க்கப்பட்ட எலியா யோவான் தான் என்றும் இதற்கு மேல் வேறு ஒருமுறை எலியா வரமுடியாது என்றக் கருத்திலும் இந்த வசனத்தில் இயேசு சொல்லியிருக்க, அவரின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்று சொல்வது எப்படி சரியாகும்?

இந்த வசனத்தை WBTC பைபிளின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் இன்னும் தெளிவாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:

எல்லா தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமானமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்க தரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால் யோவானே எலியா என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமானமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் என்று சொல்கின்றன. என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள். (மத்தேயு 11:13-15)

இந்த வசனங்களை நன்றாக கவனிக்க வேண்டும். இயேசு சொல்கின்றார்: முன்னறிவிப்புகளெல்லாம் யோவானின் வருகை வரைக்கும் என்றும் நியாயப்பிரமானத்திலும் தீர்க்கதரிசிகளாலும் எதிர்காலத்தில் வருவார் என்று சொல்லப்பட்ட எலியா என்பவர் இந்த யோவானே என்றும் கூறுகின்றார். இதில் சொல்லப்பட்ட வார்த்தைகளை நன்றாக கவனிக்க வேண்டும். 'யோவானின் வருகை வரைக்கும்' என்றால் யோவான் எப்பொழுது வந்தாரோ அது வரைக்கும் என்று தான் அர்த்தம். யோவான் எப்பொழுது வந்தார்? இனிமேல் நடக்க இருப்பதாக சொல்லப்படும் (?) இயேசுவின் இரண்டாம் வருகையின் போதா அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த அவரின் முதல் வருகையின் போதா? இந்த கிறிஸ்தவர் சொல்லும் மறுப்பு எப்படி இருக்கின்றது என்றால் 'நாளைக்கு நான் சாப்பிட்டேன், நேற்று நான் ஊருக்கு போக இருக்கின்றேன்' என்று சிலர் உளறுவார்களே அது போலல்லவா இருக்கின்றது.

அடுத்து 'நீங்கள் நம்பினால் யோவானே எலியா என்பதையும் நம்புவீர்கள்' என்றும் இயேசு சொல்கின்றார். அப்படி இருக்கையில் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட கருத்திற்கு மாற்றமாக, யோவானுக்குப் பிறகு (பைபிளின் படி) பல ஆயிரம் வருடங்கள் கழித்து இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்பது எப்படி சரியாகும்? இந்த வசனங்களில் வரும் யோவான் வரைக்கும் என்ற கருத்திற்கு உங்கள் கருத்து முரண்படுகிறதா இல்லையா? இப்படி நீங்கள் மாற்றிச் சொல்லுவதால் 'என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள்' என்று இயேசு சொன்னதற்கு மாற்றமாக எழுதுகின்றீர்கள் என்பது விளங்குகின்றதல்லவா? இது தான் கிறிஸ்தவர்களின் நிலை.

அடுத்து இயேசுவின் இரண்டாம் வருகையின் போதுதான் எலியா வருவார் என்று மல்கியா அதிகாரத்தை வைத்து இந்த கிறிஸ்தவர் எழுதுகின்றார். இந்த மல்கியா அதிகாரத்தை வைத்து 'எலியா தனது இரண்டாவது வருகையின் போதுதான் வருவார்' என்று இயேசு எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மாறாக 'எலியா வந்துவிட்டார்' என்றும் 'எலியா வருவதெல்லாம் யோவான் வரைக்கும் தான் அதற்குள்ளே வந்துவிடுவார், அந்த எலியாதான் யோவான்' என்றும் சொல்கின்றார். இதை வைத்து பார்த்தால் இயேசுவின் வார்த்தைகள் மல்கியாவின் 4 அதிகாரத்தில் உள்ள வசனங்களுக்கு முரண்பாடாகவே அமையும். இது முரண்பாடு இல்லை என்று சமாளிப்பதாக இருந்தால் ஒன்று மட்டுமே வழி. அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசுவின் முதல் வருகையையே இரண்டாம் வருகையாக கணக்கிட வேண்டும். அப்படியே இந்த முரண்பாட்டைக் களைவதற்காக அவரின் முதல் வருகையை இரண்டாம் வருகை என்று எடுத்துக்கொண்டால், அவரின் முதல் வருகை பற்றி வரும் வசனங்களும் இரண்டாம் வருகை பற்றிய வசனங்களும் மற்றுமொரு முரண்பாட்டைக் கொண்டுவரும். எனவே ஒரு வசனத்தின் முரண்பாட்டை களைய நினைத்தால் மற்றொரு வசனம் குறுக்கே நின்று முரண்பாட்டை ஏற்படுத்தும். மொத்த பைபிளுக்கும் இது தான் நிலைமை என்பதை கவனத்தில் கொண்டு சிந்தியுங்கள் கறிஸ்தவர்களே!

