அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, March 24, 2009

பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?

(தற்போது சில கிறிஸ்தவ தளங்களில் பைபிளில் தடைசெய்யப்பட்ட இயேசுவால் தடுக்கப்பட்ட - அதே சமயம் பவுலால் அனுமதிக்கப்பட்ட பண்றியின் மாமிசத்தை (PORK) உண்ணலாம் என்று போலி உமரால் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அந்த கட்டுரையில் உள்ள மடத்தனமான - முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதிலாக அவர்களாலேயே எதிர் கேள்விகள் எழுப்பப்பட்டு பதிவுகள் இடப்பட்டுள்ளது. (புகழனைத்தும் இறைவனுக்கே)

பண்றியின் மாமிசத்தை உண்ணுவது என்பது இயேசுவின் கொள்கைக்கும் பழைய ஏற்பாட்டுக் கொள்கைக்கும் எதிரான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. (பார்க்க லேவியராகமம் 11:7- 8, மத்தேயு - 5:17-19) இவற்றுக்கொல்லாம் மாற்றமாக இன்றைய கிறிஸ்தவத்தின் நிறுவனரான பவுலால் அனுமதிக்கப்பட்ட இந்த பண்றியின் மாமிசத்தை உண்பது கூடும் என்று நியாயப்படுத்தும் உமரின் கட்டுரைக்கு கிறிஸ்தவர்களாலேயே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு - எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றது என்பதைப் பார்க்கும் போது போலி உமரின் போலித்தனங்களை முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் உணரத் தொடங்கி விட்டனர் என்பது புலனாகின்றது.

எது எப்படி இருந்தாலும், இந்த பண்றியின் மாமிசத்தை இஸ்லாம் தடை செய்தது ஏன்? என்பது குறித்து சகோதரர் ஜாகிர் நாயக் கொடுத்த விளக்கத்தை இங்கே தருகின்றோம் -ஏகத்துவம்)


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
பதில்: இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

15 comments:

Anonymous said...

The western christian community may leave reading or following bible but they will never leave eating pork. because they are addicted.

mist

Anonymous said...

Hellow Brother, what you are thinking, R christians following Jesus, no they are following Paul. This haaram things (Pig), I have already discussed with one Penthocos christian, while I am asking him, he is talking one subject to another subject. Then I understood, these peoples are like a circus animals, they can not think their own, what ring master(Paster/Missinarry) teaching that only they are following.
Dear Christian Brothers and Sisters, pleae ready your Bible and Quaran. Compare both. You may understand, what is holy ? Don't believe or see any Christian pastar or Muslim Precher(Aalim). You follow what quaran is saying and teaching of Jesus and Mohamed (Peace be upon them). You ask your paster/missinery, who will come next after jesus, as per Bible John Chapter 14,15 and 16 ?

abdul azeez said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அணைத்து முஸ்லிம்களுக்கும். அன்பு மிக்க சகோதரர் ஷாஹுல்ஹமீத் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் உங்கள் ஆங்கிலப் பின்னூட்டத்தை தமிழில் போட்டீர்களானால். ஆங்கிலம் தெரியாத நம் மற்ற சகோதரர்களும் படித்து பயன் பெறக் கூடும் அல்லவா ?

இந்த சைட் உங்களுக்கு எளிதாக தட்டச்சு செய்ய முடியும். தங்கிலீஷ் எழுதி space பட்டனை அடித்தால் தமிழ் வந்து விடும்.

http://www.google.com/transliterate/indic/tamil

மா சலாம்.
அப்துல் அசீஸ்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் ச‌கோத‌ர‌ர்க‌ளே,

நான் புனைப்பெய‌ரில் தமிழ் கிறிஸ்டிய‌ன்ஸ் த‌ளத்தில் தொட‌ர்ந்து எழுதி வ‌ருகிறேன் ஆனால் மூன்றாவது முறையாக‌ என்னுடைய‌ த‌ள அனும‌தியை முட‌க்கி உள்ளார்க‌ள் என நினைக்கிறேன், இன்று காலையிலிருந்து என்னால் தளத்தின் உள்ளே நுழைய‌ இய‌ல‌வில்லை.என்னுடைய‌ ப‌திவுக‌ளை பார்ப்பவ‌ர்க‌ள் நான் அநாக‌ரிக‌மான வார்த்தைக‌ளையோ, த‌ர‌க்குறைவான விம‌ர்ச‌னங்க‌ளையோ ப‌திப்பதில்லை என்ப‌தை காணலாம்.இவ்வாறான நிலையில் முஸ்லிம்க‌ளாகிய‌ நாம் விவாத‌ப்பகுதிக‌ள் அட‌ங்கிய‌ ஒரு புதிய‌ தளத்தை உருவாக்கினால் என்ன? அங்கு நம்முடைய‌ நியாய‌மான விம‌ர்ச‌னங்க‌ளை பொறுத்துக்கொள்ள இய‌லாத‌ அமைதிப்புறாக்களை எல்லாம் விவாத‌த்திற்கு அழைப்போம், ச‌த்திய‌த்தை சொல்லுவோம். எனவே தங்க‌ளுடைய‌ ஆலோச‌னைக‌ளையும், க‌ருத்துக்களையும் சொல்லவும். அதே போல் எவ்வள‌வு முத‌லீடு செய்ய வேண்டி வ‌ரும், இன்ன பிற விவ‌ர‌ங்க‌ளையும் தெரிய‌ப்படுத்தவும்.

