அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, December 21, 2012

இயேசு பிறந்த ஆண்டு எது?


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4

பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம் விளக்கியிருந்தோம். அதை பார்க்க:






இயேசு பிறந்தபோது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளைப் போலவே, இயேசு எந்த ஆண்டில் பிறந்தார் என்பதிலும் சுவிஷேசங்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றது.

அவர் எப்போது பிறந்தார் என்பதை மத்தேயு பின்வருமாறு பதிவு செய்கின்றார்:

(Herod the Great) ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது,... - மத்தேயு 2:1

ஏரோது ராஜாவின் ஆட்சிகாலத்தில் தான் இயேசு பிறந்ததாக மத்தேயு இந்த வசனத்தின் மூலம் குறிப்பிடுகின்றார். இயேசு பிறக்கும் சமயத்தில், இந்த ஏரோது ஆட்சியில் இருந்த காரணத்தினால்தான், இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக அவரது தாயும் அவருக்கு புருஷனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தாகவும் - அதற்கு ஆதாரமாக பல்வேறு சம்பவங்களையும் மத்தேயு தனது சுவிஷேசத்தில் குறிப்பிடுகின்றார்.

இந்த ஏரோது வாழ்ந்த காலகட்டம் எது? என்பதை  Encyclopedia Wikipedia பின்வருமாறு தெரிவிக்கின்றது:

‘Herod also known as Herod the Great (born 73 or 74 BCE, died 4 BCE in Jericho[1]), was a Roman client king of Judea


அதாவது, ஏரோது ராஜா கி.மு 73 அல்லது 74ம் ஆண்டில் பிறந்ததாகவும், அவர் மரணமடைந்தது கி.பி 4ம் ஆண்டில் என்று குறிப்பிடுகின்றது. அதாவது அவர் மொத்தம் 70 வயது வரை வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றது. அதுபோல் அவரது ஆட்சிக்காலம் கி.மு 37 முதல் கி.பி. 4ம் ஆண்டுவரை, அதாவது அவர் மரணமடையும் வரை ஆட்சி செய்ததாகவும் அதே விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கின்றது.  


மத்தேயு சுவிஷேசத்தின்படி பார்த்தால், இயேசு கண்டிப்பாக கி.பி 4ம் ஆண்டுக்கு முன், அதாவது ஏரோது மரணமடையும் முன்பே பிறந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஆனால் லூக்காவே இதற்கு நேர்முரணாக தனது சுவிஷேசத்தில் இயேசுவின் பிறந்த ஆண்டை வேறு விதமாக பதிவு செய்கின்றார்:


அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு (Cyrenius or Quirinius) என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. – லூக்கா – 2:1-2

அதாவது அவர் பிறக்கும் போது, மக்கள் தொகை கணக்கெடுக்கும் படி
Caesar Augustus - அகஸ்துராயனால் கட்டளை பிறந்தததாகவும், அப்போது சீரியா (Syria) நாட்டில் சிரேனியு என்கிற கிரேனியு (Cyrenius or Quirinius) என்பவன் Governor - தேசாதிபதாயாக இருந்ததாகவும், அந்த சமயமே, முதலாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொண்டுவரப்பட்டதாகவும் லூக்கா பதிவு செய்கின்றார்.

இதன் மூலம், இயேசு பிறக்கும் பொழுது Caesar Augustus – அகஸ்துராயன் ஆட்சிசெய்தான், அப்போது Syria - சீரியா நாட்டிற்கு சிரோனியு (Cyrenius or Quirinius) என்பவன்  Governor – தேசாதிபதியாக இருந்தான் என்று லூக்கா குறிப்பிடுகின்றார். இந்த சிரோனியு தேசாதிபதியாக பதவியேற்றது எப்போது? அதை Encyclopedia Wikipedia பின்வருமாறு குறிப்பிடுகின்றது: 

Publius Sulpicius Quirinius (Greek Κυρήνιος - Kyrenios or Cyrenius, c. 51 BC – AD 21) was a Roman aristocrat. After the banishment of the ethnarch Herod Archelaus from the tetrarchy of Judea in AD 6, Quirinius was appointed legate governor of Syria, to which the province of Iudaea had been added for the purpose of a census.[1]


அதாவது, இந்த சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொறுப்பேற்றது கி.பி 6ம் ஆண்டு என்கிறது விக்கிபிடியா கலைக்களஞ்சியம்.