அடுத்து அவர் எழுதுகின்றார்:

// இரண்டாவதாக, தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: 'அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah". எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும்.//

அதாவது, எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் (லூக்கா 1:17) என்று யோவான் ஸ்னானனைக் குறித்து தேவதூதன் முன்னறிவிப்புச் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுகின்றார். அடுத்த வரியிலேயே 'எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார்' என்று அந்த பைபிள் வசனத்திற்கே மாற்றமாக தனது சுயகருத்தை திணிக்கின்றார். ஆனால், உன்மையில் அந்த லூக்கா வசனத்தில் எலியாவின் ஆவியும், பலமும் என்று எலியாவுடைய ஆவியைப் பற்றி தெளிவாக சொல்லியிருக்க, அந்த வசனத்திற்கு மாற்றமாக அடுத்த வரியிலேயே 'எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவி' என்று மாற்றி சொல்லும் துணிவு எப்படி இவருக்கு வந்தது? 'ஏற்ற ஒரு ஆவி' என்றால் வேறொரு ஆவி என்றல்லவா அர்த்தம். ஆனால் லூக்கா 1:17ல் எலியாவின் ஆவி என்றல்லவா சொல்லப்பட்டுள்ளது? இப்படி இவர்கள் மாற்றிக்கூற காரணம் என்ன? எப்படியாவது சமாளித்து இந்த முரண்பாட்டை களைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானே? நாம் கேட்கின்றோம் எலியாவின் ஆவியா அல்லது எலியாவின் பலத்திற்கு ஏற்ற வேறு ஒரு ஆவியா? இதன் மூலம் இவரை சாத்தானின் ஆவி ஆட்டிப்படைக்கின்றது என்று மட்டும் புரிகின்றதல்லவா?

அடுத்து அவர் எழுதுகின்றார்:

//ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah). //
எழுத்தின் படியாக என்றோ அல்லது சரீரத்தின் படியாக என்றோ எங்கே பைபிளில் சொல்லப்பட்டுள்ளது? மொத்தத்தில் பைபிளில் எலியா வருவார் என்றும் அவர் வந்துவிட்டார் என்றும் இயேசு மிகத்தெளிவாக தெரிவித்து இருக்க அவருக்கு மாற்றமாக - எழுத்து, சரீரம் என்று மாறுபட்டு சொல்லும் துணிவு உங்களுக்கு எப்படி வருகின்றது? இது தான் நீங்கள் இயேசுவை மதிக்கும் லட்சனமோ?

அடுத்து அவர் எழுதுகின்றார்:

//பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க்கு ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா? இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும்.//

இந்த இடத்தில் இவர் சொல்வது போல் யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்கு ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது' என்று ஒரு தவறான தகவலைத் தருகின்றார்.

இவர் சொல்வது போல் யோவானால் 'வகை செய்யப்பட்டது' என்றால் அதற்கு ஏற்றார் போல் 'முந்தி வரவேண்டிய எலியா நான் தான்' என்றோ அல்லது 'எலியாவுடைய ஆவியின் பலத்தைக் கொண்டு உங்களிடம் வந்துள்ளேன்' என்றோ ஒத்துக்கொண்டிருக்க வேண்டியது தானே? அக்கால மக்கள் கிறிஸ்துவுக்கு முன்பாக எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதையே இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் கேள்வியாகவே வைக்கின்றனர் (மத்தேயு 17:10-13) அதை இயேசுவும் ஒத்துக்கொண்டு 'எலியா வந்தாயிற்று' என்றும் சொல்கின்றார். ஆனால் இயேசுவால் எலியா என்று சொன்ன யோவான் 'நான் எந்த வகையிலும் எலியாவுடம் சம்பந்தப்பட்டவன் இல்லை' என்று மறுக்கின்றார். இப்படி 'நான் எலியா இல்லை' என்று மறுத்தால் இன்னும் எலியா வரவில்லையோ என்று மக்கள் தவறாக எண்ணுவதுடன் இயேசுவையும் ஏற்க நியாயமான தடையும் இந்த யோவானால் தான் ஏற்படுகின்றது. யோவான் 'நான் தான் எலியா' என்று ஒத்துக்கொண்டிருந்தால் இவர் சொல்வது போல் 'முதல் வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்யப்பட்டது' என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவர் சொல்வது போல் நடக்க வில்லையே?

அது மட்டுமல்ல, இவர் சொல்வது போல் 'யோவான் வகை செய்தார்' என்றால் இயேசுவை அந்த கால மக்கள் ஏராளமானோர் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே? ஆனால் குறிப்பிட்ட சிலரே தவிர பெரும்பாலோர் அவரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, அவரின் 12 சீடர்களில் ஒருவனே அவரைக் காட்டி கொடுத்ததோடு, அக்கால மக்களாலும் அவர் துன்புறுத்தப்பட்டு கொள்ளப்பட்டதாக பைபிள் சொல்கின்றது. இப்படி இருக்க எப்படி யோவானின் வருகை 'வகை செய்தது' என்பது சரியாகும்?

எனவே, நீங்கள் எந்தவகையில் பைபிளின் முரண்பாடுகளுக்கு மறுப்பு என்று பதில் எழுதினாலும் அவை அத்தனையும் வேறு ஒரு வகையில் முரண்பாட்டை கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்துமே யொழிய தீர்வைத்தராது நன்பர்களே!

இந்த இடத்தில் நாம் ஏகத்துவம் தளத்தில் எழுதியதை மீண்டும் ஒருமுறை பதிவுசெய்கின்றோம்:

எதிர்ப்பார்க்கப்ட்ட எலியா தனது முதல் வருகையின் போதே வந்தாயிற்று, அவர் தான் யோவான் என்று இயேசு சொன்னார்:

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)

ஆனால் இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவானோ 'நான் எலியா இல்லை' என்று மறுக்கின்றார்:

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)

இந்த வசனத்தில் நீ கிறிஸ்துவா என்று கேட்டதற்கு 'நான் அல்ல' என்று பதில் அளித்த அந்த யோவான் தான், நான் எலியாவும் அல்ல என்று பதில் அளிக்கின்றார். எந்த அளவுககு என்றால், நான் எப்படி எதிர்ப்பார்க்கப்பட்ட கிறிஸ்து அல்லவோ அதே போல் நான் எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும் அல்ல என்று மிகத்தெளிவாக அவரே மறுக்கின்றார். இந்த முரண்பாட்டிற்கு எத்தனை மூன்றாவது புத்தகத்தை எடுத்தாலும் மேலும் மேலும் முரண்பாட்டைத்தான் கொண்டுவருமே யொழிய இந்த முரண்பாட்டைக் களைய எந்த ஒரு தீர்வும் கிடைக்காது என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றோம்.