மிஸ்ட்.

ஏகத்துவம் said...

சகோதரர் மிஸ்ட் அவர்கள் கொடுத்துள்ள பின்னூட்டதில் உள்ள கருத்துக்கள் பற்றி இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஆர்வமுள்ள மற்ற சகோதரர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். உங்கள் கருத்துக்களை / ஆலோசனைகளை பின்னூட்டமாகவோ அல்லது abuibrahim08@gmail.com என்ற மெயில் ஐடிக்கோ அனுப்பவும்.

நன்றி

AF Shahul Hameed said...

Dear Abdul Aziz, Assalamu Aalaikkum. Thank you very much about your comment. But, I tried to type Tamil, which I failed to do. Very sorry. If you have any ideal let me know.
Dear Egathuvam, I am fully agree with MIST. Insha Allah, It is my once more openion that If Egathuvam will sale or introduce the tamil translation debate of Dr.Zakir Naik, it will help to more people inlcuding NON-Muslim brothers and sisters. I agreed it is very burdon to Egathuvam, becuase they have lot of works. II am ready to do any kind help, if any. I am not that much knowledged person. Inshal allah

Anonymous said...

சகோதரர்கள் தங்களது மெயில் ஐடிக்களை கொடுத்தால் தொடர்புக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

abdul azeez said...

அஸ்ஸலாமு அலைக்கும். அணைத்து முஸ்லிம்களுக்கும். சகோதரர் மிஸ்ட் அவர்கள் முயற்சிக்கு அல்லாஹ் நர்க் கூலி வழங்குவானாக. நம் சகோதரர்கள் இணைந்து தளம் அமைப்பதில் பெரிய விஷயம் இல்லை. அப்படி அமைத்து அவர்களை கூப்பிட்டாலும் அவர்கள் வரப்போவது கிடையாது. அவர்கள் தான் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தன் வீட்டுக்குள்ளேயே ! உட்கார்ந்துக் கொண்டு மற்றவர்களின் நம்பிக்கையை குறை சொல்லிக்கொண்டு தங்களுக்குள்ளேயே திருப்தி அடைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அழகுல அர்ப்புதராஜ் என்பவர் நபிகள் (ஸல் ) அவர்கள் பாவம் செய்தது போலவும் இவர் தான் குர்ஆனில் அதிசயமாக கண்டுபிடித்தவர் போலவும் எழுதியுள்ளார்.

கிறிஸ்தவ உலகத்துக்கு பாவம் என்றால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மது அருந்துதல், விபச்சாரம் மட்டும் தான் அளவுகோல் போல் தெரிகிறது. அல்லது அது மட்டும் தான்

இதற்குள்ளே அவர்கள் தங்கள் இயேசுவை வைத்து பார்த்தால் மற்ற தீர்க்கதரிசிகளுக்கு. இவர் சிறந்தவராக தென்படுகிறார் போல் உள்ளது அவர்கள் கண்களுக்கு.ஒரு வேலை இதனால் தான் இயேசுவை கடவுள் என்று சொல்கிறார்களோ !

புதிய ஏற்பாட்டில் இயேசு விலாபித்து மதுவை கொடுத்தது பாவம் இல்லை இவர்கள் பார்வையில்.

பெற்றத் தாயிடம் உரையாடும் லட்சனத்தை பார்த்தால் அவருடைய பாவத்திற்காக. கோடி மடங்கு சிலுவை மரணத்தை தழுவியாகனும் எங்கே ? ஒன்று தானே ஆகியுள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களின் நம்பிக்கைக்கு உள்ளவரின் தகுதிக்கு நாம் சற்றும் குறைந்தவர்களில்லை என்பது உண்மைதான்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் மிஸ்ட் அவர்களின் கோரிக்கையை

மா சலாம்.
அப்துல் அசீஸ்.

அபூ அப்திர்ரஹ்மான் said...