மேற்கூறப்பட்ட வரலாற்று ஆதாரங்களின் படி, சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொருப்பேற்றது, ஏரோது ராஜா மரணித்து சில ஆண்டுகள் கழித்து தான் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது ஏரோது ராஜா மரணமடைந்தது கி.பி.4ம் ஆண்டு, ஆனால், சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொருப்பேற்றதோ கி.பி 6 ம் ஆண்டு. இப்படி இருக்கும் பொழுது ஏரோதுவின் காலத்திலும், சிரேனியுவின் காலத்திலும் இயேசு எப்படி ஒருசேர பிறந்திருக்க முடியம்?

ஒன்று, மத்தேயுவின் கூற்றுப்படி இயேசு பிறந்தது ஏரோதுவின் ஆட்சிக் காலத்தில் என்றால், சிரோனியு தேசாதிபதியாக இருந்திருக்க முடியாது?  ஏனெனில், சிரோனியு தேசாதிபதியாக வரும் முன்பே ஏரோது இறந்துவிட்டதாக வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இல்லை, கிரேனியுவின் ஆட்சிக்காலத்தில்தான் இயேசு பிறந்தார் என்றால், ஏரோதுவின் கொடுமைகளை இயேசுவின் பெற்றோர் சந்தித்திருக்க முடியாது. ஏனெனில், சிரோனியு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏரோது மரணித்து விட்டானே! பிறகு எப்படி அவன் இயேசுவின் பெற்றோரை கொடுமை செய்திருப்பான்? சிந்திக்க வேண்டாமா?

மத்தேயு தனது சுவிஷேசத்தில் இயேசு பிறக்கும் சமயம், ஏரோது ஆட்சியில் இருந்ததன் காரணத்தால், இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக அவரது தாயாரும், அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்ததாகவும், அதற்கு பயந்து பல ஊர்களில் மறைந்தும் ஒளிந்தும் வாழ்ந்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் ஏரோது ராஜா குழந்தை இயேசுவை கொலைசெய்யத் தேடியது தான் என்றும் கூறுகின்றார். அதற்காக பல்வேறு வகையான முன்னறிவிப்புகளையும்(?) கோடிட்டு காட்டுகின்றார். ஆனால் லூக்காவே, "ச்.சச்.. சே.. அப்படியெல்லாம் நடக்கவே இல்லை! சும்மா கதை விடக்கூடாது. இயேசு பிறந்ததோ ஏரோது ராஜா மரணித்து சில ஆண்டுகள் கழித்து, சிரோனியு சிரியாவில் தேசாதிபதியாக பெருப்பேற்றப் பிறகுதான். அப்படி இருக்கும் பொழுது, ஏரோது எப்படி குழந்தை இயேசுவை கொலைசெய்ய தேடியிருப்பார்? சும்மா சிறுபிள்ளைத் தனமாக வரலாற்றை மாற்றாதீர்கள்" என்கிறார்.

இதில் எது சரி கிறிஸ்தவர்களே!

பைபிள் உன்மையிலேயே கர்த்தருடைய வேதமாக இருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்குமா? கர்த்தருடைய குமாரன்(?) எப்பொழுது பிறந்தார் என்பதில் கர்த்தருக்கே குழப்பமா?  சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

இயேசுவின் பிறந்த ஆண்டிலே இவ்வளவு முரண்பாடுகள் என்றால், அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் டிசம்பர் 25 எம்மாத்திரம்! அதையும் அடுத்த கட்டுரையில் இனஷா அல்லாஹ் அலசிவிடுவோம்.

நீங்கள் உன்மையான கிறிஸ்துவின் வரலாற்றை அறிய வேண்டுமானால் உடனே படிக்கவேண்டியது இறுதித் திருமறையான திருக்குர்ஆனைத் தான்.

திருக்குர்ஆனை திறந்த மனதுடன் படியுங்கள். சத்தியத்தை அறியுங்கள்! சத்தியம் உங்ளை விடுதலையாக்கும்!


3 comments:

DON said...

NINGAL SOLVATHU SARI THAN BUT UNGAL MATHATHAI ITHIL SOLLA KUDATHU

UNGALUKU UNGAL MATHAM PERITHU AVARKALUKU AVARGAL MATHAM PERUSU
UNGAISTAM POLA PESA KUDATHU

DON said...

NINGAL SOLVATHU SARI THAN BUT UNGAL MATHATHAI ITHIL SOLLA KUDATHU

UNGALUKU UNGAL MATHAM PERITHU AVARKALUKU AVARGAL MATHAM PERUSU
UNGAISTAM POLA PESA KUDATHU

Unknown said...

Kuraiyai mattume koorungal Mr. .......