அடுத்து மற்றொரு இடத்தில் இயேசு தான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பது போல் எழுதியுள்ளார். இவர் பைபிளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளைப் பற்றித்தான் தெரிந்துள்ளாரே யொழியை பைபிளை சரியாக படிப்பதில்லை என்பது மட்டும் இந்த கருத்தின் மூலம் தெரிகின்றது. விரைவில் மிக விளக்கமாக இயேசு இறைவனா? மற்றும் திரித்துவக் கோட்பாடு சரியானதா? என்பது பற்றிய கட்டுரைகள் நமது தளத்தில் வர இருக்கின்றது இறைவன் நாடினால்.

(இவர் காட்டும் மல்கியா வசனங்கள் சம்பந்தமாக இன்னும் ஏறாளமான முரண்பாடுகள் பைபிளில் இருக்கின்றது. கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம். தேவை ஏற்படின் பின்னர் விளக்குவோம் இறைவன் நாடினால்...)

.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Friday, August 15, 2008

பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்?

இஸ்லாத்தின் மீது எப்படியேனும் குற்றம் சுமத்தி அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீது ஒரு தவறான கண்னோட்டத்தை உருவாக்கிடவேண்டும் என்ற தவறான எண்ணங்களுடன் தற்போது இணையங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் குர்ஆனில் வரலாற்றுத் தவறுகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதன்மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் இல்லை என்று நிரூபனம் ஆகிவிட்டதாகவும் ஒரு அபார கண்டுபிடிப்பை (?) கண்டுபிடித்துவிட்டது போல் சமீபத்தில் தங்கள் வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.

அதாவது, திருக்குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுகின்றது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் குர்ஆன் கூறும் பொழுது,

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகிறான். இந்த யஹ்யா (அலை) அவர்களை பைபிள் யோவான் ஸ்னானன் (John the Baptist) என்று வேறு ஒரு பெயரில் அழைக்கிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படப்படாத) பைபிளில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த யோவான் ஸ்னானன் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே யஹ்யா என்ற பெயரின் சிறப்பு குறித்து குர்ஆன் கூறுவது ஒரு தவறான வரலாற்று பிழை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.

இவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டிற்கு எமது சகோதரர்களால் மிகத் தெளிவாக பதில் எழுதப்பட்டுள்ளது. பார்க்க :


குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்! - சகோ. தேங்கை முனீப்

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா? - சகோ. அபூமுகை


என்றாலும், இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலை பதிவு செய்ய விரும்புகின்றோம். அதாவது, இன்றைய பைபிளில் உள்ள எல்லா கருத்துக்களையும் எல்லா வரலாற்றுத் தகவல்களையும், அப்படியே குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், பல இடங்களில் குர்ஆன் பைபிளுக்கு மாற்றமான தகவல்களைக் சொல்கின்றது எனபதையும் இன்றைய முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இருவருமே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு உன்மை.

இதில் முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாற்றமான பல தகவல்களைக் கொண்ட பைபிளை முற்றிலுமாக நிராகரிப்பதற்குக் காரணம் அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய :
என்பன போன்ற பலவீனங்களை அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு அத்தனை விதமான குறைபாடுகளையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடியதாக இன்றைய பைபிள் அமைந்துள்ளது என்பதே!

இப்படிப்பட்ட அனைத்து வகையான குறைபாடுகளை உடைய பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரை வைத்து, அதை குர்ஆனோடு சம்பந்தப்படுத்தி, குர்ஆனில் வரலாற்று பிழை உள்ளது என்று இவர்கள் சொல்வது எப்படி சரியாகும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போது இந்த 'யஹ்யா' என்ற பெயர் சம்பந்தமான இவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டச்சாட்டைப் பொருத்தவரையில், யஹ்யா (அலை) அவர்களுக்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயர்தான் முன்பு பலருக்கு இருந்ததாக கூறுகின்றார்களே யொழிய 'யஹ்யா' என்ற பெயரில் அதற்கு முன் யாரும் வாழ்ந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை, நிரூபிக்கவும் முடியாது. காரணம் இறைவன் அந்த 'யஹ்யா' என்றப் பெயர்கொண்டவரைத்தான் இதற்கு முன் ஏற்படுத்தவில்லை என்கிறான்.

அடுத்து இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய இந்த 'யஹ்யா' சம்பந்தமான குர்ஆன் வசனம், திருக்குர்ஆனில் வேறு ஒரு இடத்தில் உள்ள வசனத்திற்கு முரண்படுகின்றது என்று சொன்னால் அதை நியாயமானது எனலாம். அல்லது, பைபிளில் குறிப்பிடப்படாத குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்ட 'யஹ்யா' என்ற சிறப்புப் பெயர் இதற்கு முன் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது என்ற ஒரு வரலாற்று ஆதாரத்தையேனும் எடுத்துக் காட்டினால் அதையேனும் நியாயமானது எனலாம். மாறாக குர்ஆனில் யஹ்யா என்று ஒரு பெயர் குறிப்பிடப்பட்டு அந்த பெயரைக் கொண்ட (இறைத்தூதரான)வர் இதற்கு முன் இருந்ததில்லை என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்க, அதற்கு மாற்றமாக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள) வேறு ஒரு பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை வைத்து இந்த யோவான் என்றப் பெயர் முன்பே பலருக்கு இருக்கின்றது என்று சொல்வது எப்படி சரியாகும்? அதுவும் முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபில் குறிப்பிடக்கூடிய பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரும், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள யஹ்யா என்றப் பெயரும் முற்றிலும் மாறுபட்ட பொருளுடையதாக இருக்க இரண்டும் எப்படி ஒரே பெயராகும்?

