அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label காணிக்கை. Show all posts
Showing posts with label காணிக்கை. Show all posts

Friday, June 27, 2008

கடவுளுக்கு மனிதர்களின் காணிக்கைகள் தேவையா?

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!.
(பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்
.
(பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும்
.
(பாகம் -3) செல்ல இங்கே அழுத்தவும்
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -4)
.
கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
.

பொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று.

கடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகின்றது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் படைக்கப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றாரா? என்றால் அதுவுமில்லை. கடவுளுக்கென்று படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். அதுவும் ஒரு உயர்ந்த ஜாதிசை; சேர்ந்த சில புரோகித கும்பல் மட்டும் தான் அதை உண்ணுகின்றது. இப்படிப்பட்ட தேவையுள்ள கடiவுளை 'மறுத்துத் தான் ஆக வேண்டும்' என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பல பூஜை பொருள்களை கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்?

அதனால் தான் கடவுள் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகின்றது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன். அதற்காக 1000 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப்போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை - நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர, படைப்புகளிடம் அதையும் எதிர்பார்பவனாக இருக்ககக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் - தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும் - தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன் - மிக்க பொறுமையாளன். (அல்குர்ஆன் - 2:263 )


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 2:267 )

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு உபதேசம் செய்தோம். நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் - 6:133 )

உழைப்பவர் தமக்காவவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். (அல்குர்ஆன் - 26:6 )

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ தேவையற்றவன். (திருக்குர்ஆன் 35:15 )
.
தொடரும்... இறைவன் நாடினால்
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.