அன்பர் மிஸ்ட் அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கதே! ஆனால் ஏனோ தானோ என்று (கிறிஸ்தவர்கள் வைத்திருப்பது போல) அல்லாமல் முறையாக உறுப்பினர்கள் விபரம் சேர்க்கப்பட்டு விவாத விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இதனைத் தொடங்கலாம். ஒரு குறிப்பு: கிறிஸ்தவ தளத்தில் பிற மதத்தைத் நேரடியாகத் தாக்கும் பதிவுகள் அனுமதிக்கப்படாது என்று தள விதி முறை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு நேர் முரணாக அங்கே பதிவுகள் அரங்கேற்றப்படுகின்றன. சில கிறிஸ்தவ உறுப்பினர்களே இதைக் கண்டித்துள்ளனர். இப்போது தள விதிமுறையையும் மாற்ற இயலாமல் தன் போக்கையும் மாற்ற இயலாமல் விழி பிதுங்கியுள்ளனர். தள நிர்வாகிகள். முஸ்லிம் சகோதரர்களின் ஆணித்தரமான கருத்தில் தங்கள் கொள்கை ஆட்டம் காணும்போது அப்பதிவுகளைத் தந்திரமாக நீக்கியும் விடுகின்றனர். போலி உமர் ஆரம்பித்து வைத்த பன்றிக்கறி பதிவு மாயமாகி விட்டது! இது போன்று தான் மிஸ்ட் நீக்கமும்! மொத்தத்தில் நயவஞ்சகத்திற்கு பெயர்போனவர்களே கிறிஸ்தவர்கள். கர்த்தரை மகிமைப் படுத்த என்ன தந்திரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று இவர்களின் கடவுள் பவுல் அனுமதித்து விட்டாரல்லவா? அல்லாஹ்வின் உதவியுடன் இனிதே ஆரம்பியுங்கள். உங்களுடன் நானும் இணைகிறேன். என்னைத் தொடர்பு கொள்ள abooabdu@gmail.com.

அன்புடன்

அபூ அப்திர்ரஹ்மான்

Unknown said...

dear brothers pls dont speak harshly abt ur messenger issa nabi he is also ur nabi simply u say that jesus is punished for his behaviour oly so wat u mean u r not respecting jesus as ur messenger r not as ur book who is going to come again ant to take all the good one to heaven JESUS or Mohammed

Anonymous said...

Mr. Edwin

there is no single muslim in the world talking harshly or badly about jesus we muslims respect him and love him more than our parents and oueself and also we believe he is one of the mightiest messenger of Allah but, you guys (christians) always criticising our(including you)prophet muhammed(saw).just go to tamilchristians website and see the articles posted by the original christian Mr.umar.in those articles, u will be able to see umar's jaalra myco's comments only and if any muslim replies it will be deleted.
can you tell me is it fair debate?

abdul azeez said...

அன்பிற்குரிய எட்வின் அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து உண்டாவட்டுமாக.தமிழ் கிறிஸ்டியன் தலத்தில் அற்புதராஜ் என்பவற்றின் கட்டுரை விவரிப்பது உங்களுக்கு புரியும்.

நாங்கள் எங்கள் உயிர், மற்றும் அனைத்தையும் விட அதிகமாக நேசிப்பது நபிகள் (ஸல்) முஹம்மது அவர்களை அவர்கள் பாவம் செய்தோராகவும் அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் வழிகேட்டில் இருப்பது போல் ஏளனமாக எழுதியுள்ளார்.

இந்த உலகத்துக்கு இறுதி வேதமான தூய குர்ஆனை. நாங்கள் நம்புகிறோம் அந்த வேதம் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் மர்யமின் மகனான ஈஸாவை நாங்கள் ஏற்கிறோம். முஹம்மது பாவி என்னும் போது அவர் சொன்ன வேதம் எங்களுக்கு கேள்வி குறியாகிவிடும். அர்ப்புதராஜின் கட்டுரைப்படி.அப்புறம் அதில் உள்ள ஈசாவாக இருந்தால் என்ன ? வேற யாராக இருந்தால் எங்களுக்கு என்ன ? எல்லாம் மாயையாகிவிடும்.

ஆக நாங்கள் நம்பும் நம்பிக்கையை வைத்துதான் நபி ஈசா (அலை) அவர்களை நாங்கள் மதிக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு வித்திட்டவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு களங்கம் என்றால்! மற்றது எதுவுமே எங்களுக்கு கிடையாது.

நீங்கள் சொல்வது போல் ஜீசஸ் என்ற பெயரிலோ அல்லது இயேசு என்ற பெயரையோ நாங்கள் ஒரு இடத்திலையும் எங்கள் வேதத்தில் பார்த்தது.கிடையாது. அதனால் அந்த பெயரில் எங்களுக்கு எந்தத் தூதரும் இல்லை.

ஆம். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மர்யமின் குமாரர் ஈசா (அவர்கள்) இந்த பூமிக்கு வருவார்கள் என்பதையும். தஜ்ஜால் என்னும் கொடியவனை கொள்வார் அதன் பின் சில காலம் வாழ்வார் பிறகு எல்லாருக்கும் உண்டாகும் மரணம் அவருக்கும் வரும் மரணிப்பார்.என்பதை.