நாம் இப்பொழுதும் சொல்லுகின்றோம், குழப்பங்கள் நிறைந்த பைபிளில் குறிப்பிடப்படும் பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை விட்டுவிட்டுங்கள். குர்ஆனில் உள்ள சிறப்புப் பெயர் என்று குறிப்பிடப்படும் 'யஹ்யா' என்றப் பெயரை அவருக்கு முன் வாழ்ந்தவர்கள் யாருக்காவது (குறிப்பாக எந்த இறைத்தூதருக்காவது) இருக்கின்றது நிரூபித்து விட்டு குர்ஆனை பொய்ப்படுத்தி விட்டோம் என்று வாதியுங்கள். அதை விடுத்து ஏதோ ஆய்வு என்றப்பெயரில் சம்பந்தமில்லாமல் குழப்பங்கள் நிறைந்த பைபிளை குர்ஆனுடன் இணைத்து உளறிக்கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

அடுத்து இவர்கள் எந்த யஹ்யா (அலை) சம்பந்தமான வசனத்திற்காக பைபிளை ஆதாரமாக வைத்து திருக்குர்ஆனில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினார்களோ, அதே பைபிளில் அவர்கள் எடுத்துக்காட்டும் யோவான் ஸ்னானன் சம்பந்தமாக உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் பாருங்கள் :

எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும்! யோவானும்!

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்கிறது.

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர்தான் யோவான் என்று இயேசுவே சுறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கின்றது.

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் நன்கு கவனிக்கவேண்டும். அதாவது, தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்கு சான்றாக 'யோவான்தான் எலியா' என்று இயேசு கூறுகின்றார். இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவான் 'நான் எலியா அல்ல' என்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் ஏன் அதை மறுக்கிறார்? எலியா ஏன் வரவேண்டும் என்றால் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும்போது அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான்ஸ்னானன் தான் எலியா என்பதற்கு அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால் அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும் அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கின்றார்.

யோவான் கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் யோவான் பற்றி 'அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவரானார்' (யோவான் 1:30) என்றும் 'ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை' (மத்தேயு 11:11) என்றும் யேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களிலேயே சிறந்தவரும் இயேசுவைவிடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்குமூலத்திலிருந்தே அறிகிறோம்.

யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களால் யோவானையும் பெய்யரென்றும் கூற முடியாது. இயேசுவையும் பொய்யரென்று கூற முடியாது. அவர்வாறு கூறினால் கிறிஸ்தவமே ஆட்டம் கண்டு விடும். கிஸ்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உன்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

எனவே இது போன்ற ஏராளமான முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தங்கள் பைபிளிலேயே வைத்துக்கொண்டு, அதுவும் நீங்கள் எந்த யோவானின் பெயரை வைத்து குர்ஆனின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்க பைபிளை ஆதராமாக எடுத்தீர்களோ அதே பைபிளிலேயே - அதே யோவானின் வரலாற்றிலேயே - இது போன்ற முரண்பாடுகளை வைத்துக்கொண்டு, குர்ஆனில் தவறு இருக்கின்றது என்று எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Wednesday, August 06, 2008

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்!

- தேங்கை முனீப்


வராலாற்றுச் செய்திகளில் குர்ஆனும் பைபிளும் சில இடங்களில் ஒரே தகவல்களைத் தந்தாலும் பல இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மாறுபாடுகள் குர்ஆனை பைபிளிலிருந்து பிரித்துக் காட்டி அதன் பரிசுத்த தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. அகிலங்களின் இறைவனால் இது இறக்கப்பட்டது என்ற குறிப்பு குர்ஆனில் உள்ளது. பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்ற குறிப்பு பைபிளிலும் உள்ளது. இந்த இரண்டு அடிப்படைகளை வைத்து ஆராயும்போது குர்ஆன் பைபிள் இதில் எது உண்மையான இறைவேதம் என்பதைத் தெளிவு பட விளங்க இயலும்.

பைபிள் இறைவேதமல்ல என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் பைபிளிலிருந்தே விவரித்துக் காட்டிய போது அதற்கு மறுப்பளிக்க இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த மிஷினரிகளுக்கு ஆறுதலாக குர்ஆனை விமர்சிக்கும் ஒரு இணைய தளம் கிடைத்தது. இவர்களைப் போன்றே சர்வதேச அறிஞர்களால் பைபிள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாத கிறித்தவ மிஷினரிகளின் மூளையில் உதித்த தந்திரத்தின் வெளிப்பாடே குர்ஆனின் மீதான குற்றச்சாட்டுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மகத்தான அற்புதம்! இவர்கள் எந்தெந்த வசனங்களைக் குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களோ அந்த வசனங்கள் குர்ஆனின் மகத்துவத்தைப் பறை சாற்றுவதாகவும் அது இறைவேதம் என்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. குர்ஆனை விமர்சித்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள் பைபிளை விமர்சிக்க மாட்டார்கள் என்ற இவர்களின் சர்வதேச தந்திரத்தை நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவனது மகத்தான பேரொளிக்கு முன்னால் இவர்கள் வைக்கும் புரட்டு வாதங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்பது நிச்சயம்!

