அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, June 23, 2008

கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை!

.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -3)
.
.கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை

கடவுளுக்கு உறவுமுறைகள் அதாவது கடவுளுக்கு அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்றெல்லாம் உறவுகள் இருக்கக் கூடாது. ஓரிறைதான் உண்டு என்ற கொள்கையில் அதற்கு இடமே கிடையாது. இதை இஸ்லாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றது. திருமறைக் குர்ஆனில்

'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றன். யாரையும் அவன்; பெறவுமில்லை. அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-4)

நீங்கள் யாரைக் கடவுள் என்று நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே ஏற்படுகிறது. முரண்பாடு என்னவென்றால், நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே கொஞ்ச காலத்திற்கு முன் இல்லாமல் இருந்திருக்கிறார். யாருக்கோ பிறந்தவன் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.

கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குதகுதி பெற்றவர்களே தவிர, இல்லாதவனாக இருந்து பிறகு உருவாகி, அதாவது மனிதர்களின் உடற்சேர்கையினால் பிறந்தவர் எப்படி கடவுளாக முடியும்? எனவே தான் திருமறைக் குர்ஆன் உங்களைப் படைத்த, நீங்கள் வணங்கக்கூடிய ஒரு கடவுளான அல்லாஹ்வுக்கு சந்ததி கிடையாது. அவனுக்கு தாய் தகப்பனும் கிடையாது என்று கூறுகின்றது.

சந்ததியும் கடவுளுக்கு இருக்க முடியாது என்பதை ஆராய்வோம். சந்ததி யாருக்கு தேவைப்படும் என்பதை சிந்திப்போமானால் அழிந்து போகக் கூடிய ஒருவனுக்குதான் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அழிவு இருப்பதன் காரணத்தினாலேயே நாம் சந்ததிகளை விரும்புகிறோம்.

நாம் அழிந்து விடுவோம். நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும். நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினால்-வயதான காலத்தில நம்மை கண்காணித்து பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் -தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.

இவனுக்கு அழிவு இல்லை. முதுமை இல்லை, என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்ற வாரம் ஒருவன் வாங்கி வந்திருப்பானேயானால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான்? அவன் எப்போதும் சந்தோஷமாக, ஜாலியாக உலகத்தை அனுபவித்து கொண்டு இருப்பான், மனிதனுக்கு சந்ததி இருப்பதன் காரணத்தால் கடவுளுக்கும் சந்ததி வேண்டும் என்று சொல்லக் கூடாது.

ஏனெனில் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்கு பலவீனம் இல்லை, கடவுளுக்கு சோர்வு இல்லை, இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காக சந்ததியை தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் நாம் சிந்திப்போமேயானால் திருக்குர்ஆன் மூலம் இன்னும் ஆதாரங்களைப் பெறலாம். குர்ஆனில் ஒரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

'அவனுக்கு மனைவியும் கிடையாது'

மனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். இறைவன் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்து பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
(திருக்குர்ஆன் 72:3)

அல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்பதன் மூலம் சந்ததியின்மையைப் பறை சாற்றுகிறான். மேலும் மனைவி இருப்பது வேறொரு வனையிலும் கடவுளுக்கு பலவீனமாகும்.

கடவுளுக்கு ஒரு ஆசை வந்து, அவருக்கு உணர்ச்சி மெலீட்டு, அவர் மனைவியோடு சம்போகம் செய்வாரேயானால் அந்த நேரத்தில் அவனுடைய படைபுகளில் யாராவது, 'கடவுளே' என்று கூப்பிட்டால் என்ன ஆகும்? அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவா எப்படிக் கொடுப்பார். மேலும், கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானால் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்கானிப்பது யார்? ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு எந்த நேரத்தில் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே! என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாப்பு தேடப்போக அவன் 'போடா வெளியே' என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.

மனைவியுடன் இன்பம் அனுபவித்துக்கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக்கொள்ள முடியாது என்று சிலர் இதற்குச் சமாதானம கூறுவார்கள்.

இந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.

தனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்?

ஆதனால் தான் இஸ்லாம் கூறுகிறது. கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள், என்று கூறுகிறது. அவனுக்கு சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று கூறுகிறது. ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.

இறைவனுக்கு சோர்வும் உறக்கமும் இல்லை

இன்னொரு இடத்தில் திருக்குர்ஆன் கடவுளுக்குரிய தகுதியாக மற்றொன்றையும் கூறுகிறது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும் அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன் 2:255)

வானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை. (திருக்குர்ஆன் 50:38)

தூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. அவன் தூங்கிக் கொண்டு இருந்தானேயானால் அந்த நேரத்தில் உலகின் ஜீவராசிகள் நிலை என்னவாகிறது? இந்த சூரியன், சந்திரன், பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது. அவனுடைய படைப்பினங்களில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு அந்த நேரத்தில் தேவை ஏற்படும். கடவுள் தூங்கக்கூடிய நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார்? அவனுக்கு பிரதிநிதி யாராவது உண்டா? துணைக்கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்து கொள்ள முடியுமா?

அதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்பக்கூடிய அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் அவனுக்கு அசதி இல்லை என்றும் அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும், அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது.

ஆக, இந்த அடிப்படையில் வைத்துக் பார்போமேயானால் ஏனைய மார்க்கங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையான கொள்கைகளிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மார்க்கமும் கடவுளைச் சொல்லவே இல்லை.

கடவுளை வைத்துத்தான் மதங்கள் உருவானது. கடவுளைச் சொல்லவில்லையெனில் அது மதம் கிடையாது. மார்க்கம் கிடையாது. எனவே கடவுளைப் பற்றிக் கூறக்கூடிய எந்த மார்க்கங்களை எடுத்துப் பார்த்தாலும் அவர்களுடைய கடவுளிடம் ஏதாவது ஒரு பலவீனத்தைத்தான் வைத்திருக்கிறார்கள்.

கடவுளுக்குச் சோர்வு, அசதி, மனைவி, சந்ததி இப்படியெல்லாம் சொல்லக்கூய எல்லா சித்தாந்தங்களையும் இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. 'எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேய இருந்து கொண்டு இருக்கிறான்' என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

இறைவன் என்று சொல்பவன் ஒரு வினாடி நேரம் கூட 'கொங்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வோம்' என்றும் 'ரொம்ப டயர்டா இருக்கு, ஓய்வாக இருப்போமே' என்றும் இருக்கக்கூடாது.

எல்லாநேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

கடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக்கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்?

இவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.
லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.
.
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

2 comments:

Anonymous said...

JESUS Loves You.

Anonymous said...

பைபிள் சொல்கிறது:

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். - 1 தெசலோனிக்கேயர் 5:21