ஆனால் அதுவே ! சம்பூரணம் உலகம் நல்ல முறையில் செல்லும் என்று நாங்கள் நம்பவில்லை.அவருக்கு பிறகும் இந்த உலகம் குழப்பத்தின் பால் தறிக்கெட்டு ஓடும்.இறை மருப்பின் பக்கம் மாந்தர்கள் இருப்பார்கள். வீன்விளையாட்டிலும். தர்கித்தளிலும் மக்கள் மூழ்கி இருக்கும் நேரத்தில் யுக முடிவு நாள் என்றும் நம்புகிறோம்.

இந்த யுக முடிவு நாளுக்கு நபி ஈசா (அலை) அவர்கள் ஒரு அடையாளமே! அவருக்குப் பின் ஏராளமான அடையாளங்கள் எங்களுக்கு உண்டு. அடையாளம் என்பதை மிகப்பெரிய சம்பவம் என்றும் சொல்லலாம். பத்து இரவு பத்து பகல் தொடர்வதும் எங்களுக்கு இந்த நபியை போல் ஒரு அடையாளம். சூரியன் மேற்கில் உதிக்கும் மறுபடி மேற்கிலேயே மறையும் என்பதும் எங்கள் வேதம் சொல்லும் வார்த்தை.இதுவும் ஒரு அடையாளமே.நிறைய சொல்ல இருக்கிறது.

கடைசியாக எங்கள் நம்பிக்கை பிரகாரம் ஈசா (அலை) அவர்கள் சாராயத்தை விலாபித்ததாக நாங்கள் நம்பமாட்டோம். உங்களிடம் அப்படி இருக்கிறது.புத்தகத்தில். தாயை அவர் அவமதித்ததாக நாங்கள் நம்பலை.எல்லாமே உங்கள் புறம்தான் மேலும் யாருக்காகவும் அவர் மரணித்ததாகவும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ஒருவர் பாவம் மற்றவர் சுமக்கமாட்டார் என்பது. எங்கள் இறைவாக்கு.

மா சலாம்.
அப்துல் அசீஸ்.

Hameed said...

பைபிளில் மது அருந்தியதும், தாயை மரியாதையில்லாமல் பேசியதும், சிலுவையில் அறையப்பட்டதும் நாங்கள் நம்பும் நபி ஈஸா (அலை) அல்ல. அவர்கள் அவ்வாறு நடக்கவும் இல்லை அதுபோல் சிலுவையில் அறையப்படவும் இல்லை. மேலும் சிலுவை மரணத்தைவிட்டும் கர்த்தரிடம் பாதுகாப்பும் தேடியிருக்கிறார்கள். அதையிம் மீறி அவர்கள் சிலுவையில் அறையப்பட்டது அவர்களின் பிரார்த்தனை கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுபோல் உள்ளது நீங்கள் எதை நம்புகிறீர்கள். பிறார்த்தனை ஏற்றுகொளளபட்டதையா? அல்லது ஏற்றுகொள்ளபடாததையா? சிலுவையில் அறையபட்டது மக்களின் பாவத்தை போக்க என்றால், இவ்வாறு பாவத்தை நீக்குவது பற்றி பழைய ஏற்பாட்டில் ஏதும் கூறவில்லை. மேலும் ஏசுவுக்கு முன்பு வழ்ந்த மக்களின் பாவத்தை போக்க யாரை சிலுவையில் அறைவது.

AF Shahul Hameed said...

Dear brother Edwin, thank you for accepting Jesus(PBUH) as Messenger. As per your bible history, Jesus (PBUM) died cross, that means he punished (as per bible) So. According to Holy book Qua'ran, Jesus (PBUM) is not died, but he taken by Almighty Allah and he is one of great messenger, Nabi and Servant of Allah like , Abraham, Yacoob, David,John, Mosa,Haarun,Mumhamed (PBU Them) .....other messengers. So, We muslims are giving more respect to Jesus(PBUM). Based on Bible, we are pointing out the fact. If you are believing bible is holy, this also you have accept. Don't try to divert the attention. Otherwise, you have to accept Jesus, as Messenger .

இருமேனிமுபாரக் said...

அன்பு நிறை சகோதரர்களே! உணர்ச்சி வசப்படாதீர்கள். இன்றய தொழில் நுட்பத்தில் யாரும் எப்பெயரிலும் எந்தக் கருத்தையும் வெளியிடலாம் எனும் நிலையில் இஸ்லாமியப் பெயர்களில் மற்றவர்கள் நுழைந்து நச்சுக் கருத்துக்களைப் பரப்ப அதிக வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும் எனது அன்பு வேண்டகோள்.