யஹ்யாவும் யோவானும்

குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் கூறும் வசனம்.

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' ( (19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த யஹ்யாவை பைபிள் யோவான் என்று கூறுகிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படாத) இந்த யோவான் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது. எனவே இது குர்ஆனில் உள்ள ஒரு வரலாற்றுப் பிழை. இதுவே மிஷினரிகளின் குற்றச் சாட்டு.

விளக்கம் :

1. பைபிள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குர்ஆனை ஆராய வேண்டுமெனில் முதலில் பைபிளின் புனிதத் தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். பைபிளில் ஏராளமான வரலாற்று முரண்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் புரோகிதர்கள் தங்கள் விருப்பப்படி எழுதியதால் அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களும் முரண்பாடுகளும் மலிந்துள்ளன என்று நாம் கூறி வருகிறோம். இந்நிலையில் முதலில் பைபிளின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்காமல் பைபிளை அடிப்படையாகக் கொண்டு குர்ஆன் கூறும் தகவலை உரசிப் பார்த்தல் என்ற அடிப்படையே தவறாகும்.

2. குர்ஆனில் ஜாண் என்றோ யோவான் என்றோ யோஹனான் என்றோ ஒரு பெயர் இல்லை, யஹ்யா என்பதும் யோவான் (அல்லது ஜாண் அல்லது யோஹனான்) என்பதும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களைக் கொண்ட இரண்டு பெயர்கள் என்று ஒரே வரியில் உள்ள மறுப்பே இதற்குப் போதுமானது. இருப்பினும் இவர்களில் சிலரையேனும் சிந்திக்க வைக்கக் கூடும் என்பதால் இது பற்றிய ஒரு விசாலமான ஆய்வு இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது குர்ஆனில் உள்ள யஹ்யா என்ற பெயரும் பைபிளில் உள்ள யோவான் என்ற பெயரும் ஒன்றுதானா? என்பதைப் பற்றியாகும்.

மேற்கண்ட வசனத்திற்கு சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் யஹ்யா என்ற இடத்தில் ஜாண் என்று நோரடியாகவும் சிலர் அடைப்புக் குறிக்குள்ளும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை கிறித்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியிருக்கலாம். தமிழ் தர்ஜமாக்களில் எங்கேனும் யோவான் என்று உள்ளதா என்று துளாவியவர்களுக்கு கிடைத்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் யஹ்யா என்றே உள்ளது. மேலும் ஜலாலைன் தஃப்ஸீர் என்று இவர்கள் மேற்கோள் காட்டியதின் அரபிப் பதிப்பில் யோவான் என்ற பதமே இல்லை. மாறாக யஹ்யா என்றே உள்ளது.




எது எவ்வாறாயினும் குர்ஆனில் சில மொழி பெயர்ப்பாளர்கள் ஜாண் என்று குறிப்பிட்ட பெயரும் குர்ஆனில் காணப்படும் யஹ்யா என்ற பெயரும் முற்றிலும் வேறுபட்ட பொருள் உடைய இரண்டு பெயர்களாகும்.

யஹ்யா - யோவான் இரண்டும் ஒன்றா?
குர்ஆனில் இதற்கு முன்பு இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது யஹ்யா என்ற பெயராகும். யஹ்யா என்பதும் யோவான் என்பதும் ஒரே பதம் என்று தவறாகக் கருதிய சில மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் மொழி பெயர்ப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் யோவான் என்ற பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்பதாக இருந்தால் அரபு மொழியில் உள்ள பைபிளிலும் இதே பெயர் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். (இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற பதமே அரபி பைபிளில் உள்ளது என்பதை முன்பு விளக்கியிருந்தோம்). அரபி பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:

(எஸ்றா 8:12)

(யோவான் 1:6)

மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள யஹ்யாவும் பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ள யோவானும் ஒன்றல்ல என்பதை விளங்ககிக் கொண்டோம்.

யோவான் (யோஹனான்) என்பது ஹீப்ரு வார்த்தை. யஹ்யா என்பது அரபிப் பதம். யோவான் என்ற ஹீப்ரு பதம். யோவான் என்ற ஹீப்ரு பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்றிருப்பின் இரண்டினதும் பொருள் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? யோவான் (யோஹனான்) என்ற ஹீப்ரு பதத்தின் பொருள் யெஹோவாவின் கிருபை அல்லது யெஹோவாவின் இரக்கம் என்பதாகும். அதாவது இரண்டு வார்த்தைகளை உடைய ஒரு வாக்கியம். யூ + ஹனான் = யூஹனான். யூ என்பது யெஹோவாவையும் ஹனான் என்பது கிருபையையும் குறிக்கும். ஹன்னான் என்ற ஹீப்ரு பதம் இரக்கம், கிருபை என்ற பொருளை ஹனான் என்ற அரமாயிக் மூலத்திலிருந்து உருவான பதமாகும்.

யஹ்யா என்ற அரபிப் பதம் ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவானதாகும். இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. முதலாவது அல்-ஹயாத் என்ற பதத்திலிருந்து உருவான 'ஜீவன்' அல்லது 'உயிர்' என்ற பொருளுடையது. இரண்டாவது அல்-ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவான 'வெட்கம்', 'நாணம்' என்ற பொருளைக் கொண்டதாகும்.

யஹ்யா என்ற பெயரும் யோவான் என்ற பெயரும் முற்றிலும் மாறுபட்ட பெயர்கள் ஆகும் என்பதை விளக்கினோம். மிஷினரிகளின் விமர்சனம் அடிப்படையற்றது என்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாகும்.

3. குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்தும் இன்னும் சில சான்றுகள்
நாங்கள் யோவான் ஸ்நானனைப் பின்பற்றுபவர்கள் என்றும் அவர் இறுதி இறைதூதர் என்றும் நம்பக்கூடிய ஒரு மதப் பிரிவினர் ஈராக் மற்றும் ஈரானில் இன்றும் காணப்படுகின்றனர். போர்ச்சுகீஸ் கிறித்தவ மிஷினரிகள் இவர்களை யேவானுடைய கிறிஸ்தவர்கள் (Christians of John the Baptist) என்று அழைக்கின்றனர். ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் இவர்கள் ஞானஸ்நானம் செய்வதை தங்களின் முக்கிய மதச் சடங்காகக் கடைபிடித்து வருகின்றனர். தங்கள் மதத்தைக் குறித்து மந்தாய் என்றும் தங்களை மந்தாயியர்கள் என்றும் இவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமில் உள்ளது போன்று பிரார்த்தனை, நோன்பு, தர்மம் செய்தல் போன்ற சில மதச் சடங்குகளை இவர்களும் கடைபிடித்து வருகின்றனர். அரமேய மொழியுடன் தொடர்புடைய ஸெமிட்டிக் வழக்கைக் கொண்ட மந்தாயி என்னும் மொழியில் (Mandiac language ) இவர்களின் மத கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. கின்ஸா ராபா, த்ராஷா இத் யஹ்யா, ஆதாம் போஹ்ரா, தி கிலெஸ்தா, நியானி முதலானவையே இவர்களுடைய மத புத்தகங்களாகும் (Ref: http://www.mandaeans.org/aboutthemandaeans.htm)

தாங்கள் இறைதூதராகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்ட யோவான் ஸ்நானனைக் குறித்து இவர்கள் கூறுவது யஹ்யா யூஹனான் என்பதாகும். இவர்களின் ஒரு மதநூலின் பெயரே த்ராஷா இத் யஹ்யா என்பதைக் கவனிக்க. (Drasha id Yahia: It includes the teachings and wise sayings of the prophet Yehia bin Zekaria.) யஹ்யாவின் புத்தகம் என்பது இதன் பொருளாகும். இவர்களுடைய முக்கிய மத நூலாகிய கின்ஸா ராபாவில் (Ginza Raba) 410 வது அத்தியாயத்தின் தலைப்பு யஹ்யாவின் பிரார்த்தனைகள் என்பதாகும். இவற்றின் மூலம் ஜகரிய்யாவின் புதல்வருக்கு யஹ்யா மற்றும் யோஹனான் ஆகிய இரண்டு பெயர்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

மந்தாயி மக்களைப் பற்றியும் அவர்களின் மதச் சடங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராகிய இ.எஸ் ட்ரோவர். இவரும் மார்க்குச் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு அகராதி (E.S. Drowoer & R. Marcuch: A MANDAIC DICTIONARY 1963 OXFORD) மந்தாயியர்களின் மத அடிப்படைகளையும் சடங்குகளையும் உள்ளடக்கியதாகும். இப்புத்தகத்தின் 185 மற்றும் 190 ஆம் பக்கங்களில் முறையே யஹ்யா மற்றும் யூஹனான் ஆகிய இரு பெயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அவற்றைக் காண்க.





இத்தகைய ஆதாரங்களிலிருது நமக்குச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதாவது ஒவ்வொரு மந்தாயியர்களுக்கும் மல்வாஷா பெயர் என்றும் லகப் என்றும் இரண்டு பெயர்கள் வழங்கப் படுகின்றன. எதற்காக இவ்விரு பெயர்கள்? இ.எஸ் ட்ரோவர் எழுதுகிறார்: இரண்டாவது பெயர் பொதுவாக வழங்கப்படும் முஹம்மதிய பெயராகும். இவையே வழக்கமாக உபயோகிக்கப் படுகிறது. முதலாவது பெயர் அவருடைய உண்மையான ஆன்மீகப் பெயராகும். மதம் மற்றும் சடங்குகள் சம்மந்தப் பட்ட காரியங்களில் இப்பெயர் வழங்கப்படும். (E.S. Drower. The Mandaeans of Iraq and Iran (1962-Lieden) Page 81)

யோவான் ஸ்நானனுடைய மால்வாஷா நாமம் (இயற்பெயர்) யஹ்யா என்பதும் அவருடைய லகப் (சிறப்புப்) பெயர் என்றும் இந்தக் குறிப்புகள் கூறுகின்றன. மக்கள் பொதுவாக அவரை யோஹன்னான் என்று அழைத்தார்கள். ஆனால் அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் யஹ்யா என்பதாகும். மத சம்மந்தமான விஷயங்களில் இப் பெயரே புழங்கப் பட்டுள்ளது. யஹ்யாவின் புத்தகங்களில் பெரும்பாலும் இப்பெயரைக் கொண்டே துவங்குகிறது. ஆக யஹ்யா என்பது அவருடைய உண்மைப் பெயராகவும் அதே சமயம் மக்கள் அவரை யோஹன்னான் என்று அழைத்து வந்தனர் என்பதும் புலனாகிறது.

இதற்கு முன் இப்பெயர் வழங்கப்படவில்லை என்ற குர்ஆனின் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற பெயர் குறித்தாகும். அவரது சிறப்புப் பெயராகிய யூஹனான் என்ற பெயர் குறித்து அல்ல. யஹ்யா என்பது இறை கட்டளைப்படி அவரது தாய் தந்தையர்கள் அவருக்கு வழங்கிய பெயராகும். மேலும் அது அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் என்ற மந்தாயி மக்களின் மத நூல்களில் காணப்படும் குறிப்புகள் குர்ஆன் இறை வாக்கு என்பதை இன்னும் உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்ற வாதத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படாத யோஹன்னான் ஸ்நானனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற நாமம் குர்ஆனில் கூறப்படுள்ளது அது இறைவாக்கு என்பதற்கான ஆதாரம் என்பது மிகப்பெரிய உண்மையாகும். ஆக மிஷினரிகள் குர்ஆனில் சரித்திர தவறு உள்ளது என்பதற்கு கண்டு பிடித்த ஆதாரம் குர்ஆன் இறைவாக்கு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

4. பைபிளில் ஏன் யோவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது?
பைபிளில் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்த சுவிசேஷங்கள் அவருக்குப் பின்னர் அறுபதோ எழுபதே ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை ஆகும். மேலே குறிப்பிட்டதைப் போல் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்து அன்றைய மக்கள் வழங்கிய பெயராகிய யோவான் என்பதைக் குறித்த சுவிஷேச எழுத்தர்கள் அவருடைய உண்மைப் பெயராகிய யஹ்யா என்பதை அறியாமல் இருந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கேள்விப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சுவிசேஷங்களில் யோவான் என்ற அவரது குறிப்புப் பெயர் இயல்பாகவே இடம் பெற்றுவிட்டது.

5. யோஹன்னான் என்ற பதம் குறித்துக் குர்ஆன் என்ன கூறுகிறது?
யூ + ஹன்னான் ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஹீப்ரூ பத மே யூஹன்னான் என்பதையும் கிருபை அல்லது இரக்கம் என்பதே இதன் பொருள் என்பதையும் முன்னர் விளக்கினோம். அரபி, ஹீப்ரு மற்றும் அரமாய மொழி ஆகிய மூன்றும் ஒரே வகையான செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவை. இரக்கம் அல்லது கிருபை என்ற பொருளைத் தரக்கூடிய அரபிப் பதம் ஹனான் என்பதாகும். அற்புதம்! திருக்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் 13 ஆம் வசனத்தைக் காண்க.



மேற்கண்ட வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

'அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்' (19:13)

நம்மிடமிருந்து இரக்கசிந்தனை என்ற வாக்கியத்தின் மூல மொழியில் வ ஹனானன் மின் லதுன்னா என்று உள்ளது.

யூ ஹனானன் என்ற இரண்டு வார்த்தைகளில் உள்ள ஹனான் என்ற பதம். ஆக யூ ஹனான் என்ற பதத்திற்கு என்ன பொருளோ அதே பொருளைக் கொண்ட ஒரு பெயர் குர்ஆனில் யஹ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை அவருக்கு இப்படி ஒரு சிறப்புப் பெயர் இருந்ததைக் காட்டுகிறது.

முடிவுரை:

குர்ஆன் இதற்கு முன்னர் அப்பெயர் வழங்கப்படவில்லை என்று வழங்கியது யஹ்யா என்ற பெயராகும். யோவான் அல்லது யோஹன்னான் என்ற பெயர் அவரது சிறப்புப் பெயராகும். பைபிள் எழுதிய எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் எந்தப் பெயரால் பிரபலமடைந்தாரோ அந்த பெயரை எடுத்துக் கொண்டு அவரது இயற்பெயரை விட்டு விட்டனர். காரணம் அது குறித்து அவர்கள் அறியவில்லை. குர்ஆன் இறை கட்டளையால் அவரது தாய் தந்தையர் அவருக்கு வழங்கிய பெயரைக் கூறுகிறது. பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன.


.
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Monday, August 04, 2008

சேதுக்கால்வாய் சர்ச்சை: பாலத்தை ராமர் கட்டினாரா? இடித்தாரா?





சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட பாஜக, அதிமுக முதலான கட்சிகள் ராமர் பாலம் கடலுக்குள் இருப்பதால், அதை இடிக்கக் கூடாது என கூக்குரலிடுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூச்சலிடக் காரணம், குரங்குகள் உதவியோடு, அணிலின் ஒத்துழைப்போடு, 'கடத்திச் செல்லப்பட்டத் தனது மனைவி சீதையை' மீட்க, ராமன் கடல் மீது பாலம் போட்ட தாக ராமாயணக் கதையில் வருகிறது.

சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறி னால் அந்தப் பாலத்திற்கு பாதிப்பு வரும்? ஆகவே சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

வெளிநாட்டுக்காரர்கள் இந்த கதை களையும் காரணங்களையும் கேட்டால், வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, மக்கள் பணம் 2,500 கோடியை இத்திட்டத்திற்காக கடலில் போட்டுள்ளது மத்திய அரசு.

அது முதலில் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ''ராமாயணம் என்பது நடந்த ஒரு வரலாறு அல்ல. கற்பனைக் கதை'' என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.

ராமரை முதலீடாக வைத்துக் கட்சி நடத்தி வரும் பாஜக சும்மா விடுமா? நாட்டை ரணகளமாக்க போவதாக மிரட்டி, மத்திய அரசை, பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வைத்தது.

மறுபடி, இப்போது ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு, சேதுக்கால்வாய் தொடர்பாக தாக்கல் செய்துள்ளது. அதில் கம்பராமாயணப்படி, ராமர் கட்டிய பாலத்தை ராமரே இடித்து விட்டதாகவும், இப்போது அங்கே பாலம் ஏதும் இல்லையென்றும் கூறியுள்ளது.

உடனே, ஆன்மீக தமிழறிஞர்கள் சில பேர் இது தவறான வாதம். ராமர், பாலத்தை இடிக்கவில்லை, மத்திய அரசு குறிப்பிடும் கருத்து ''மிகைப் பாடல்கள்'' என்ற பகுதியில் தான் உள்ளன. அவை ஆதாரப் பூர்வமான (ஸஹீஹான) செய்தி (?) இல்லை என்று கூறியுள்ளனர். அவர் களின் கருத்தை ஆங்கில ஏடுகள் சில பெரிதுபடுத்திக்காட்டின.

சேதுக்கால்வாய் திட்ட எதிர்ப்பாளர் களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ் பவரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளரும் மிகச் சிறந்த தமிழ் மேதையுமான சுபவீயிடம் நாம் இது பற்றிக்கேட்டோம். அவர் கூறியதாவது.

'கம்பராமாயணம், யுத்த காண்டம், மீட்சிப் படலத்தின் 117வது பாடலில், ராமன், 'படகுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், தான் கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை கீறி, அதாவது உடைத்து, படகுப் போக்குவரத்துக்கு உதவிய செய்தி இடம் பெறுகிறது.

ராமர்பாலம் ஒன்று இருக்கிறது என நாம் வாதத்துக்காக வைத்துக் கொண்டா லும், படகுப் போக்குவரத்துக்காக, ராமர் கொஞ்சம் இடித்தது போல, கப்பல் போக்குவரத்துக்காக இன்னும் கொஞ்சம் இடித்தால் என்ன தவறு? இது ராமன் தொடங்கி வைத்த செயல்தானே?

கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளுக்கெதிராக பாலத்தை இடிக்கக் கூடாது? என ஜெயலலிதா கொந்தளிக்கிறார்.

அவருக்கு ஏன் இந்த கொதிப்பு? அவர் தன்னை சரியாக அடையாளம் காட்டுகிறார்.

வைகை நீர்த்தேக்கம் கட்டும் போது, நூற்றுக்கணக்கான சிறு தெய்வக் கோவில் கள், மதுரை வீரன், சுடலை மாடன், மாரியாத்தா கோவில்கள் இடிபட்டனவே, அப்போது இவர்கள் கூக்குரலிட்டார்களா?

அவை இந்துக் கோவில்கள் இல்லையா? சாதாரணத் தமிழ் மக்கள் வழிபடும் கோவில்களுக்கு அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள். ராமன் அவாள்களின் தெய்வம். ஆகவே, கோடிக்கணக்கான இந்துக்கள் என்று கூட்டம் சேர்ப்பார்கள்'. என்று தனக்கே உரிய பாணியில் நெத்தியடி பதில் கூறினார் சுபவீ.

பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்றவற்றிற்காகக் கடலை ஆழப்படுத் தும் போது, அங்கும் மணற்திட்டுகள் இருந்தன. அங்கும் ராமர்தான் போய் பாலம் கட்டினாரா என்று அறிவார்ந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ராமர் பாலத்தை இடிக்க முயன்றால் அதை அதிமுக சகிக்காது, எல்லா வகையிலும் (?) அதை எதிர்க்கும் என்று முழங்குகிறார். ஆரிய நாரிமணி ஜெயலலிதா அம்மையார்.

அண்ணா திமுக என்பது அண்ணா வின் கனவுத் திட்டம் சேதுக்கால்வாய் திட்டம், அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டு அண்ணாவின் திட்டத்தை எதிர்ப்பது துரோகமில்லையா?

ராமாயணம் பற்றி அண்ணாவின் கருத்து என்ன? ஜெயலலிதாவிற்கு விளக்கம் தேவையானால் அண்ணா எழுதிய 'கம்பரசம்' என்ற புத்தகத்தை அவர் படிக்கட்டும்.

அண்ணாவின் கொள்கைகளை அடியோடு எதிர்ப்பவர் தனது கட்சிப் பெயரை இனியும் அண்ணா திமுக என்று வைக்காமல் அத்வானி திமுக என்று மாற்றிக் கொள்ளட்டும்.

ராமர் பாலத்தை ராமரே இடித்து விட்டார் என்று கம்ப ராமாயணத்தில் இருப்பதால், அதை ஓர் உண்மை வரலாறு போல, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருப்பது, மடமைக்கு மகுடம் சூட்டுவது போன்றது.

கம்ப ராமாயணம் ஒரு கட்டுக்கதை ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் நாட்டில் உள்ளன. ஒரு ராமாயணத்தில் ராமனுக்கு சீதை சகோதரி.

வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையின் கூந்தலை பிடித்திழுத்து மடியில் அமர்த்திக் கடத்திச் சென்றதாக உள்ளது. கம்பராமாயணத்தில் வீட்டோடு நிலத்தைப் பெயர்த்து சீதையைக் கடத்திச் சென்றதாக உள்ளது.

ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று ராஜாஜி போன்றவர்களே அடித்துச் சொல்லியுள்ளனர்.

இந்தப் புராண புளுகுகளை அரசின் பிரமாணத்தில் ஆதாரம் காட்டுவது அபத்தமானது.

மாற்றுப் பாதையைப் பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியிருப்பதும் கடமை தவறும் மடமைச் செயலே.

சேதுக்கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் இந்நாட்டு மக்களுக்கு இந்த அரசு செய்த துரோகமாகவே அது அமையும்.